Jump to content

சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கு உலக வங்கியின் மூலம் ரூ.6,750 கோடி நிதியுதவி: - உலக வங்கியுடன் ஒப்பந்தம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசிய உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம்.இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கு உலக வங்கியின் மூலம் ரூ.6,750 கோடி நிதியுதவி அளிப்பதற்கான ஒப்பந்தத்தில், மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயலும், உலக வங்கித் தலைவர் ஜிம் யாங் கிம்மும் வியாழக்கிழமை கையெழுத்திட்டனர்.முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசிய ஜிம் யாங் கிம், சுற்றுச்சூழலுக்கு உகந்த நீடித்த வளர்ச்சி அடைய இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார். இதுகுறித்து பிரதமர் மோடி வியாழக்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில்,

பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசிய உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம்.இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கு உலக வங்கியின் மூலம் ரூ.6,750 கோடி நிதியுதவி அளிப்பதற்கான ஒப்பந்தத்தில், மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயலும், உலக வங்கித் தலைவர் ஜிம் யாங் கிம்மும் வியாழக்கிழமை கையெழுத்திட்டனர்.முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசிய ஜிம் யாங் கிம், சுற்றுச்சூழலுக்கு உகந்த நீடித்த வளர்ச்சி அடைய இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார். இதுகுறித்து பிரதமர் மோடி வியாழக்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ""உலக வங்கித் தலைவர் ஜிம் யாங் கிம்முடன், உலக வங்கியுடனான இந்தியாவின் உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தேன்'' என்று தெரிவித்தார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

   

பிரதமர் மோடியும், உலக வங்கித் தலைவரும் பல்வேறு விவகாரங்களையும், ஒத்துழைப்பு அளிக்க வாய்ப்புள்ள துறைகள் பற்றியும் விவாதித்தனர்.அப்போது, சுற்றுச்சூழலுக்கு உகந்த வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான நிதியுதவியை அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்தச் செயல்திட்டத்துக்கு உலக வங்கி முழு ஆதரவளிக்கும் என்று கிம் உறுதியளித்தார்.சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் வர்த்தகம் செய்வதை எளிமைப்படுத்த இந்தியா எடுத்து வரும் முயற்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.பொலிவுறு நகரங்கள், கங்கை நதி தூய்மையாக்கும், திறன் மேம்பாடு, தூய்மை இந்தியா, அனைவருக்கும் மின்சாரம் உள்ளிட்ட மத்திய அரசுத் திட்டங்களுக்கு உலக வங்கி ஆதரவளித்து வருவதற்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ரூ.6,750 கோடி நிதியுதவி: அதைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் மாற்று எரிசக்தி உள்பட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பது குறித்து ஜிம் யாங் கிம் ஆலோசனை நடத்தினார். அப்போது, இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கு உலக வங்கி சார்பில் ரூ.6,750 கோடி நிதியுதவி அளிப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும், ஜிம் யாங் கிம்மும் கையெழுத்திட்டனர். இதில், மேற்கூரைகளில் சூரிய மின்தகடுகளைப் பொருத்துவதற்காக ரூ.4,218.75 கோடி நிதியுதவி அளிப்பது தொடர்பான ஒப்பந்தமும் அடங்கும்.

அரசு-தனியார் கூட்டாண்மையில் சூரிய மின்சக்தி பூங்காக்களை உருவாக்கும் திட்டத்துக்காக, ரூ.1,350 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று உலக வங்கி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மேலும், வரும் 2030ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் சூரிய மின்சக்தி தொடர்பான திட்டங்களுக்கான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக, இந்தியா தலைமையில் 121 நாடுகள் இடம்பெற்றுள்ள சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டமைப்புடனான (ஐ.எஸ்.ஏ) ஒப்பந்தத்தில் உலக வங்கி கையெழுத்திட்டது.அதையடுத்து, செய்தியாளர்களிடம் ஜிம் யாங் கிம் கூறியதாவது: ஆறு முக்கியத் துறைகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சி.

http://www.seithy.com/breifNews.php?newsID=160610&category=IndianNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.