Jump to content

பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியின் முன்னணியில் தெரஸா மே


Recommended Posts

பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியின் முன்னணியில் தெரஸா மே

 

பிரிட்டனின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும், அடுத்த பிரதமராகவும் பொறுப்பேற்பதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கு, பெரும்பான்மை அமைச்சரவை சகாக்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறார் உள்துறை அமைச்சர் தெரஸா மே.

160630092810_may_gove_640x360_pa_nocredi

 

 மைக்கேல் கோவ் மற்றும் தெரஸா மே

அவருக்கு எழுபதுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. போட்டியாளர்களில், அவருக்கான வெற்றி வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாகப் பார்க்கப்படுகிறது.

அவரது பிரதான போட்டியாளராகக் கருதப்படுபவர், மைக்கேல் கோவ். தானும் தலைமைப் பதவிக்குப் போட்டியிடப்போவதாக வியாழக்கிழமை அவர் அறிவித்தார். இதனால், தலைமைப் பதவிக்கான போட்டியில் களமிறங்கத் திட்டமிட்டிருந்த லண்டனின் முன்னாள் மேயர் போரிஸ் ஜான்சன், தான் போட்டியிடப் போவதில்லை என்று விலகிக் கொண்டார். இதையடுத்து, இந்தப் போட்டியில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மைக்கேல் கோவ் வெள்ளிக்கிழமையன்று, தனது பிரசாரத்தைத் துவக்குவார் என்றும், தனது இலக்கு என்ன என்பதை அவர் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து நீடிக்கக் கூடாது என்று மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மை மக்கள் தீர்மானித்ததை அடுத்து, தலைவர் மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதாக டேவிட் கேமரன் அறிவித்ததை அடுத்து, தலைமைப் பதவிக்குப் போட்டி ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.com/tamil/global/2016/07/160701_theresamay?ocid=socialflow_facebook

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.