Jump to content

துன்பங்களைச் சொல்வதும் எழுதுவதும் அனுபவிப்பதைப் போலவே துயரமானது தான்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

துன்பங்களைச் சொல்வதும் எழுதுவதும் அனுபவிப்பதைப் போலவே துயரமானது தான்!

selvam book

       ‘எழுதித் தீராப்பக்கங்கள்’ தொகுப்பில் ஒவ்வொரு அனுபவக் கட்டுரையையும் அகதிகளின் உணர்வுகளாகச் செல்வம் அருளானந்தம் எழுதியிருக்கிறார். அவரது பார்வையும் சிந்தனையும் அவற்றிலே நகைச்சுவையைக் காண்பதுமாகத் துயரங்களை எழுதியவற்றைப் பாராட்டும் அதே நேரம், ஒவ்வொரு கட்டுரையின் தலையங்கமும் அதனோடு இணைந்த ஓவியங்களும் அவற்றை மலினப்படுத்தி விடுகின்றன என்பது இத்தொகுப்பின் பலவீனமாய் எனக்குத் தெரிகிறது. சட்டென்று எனக்கு ஞாபகம் வந்தது தமிழ்வாணன் காலத் தலைப்புகள் போலயிருக்கே என்பது தான். தலைப்புகள் ஓவியங்கள் கவர்ச்சியாக வாசகரை வாசிக்கத் தூண்டுவதற்கானவையாக இருக்கவேண்டுமென வைத்தாரா செல்வம் தெரியவில்லை.
ஆனால், உள்ளே விடயங்கள் காத்திரமானவை. பாலியற்தொழிலாளர்களை நோக்கும் விதம், பயணத்தில் தற்செயலாகச் சந்தித்த அம்மா இறந்ததைச் சொல்லியழவும் ஆளில்லாத இளைஞனை ஆறுதற் படுத்துவது, இருக்க இடமில்லாத யாரென்று அறியாத ஒரு பெண்ணுக்கு எல்லோருமாக இடம் ஒதுக்குவது, மொழியறிவற்றவர்களாக உலைவது, சாப்பாட்டு நேரத்தில் அறைக்கு நண்பர்கள் வர வர உணவு போதாத நிலையிலும் உபசரிக்கச் சமையலில் திடீர்மாற்றங்களை செய்வது, ஏனைய நாட்டு அகதிகளையும் மரியாதையோடு நினைப்பது எனக் கட்டுரைகளின் உள்ளடக்கங்கள் ஒவ்வொன்றும் மானுடநேயமும் அகதிகளின் அந்தரிப்புமாக வாசிப்புச் சுவையோடு எழுதப்பட்டிருக்கிறது.
எண்பதுகளில்-தொண்ணுாறுகளில் அகதிகளாக வந்திறங்கியவர்கள் வதிவிட உரிமை, சொந்த வீடு, வேலை வாய்ப்புகள், ஓய்வூதியம், பிரஜாவுரிமை எனக்காலூன்றி விட்டவர்கள் வருடாவருடம் விடுமுறைக்குப் பயணங்களை மேற்கொண்டால், அது பொதுவில் அகதிகளாகப் புலம் பெயர்ந்த எல்லோருடைய நிலையுமென ஊரிலுள்ளவர்கள் அனேகர் நினைத்து விடுகின்றனர். ஆனால் இப்போதும் எழுதித் தீராப்பக்கங்களில் எழுதப்பட்டதைப் போல் அறைகளில் அடைந்து வேலையும் அகதிஅந்தஸ்துக்கான அலைச்சலுமாக வாழ்பவர்கள் தொடர்ந்து இருந்து கொண்டு தானிருக்கிறார்கள். தற்போது சிலருக்கு உறவுகள் , நண்பர்கள் என ஓரளவு ஆறுதலுண்டு. அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்படாமல் அதற்கான வழக்குகளோடு இருக்கும் இளைஞர்கள் பலருள்ளனர்.
இங்குள்ள ஏராளம் பலசரக்குக் கடைகளில் மற்றும் உணவகங்களில் பதிவு செய்யப்படாமல் கறுப்பில் சம்பளம் வாங்குபவர்களது துயரம் தீர்ந்தபாடில்லை. தொழிலாளருக்கான சட்டப்படியான சலுகைகள் ஏதுமற்று நாள் முழுதும் வேலை. குறைந்த சம்பளம் என முன்னொரு காலம் அகதிகளாக வந்து முதலாளிகளான தமிழ் முதலாளிகளே இந்த இளைஞர்களை வதைத்துக் கொண்டிருக்கின்றனர். அதே நேரம் சட்டத்தரணிகளுக்காகவும் ஆவணங்களின் மொழிபெயர்ப்புகளுக்காகவும் செலவளிக்க வேண்டியவற்றுக்கும் மிச்சம் பிடித்து நாட்டிலுள்ள உறவுகளுக்கும் உதவிடவேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
ஆகவே, இது பழைய கதைகளடங்கிய தொகுப்பென யாரும் நினைக்கக்கூடாது. எழுதப்பட்டுள்ள சம்பவங்கள் போல இன்னுமின்னும் புதிய புதிய பிரச்சனைகளும் அவலங்களும் தொடர்ந்தபடியே உள்ளன. இங்கு அதை அனுபவிப்பவர்களால் எழுதிவிட முடியாதளவு மன நெருக்குவாரம் இருக்கிறது. துன்பங்களைச் சொல்வதும் எழுதுவதும் அனுபவிப்பதைப் போலவே துயரமானது தான். இயலுமானவர்கள் இந்தப் புத்தகத்தை ‘வெளிநாட்டில சொகுசாக வாழுறார்கள்’ எனச் சொல்பவர்களுக்கு ஒரு பிரதி அனுப்பலாம்.

 

https://thoomai.wordpress.com/2016/06/29/துன்பங்களைச்-சொல்வதும்/

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

எழுதி…எழுதித் தீராப்பக்கங்கள்

புஷ்பராணி 

selvam book      நாம்   கடக்கும்போது  நினைத்தே    பார்க்கமுடியாத    வலிகளையும் அதிர்ச்சிகளையும்  திருப்பங்களையும்   தந்த   நிகழ்வுகளைத்  தட்டுத்   தடுமாறிக்  கடந்தபின்,வந்த  வழியைத்  திரும்பிப்  பார்க்கும்போது,அவை தரும்  உணர்வலைகள் எழுத்தில் வடிக்க  முடியாதவையாக மனம் முழுவதும் வியாபித்துச் சுகானுபவம்  கொள்ளவும் பெருமூச்சு  விடவும்  வைக்கின்றன.
செல்வம் அருளானந்தம்   தான்  இந்த அகதி வாழ்வைக் கடக்கும் போது  அனுபவித்த வலிகளையும் , அவதிகளையும் எழுதி  நகைச்சுவை தெறிக்க  எம்மை வாய்விட்டுச் சிரிக்க  வைக்கின்ற போது அவை சிறந்த பதிவுகளாகி விடுகின்றன. இவ்வாறான அனுபவக்குறிப்புகளில் செல்வம் தன் கூர்ந்த அவதானிப்புகளால் எங்கேயோ போய்விட்டார்!
இந்நினைவுக்குறிப்புகளை,ரெயிலில்  பிரயாணம்  செய்யும்போது தான்  படிக்க  ஆரம்பித்தேன். ஒருகட்டத்தில்  என்னை  மறந்து  வாய்  விட்டுச்சிரித்து விட்டேன். பக்கத்தில்  அமர்ந்திருப்போர்  ஏதாவது   நினைக்கப்  போகின்றார்கள்  என்றெண்ணிச்  சிரிப்பை  அடக்கப்  பார்த்தேன்…முடியவில்லை. வாயைக்   கைகளால் பொத்திக் கொண்டு அடக்க  முடியாமல் சிரித்தேன்.  ‘பிரான்ஸைப் பற்றி  ஒன்றும் பெரிதாகத் தெரியாவிட்டாலும்  நெப்போலியன்   போனபாட்  என்ற  பெயர்  எனக்குத்  தெரிந்திருந்தது. பாரிசில் அந்த  மாவீரனுக்கு எப்படியும் பெரிய  நினைவுச் சின்னம் இருக்கும். அதைப்  பார்ப்போம்  என்றெண்ணி,பிரான்ஸ் எண்டவுடன் என் நினைவுக்கு வாறது நெப்போலியன் தான்’ என்றேன்  தட் சூணிடம்.  ‘இந்த வெள்ளெனவோ…இங்கினக்கை  குடிக்கிறதெண்டால்  சரியான  காசு ஆனால் நெப்போலியன் எடுக்கமாட்டினம்,வலன்டைன் தான்’  என்றார்.  ஏதோ  யோசனையில் இருந்த அருள்நாதர்  திடுக்கிட்டு ‘அடைக்கல முத்தற்றை  வலண்டைனும்   பாரிசுக்கு   வந்திட்டானோ?’ என்று  குழம்பினார்.
இந்த வரிகளே என்னை அப்படிச் சிரிக்க  வைத்தன. இப்படிப்  புத்தகம் நெடுகிலும் ,தான்  பட்ட  இடர்களை  நகைச்சுவையாக இவர்  கூறிக் கொண்டே  போகும் விதம் எழுதித் தீராப்பக்கங்கள் புத்தகத்தைக் கீழே  வைக்கத்  தடுக்கின்றது.
மொழி  தெரியாமல் பட்ட  சிரமங்களையும்  சிரிப்பினூடே தான் சொல்லிக் கொண்டு  போகின்றார். நானும்  வந்த  புதிதில் ஃபிரெஞ் மொழியை விளங்கத் திணறியதை  மீட்டுப்  பார்க்கின்றேன்.
இதில்வரும்  அங்கிள்  செக்கூரிற்றி  சோசியலுக்குப்   [Securite  sociale  ] போன  கதையும் நினைக்குந்தோறும் சிரிப்பையூட்டுகின்றது. அங்கிருந்து  இவருக்கு வந்த  கடிதமொன்றைக் கையில்  வைத்துக் கொண்டு, அதில் குறிப்பிட்டுள்ள முகவரியை எப்படிக் கண்டுபிடிப்பது என்று விழிபிதுங்கிக் கொண்டு மற்றவர்களிடம்  எப்படி விசாரிப்பது என்ற மொழி தெரியாத மலைப்போடு…வழியில்  தென்பட்ட ஒரு  ஃபிரெஞ்சுப் பெரியவரிடம்  கடிதத்தைக்  காட்டி எப்படியோ கேட்க , அவரும் தன்  பின்னாலே வரும்படி  சைகையால்  காட்டிச்  சுற்றி வளைத்துக்  கூட்டிப்  போகின்றார். இவரும்  பின்னே  ஓடியோடிப்  போகின்றார்….கடைசியில் அவர்  கூட்டி வந்து  நிறுத்தியது அங்கிளின்  வீட்டுக்கு   முன்னால். கடிதத்தின்   ஒரு  மூலையில்  இருந்த  அங்கிளின்  வீட்டு  விலாசத்துக்குத்தான் அவர்  கூட்டிவந்து  விட்டிருக்கின்றார். வேறு  வழிகளால் போனதால் முதலில் அங்கிளுக்கு  விளங்கவில்லை.இப்படி நிறைய அவல நகைச்சுவைகள் தொடர்கின்றன.

புலம்பெயர்   நாட்டின்   மொழி  புரியாப்   படலம்   பல  இடங்களில்   சிரிக்க  வைக்கின்றது. ஏயார்ப்போர்ட்டுக்கு     இவர்  வேலைக்குப்  போனபோது,  போனவழி -வந்தவழி  தெரியாமல்  திகைத்துக்   குழம்புவதும்  …பசியெடுத்தபோது   ,கீழே   வைத்துவிட்டு  வந்த  சாண்ட்விச்சின்  ஞாபகம்   வந்தபோது   ,கீழே   எப்படிப்  போவது   என்று  விளங்காமல். ‘சாண்ட் விச்சை  எடுக்கப்  போகவேண்டும் ?’ என்று எப்படிப்  ஃபிரெஞ்சில் கேட்பது என இவர் முழி  பிதுங்கி  நின்றது  அந்தரிப்பான நிலை.ஆனால் இன்று அது சிரிப்பைத் தருகின்றது.

இன்னோர்   இடத்தில் ,ஒரு நாள்  ஓர்  உணவுச்சாலையில் போய்  வேலையிருக்கோ  எனக்  கேட்டபோது , ‘முதலாளி  போல்  நின்றவர் ஏதோ  சொன்னார்…எனக்கு விளங்காமல் நின்றபோது அவர்  கையை  நீட்டினார்…கை தரப் போகின்றார்  என்ற சந்தோசத்தோடு கையை  நீட்டிய போது கையைப் பிடித்துக் கொண்டு போய்  வெளியில்  விட்டுவிட்டு  ஏதோ பேசிக்கொண்டும் போனார்.’ இந்த  வரிகளினூடே  தன்னைத்தானே பகிடி பண்ணினாலும்  மொழி தெரியாமல்  நாம் பட்ட  அவதிகளும், அவமானங்களும் .கண்ணீர்  நினைவுகளும் பீறிட்டு  வெளியே  வருகின்றன.

முதன்முதலாகப் பாரிஸுக்குள் காலடி  வைத்துத் தான்  வசிக்கப்போகும் சிறிய  அறையைப் பார்த்து செல்வம்  திகைத்து நின்றபோது,  ‘நாங்கள்  எல்லாம் அஞ்சாறு  பரப்புக் காணிக்குள்ளை  வீடும், வீட்டில் இருந்து  ஐந்நூறு யார்  தள்ளிக்  கிணறும்  வளவு  மூலைக்கு  கக்கூசும்  எண்டு விட்டு வீதியாய் வாழ்ந்தவர்கள்தான்…என்ன  செய்யிறது, இனிப்  புதுச் சூழலைச் சமாளித்துப்  பழகவேண்டும்’ என்றார் இவரைக்   கூட்டிவந்தவர்.

ஆரம்ப காலத்தில் பிரான்ஸ்  வந்தவர்கள்  பட்ட சொல்லொணாத துயரங்களைக் காதாரக்  கேட்டவள்    நான். இருக்க   இடம் தேடி ,யார்  வீட்டுக்குப்  போனால் சாப்பாடு தருவார்கள் என்று  பசியின் கொடுமையோடு போராடி…. எவ்வளவோ போராட்டத்தின் பின்  நித்திரை செய்யும்போது கால் நீட்டவும் முடியாத சில அறைகளில் ஒருவர் எழும்ப அடுத்தவர் உறங்குவதுமான நிலையிலாவது இருக்க இடம் கிடைத்து ….மொழியோடும் ,இடம் வலம்  தெரியாமலும்  அல்லாடி…விசா  எடுப்பதற்குப்   பசியோடு  அலைந்து , இங்கே ஒரு அகதியாக அனுமதி பெற்றுக் காலூன்றுவதற்கு ஒவ்வொருத்தரும்  பட்ட பாடுகளைத்  தன் நூலில் அருமையாகக் காட்சிப் படுத்தியிருக்கின்றார் செல்வம்.
ஃபிரெஞ்சு மொழியும் தெரியாமல் வேலை தேடி அலைவதை இவர்  கூறுமிடங்களில் மனம்  வலிக்கின்றது.  கைகளில் பணமுமின்றி ,உணவுமின்றி  ஒவ்வொரு உணவு விடுதியாக வேலை கேட்டு அலைந்த காலங்கள் பறந்துவிட்ட போதிலும் அவை  மனதில்  ஆழப் பதிந்திருப்பதை எப்படி  மறக்கமுடியும்? புலம்பெயர்ந்து வந்தோர் பட்ட  துயரங்களை  இந்நூல் ஒட்டு மொத்தமாகக் கொட்டுகின்றது.
இவருடைய  கவித்துவம்  மிகுந்த ரசனையும் பல  இடங்களில்,எளிமையான எழுத்தோட்டத்தில் இரசிக்க  வைக்கின்றது. ஊரில்  பனையோலை கொண்டு  வீடு  மேய்வது  பற்றிய வேலையைச் சில  பக்கங்களை ஒதுக்கியிருக்கின்றார். பனையோலையை வெட்டி  எடுப்பதிலிருந்து, அதைப்  பதப்படுத்தி  மேயும்  அழகையும்…அணுவணுவாகக் கிரகித்து இவர் வர்ணித்து  எழுதியிருக்கும்   சுவையும், வீடு   வேயத்   தலைமை  தாங்கும்  வியேந்தம்மானின் குணாதிசயங்களும்  கண்முன்னே நிறுத்துகின்றன.

பிரான்ஸ்   வரும்போது   எல்லையில்   வைத்து   அதிகாரிகளிடம்    இவரும்   கூட  வந்தவர்களும்   பிரச்சனைப்பட்டபோது,இரண்டு   பாலியல்   தொழிலாளிப்   பெண்கள்  இவர்களுக்காக,அதிகாரிகளுடன் வாதாடித் தப்பிப் ஃபிரான்ஸ்க்குள் நுழைவைதற்கு உதவியது  பற்றிக்  குறிப்பிடும்  கட்டத்தில் , இவரைக்  காரில்  கூட்டி  வந்தவர்  ‘அவளவை    இங்கை   திரியிற ….’எனத்  தொடங்க ‘இல்லை  அண்ணை…அதுகள்   தெய்வங்கள்’ என்று  சொல்லுமிடத்தில் செல்வம்  வானோங்கி   நிற்கின்றார்.
பெல்ஜியத்தில்   இருந்து   களவாக   இவரை   ஃபிரான்சுக்குக்  கூட்டி   வந்தவரிடம்   கேட்கின்றார்,
‘நீங்கள்   வெளி  நாட்டுக்கு  வந்து   எத்தனை  வருஷமாயிற்று?
‘நாலுவருஷம்’  .
‘நாலு  வருஷமோ ?….இவ்வளவு  காலமும்  ஊருக்குத்  திரும்பிப்  போகேல்லையே ….. நான்  ஆச்சரியப்பட்டேன்.

‘இன்னும்  நாலு  வருசத்துக்குப்  பிறகு  கூடப்  போகச் சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியாது’ என்றார்.

‘என்ரை  கடவுளே !’

‘ஏன்  இதுக்குக் கடவுளைக்  கூப்பிடுகின்றீர்கள்?‘ எனச்  சிரித்தார்.

. ” ‘நாலைந்து வருசம்  ஊரையும்,  உறவையும் விட்டுப்  பிரிந்திருக்க முடியுமா?  நான் இரண்டு வருசத்திலை  போய்விடுவன்’ என்றேன் .

அவர்  ஒரு  நக்கல்  சிரிப்புச்   சிரித்தார்.

‘வீட்டை  விட்டு  வெளிக்கிட்டு ,இண்டைக்கு முப்பத்தைந்து  வருஷமாயிற்று’
இந்த  வரிகளையெல்லாம் படித்தபோது, என்னையே  இதில்  கண்டேன்.  ஃபிரான்சுக்கு  வந்த  புதிதில்  வீட்டை  நினைத்து  அழுது…செத்துப்போன   அம்மாவை   நினைத்து   அழுது  …இங்குள்ள   சூழல் கட்டிடங்களும் வீதிகளுமாக இருப்பதைப் பார்த்து, சாப்பாடு  எதுவுமே பிடிக்காமல் அழுது ”ஒரு  வருசத்துக்குள்ளை    நான்   வந்துவிடுவேன்.” . என்று   தம்பி ,தங்கைகளுக்கு  அழுதுகொண்டே  நான்  கடிதம்  எழுதியது  நினைவு வருகின்றது. நானும்  வந்து முப்பது  வருடங்கள் ஆகப்போகின்றது……இன்னும் ஊர்ப் பக்கம்  எட்டியும் பார்க்கவில்லை.

தங்கள் அறையில் இருப்பவர்கள்   சமறி பிரிப்பது பற்றி அங்கிள்  கூறுவதும் வித்தியாசமாயிருந்தது.‘ஒருவர்   எவ்வளவு   சாப்பிடுவார்   என்பது   பார்த்துதான்    காசு   தீர்மானிக்கப்படும்’ இதில்  உண்மை  இருந்தாலும்  மனசு  வலித்தது. செல்வம்  இன்னோர்  பக்கத்தில் எழுதிய, ‘எவ்வளவு சாப்பிட்டாலும்  அரை வயிறுதான் சாப்பிடுகின்றான்’ எனச்  சொல்லும்  அம்மாவின் அன்பு  நினைவில்  வந்தது.” என்ற  வரிகள்  இங்கு  முன்னே வந்து நின்றன. தன் பிள்ளை சாப்பிடுவதை எந்தவொரு தாயும் அளவுகோல் கொண்டு பார்ப்பதில்லை. இயக்கங்களிடமிருந்தும்,இராணுவத்திடமிருந்தும் காப்பாற்றித் தம் பிள்ளைகள் எங்காவது போய்  உயிரோடாவது இருக்கட்டும் எனக்  காணிபூமி ,நகைநட்டை  விற்று  வளரிளம்  பருவத்தில்  பிள்ளைகளைக்  கண் காணாத  நாடுகளுக்கு  அனுப்பும்போதே ,ஊண் நினைந்தூட்டும்  பாசமும்  அந்தப் பிள்ளைகளுக்குக் கிடைக்காமல் போய்விடுகின்றது…  

அகதிகளாகப் புலம் பெயர்ந்து  வந்த  பல  இளைஞர்கள் அகதி அந்தஸ்து வழங்கப்படாமல், வேலையில்லாமல், இருக்க நிரந்தர முகவரியோ இடமோ இல்லாமல், திருமணம் நிறைவேறாத விரக்தியால் இப்படிப் பல காரணங்களால் ,மனச் சிதைவுக்காளாகித்  தீராத குடிகாரர்களாக அல்லது  மனநிலை  பிறழ்ந்தவர்களாக அலைகின்றார்கள்  என்ற அதிர்ச்சியூட்டும் துயரத்தை  நம் நாட்டில் இருந்துகொண்டு  வெளிநாடு பற்றிக்  கனவு காண்போரும் , எந்த நேரமும் பணம்  அனுப்பும்படி தொந்தரவு செய்யும் பெற்றோரும் ,உறவுகளும்   அறிவார்களா?

புலம்பெயர்ந்த நாடுகளில்  நம்மவர்களால் தெருத்தெருவாக இழுக்கப்படும் தேர்கள்-சாமத்தியச் சடங்குகள் – பிறந்த நாள்- இறந்த நாள் கொண்டாட்டங்கள் போன்று வீண் ஆடம்பரங்களையும் பிரமிப்புகளையும் செய்யும் ஆட்களும் இங்கு இதே போன்ற பல துன்பங்களைப் பசி பட்டினிகளை அனுபவித்தவர்களே தான். வருந்தியுழைத்து வரட்டுக் கௌரவத்தை நிலநாட்டுபவர்கள் தான். ‘கண்டறியாதவன் பெண்டிலைக் கட்டினால்  காடு  நாடெல்லாம் கொண்டு திரிவானாம்’ என்று  ஊரில் சொல்லும் பழமொழியை இப்போதெல்லாம் அடிக்கடி நினைக்க வேண்டியிருக்கின்றது.நம்மவர்கள் வேடிக்கையான  கூட்டம்.

நாம் வந்த  இடத்தில் இனத் துவேஷத்தையும் விட்டு வைக்கவில்லை நம்மவர்கள் என்பதையும் மறக்காமல் எழுதியிருக்கின்றார் நூலாசிரியர். இதற்கும் சில பக்கங்களை ஒதுக்கியிருக்கின்றார்.

83  இனக்கலவரமும், வெலிக்கடைச் சிறையில்   தமிழ்க் கைதிகள் படுகொலை செய்யப்பட்டகொடூரமும் பாரிசில் எப்படி எதிரொலித்தது என்பதைக் கனமாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.உண்மையான செய்திகளைவிட வதந்திகள் தான் எல்லாப்  பிரச்சினைகளையும் ஊதிப் பெரிதாக்கி விடுகின்றன  என்பதற்குப் பாரிஸ்  வாழ்  தமிழ்-சிங்கள மக்களும் ஒருவருக்கொருவர்  வன்முறைகளில் ஈடுபடுவதற்குப் பெரும்  காரணங்களாய்  இருந்திருக்கின்றன.  ‘யாழ்ப்பாணம்   முழுக்கப்  பிரேதங்களால்   நிறைந்து   கிடக்கின்றது என்றும், கொழும்பில் தமிழர்களின் கடைகள், வீடுகள் எல்லாம் கொளுத்துகின்றார்கள் என்றும்  வதந்திகளும் ,செய்திகளும் தலையை வலிக்கப் பண்ணியது’  என்ற  வரிகள் போதும்  இதற்கு….
‘சிங்கள   இராணுவ   வீரர்களின்   பிரேதங்கள்   யாழ்   வீதியெங்கும்   நிறைந்து   கிடக்கின்றன’ என்ற வதந்தியே 1983  கலவரத்துக்கு மூலகாரணம் என்பதும்  நாம் அறிந்ததே.
அடுத்த பொங்கல்  ஈழத்தில் தான்  என்ற  அதீத நம்பிக்கையாகட்டும்….அதைவிட மேலோங்கிய  நம்பிக்கையாய், இந்திரா தலையிட்டு எமது பிரச்சனையை விரைவில் முடித்து வைப்பார். நாமெல்லாம் எமது நாட்டுக்குத் திரும்பிவிடுவோம் என்று   புகலிடத்தில் வசிப்போரும்  பகல்  கனவில் அமிழ்ந்து மிதப்பதிலாகட்டும்……எதையும் குறை  வைக்காமல்  குறிப்பிட்டிருக்கின்றார் செல்வம்.
அட…இன்னும் கூட இந்தியா தலையிடும் தமிழ் நாடும் மக்களும்  எமக்காகக்  குதிப்பர்  என்று இல்லாத ஒன்றைத்  தமக்குள்ளேயே  வளர்த்து உக்கிப் போகும் எம்மவரை யாராலும் திருத்தவே முடியாது!

அகதிகளாக வந்த ஈழத்தவர் பலர்  பெரும் குடிகாரர்களாக மாறிப் போனதை செல்வம் விபரிக்கும் விதம்  சுவையானது….அந்த வரிகளை அப்படியே தருகின்றேன்..

‘புது  நாட்டிலிருந்த  மதுபானக் கடைகளைப்  பார்த்துப் பிரமித்துப் போனான் ஈழத்தமிழன்.

இதென்னடா  இது…வைன்   எண்டால்   ஆயிரம்  வகை…பியர்  எண்டால்   நூற்றுக்கணக்கில்….வர்ண வர்ணப் பெட்டிகளில்  மயக்கும் விஸ்கி, பிரண்டி, வொட்கா…. எல்லாம் ஆயிரக்கணக்கில்…ஆண்ட  பரம்பரைத்  தமிழன்,மீண்டும்  பலமுறை புரண்டு எழுதற்கு எதைக்  குடிப்பது…எதைத் தவிர்ப்பது என்று புரியாமல் குழம்பிப்  போனான்.

விலைவாசியில் மற்றப் பொருட்களோடு ஒப்பிடுகையில் போத்தல்கள் பெரிய விலையாகத் தெரியவில்லை.’ஏன்  குடித்துத்   திரியிறாய் ?   என்று  கேட்க  ஆளில்லை..ஊரை  உறவைப்  பிரிந்து  அகதியாய் அலையும் சோகம்  எனப் பல  மன உளைவுகளால் பெரும்பாலானவர்கள் குடியில் மூழ்கிப்  போனார்கள்…. இப்படி மதுவருந்துவதைப் பற்றி நிறைய எழுதிக்கொண்டே போகின்றார்.

இங்குள்ள புல் வெளிகள் பற்றி ஓரிடத்தில், நம்மூர் பசு இந்தப் புல்லைப் பார்த்தால் நெஞ்சடைத்தே  சாகும்…என்று  செல்வம்   ஓரிடத்தில்   எழுதியிருப்பதைப்   படித்ததும் ஒரு  ஞாபகம்   சட்டென்று   வந்தது.

ஃபிரான்சுக்கு வந்த  புதிதில் இங்குள்ள அடர்ந்த பச்சைப்  பசேலென்ற  புல்வெளிகளை  நான் இரசித்துக் கொண்டிருந்தபோது ,அப்போது என்னோடு கூட  வந்த  என்  சகோதரன் புஷ்பராஜா , ‘இந்தப்  புல்லுகளைக்  கண்டால் எங்கடை ஊர் ஆடு-மாடுகள் எதைக் கடிப்பது என்று தெரியாமல் அங்கலாய்ப்பில் ஓடித்திரியும்’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

பிரான்சுக்கு வந்தபோது இருந்த நிலைமைகள் இன்றில்லாவிட்டாலும்,இன்னும் பல ஈழத்து அகதிகள் வருடங்கள்  பல  கடந்தும் அகதியாகஅங்கீகரிக்கப்பட்டு நிரந்தர விசா கிடைக்காமல் இதனால் அரசின்  எவ்வித உதவியுமின்றி ….செய்யும் வேலைக்குத் தகுந்த ஊதியமின்றி நாள்  முழுவதும் முதலாளிகளால் [இதில்   தமிழ்  முதலாளிகளும்   அடக்கம்] சுரண்டப்பட்டும்…..குடியிருக்க நல்ல வசிப்பிடமின்றிக் கூட்டு அறைவாசிகளாக நெருக்கியடித்துக் கொண்டும்…. வேறு பலர் கார் விடும் இடங்களை வீடு போல் கொஞ்சம்  மாற்றிக் கொடிய வாடகைக்கு விடுவோரின் குறுகிய காற்றோட்டமில்லாத இடங்களில் உழல்வதையும் காணக்கூடியதாக உள்ளது.

புத்தகத்தைக் கீழே வைக்கவிடாமல்  சுவைபட இயல்பாக எளிமையாக எழுதியிருப்பவர்,  -எழுதித் தீராப் பக்கங்கள்- என்ற  அழகிய  தலைப்பையும் தந்தவர், உள்ளே  அத்தியாயங்களின் தலையங்களிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

-சிங்காரி  வந்தாள்   சிரிப்பை   மூட்டினாள் -மாயக்.கிழவியும்,மந்திரக்  கண்ணாடியும்-போன்று  சித்திரக்கதைப்  புத்தகங்களின்  தலைப்புகள் போல சிறுபிள்ளைத் தனமாக இவை  இருக்கின்றன. உதாரணமாக…

-பெண்ணொருத்தி என்னருகே வந்தாள்-

-மாஸ்ரரும் நரகலோக நங்கையும்-எனத் தலைப்பிட்டிருப்பதைக் குறிப்பிடலாம்.

.இந்தத் தலைப்புகளில் கொஞ்சம் கனதியைக் கொண்டு வந்திருக்கலாம்.ஓவியங்களும் கவனத்தை  ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே வரையப்பட்டன போல தேவையில்லாத கவர்ச்சியுடன் மிகைப்பட்டுத் தோன்றுகின்றன.  இவ்விதமாகத் தலைப்புகளும் இளம் பெண்களின் ஒயிலான படங்களும் எனக் கவர்ச்சி மூலம் தான் வாசகர்கள் இவற்றைப் படிக்க வேண்டுமென இதைத் தொடராக வெளியிட்ட பத்திரிகையும் செல்வமும் தொகுப்பாக்கிய  பதிப்பகமுமாக  நினைத்தனரோ?

தனியே ஆண்களாகச் சேர்ந்து சமையல் செய்யும்போது ,அதில் பலர் கைதேர்ந்த சமையல்காரர்களாக இருப்பதும், இங்கு மிகச் சர்வ சாதாரணம்.

ஓரிடத்தில் நண்பர் ஒருவர்  -குஸ்குஸ்- செய்யும் வித்தியாசமான முறைபற்றி இவர் எழுதியிருப்பது வேடிக்கையாயிருக்கின்றது. சாதாரணமாகக் குஸ்குஸ் செய்யும் முறையையே இது புரட்டிப் போடுகின்றது.’நெத்தலிக் கருவாட்டைப் பொரித்துக்  குஸ்குஸ் உடன் கலந்து .மாட்டிறைச்சிக் கறியுடன் அவர் சமைப்பது அப்படி ருசியாய் இருக்கும்…அந்த ருசி இன்றும் நாவில் தங்கியிருக்கு’ என்பது  போல்  இவர்  எழுதியிருப்பது கண்டு இப்படி ஒருக்காச்  செய்து பார்க்க  வேண்டும் என்ற ஆவலைத் தந்திருக்கின்றது…செய்து பார்க்கவேண்டும்.

30 வருட  காலம்  ஈழத்தில் நடந்த யுத்தம் எப்படியெல்லாம்  மக்களைப் பல  தேசங்களுக்கும் விரட்டியது என்பதையும் எத்தனை இடையூறான வழிகளை  ….நாடுகளைக் கடந்து தாம் போக நினைத்த நினைக்காத  நாடுகளுக்குள்  வந்து சேர்ந்தார்கள் என்பதைக் கலகலப்புத் தொனிக்க எழுதியிருந்தாலும் அவற்றினூடே தெரியும் வலிகளும், அவை தந்த மறக்க முடியாத பேரனுபவங்களும் ,அவலங்களும் புலம் பெயர்ந்து வாழ்வோரால் மட்டுமே உணர  முடியும்.

ஈழத்தில் இருந்து கொண்டு தனிப்பட்ட ரீதியான அரசியல் நெருக்கடிகள் ஏதுமற்றவர்களாக நல்ல படிப்பு,வேலை,இயற்கை எழில் மிகுந்த சூழல் என வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் கூட அங்கிருப்பதை விட்டுவிட்டு ,வெளி நாடுகளுக்குப் போயே  தீரவேண்டும் என்று முனைகின்றனர். இக்கனவுகளில் உழல்வோருக்கு எப்படிச் சொன்னாலும் விளங்கித்  தீராது. இங்கு வந்து மொழியறிவற்ற அகதிகளாக வாழ்வைக் கொண்டு சென்று ஒரு நிம்மதியான நிலையை அடைவதென்பது பெரும் போராட்டங்கள் நிறைந்த சவால். அதை எதிர் கொள்ள முடியாமல் மனநோயாளிகளாகவும் கொலைகாரர்களாகவும் சமூகவிரோதிகளாகவும் மாறிவிட்ட இளைஞர்களைப் பார்க்கிறோம். எதிர்பார்த்து வந்த வெளிநாட்டுப் பளபள வாழ்வு உண்மையில்லை என்ற பெண்களின் ஏமாற்றங்களும் தற்கொலைகளும் பற்றி அறிந்துகொண்டு தானிருக்கிறோம். இவையெல்லாம் இன்னுமின்னும் எழுதப்படவேண்டிய தீராப்பக்கங்களாய் நம்மிடையே மறைத்தும் மறைந்தும் கிடக்கின்றன.

நன்றி  ஆக்காட்டி 12

https://thoomai.wordpress.com/2016/12/20/எழுதி-எழுதித்-தீராப்பக்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.