Jump to content

சம்பந்தன் அளித்த உறுதி நடைமுறையில் இல்லை! சொந்த நிலத்தை பார்வையிட அனுமதி மறுக்கும் இராணுவம்!


Recommended Posts

கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட பரவிப்பாஞ்சான், இரணைதீவு பகுதிகளில் தமிழ் மக்களுடைய நிலங்களை அபகரித்து கடற்படையினர் மற்றும் படையினர் நிலைகொண்டிருக்கும் நிலையில், அந்த பகுதிகளை சொந்த வாழ் விடமாக கொண்ட மக்கள் தங்கள் சொந்த நிலத்தை பார்பதற்கும் கூட கடற்படை மற்றும் படையினர் அனுமதி மறுப்பதாக மேற்படி பகுதிகளை சேர்ந்த மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து விசனம் வெளியிட்டுள்ள அப்பகுதி மக்கள், தமது சொந்த நிலங்களை பார்வையிட அனுமதியுங்கள் என மக்கள் விடுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைமைகள் விடுக்கும் கோரிக்கையினையும் கடற்படையினர் நிராகரித்திருக்கின்றனர். ஆனால் தென்னிலங்கையில் இருந்து வந்திருக்கும் சிங்கள மீனவர்களுக்கு இறால், நண்டு பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளனர்.

கிளிநொச்சி நகர் பகுதியில் உள்ள பரவிப்பாஞ்சான் பகுதியில் சுமார் 180 ஏக்கர் வரையிலான மக்களுடைய நிலம் படையினருடைய கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை, நிலத்திற்கு சொந்தமான மக்கள் நாங்கள் சென்று பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றது.

எங்களுடைய நிலத்தை எதிர்கட்சி தலைவர் வந்து பார் வையிட்டு அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்த போதும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்பட்டதாக இல்லை.

இந்நிலையில் எங்களுடைய நிலத்தை பார்ப்பதற்கும், எங்களுடைய வீடுகளை பார்ப்பதற்கும் கூட படையினர் முழுமையாக அனுமதி மறுத்து வருகின்றார்கள். என பரவிப்பாஞ்சான் மக்கள் கூறியிருக்கின்றனர்.

இதேபோன்று கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இரணைதீவு மக்களும் கடற்படையினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றனர்.

அதாவது 1990ஆம் ஆண்டு தாம் தமது சொந்த நிலத்தை விட்டு வெளியேறிய நிலையில் தமது சொந்த நிலத்தை பார்வையிட கடற்படை அனுமதி மறுத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் நாம் இந்த விடயத்தை சுட்டிக்காட்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அனுமதி கேட்டதற்கும் கடற்படை மறுத்துள்ளதாகவும், தங்களுடைய நிலத்தில் தென்னிலங்கை மீனவர்கள் நண்டு, இறால் பிடிப்பதற்காக தங்கியிருப்பதாகவும் மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றனர்.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சிறீதரனுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது,

பரவிப்பாஞ்சான் பகுதி கிளிநொச்சி நகரில் இருக்கின்றது. அந்தப் பகுதிக்கு சொந்தமான மக்கள் அவர்களுடைய சொந்த நிலத்தில் மீள்குடியேற்றப்படாத நிலையே தொடர்ந்தும் காணப்படுகின்றது.

இதில் சுமார் 60 வரையான குடும்பங்கள் காணிகளுக்கான ஆவணங்களை வைத்துக் கொண்டு இருக்கின்றபோதும் படையினர் மக்களுடைய நிலத்தை விடுவிக்க தயாராக இல்லை. இந்நிலையில் வாடகை தருகிறோம், ஆவணங்களை தாருங்கள் என்றெல்லாம் மக்களை மோசமாக ஏமாற்றிக் கொண்டிருப்பதையே படையினர் தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கின்றனர்.

இதேபோல் இரணை தீவு மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தனர். அந்த தீவில் சுமார் 400 குடும்பங்களுக்கான வீடுகள், கால்நடைகள், மற்றும் பெறுமதியான பயன்தரு மரங்கள் காணப்படும் நிலையில் மக்கள் தங்கள் நிலத்திற்கு செல்வதற்கு கடற்படையினர் தடை விதிக்கின்றனர்.

ஆனால் அங்கே தென்னிலங்கை மீனவர்கள் கடற்படையினருடன் தங்கியிருந்து கடற்றொழில் செய்கிறார்கள். ஆனால் எங்களுடைய மக்களுக்கு அந்த கடலில் தொழில் செய்வதற்கும் கூட அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் மக்களுடைய கால்நடைகள் மூலம் கிடைக்கும் பால் மற்றும் தென்னைகள் மூலம் கிடைக்கும் தேங்காய் ஆகியவற்றை கடற்படையினர் மக்களுக்கே மீண்டும் விற்பனை செய்யும் கொடுமையும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் இரணைதீவுக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைமைகள், மற்றும் மக்கள் செல்வதற்கான அனுமதியை கோரும் தீர்மானம் கடந்த 11ம் திகதி இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு பூநகரி பிரதேச செயலர் ஊடாக கடற்படையினரிடம் அனுமதி கேட்கப்பட்ட நிலையில் கடற்படை அந்த அனுமதியை நிராகரித்து பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெறவேண்டும் என கடற்படை கூறியிருக்கின்றது.

மேலும் இரணைமாதா நகரில் இரணைதீவு மக்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுத்திருக்கின்றோம் எனவும் கடற்படை கூறியிருக்கின்றது. இது சகித்துக் கொள்ள முடியாத ஒரு கருத்தாகும்.

மக்களுடைய நிலங்கள் மக்களிடமே வழங்கப்படவேண்டும் என கூறிக்கொண்டிருக்கும் ஜனாதிபதி கிளிநொச்சி மாவட்டத்தில் 40 வீதமான நிலத்தை படையினருடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை பார்த்துக்கொண்டிருக்கின்றமையும் இங்கேயே நடக்கின்றது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

http://www.tamilwin.com/politics/01/109499

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம் மே உறுதியாக இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் 2016 இல் அதிசயம் நடக்கப் போகுது கதை தான். இன்னும் அச்சொட்டா 6 மாதம் இருக்குது. அந்த அதிசயம் நிகழ.

ஒருவேளை சூரியன் இராவும் பகலும் இருண்டாலும்.. சம்பந்தர் சொன்ன அந்த அதிசயம்.. நிகழுமா........................................ நிகழ்தகவு......................... tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.