Jump to content

வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதியிலிருந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை விடுதலை செய்யாத இராணுவம்


Recommended Posts

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து காங்கேசன்துறை பகுதி விடுவிக்கப்பட்டுள்ள போதும் அங்குள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தினை இராணுவத்தினர் விடுவிக்காமல் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர். விடுவிக்காமல் இராணுவம் தம்வசம் வைத்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தினை சூழ பாதுகாப்பு வேலிகளை அடைத்து பாதுகாப்பு பலப்படுத்தும் நடவடிக்கையிலும் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து அண்மையில் 201.3 ஏக்கர் காணிகள் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதியில் காங்கேசன்துறை பகுதியில் மட்டும் 63 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தது. குறித்த காணிகளுக்குள் காங்கேசன்துறை வீதிக்கு அருகில் உள்ள தெல்லிப்பளை எம்.பி.சி.எஸ் இன் எரிபொருள் நிரப்பு நிலையமும் அமைந்திருந்த காணியும் விடுவிக்கப்பட்டிருந்தது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தினை இதுவரை காலமும் இராணுவத்தினர் பயன்படுத்தி வந்திருந்தனர்.

இருப்பினும் குறித்த பகுதி மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ள போதும் அங்குள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தினை விட்டு இராணுவத்தினர் வெளியேறவில்லை. தொடர்ந்தும் அதனை தமது கட்டுப்பாட்டின் கீழேயே வைத்துள்ளனர். தமது கட்டுப்பாட்டின் கீழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தினை வைத்துள்ள இராணுவத்தினர் அவ் எரிபொருள் நிரப்பு நிலையத்தினை நிரந்தரமாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கத்தில் அதனைச் சூழ முற்கம்பிகளால் நிரந்தர பாதுகாப்பு வேலிகளையும் தற்போது அமைத்து வருகின்றனர்.

உயர்பாதுகாப்பு வலையம் என்ற போர்வைக்குள் கடந்த 26 வருடங்களாக இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ள காணிகள் தற்போது பகுதி பகுதியாக விடுவிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு விடுவிக்கப்படும் சிறிய அளவிலான காணிகளிலும் உள்ள பொது மக்களின் பயன்பாட்டிற்கு உரியவற்றினை இராணுவத்தினர் தம்வசம் வைத்துள்ளதால் விடுவித்த பகுதிகளின் மீள்குடியேற்றம் கூட முழுமையடையாத நிலையிலேயே காணப்படுவதாகவும் வலி.வடக்கு வாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

http://www.tamilwin.com/security/01/109502

Link to comment
Share on other sites

4 hours ago, போல் said:

இருப்பினும் குறித்த பகுதி மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ள போதும் அங்குள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தினை விட்டு இராணுவத்தினர் வெளியேறவில்லை. தொடர்ந்தும் அதனை தமது கட்டுப்பாட்டின் கீழேயே வைத்துள்ளனர். தமது கட்டுப்பாட்டின் கீழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தினை வைத்துள்ள இராணுவத்தினர் அவ் எரிபொருள் நிரப்பு நிலையத்தினை நிரந்தரமாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கத்தில் அதனைச் சூழ முற்கம்பிகளால் நிரந்தர பாதுகாப்பு வேலிகளையும் தற்போது அமைத்து வருகின்றனர்.

:grin:

ஏற்கனவே சென்ற கிழமை விடுவிக்கப்பட்டு நானே போய்வந்த மாங்கொல்லை, காட்டடைப்பு பகுதியிலேயே புதுசா முள்ளுக்கம்பி வேலி முளைச்சுட்டுதாம். நீங்க வேற பெட்ரோல் ஷ்டேசனைப் பற்றி கவலை படுகிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

:grin:

ஏற்கனவே சென்ற கிழமை விடுவிக்கப்பட்டு நானே போய்வந்த மாங்கொல்லை, காட்டடைப்பு பகுதியிலேயே புதுசா முள்ளுக்கம்பி வேலி முளைச்சுட்டுதாம். நீங்க வேற பெட்ரோல் ஷ்டேசனைப் பற்றி கவலை படுகிறீர்கள்.

கிட்டடியிலை ஊருக்கு வந்து திரும்பின ஒருவரை சந்திச்சன். அவர் சொன்னார் இனிமேல் ஆமி இல்லாத யாழ்ப்பாணத்தை கனவிலையும் நினைச்சு பார்க்கேலாதாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.