Jump to content

பெண்ணொருவரின் கணினியில் தானாக விண்டோஸ் 10 தரவிறக்கம்; 15 இலட்சம் ரூபா நஷ்டஈடு செலுத்த மைக்ரோசொப்ட் நிறுவனம் இணங்கியது


Recommended Posts

பெண்ணொருவரின் கணினியில் தானாக விண்டோஸ் 10 தரவிறக்கம்; 15 இலட்சம் ரூபா நஷ்டஈடு செலுத்த மைக்ரோசொப்ட் நிறுவனம் இணங்கியது
2016-06-30 12:10:05

17692c1.jpgஅமெ­ரிக்­காவைச் சேர்ந்த பெண் ஒரு­வரின் கணி­னியில் தானாக விண் டோஸ் 10 மென்­பொருள் தர­வி­றக்கம் செய்­யப்­பட்­டதால் அப்­ பெண்­ணுக்கு 10,000 டொலர் (சுமார் 15 இலட்சம் ரூபா) நஷ்ட ஈடு வழங்­கு­வ­தற்கு மைக்­ரோ சொப்ட் நிறு­வனம் இணங்­கி­யுள்­ளது.


டெரி கோல்ஸ்டெய்ன் எனும் இப்­ பெண்ணின் கணி­னியில் விண் டோஸ் 7 பதிப்பு பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­தது. இந்­நி­லையில் தனது அனு­ம­தி­யின்றி அக்­ க­ணி­னி யில் தானா­கவே விண்டோஸ் 10 பதிப்பை தற­வி­றக்கம் செய்யும் முயற்சி இடம்­பெற்று தோல்­வி­ய­டைந்­த­தாக அப் பெண் தெரி­வித்­துள்ளார்.


இத்­ தோல்­வி­யுற்ற முயற்சி கார­ண­மாக தனது கணி­னியை பல நாட்கள் பயன்­ப­டுத்த முடி­யா­தி­ருந்­த­தா­கவும் கலி­போர்­னியா மாநி­லத்­தி­லுள்ள பயண முகவர் நிறு­வ­ன­மொன்றின் உரி­மை­யா­ள­ரான அவர் தெரி­வித்தார்.  


பின்னர் கணினி இயங்­கா­மையால் தனது வரு­மா­னத்­துக்கு ஏற்­பட்ட பாதிப்­புக்­க­ளுக்­கா­கவும் புதிய கணி­னிக்­கான செல­வுக்­கா­கவும் மைக்­ரோசொப்ட் நிறு­வ­னத்­துக்கு எதி­ராக டெரி கோல்ஸ்டெய்ன் வழக்குத் தொடுத்தார்.

 

17692c2.jpg

 

இது தொடர்­பான மேன்­மு­றை­யீட்டை கைவிட்டு, அப்­ பெண்­ணுக்கு நஷ்ட ஈடு வழங்­கு­வ­தற்கு மைக்­ரோசொப்ட் நிறு­வனம்  இணக்கம் தெரி­வித்­துள்­ளது.


விண்டோஸ் 10 பதிப்பு கடந்த வருடம் வெளி­யி­டப்­பட்­டது. விண் டோஸ் 7, விண்டோஸ் 8 பாவ­னை­யா­ளர்கள் தற்­போது இல­வ­ச­மாக விண்டோஸ் 10 பதிப்பை தர­வி­றக்கம் செய்­து­கொள்ள முடியும்.

 

எனினும் பழைய ரக கணினிகளைப் பயன்படுத்துபவர்கள் பலர் இப் புதிய மென் பொருளை தரவிறக்கம் செய்ய முடியாமல் உள்ளனர் எனத் தெரிவிக்கப் படுகிறது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=17692#sthash.jTJaXLv8.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஐபாட் வாங்கினா.. அது பழுதாகித் தீரும் வரை iOs அப்டேட் செய் தெரியாத பெண்கள் தான் இந்த உலகில் அதிகம். அதுங்க இப்படி குறுக்கு வழியில் தான் ஏதாவது செய்து தொலைக்கனும். 

மைக்குரோசாவ்டுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும். tw_blush:

Link to comment
Share on other sites

3 hours ago, nedukkalapoovan said:

ஒரு ஐபாட் வாங்கினா.. அது பழுதாகித் தீரும் வரை iOs அப்டேட் செய் தெரியாத பெண்கள் தான் இந்த உலகில் அதிகம். அதுங்க இப்படி குறுக்கு வழியில் தான் ஏதாவது செய்து தொலைக்கனும். 

மைக்குரோசாவ்டுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும். tw_blush:

நெடுக்ஸ்
 எங்களுக்குள்ள இருக்குற உந்த கருத்து வேறுபாடுகளை மூட்டை கட்டி ஒரு மூலையில வைச்சுட்டு இந்த கேள்விக்கு பதில் தாங்கோ -ப்ளீஸ்   

அம்மா மடியிலயும் படுத்தன் - மனது சுகமாயிருந்தது.
மனைவி மடியிலயும் படுத்தன் - மனதும், உடலும் சுகமாயிருந்தது 
மகள் மடியிலயும் படுத்தன் - அடிக்கிறாள்  (தான்தான் எனது மடியில் படுக்கணுமாம்)

இங்கு எழுத மறந்தது எனது பெஸ்ட் பிரெண்டு அக்காதான். அப்புறம் அம்மம்மா.

இப்படியான அன்பான பெண்கள் மீது ஏன் உங்களுக்கு இவ்வளவு கோபம்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.