Jump to content

பிரெக்ஸிட் வாக்கெடுப்பு: பிரித்தானியா வெளியேறுமா?


Recommended Posts


பிரெக்ஸிட் வாக்கெடுப்பு: பிரித்தானியா வெளியேறுமா?
 

article_1467259618-Bre.jpgதெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

தீர்மானிக்கும் சக்தியாக, மக்கள் எப்போதும் இருப்பதில்லை. ஆனால், அவர்கள் தீர்மானமான சக்தியாகும்போது, பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் மாயத்தை நிகழ்த்துவார்கள். ஐனநாயகம் என்ற அழகிய முகமூடி, தேர்தல் என்ற கவசத்தினூடு முழுமையாக மறைத்திருக்கின்றபோதும்,

அக்கவசத்தையை ஆயுதமாக்கி மக்கள் நிகழ்த்தும் மாயம், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை அல்ல, மக்கள் மீதான நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாயுள்ளது. 

நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்துவிடும் என்ற பாடல் வரிகள், அண்மைய பிரித்தானிய நிலைவரங்களை விளக்கப் பொருத்தமானவை. பிரெக்ஸிட் வாக்கெடுப்பு எனப் பரவலாக அறியப்பட்ட, ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் உறுப்பு நாடாக இருப்பதா விலகுவதா எனத் தீர்மானிக்கக் கடந்த வாரம் நடந்த பிரித்தானிய சர்வஜன வாக்கெடுப்பு முடிவுகள் உலகத்தை உலுக்கின. ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியதுடன், பிரித்தானியாவின் இருப்பையும் சிக்கலுக்குள்ளாக்கிய வகையில் இவ்வாக்கெடுப்பின் முடிவுகள் முக்கியமானவை.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து மேலதிக சலுகைகளைப் பெற, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரோன் ஆடிய சூதாட்டமான இந்த சர்வஜன வாக்கெடுப்பு, இறுதியில் சொந்தச் செலவில் சூனியம் வைத்த கதையாயிற்று.

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமான பிரித்தானியா, ஐரோப்பாவில் ஜேர்மனிக்கு அடுத்த பெரிய பொருளாதாரமாகும். இவ்விலகல், பிரித்தானியாவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் மட்டுமன்றி, ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக, குடிவரவு உறவுகளைப் பேணும் ஏனைய நாடுகளையும் பாதிக்கும். 1957இல் உருவாக்கிய ஐரோப்பிய பொருளாதாரச் சமூகத்தில், பிரித்தானிய உறுப்புரிமையை 1973 வரை பிரான்ஸ் மறித்தது. பிரெஞ்சு ஜனாதிபதி சார்ள் டி கோலின் மறைவின் பின்பே, பிரித்தானியா அதில் இணைய முடிந்தது. 1975இல் ஆட்சிக்கு வந்த பிரித்தானிய தொழிற் கட்சி, பிரித்தானியா- ஐரோப்பிய பொருளாதாரச் சமூகத்தில் தொடர்வதா இல்லையா எனத் தீர்மானிக்கும் சர்வஜன வாக்கெடுப்பை நடாத்தியபோது, 67 சதவீதம் பேர் இணைந்திருப்பதை ஆதரித்தனர். அதன் பின் அத்தகைய சர்வஜன வாக்கெடுப்பை நடாத்தும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

1993இல், ஐரோப்பிய பொருளாதார சமூகத்தின் புதிய வடிவமாக ஐரோப்பிய ஒன்றியம் உருப்; பெற்றது. ஆறு நாடுகளுடன் தொடங்கிய ஐரோப்பிய பொருளாதாரச் சமூகம், 12 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியமாகி, இன்று 28 உறுப்பு நாடுகளுடன் உலகின் முக்கியமானதொரு பொருளாதார வல்லரசாயுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாகிய போதும், ஐரோப்பியப் பொது நாணயமான யூரோவை, பிரித்தானியா தனது நாணயமாக்காததுடன், ஐரோப்பிய நாடுகட்குப் பொதுவான குடிவரவு, குடியகல்வு உடன்பாடான ஷென்ஜென் நடைமுறைகளையும் ஏற்கவில்லை.     

பிரித்தானியாவின் பகுதிகளான இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய நான்கும் இவ்வாக்கெடுப்பில் வௌ;வெறுவிதமாக வாக்களித்துள்ளன. இவ்வேறுபாடுகள், ஏலவே முரண்பாடான சகவாழ்வை நடத்தும் இந்நான்கு பகுதிகளின் எதிர்காலத் திசைவழி பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளன.

இங்கிலாந்தில், 54 சதவீதம் பேர் வெளியேற்றத்தை ஆதரித்து வாக்களித்துள்ளனர். எனினும், தலைநகர் இலண்டனிலும் அண்டிய பகுதிகளிலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வதற்காக வாக்களித்துள்ளனர். இங்கிலாந்தின் கிராமப்புறங்களும் புறநகர்ப்பகுதிகளிலும் வெளியேறுவதற்கு ஆதரவாக பெரும்பாலோர் வாக்களித்துள்ளனர். வேல்ஸ்ஸும்

வெளியேற்றத்தை ஆதரித்து வாக்களித்துள்ளது. இங்கிலாந்தையொத்தவாறு, 53 சதவீதம் பேர் வெளியேற்றத்தை ஆதரித்து வாக்களித்தபோதும் தலைநகரான கார்டி‡ப்; வாக்காளர்களில் 60 சதவீதம் பேர் தொடர்ந்தும் இருப்பதை ஆதரித்துள்ளனர். இங்கிலாந்தும் வேல்ஸும் வெளியேறலை ஆதரித்த போதும், இவ்விரு பகுதிகளதும் தலைநகரங்களும் பெருநகரங்களும் தொடர்ந்திருப்பதை ஆதரித்தமை வாக்கெடுப்பின் சமூகப் பொருளாதாரக் காரணிகளைச் சுட்டுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுதை பிரித்தானியர்கள் ஆதரித்த ஒரு காரணம், அங்கு எழுச்சி காணும் தேசியவாத நிலைப்பாடும் குடியேறிகட்கும் அகதிகட்கும் எதிரான மனநிலை எனச் சிலர் வாதிப்பர். ஆனால், வாக்களிப்பின் பின்னுள்ள சமூகப் பொருளாதாரக் காரணிகள் பற்றி எந்த நாளேடும் சொல்லவில்லை. வாக்களிப்பை மூன்று அடிப்படைகளில் விளங்கலாம். முதலாவது, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்ததன் விளைவாக உள்வாங்கிய திறந்த சந்தையும் அதன் பொருளாதாரமும். இரண்டாவது, 2008இல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியும் அது முடிவுறாமையும். மூன்றாவது, கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரித்தானிய அரசாங்கம் கடைப்பிடிக்கும் சிக்கன நடவடிக்கைகளும் சமூக நல உதவி வெட்டுக்களும்.

இம் மூன்றும் பிரித்தானியாவின் உழைக்கும் மக்களை மிகப் பாதித்துள்ளன. திறந்த சந்தையும் கட்டற்ற குடிவரவும் சாதாரண உழைக்கும் பிரித்தானியர்களின் அன்றாட வாழ்வில் செலுத்திய தாக்கம் பெரிது. 2008இல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியில் இருந்து பிரித்தானியா மீண்டுள்ளதாகச் சொல்லப்படினும், அம்மீட்சி முழுமையானதல்ல. பொருளாதாரத்தின் மையங்களாகத் திறந்த வணிகமும் தாராளவாத நடைமுறைகளின் ஊற்றுக்கண்களான தலைநகரங்களுமே மீட்சியடைந்தன. ஏனெனில், அங்குதான் நாட்டின் உயர்குடிகளும் செல்வர்களும் அரசியல்வாதிகளும் வசிக்கிறார்கள். அரசாங்கம், அவர்களது நலன்கட்கு முன்னுரிமை வழங்குகிறது. பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்ந்திருப்பதை இலண்டன், கார்டிவ் ஆகியன ஏன் ஆதரித்தன என்பதை விளங்க இது போதுமானது.  

இவ் வாக்கெடுப்பு முடிவுகளைப் பகுத்து நோக்கின், குறைந்த மாத வருமானம் பெறுபவர்கள், உயர் கல்வியறிவு பெறாதவர்கள், வேலைவாய்ப்பற்றவர்கள் எனச் சமூக அடுக்குகளில் தாழ்நிலையில் உள்ளவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதை ஆதரித்துள்ளனர். வேறு வகையிற்; சொன்னால், திறந்த சந்தையாலும் நவ-தாராளவாதப் பொருளாதாரத்தாலும் மோசமாக உறிஞ்சப்பட்டோரும், சமகாலப் பொருளாதார முறையால் ஒதுக்கப்பட்டுப் பொருளியல் முடிவுகளைத் தீர்மானிக்கத் தகுதியற்றோர் எனக் கருதப்படும் சாதாரணமாக மக்கள் வரலாற்றைத் திருப்பும் இச்செயலைச் செய்திருக்கின்றனர். 

இளையோர், குறிப்பாக 18 முதல் 24 வயதுக்கு உட்பட்டோரில் 73 சதவீதமானோரும் 24 முதல் 34 வயதுக்குட்பட்டவர்களில் 62 சதவீதமானோரும் தொடர்ந்தும் நிலைக்க வாக்களித்துள்ளனர். மாறாக, 65 வயதுக்கு மேற்பட்டோரில் 60 சதவீதமானோரும் 45 முதல் 64 வரையான வயதையுடையோரில் 57 சதவீதமானோரும் வெளியேறுதற்காக வாக்களித்துள்ளனர். நவ தாராளவாதம் எவ்வாறு இயங்குகிறது என இது மேலுந் தெளிவாக்குகிறது. கல்வி கற்றுப் பாடசாலையில் இருந்தோ அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்தோ தொழிற் சந்தைக்குள் நுழையும் இளையோர், மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். நடைமுறையிலுள்ள சுரண்டலும் தீய பொருளாதாரக் கட்டமைப்பும் தமக்கு நன்மைதரும்; எனக் கல்விமுறை அவர்களை நம்பவைக்கிறது. ஆனால், இப்பொருளாதார அமைப்புக்குள் இருபது ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்தோர் இந்த நச்சுவட்டத்தின் மோசமான விளைவுகளை நன்கறிவர்;. திறந்த சந்தையும் ஐரோப்பிய ஒன்றியக் கூட்டிணைவும் அவர்களின் வாழ்வை எவ்வாறு பாதித்துள்ளது என அனுபவவாயிலாக அறிந்ததன் விளைவை அவர்களின் வாக்களிப்புக் கோலம் காட்டுகிறது.

தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதை ஸ்கொட்லாந்தினதும் வட அயர்லாந்தினதும் பெரும்பான்மையோர் ஆதரித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகின்;, அது இவை இரண்டினதும் விருப்புக்கும் மாறான முடிவாகும். இந் நிலையில் அவை பிரித்தானியாவில் தொடர்ந்திருப்பதா பிரிந்து தனிநாடுகளாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதா என்ற முடிவை எட்டும் நிலையிலுள்ளன. இது பிரித்தானியா என்ற நாட்டின் எதிர்காலத்தைச் சிக்கலாக்கி, ஒரு கூட்டிணைவாக நான்கினதும் இருப்பை நிச்சயமற்றதாக்கியுள்ளது.

ஐரோப்பா எங்கும் செல்வாக்குப் பெற்றுவரும் தீவிர வலதுசாரிக் கட்சிகளின் எழுச்சி இன்னொரு எதிர்காலத்தைக் கோருகிறது. அதற்கு பிரித்தானியாவும் விலக்கல்ல என வாக்கெடுப்பு முடிவுகள் சுட்டுகின்றன. பிரித்தானியாவின் பெரிய இரண்டு கட்சிகளான பழமைவாதக் கட்சியும் தொழிற் கட்சியும் பிரித்தானியா தொடர்ந்தும் இருப்பதற்காகப் பிரசாரம் செய்தபோது குடியேறிகட்கு எதிரான தீவிர வலதுசாரிக் கட்சியான ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி வெளியேறுவதை ஆதரித்துப் பிரசாரம் செய்தது. வாக்கெடுப்பு முடிவுகள் இக் கட்சியையும் அதன் தலைவர் நைஜல் ‡பராஜையும் முன்னிலைக்குக் கொண்டுவந்துள்ளன.

பிரித்தானியாவின் வாக்கெடுப்பைத் தொடர்ந்து பிரான்ஸ், நெதர்லாந்து, ஒஸ்திரியா, ஃபின்லாந்து, ஹங்கேரி, இத்தாலி, போர்த்துக்கல், ஸ்லோவாக்கியா ஆகிய எட்டு நாடுகள் சர்வஜன வாக்கெடுப்புக்குத் தயாராகின்றன. 

இப் பின்னணியில் பிரித்தானியாவின் அடுத்தகட்ட நடவடிக்கையை நோக்கல் தகும். ஐரோப்பிய ஒன்றிய நாடொன்று அங்கத்துவத்தில் இருந்து விலகும் அடிப்படைகளை லிஸ்பன் உடன்படிக்கை கூறுகிறது. அதன்படி ஐரோப்பிய ஒன்றிய பட்டயத்தின் 50ஆவது உறுப்புரையை நடைமுறைப்படுத்தி வெளியேறவியலும். ஆனால், அவ்வுறுப்புரைப்படி, ஒரு நாடு அதன் அரசியலமைப்புத் தேவையின் அடிப்படையிலேயே விலகலாம். எனவே, அதைத் தீர்மானிக்கும் அதிகாரம் நாடாளுமன்றினது.

மக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் பிரித்தானியா பிரிந்து போக வேண்டும் என்பது கட்டாயமல்ல. ஏனெனில், இந்த சர்வஜன வாக்கெடுப்பின் அடிப்படைகளை உருவாக்க நாடாளுமன்றில் நிறைவேற்றிய சட்டம்,

இம்முடிவுகளைக் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றோ அல்லது முடிவுகள் கட்டுப்படுத்த வல்லவை என்றோ சொல்லவில்லை. 

மக்கள் எவ்வாறு வாக்களித்தாலும் இறுதியில் முடிவை எடுப்பது நாடாளுமன்றமே. எனவே, பிரித்தானிய வெளியேற்றம் முடிந்த முடிவல்ல. இதை நன்கறிந்தே பிரித்தானியப் பிரதமர் உடனடியாக விலகாமல் ஒக்டோபர் மாதம் விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் பிரிவு நிகழ இரண்டு ஆண்டுகள் வரை எடுக்கும் எனவும் சொல்லியுள்ளார். 

பிரித்தானியாவின் விலகல் உலகப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துவோரின் நலன்கட்கு நல்லதல்ல. வாக்கெடுப்பு முடிவு ஒரு பாரிய சூறாவளியை ஏற்படுத்தியுள்ளது. இது எதிர்பாராதது. இப்போது அதைச் சமாளிக்கும் வேலைகள் துரித கதியில் நடக்கின்றன. ஊடகங்கள் பிரித்தானியா தொடர்ந்திருக்க வேண்டிய தேவையை வலியுறுத்துகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் எனக் கோருகின்றன.

இன்னொருபுறம் ஸ்கொட்லாந்து பிரிவதைத் தடுக்க ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்திருப்பதற்காக நாடாளுமன்றம் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்கப்படுகிறது. அனைத்தையும் உணர்ந்த ஜேர்மனிய சான்செலர் அங்கெலா மேர்க்கல், பிரித்தானியா விடயத்தில் பொறுமை காக்கும்படி வேண்டுகிறார்.  

பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்ல வாக்களிக்காது என்றார்கள். ஆனால் வாக்களித்தது. அதேபோற் பிரிந்து போகிறது என்பார், ஆனால் பிரியாது.

சுருங்கச் சொன்னால்:

நடக்காது என்பார் நடந்துவிடும், நடக்கும் என்பார் நடக்காது.

- See more at: http://www.tamilmirror.lk/175889/ப-ர-க-ஸ-ட-வ-க-க-ட-ப-ப-ப-ர-த-த-ன-ய-வ-ள-ய-ற-ம-#sthash.3irmZzBt.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.