Jump to content

ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ மொழிகளில் இருந்து ஆங்கிலம் நீக்கம்!


Recommended Posts

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகியுள்ளதால் ஐரோப்பிய ஒன்றிய உத்தியோகபூர்வ மொழிகளில் இருந்து ஆங்கிலம் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பாக, அண்மையில் பிரிட்டனில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 52 சதவீதம் பேர் ஆதரவாக வாக்களித்தனர். இதனால், ஒன்றியத்திலிருந்து விலக பிரிட்டன் தீர்மானித்தது.

இந்நிலையில், பிரிட்டன் பாராளுமன்றம் நேற்று கூடி ஆலோசித்ததுள்ளதுடன் பிரிட்டன் விரைவாக வெளியேற வேண்டும் எனவும் இதன்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விரைவாக பிரிட்டன் விலகவேண்டும் என சட்ட வரைவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதால் சர்வதேச நாடுகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இதன்போது விளக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் பதவி விலகிய பின்புதான் பிரிட்டன் விலகல் நடைமுறைக்கு சாத்தியமாகும் என்று தெரிகிறது.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதால், ஆங்கில மொழிக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் முதல் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலம் இருந்தது.

இதுதான் தொடர்பு மொழியாக, இந்த ஒன்றியத்திலுள்ள நாடுகளிடையே பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஆனால், தற்போது பிரிட்டன் விலகியுள்ளதைத் தொடர்ந்து, அதிகாரப்பூர்வ மொழியில் இருந்து ஆங்கிலம் நீக்கப்பட்டுள்ளது.

இந்த ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மொழி வழக்கத்தில் உள்ளது. அவற்றையே பயன்படுத்த அந்நாடுகள் முடிவு செய்துள்ளன.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடு ஒன்று விலகுவது இதுவே முதல்முறையாகும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

http://www.tamilwin.com/politics/01/109363

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணம் நடக்காது சீப்பை ஒளிச்சு வைச்சால் இங்குமாடா இப்படி ...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா உந்த மாதிரி செய்தி போட்டது எண்டு பார்த்தால், அட தமிழ்வின்; எங்கண்ட ஆள் கைவரிசை. tw_dizzy:

பிரிட்டன் முறையாக, புதிய பிரதமர் முடிவின் படி, வெளியேறும் விண்ணப்பம் சமர்பிக்கும் வரை, முழு உறுப்பினர் என்ற இன்றைய நிலையில் மாற்றமில்லை என இன்று சொல்லிவிட்டு வந்துள்ளார் கமரான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா பயங்காட்டலையும் விட்டு, புதுசா வாற பிரதமர், இன்னுரு எலெக்சன் வச்சு முடிவு தெரிஞ்சாப் பொறவு தான் வெளியால போற விண்ணப்பம் எண்டப் போகினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாக்களிச்ச ஆட்கள் எல்லாம் ராணியம்மாவின்ரை விசுவாசிகள் போலை கிடக்கு....:cool:

onlineImage_zpsdhvhladd.jpg

bra_zpsj0zqglg5.jpg

brexit-alte-waehler_zps5yp6m6gz.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நவீனன் said:

ஐரோப்பிய ஒன்றியம் அதற்கு வெளியே உள்ள இதர நாடுகளுடன் உரையாட ஆங்கிலம் தேவை. கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, சீனா உட்படட பாரிய பொருளாதார நாடுகளுடன் ஆங்கிலம் தான் தேவை.

 

சும்மா அள்ளி வைக்கிறது நம்மட ஆக்கள் மட்டுமல்ல. சில வெள்ளைப் பத்திரிகை யாளரும் கூட. பயம் காட்டிட எழுதிக்கினம் போல கிடக்குது.

Link to comment
Share on other sites

11 minutes ago, Nathamuni said:

ஐரோப்பிய ஒன்றியம் அதற்கு வெளியே உள்ள இதர நாடுகளுடன் உரையாட ஆங்கிலம் தேவை. கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, சீனா உட்படட பாரிய பொருளாதார நாடுகளுடன் ஆங்கிலம் தான் தேவை.

 

சும்மா அள்ளி வைக்கிறது நம்மட ஆக்கள் மட்டுமல்ல. சில வெள்ளைப் பத்திரிகை யாளரும் கூட. பயம் காட்டிட எழுதிக்கினம் போல கிடக்குது.

மேலே உள்ள தமிழ்வின் செய்தியில் இப்படி உள்ளது.

ஆனால், தற்போது பிரிட்டன் விலகியுள்ளதைத் தொடர்ந்து, அதிகாரப்பூர்வ மொழியில் இருந்து ஆங்கிலம் நீக்கப்பட்டுள்ளது.

நான் அதை நம்பவில்லை. அப்படி 2 நாளில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று EU எந்த முடிவும் எடுக்காது ஒரு மொழி விடயத்தில்.

இப்படியான செய்தி வேறு பல தமிழ் தளங்களில் நான் பார்த்தேன். ஆனால் கேள்விகுறி அடையாளத்துடன்தான் அந்த செய்தி இருந்தது. அதற்கு ஜெர்மனி, பிரான்ஸ் எதிர்ப்பு என்றும் இருந்தது.

ஆங்கில மொழியை கைவிட ஐரோப்பிய யூனியன் முடிவு?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமான விசயம், பிரிட்டன் இன்னும் விலகவில்லை.

பதவி விலகுவதால் தான் எந்த முடிவுகளும் எடுக்க முடியாது என்று கமரோன் அறிவித்து விட்டார்.

புதிய பிரதமரும், புதிய எதிர்கட்சித்தலைவரும் சேர்ந்தால் மீண்டும் மக்காளானைக்குப் போகலாம் அல்லது மக்களானையை நிராகரித்து, பாராளுமன்ற முடிவுக்குப் போகலாம்.

முக்கியமாக வெளியேறுவதற்கான விண்ணப்பம் சமர்பிக்கப் படாததால், இன்னும் முழு உறுப்பினர் தான்.

Link to comment
Share on other sites

அவர்கள் மக்கள் ஆணையை மதிக்கிறார்களோ அல்லது   பாராளுமன்ற முடிவுவை நடைமுறைபடுத்த முயலலாம். அது அவர்களது பிரச்சினை.

ஆனால் EU இந்த விடயங்களில் விட்டு கொடுக்கும் என்று நான் நம்பவில்லை.

 

Link to comment
Share on other sites

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆங்கில மொழிக்கு ஆபத்து

 

ஐரோப்பிய ஒன்றியம் தங்களின் உத்தியோகபூர்வ மொழிகளின் பட்டியலில் இருந்து ஆங்கில மொழியை நீக்க ஆலோசனை செய்துவருகிறது.

20160627_EP-038881A_DHO_002-714x349.jpg

மேலும் அதன் உறுப்புநாடுகளிலும் உத்தியோகபூர்வ மொழி அந்தஸ்தை ஆங்கில மொழி இழக்குமென தெரியவருகிறது.

 

இதுபற்றி ஐரோப்பிய பாராளுமன்றத்தின் அரசியலமைப்பு விவகாரக் குழு “கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் விலகுவதால் அவர்களது ஆங்கில மொழி தேவையில்லையென முடிவுசெய்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து விலக முடிவுசெய்துள்ள நிலையிலேயே ஆங்கில மொழிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/8348

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தொடர்ச்சியாக ஒரு மாத காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு குறைவடைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. தினசரி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ நாணயமாற்று விகித அறிவித்தலின் படி, செவ்வாய்க்கிழமை (19) தரவுகளின் பிரகாரம், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் கொள்முதல் பெறுமதி ரூ.299.29 ஆகக் காணப்பட்டது. இந்தப் பெறுமதி ஒரு மாத காலப்பகுதிக்கு முன்னர் சுமார் 322-325 ரூபாய்களுக்கு இடைப்பட்டதாகக் காணப்பட்டது. இவ்வாறு ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் உயர்வடைவது தொடர்பில் போது மக்கள் மத்தியில் தெளிவற்ற ஒரு மனநிலை காணப்படுவது புலனாகின்றது. பொதுவில் சந்தையில் மிகையாகக் காணப்படும் டொலர்களை இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்து, தனது இருப்பை அதிகரித்துக் கொள்ளும். அத்துடன், நாட்டில் இறக்குமதி வீழ்ச்சி ஏற்பட்டு, டொலர்களுக்கான கேள்வி குறைவடைந்திருக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுவதால், நாட்டினுள் டொலர் வரத்து அதிகரித்திருக்கும் போன்ற பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படலாம். எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் பரவலாகப் பேசப்படும் நிலையில், அதை இலக்காகக் கொண்டு இந்த ரூபாய் மதிப்பு உயர்வு நடவடிக்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. குறிப்பாக, அண்மைய வாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயத்தைத் தொடர்ந்து, மத்திய வங்கியின் ஆளுநர் அடங்கலாக, மத்திய வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் ஒருவிதமான பின்னடைவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த பிரச்சினையைச் சீர் செய்யும் வகையில், அரசாங்கத்துக்கு அதன் பிரபல்யத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் போது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திலுள்ளார். குறிப்பாக தேர்தல் காலம் என்பதால், அடுத்தமாதம் வரவுள்ள பண்டிகைகளை போது மக்கள் கொண்டாடுவதற்கு வழிவகை செய்யும் வகையில், இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகின்றதா அல்லது இந்த பெறுமதி உயர்வு உண்மையில் நிலைபேறானதா? தேர்தலின் பின்னர் கடந்த காலங்களைப் போன்று, டொலரின் பெறுமதி சடுதியாக 400 ரூபாயை தொட்டுவிடுமா போன்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை. அத்துடன், வெளிநாட்டுக் கடன்கள் மீளச் செலுத்துவது இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில், அவற்றை செலுத்த ஆரம்பிக்கையில், இந்தப் பெறுமதிக்கு என்ன நடக்கும் போன்ற தெளிவுபடுத்தல்களை மக்களுக்கு வழங்க வேண்டிய மத்திய வங்கியின் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் கடமையாகும். அத்துடன், ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி மீண்டும் அடுத்த மாதம் முதல் 15 வீதமாக குறைக்கப்படவுள்ளமை தொடர்பிலும் அரசாங்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான தீர்மானம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயமானதாகும். தேர்தல் கண்துடைப்பாக இருந்துவிடக்கூடாது, மக்கள் முன்னரை விட தற்போது அதிகம் தெளிந்துள்ளமையை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.     https://www.tamilmirror.lk/ஆசிரியர்-தலையங்கம்/ரபயன-மதபப-வணடமனற-கறககபபடகனறத/385-334940
    • இந்த திரியில் சரியாக ஒரு கிழமைக்கு பின் வந்து கருத்து எழுதுகிறேன்.
    • நான் எழுதுவது அல்லது எழுத போவதாக சொல்வது 4ம் தர சரோஜாதேவி கதைகளோ, படங்களோ அல்லவே அண்ணை? ஆகவே அனுமதி தேவையில்லை. ஊக்குவிப்புக்கு நன்றி🤣 ஓம்….இன்னும் கனக்க இருக்கு….அண்ணனின் டகால்டி வேலைகளை …… விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்🤣
    • பதவிக்கு வரும் முன்னே இவ்வளவு தில்லாலங்கிடி - இவரை நம்பி ஆற்றையும், மலையையும் கொடுத்தால்? போன தடவை தேர்தல் பத்திரத்தில் எத்தனை குளறுபடி? பதவிக்கு வர முன்னம் கருணாநிதி கூட இப்படித்தான் இருந்தார். இதை மக்கள் புரிந்தபடியால்தான் 2016 இல் இருந்து சத்துணவு முட்டையை மட்டும் கொடுக்கிறார்கள். நீங்கள் இவரை லிஸ்டில் சேர்கிறீர்களோ இல்லையோ அதில் ஒரு பலனுமில்லை. தமிழக மக்கள் இவரை அந்த லிஸ்டில் சேர்த்து கனகாலம். அடுத்த தேர்தலில் விஜை முதுகில் சவாரி செய்ய ஆசைபடுகிறார். பார்ப்போம்.  வட்டுக்கோட்டை!🤣
    • செந்தமிழன் சீமான் அண்ணா இம்முறை போட்டியிட்ட மக்களவைத் தொகுதி எது?  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.