Jump to content

30 வகை பூரி


Recommended Posts

30 வகை பூரி

 

சாப்பாட்டுக்கு ‘டிமிக்கி’ கொடுக்கும் குழந்தைகள்கூட, ‘இன்னிக்கி பூரி பண்ணப் போறேன்’ என்று சொன்னால்,  ‘ரெடியா?’ என்று உடனே பரபரப்பார்கள்.

அப்படி குட்டீஸ் முதல், சீனியர் சிட்டிசன்கள் வரை அனைவரையும் கட்டிப்போடும் 30 வகை பூரி ரெசிபிகளை இங்கே வழங்கும் சமையல்கலை நிபுணர் பாரதி முரளி, ”எண்ணெய் பயன்பாட்டை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதால், பூரி வகைகளை அளவோடு செய்து கொடுத்து ஆரோக்கியத்தோடு வாழுங்கள்” என்று வாழ்த்துகிறார்.

அத்தனை பூரியையும் அழகு மிளிர அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.

பூரி

1.jpg

தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், சர்க்கரை, ரவை – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ரவையையும், சர்க்கரையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கோதுமை மாவுடன், உப்பு, அரைத்த ரவை – சர்க்கரை, தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, கொஞ்சம் கனமானக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

குறிப்பு: மாவு பிசைந்தவுடனே பூரி செய்தால் எண்ணெய் ஒட்டாமல் இருக்கும்.

பேல் பூரி

2.jpg

 

தேவையானவை: அரிசிப் பொரி – 3 கப், துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம், தக்காளி – தலா கால் கப், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, வறுத்த வேர்க்கடலை, ஓமப் பொடி, வேக வைத்த உருளைக்கிழங்கு துண்டுகள் – தலா கால் கப், சாட் மசாலா – கால் டீஸ்பூன்.

கார சட்னிக்கு: கொத்தமல்லி, புதினா – ஒரு கப், பச்சை மிளகாய் – 3, உப்பு – தேவையான அளவு.

ஸ்வீட் சட்னிக்கு: புளி – 50 கிராம், வெல்லம் – கால் கப், பேரீச்சம்பழம் – சிறிதளவு, சீரகத்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்தால்… கார சட்னி தயார். வெல்லத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும். ஊற வைத்த புளியைக் கெட்டியாக கரைத்து வடிகட்டவும். இரண்டையும் ஒன்றாக சேர்க்கவும். பேரீச்சம்பழத்தை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் ஊற வைத்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் அதை புளி – வெல்லக் கரைசலில் விட்டு கொதிக்க வைத்து… மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கினால்… ஸ்வீட் சட்னி ரெடி.

வாய் அகன்ற பாத்திரத்தில் அரிசிப் பொரி, வெங்காயம், கேரட், தக்காளி, வறுத்த வேர்க்கடலை, வேக வைத்த உருளைக்கிழங்குத் துண்டுகள், சாட் மசாலா சேர்த்துக் கொள்ளவும். ஸ்வீட் சட்னி, கார சட்னியை கலந்து… அதன்மேல் ஓமப் பொடி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

பானி பூரி

3.jpg

தேவையானவை: ரவை – அரை கப் மைதா – அரை டீஸ்பூன், சோடா உப்பு – ஒரு சிட்டிகை, சர்க்கரை – ஒரு டீஸ்பூன், உருளைக்கிழங்கு மசாலா, ஸ்வீட் சட்னி, கார சட்னி, எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை: ரவை, மைதா, சோடா உப்பு, சர்க்கரை, உப்பு அனைத்தையும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து, சிறு சிறு உருண்டையாக உருட்டவும்.

அவற்றை சிறு பூரிகளாக இட்டு பொரிக்கவும். பூரியின் நடுவில் ஓட்டை போட்டு உருளைக்கிழங்கு மசாலா, ஸ்வீட் சட்னி, கார சட்னி ஊற்றி பரிமாறவும்.

ரவா பூரி

4.jpg

தேவையானவை: மைதா, மெல்லிய ரவை – தலா ஒரு கப், நெய் – கால் கப், பால் – அரை கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ரவை, மைதா, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு நெய்யை உருக்கி, மாவில் சிறிது சிறிதாக ஊற்றி பிரெட் தூள் போல செய்து, பாலை விட்டு கெட்டியாக பிசையவும் (தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்). 15 நிமிடம் ஊறிய பின் சிறிது கனமான பூரியாக இட்டு, பொரிக்கவும். இந்த பூரி மிகவும் கரகரப்பாக இருக்கும்.

தக்காளி பூரி

5.jpg

தேவையானவை: மைதா – ஒரு கப், கோதுமை மாவு – ஒன்றரை கப், தக்காளி – 2, சீரகத்தூள் – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை: தக்காளி, சீரகத்தூள், உப்பு, மிளகாய்த்தூள் எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பிறகு  வடிகட்டி… சிறிதளவு மைதா மாவை தனியே எடுத்து வைத்துக் கொண்டு, மீதி மைதா மற்றும் கோதுமை மாவை கலந்து பிசைந்து கொள்ளவும் (தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்). மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, தனியே எடுத்து வைத்திருக்கும் மைதா மாவில் புரட்டி, சிறிய பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

ஷாஹி பட்டூரா

6.jpg

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், மைதா மாவு – அரை கப், சர்க்கரை – 2 டீஸ்பூன், பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன், ஈஸ்ட்,

ஓமம் – தலா ஒரு டீஸ்பூன், மோர் – ஒன்றரை கப், சூடான பால் – அரை கப், ஸ்பிரிங் ஆனியன் – ஒன்று, எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை: முதலில் ஈஸ்ட்டை இளம் சூடான பாலில் போட்டு பொங்கி வரும் வரை வைக்கவும். பின் இந்த கரைசலுடன் கோதுமை மாவு, மைதா மாவு, பேக்கிங் பவுடர், சர்க்கரை, ஓமம், நறுக்கிய ஸ்ப்ரிங் ஆனியன், மோர், உப்பு சேர்த்துப் பிசையவும். சிறிது நேரம் ஊற வைத்தால் பொங்கி வரும். பின்னர் மாவை எடுத்து சற்று கனமாக பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரிக்கவும்.

தேங்காய் பூரண பூரி

7.jpg

தேவையானவை: கோதுமை மாவு (அல்லது) மைதா மாவு – ஒரு கப், சர்க்கரை – அரை கப், ரவை – கால் கப், தேங்காய் துருவல் – அரை கப், எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: தேங்காய் துருவல், ரவை, சர்க்கரை மூன்றையும் கலந்து 10 நிமிடம் ஊறவிடவும். கோதுமை மாவு (அல்லது) மைதா மாவை ஒரு சிட்டிகை உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். உருண்டையை எடுத்து குழி போல் செய்து, அதில் தேங்காய் கலவையில் சிறிது வைத்து மூடி, மெல்லிய பூரியாக இட்டு, எண்ணெயில்  பொரிக்கவும்.

குறிப்பு: தேவையானால், பொடித்த சர்க்கரையை மேலே தூவி பரிமாறலாம்.

ஸ்டஃப்டு வெஜ் பூரி

8.jpg

தேவையானவை: கோதுமை மாவு, மைதா மாவு – தலா ஒரு கப், நெய் – 2 ஸ்பூன், எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

மசாலாவுக்கு:  வெங்காயம், தக்காளி, வேக வைத்த உருளைக்கிழங்கு – தலா ஒன்று , கடுகு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை: ஒரு கடாயில் எண்ணெயை காய வைத்து கடுகு தாளித்து… கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், சேர்த்து நன்கு கிளறவும். பிறகு நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து வதக்கி தனியே வைக்கவும். கோதுமை மாவு, மைதா மாவு, நெய், உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்துப் பிசையவும். மாவை பூரிகளாக தேய்க்கவும் ஒரு பூரியில் மசாலாவை வைத்து, மற்றொரு பூரியை மேலே வைத்து, தண்ணீரால் தொட்டு மூடவும். பிறகு காயும் எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.

பசலைக்கீரை பூரி

9.jpg

தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், பசலைக்கீரை – 2 கட்டு, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, மிளகாய்த்தூள், சர்க்கரை – தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பசலைக்கீரையை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, ஆறிய பிறகு விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரைத்த கீரை விழுது, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள்,   மிளகாய்த்தூள், சர்க்கரை, மஞ்சள்தூள், உப்பு எல்லாவற்றையும்  சேர்த்துக் கலந்து (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து) மிருதுவான மாவாக பிசைய வும். மாவை சிறு சிறு பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரிக்கவும்.

சோம்பு பூரி

10.jpg

தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், மைதா மாவு – அரை கப், ரவை – 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஒன்றரை கப் தண்ணீரை சுடவைத்து அதில் சோம்பை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து ஆற விடவும். கோதுமை மாவு, மைதா மாவு, ரவை, சர்க்கரை, உப்பு, நெய் சேர்த்துக் கலந்து, அதில் சோம்பு, வேக வைத்த தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக பிசையவும். மாவை சிறு சிறு பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.

மசாலா பூரி

11.jpg

தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், சர்க்கரை – அரை டீஸ்பூன், தயிர் – கால் கப், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், சீரகம், மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சர்க்கரை, உப்பு, தயிர், சீரகம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக பிசையவும் (தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்). மாவை சிறிது நேரம் ஊற வைத்து, பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

காரப் பூரி

12.jpg

தேவையானவை: கோதுமை மாவு – 3 கப், ரவை, கடலை மாவு – தலா 2 டீஸ்பூன், ஓமம் – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவு, ரவை, கடலை மாவு, ஓமம், மிளகாய்தூள், உப்பு, நெய் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து, தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரிக்கவும்.

மசாலா சீஸ் பூரி

13.jpg

தேவையானவை: கோதுமை மாவு, மைதா மாவு – தலா ஒரு கப், உருளைக்கிழங்கு, வெங்காயம் – தலா 2, பச்சை மிளகாய் – 3, எலுமிச்சைச் சாறு – ஒன்றரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், சீஸ் – ஒரு துண்டு (துருவிக் கொள்ளவும்), கரம் மசாலாத்தூள் – ஒரு சிட்டிகை, இஞ்சி – சிறிய துண்டு, நெய் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, கட்டியில்லாமல் மசித்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும் (அல்லது துருவிக் கொள்ளவும்). இஞ்சி – பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். வெங்காயம், அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். கோதுமை மாவு, மைதாவுடன் துருவிய சீஸ், வதக்கிய வெங்காயம் – இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, மசித்த உருளைக்கிழங்கு, நெய், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துப் பிசையவும் (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்). மாவை பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

பிரெட் பட்டூரா

14.jpg

தேவையானவை: மைதா மாவு – 3 கப், பிரெட் – 8 ஸ்லைஸ், புளிப்பான கெட்டித் தயிர் – அரை கப், பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவு,  உப்பு, பேக்கிங் பவுடர்  ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து மூன்று முறை சலிக்கவும்.  பிரெட்டின் ஓரத்தை எடுத்துவிட்டு ஒவ்வொன்றாகத் தண்ணீரில் தோய்த்து உடனே பிழிந்து எடுத்து கையால் நன்றாக மசிக்கவும். இதனுடன் சலித்த மாவு, தயிர் சேர்த்துப் பிசையவும் (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்). இதை 2 மணி நேரம் ஊற வைத்து பெரிய உருண்டைகளாக செய்து, மைதா மாவில் புரட்டி, சற்று பெரிய பூரி போல் இடவும். பிறகு எண்ணெயில் பொரிக்கவும்.

புதினா  கொத்தமல்லி பூரி

15.jpg

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை, புதினா – தலா அரை கப், சீரகத்தூள் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சீரகத்தூள், உப்பு, பச்சை மிளகாய் விழுது, நறுக்கிய புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்துப் பிசைந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும். மாவை பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

வடப்பி

16.jpg

தேவையானவை: சோள மாவு – இரண்டரை கப், கோதுமை மாவு – ஒரு கப், கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு – தலா ஒரு கைப்பிடி அளவு, அரிசி மாவு – அரை கப், புளிக்காத தயிர் – ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், உப்பு – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – கால் கப் (மாவுக்கு), துருவிய வெள்ளரிப் பிஞ்சு – 2 கப், வெள்ளை எள் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை: பொரிப்பதற்கான எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக் கலந்து, தண்ணீர் தெளித்து பிசையவும். மாவை சற்று கனமான பூரிகளாக இட்டு,  எண்ணெயில் பொரிக்கவும்.

குறிப்பு: மாவை பிசைந்த உடனேயே பூரிகளாக இட்டு பொரித்துவிட வேண்டும்.

காலிஃப்ளவர் மசாலா பூரி

17.jpg

தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் – தலா அரை டீஸ்பூன்,  சீரகத்தூள் – கால் டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், பேக்கிங் பவுடர் – ஒன்றரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

மசாலா பூரணத்துக்கு: துருவிய காலிஃப்ளவர் – 2 கப், தேங்காய் துருவல், நறுக்கிய கொத்தமல்லி – தலா 2 டேபிள்ஸ்பூன், துருவிய வெங்காயம் – கால் கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், எலுமிச்சம்பழம் – ஒன்று, கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவு, உப்பு, மஞ்சள்தூள், பேக்கிங் பவுடர், மிளகாய்த்தூள், சீரகத்தூள், நெய் ஆகியவற்றை தேவையான தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை சிவக்க வதக்கவும். நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், உப்பு, காலிஃப்ளவர் சேர்க்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வதங்கியவுடன் தேங்காய் துருவல், உப்பு, கொத்தமல்லி, கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்தால்… மசாலா பூரணம் தயார்.

பிசைந்த மாவில் சிறிது எடுத்து, நடுவில் மசலா பூரணம் வைத்து, பூரியாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

பாதாம் பூரி

18.jpg

தேவையானவை: மைதா மாவு – 2 கப், சர்க்கரை, பாதாம் – தலா ஒரு கப், குங்குமப்பூ – சிறிதளவு, ஏலக்காய் – 5, கேசரி பவுடர் – சிறிதளவு, பால் – கால் கப், எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: வெந்நீரில் பாதாமை போட்டு ஊற விடவும். பிறகு தோல் உரித்து அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையை பொடித்துக் கொள்ளவும். மைதா மாவில் குங்குமப்பூ, ஏலக்காய் பொடி, கேசரி பவுடர், அரைத்த பாதாம், பொடித்த சர்க்கரை மற்றும் பால் சேர்த்துப் பிசையவும். மாவை உருண்டைகளாக்கி, பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

மேத்தி பூரி

19.jpg

தேவையானவை: கோதுமை மாவு,  சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரை – தலா 2 கப், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் வெந்தயக் கீரை, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலந்து பிசையவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்து, பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

தக்காளி  சீஸ் பூரி

20.jpg

தேவையானவை: மைதா, கோதுமை மாவு, தக்காளி சாறு – தலா ஒரு கப், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,  சீஸ் துருவல் – ஒரு கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மைதா, கோதுமை மாவு, மிளகாய்த்தூள், சீஸ் துருவல், உப்பு, தக்காளி சாறு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பிசையவும் (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்). மாவை அரை மணி நேரம் ஊற வைத்து, பிறகு பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

கேரட் பூரி

21.jpg

தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், துருவிய கேரட் – அரை கப், பச்சை மிளகாய் – 2, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கேரட் துருவலை சிறிது நேரம் ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். ஆறியவுடன் பச்சை மிளகாய் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கோதுமை மாவுடன் அரைத்த விழுதை சேர்த்துப் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உருண்டைகளை பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

ஆலு பட்டூரா

22.jpg

தேவையானவை: மைதா மாவு  – 2 கப், உருளைக்கிழங்கு (வேக வைத்து, தோல் உரித்து, மசித்தது) – ஒன்றரை கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு, சிறிது சிறிதாக மைதா மற்றும் உப்பையும் சேர்த்து மிருதுவான மாவாக பிசையவும். (தண்ணீர் சேர்க்க வேண்டும்). பிறகு மாவை உருண்டைகளாக்கி, மைதா மாவில் புரட்டி, சற்று கனமாக பூரிகளாக இடவும். ஒரு கடாயில் எண்ணெயைக் காய வைத்து ஒவ்வொன்றாக பொரிக்கவும்.

குறிப்பு: மாவைக் கலந்தபின் நீண்ட நேரம் வைக்காமல் உடனே பொரிக்கவும். இல்லைஎன்றால், மாவு தளர்ந்து விடும்.

தால் பூரி

23.jpg

தேவையானவை: கோதுமை மாவு, மைதா மாவு, பாசிப்பருப்பு – தலா ஒரு கப், பச்சை மிளகாய் விழுது – 2 டீஸ்பூன், தனியாதூள், சீரகத்தூள் – தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாசிபருப்பை ஒரு பத்திரத்தில் வேக வைத்து (குக்கர் தேவையில்லை), தண்ணீர் இல்லாமல் வடித்து… உப்பு, பச்சை மிளகாய் விழுது, தனியாத்தூள், சீரகத்தூள் சேர்த்து ஒன்றிரண்டாக மசிக்கவும். இதனுடன் கோதுமை மாவு, மைதா மாவை சேர்த்துப் பிசையவும் (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்). மாவை சற்று கனமாக பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

மத்ரி

24.jpg

தேவையானவை: மைதா – ஒரு கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், சமையல் சோடா – 2 சிட்டிகை, ஓமம் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: எண்ணெய் தவிர மற்ற பொருட்களை சேர்த்து தண்ணீர் விட்டு பிசையவும். 15 நிமிடம் ஊற விட்டு, உருண்டைகளாக உருட்டி,  சற்று கனமாக இடவும். பின் சிறு வட்ட மூடி (அ) கிண்ணத்தால் வெட்டி முள்கரண்டியால் குத்திவிட்டு, பின்னர் எண்ணெயில் பொரிக்கவும். இது ஒரு குஜராத்தி உணவு.

கேரட் பட்டூரா

25.jpg

தேவையானவை: மைதா மாவு – 2 கப், மசித்த கேரட் விழுது – ஒரு கப், சமையல் சோடா – கால் டீஸ்பூன், புளித்த தயிர் – அரை கப், எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை: ஓரு பாத்திரத்தில் தயிர், சமையல் சோடா, உப்பு ஆகியவற்றைப் போட்டு கரைக்கவும். இதை மைதா மாவில் சேர்த்துப் பிசிறி, கேரட் விழுதை சேர்த்து நன்கு பிசையவும். இதை  ஈரத்துணியால் மூடி மூன்று மணி நேரம் வெயிலில் வைத்து பொங்க விடவும். பிறகு மாவை கனமான பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

லுச்சி

26.jpg

தேவையானவை: மைதா மாவு – ஒரு கப், ஓமம் – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவில் உப்பு, ஓமம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். சிறிது ஊறியவுடன் பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரிக்கவும் இந்த வகை பூரி மேற்கு வங்காளத்தில் புகழ் பெற்ற உணவாகும். உருளைக்கிழங்கு சப்ஜி இதற்கு ஏற்ற சைட் டிஷ்.

இன்ஸ்டன்ட் பட்டூரா

27.jpg

தேவையானவை: மைதா மாவு – 3 கப், சாதா சோடா – ஒரு பாட்டில், சர்க்கரை – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை: சோடாவில் உப்பையும் சர்க்கரையும் போட்டு நன்கு நுரைக்கும்படி கலக்கவும். பிறகு அதை மைதா மாவுடன் சேர்த்துப் பிசையவும். சிறிது ஊற வைத்து, சற்று கனமான பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரிக்கவும்.

மிளகு  சீரக பூரி

28.jpg

தேவையானவை: கோதுமை மாவு, மைதா – தலா முக்கால் கப், மிளகு, சீரகம் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மிளகையும், சீரகத்தையும் வாணலியில் சிறிது சூடு செய்து பொடித்துக் கொள்ளவும். மாவுகளை ஒன்றாக்கி,  உப்பு போட்டு கலந்து, அதில் மிளகு – சீரகப் பொடியை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறிது ஊற வைத்து, பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

ராகி பூரி

29.jpg

தேவையானவை: கேழ்வரகு மாவு – 2 கப், அரிசி மாவு – 2 டீஸ்பூன், ரவை – ஒரு டீஸ்பூன்,  மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், கொத்தமல்லி தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை: மிக்ஸியில் ரவை, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அரைக்கவும். அதனுடன் கேழ்வரகு மாவு, அரிசி மாவு சேர்த்துக் கலந்து, கொத்தமல்லி தழை சேர்த்து, கெட்டியாக பிசையவும். மாவை பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

கசகசா பூரி

30.jpg

தேவையானவை: மைதா மாவு – 2 கப், நெய் – 5 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

பூரணத்துக்கு: கசகசா (அரைத்த விழுது) – ஒரு கப், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், சீரகம் – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி விழுது – ஒரு ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவுடன் நெய், உப்பு சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து தனியே வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து கசகசா விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு இஞ்சி விழுது, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். பூரணம் தயார்.

பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு பூரிகளாக இட்டு, பூரணத்தை நடுவில் வைத்து பரப்பி, ஓரத்தை சேர்த்து மூடி, பூரிகளாக தேய்க்கவும். பிறகு எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.

fb

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா... பாரி வள்ளலாகப் பூரி வகையறாக்களை அள்ளி விட்டிருக்கின்றீர்கள்....! கண்டால் ஒரு பூரிக் கட்டை பரிசு....!  tw_blush:

பூரிமிக எளிமையான நல்ல உணவு. இருமல் இருக்கும் போது சாப்பிட்டால் இருமலுக்கு நல்லது , தவிர்த்தால் இருமல் குணமாகும்....! tw_blush:

Link to comment
Share on other sites

58 minutes ago, suvy said:

 கண்டால் ஒரு பூரிக் கட்டை பரிசு....!  tw_blush:

 

நோ பூரி கட்டை..tw_blush:

அங்கால சட்டி பானைகாரருக்கு 10 பூரி கட்டை பார்சல் ப்ளீஸ்..:grin:

Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

கண்டால் ஒரு பூரிக் கட்டை பரிசு....!  tw_blush:

 

31 minutes ago, நவீனன் said:

நோ பூரி கட்டை..tw_blush:

அங்கால சட்டி பானைகாரருக்கு 10 பூரி கட்டை பார்சல் ப்ளீஸ்..:grin:

நம்ம ஊர்ல அகப்பை காம்பும், தமிழ் நாட்டில பூரிக்கட்டையின் பயன்பாடும் ஒண்ணுதான் என்று பட்சி சொல்லுது.

BqUxmc2CUAAZUJd.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

 

நம்ம ஊர்ல அகப்பை காம்பும், தமிழ் நாட்டில பூரிக்கட்டையின் பயன்பாடும் ஒண்ணுதான் என்று பட்சி சொல்லுது.

BqUxmc2CUAAZUJd.jpg

என்ன ஜீவன் இது..., பூரிக் கட்டையை மட்டும் போடவேணும், இப்படி நாட்டுக்கட்டையோட  பூரிக் கட்டையைப் போட்டால் அவர் இன்னும் நாப்பது பூரி போடப் போகிறார்....! tw_blush:

 

Link to comment
Share on other sites

25 minutes ago, suvy said:

என்ன ஜீவன் இது..., பூரிக் கட்டையை மட்டும் போடவேணும், இப்படி நாட்டுக்கட்டையோட  பூரிக் கட்டையைப் போட்டால் அவர் இன்னும் நாப்பது பூரி போடப் போகிறார்....! tw_blush:

 

பூரி கட்டையோ, அகப்பை காம்போ எதுவோ ஒரு சமந்தா மாதிரி என்றால் பரவயில்லை...:grin: இது என்ன ரசனை ஜீவனுக்கு..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக்கை கண்ட  சிங்கன்களுக்கு அகப்பை பூரிக்கட்டையெலாம் தூசு.. Zunge rausstrecken

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஜீவன் சிவா said:

 

நம்ம ஊர்ல அகப்பை காம்பும், தமிழ் நாட்டில பூரிக்கட்டையின் பயன்பாடும் ஒண்ணுதான் என்று பட்சி சொல்லுது.

BqUxmc2CUAAZUJd.jpg

இதுதான் பூரிக்கட்டையா செம கட்டை??

மீண்டும் சொல்கிறேன் நான் பூரிக்கட்டையைதான் சொல்கிறேன் ??

சப்பாத்தியும் தேய்க்கலாம் இந்த கட்டையால் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோதுமை மாவும்[அமெரிக்கன்/வெள்ளை],சப்பாத்தி மாவும் ஒன்றா?...மைதா மா உடம்புக்கு கூடாது என்று சொல்கிறார்கள் உண்மையா?

Link to comment
Share on other sites

அட பாவியளா

நானும் சும்மா பகடிக்கு பூரிக்கட்டையின் படத்தை போடுவம் என்று கூகிளில் தேட அம்பிட்டதுதான் இந்த படம். இப்ப நம்ம பயலுக பூரிக்கட்டையை மறந்திட்டு நாட்டுக்கட்டையில ரொம்ப பிசி ஆகிட்டானுவ. :grin:

36 minutes ago, ரதி said:

கோதுமை மாவும்[அமெரிக்கன்/வெள்ளை],சப்பாத்தி மாவும் ஒன்றா?...மைதா மா உடம்புக்கு கூடாது என்று சொல்கிறார்கள் உண்மையா?

உந்த மைதா மாவுக்கும் கோதுமை மாவுக்கும் என்ன வித்தியாசம், அல்லது இரண்டும் ஒண்டா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ஜீவன் சிவா said:

அட பாவியளா

நானும் சும்மா பகடிக்கு பூரிக்கட்டையின் படத்தை போடுவம் என்று கூகிளில் தேட அம்பிட்டதுதான் இந்த படம். இப்ப நம்ம பயலுக பூரிக்கட்டையை மறந்திட்டு நாட்டுக்கட்டையில ரொம்ப பிசி ஆகிட்டானுவ. :grin:

உந்த மைதா மாவுக்கும் கோதுமை மாவுக்கும் என்ன வித்தியாசம், அல்லது இரண்டும் ஒண்டா?

ஆத்துக்காரி பக்கத்தில இல்லையெண்ட துணிவில ஆடுறீங்க .,நல்லாயில்ல....திரும்பவும் நோர்வே போற ஞாபகம் இருக்கா

Link to comment
Share on other sites

17 minutes ago, நந்தன் said:

ஆத்துக்காரி பக்கத்தில இல்லையெண்ட துணிவில ஆடுறீங்க .,நல்லாயில்ல....திரும்பவும் நோர்வே போற ஞாபகம் இருக்கா

ஆமா இந்த நோர்வே 768 ம் நம்பர் பஸ்ஸில போய் கந்தரோடை தாண்டி அளவெட்டிக்கு முதல் வாற குச்சொழுங்கைதானே. அங்க ஏன் நான் போகப் போறன்.

நம்ம கோஸ்ட்டி இங்க வருகுதாமில்லை. அடி வாங்கினாலும் தாய் நாட்டில் வாங்கும் வீர தமிழன் நானாக்கும். :grin:

ஆனாலும் வரமுதல் தும்புக்கட்டை, விளக்குமாறு, பூரிக்கட்டை, அகப்பைக்காம்பு போன்ற அழிவு ஆயுதங்கள் வீட்டிலிருந்து அகற்றப்பட்டுவிடும் என்பதையும் தங்களுக்கு தாழ்மையுடன் தெரிவித்து கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியனாக்கள் கோதுமை மா என்று சொல்வது நாங்கள் சப்பாத்தி செய்யப் பயன்படுத்துகின்ற மாவை...அதே நேரத்தில் அவர்கள் மைதா மா என்று சொல்வது நாங்கள் ஊரில் பயன்படுத்தும் கோதுமை/வெள்ளை மாவை.ஆனால் இவர்கள் பயன்படுத்தும் மைதா,கோதுமையின் சக்கையில் இருந்து செய்யப்படுவதால் சாதரண வெள்ளை மாவை விட மைதா மா கூடாது என கேளவிப்பட்டேன்.

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

இந்தியனாக்கள் கோதுமை மா என்று சொல்வது நாங்கள் சப்பாத்தி செய்யப் பயன்படுத்துகின்ற மாவை...அதே நேரத்தில் அவர்கள் மைதா மா என்று சொல்வது நாங்கள் ஊரில் பயன்படுத்தும் கோதுமை/வெள்ளை மாவை.ஆனால் இவர்கள் பயன்படுத்தும் மைதா,கோதுமையின் சக்கையில் இருந்து செய்யப்படுவதால் சாதரண வெள்ளை மாவை விட மைதா மா கூடாது என கேளவிப்பட்டேன்.

மைதா ஒரு இறுதியாக அரைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட கோதுமை (தென்னிந்தியாவில் மரவள்ளிக் கிழங்கு) மாவு ஆகும்.  இது நம்ம விக்கி 

ரொம்ப தெளிவா என்னை இன்னமும் குழப்பீட்டிடீங்க ரதி.

On 29/06/2016 at 2:55 PM, suvy said:

 

 

எங்க நம்ம எக்ஸ்பெர்ட் சுவி. மேடைக்கு அழைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தமிழ் கடைகளில மைதா மா என்றே பைக்கட்டுகளில் விக்கினம்....! நம்பிக்கையுடன் வாங்கிக் கொண்டு போய் பாவிக்க வேண்டியதுதான்....! கடைக் காரரிடம் விளக்கம் கேட்டால் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரிச் சொல்லுகினம்.....!

ஆட்டா மா பிரெஞ்சுக் கடைகளிலும் தாராளமாய் கிடைக்கும்....! மற்றும்படி இதில் எனக்கும் குழப்பம்தான்....!  tw_blush:

Link to comment
Share on other sites

On 30/06/2016 at 0:10 AM, ஜீவன் சிவா said:

உந்த மைதா மாவுக்கும் கோதுமை மாவுக்கும் என்ன வித்தியாசம், அல்லது இரண்டும் ஒண்டா?

எனக்கு நாளைக்கு நித்திரையால எழும்பேக்க உண்மை தெரிச்சாகனும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

எனக்கு நாளைக்கு நித்திரையால எழும்பேக்க உண்மை தெரிச்சாகனும்.

http://www.arusuvai.com/tamil/node/9933

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.