Jump to content

இலங்கையின் இறையாண்மையை தாரை வார்த்துவிட்டது அரசு-தினேஸ் எம்.பி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையின் இறையாண்மையை தாரை வார்த்துவிட்டது அரசு-தினேஸ் எம்.பி
இலங்கையின் இறையாண்மையை தாரை வார்த்துவிட்டது அரசு-தினேஸ் எம்.பி
‘ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கும் மேற்கத்தைய நாடுகளிற்கும் இலங்கையின் இறையாண்மையையும் சுயாதீனத்தையும் அரசாங்கம் தாரைவார்த்துவிட்டது.
 
இன்றைய ‘அரசுக்கு’ சொந்தக் காலில் நிற்பதற்கு திராணியில்லை என மஹிந்த  ஆதரவு அணியான கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டதொடரில் இலங்கை தொடர்பிலான வாய்மூல அறிக்கை நாளை(புதன்கிழமை) வெளியிடப்படவுள்ளமை தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், . கடந்த ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுக் கூட்டத்தின் போது அவர்களது தேவைகளுக்காகவும், மேற்கத்தைய நாடுகளின் தேவைக்காகவும் அரசாங்கம் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டது.
 
உலகில் எத்தனையோ நாடுகள் தமது நாடுகளின் சுயாதீனத்தை பாதுகாத்துக் கொண்டு ஐ.நா.வுக்கோ மேற்கத்தைய நாடுகளுக்கோ அடிபணியாது செயற்படுகின்றன. ஏன் நமக்கு அவ்வாறு செயற்பட முடியாது.
எனவே இம்முறையும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரத்திற்கு அரசாங்கம் கீழ்பணியும்’ என தெரிவித்துள்ளார்.
Link to comment
Share on other sites

சிங்கள-பௌத்தர்களின் இறையாண்மை என்பது,
தமிழர் சொத்துக்களை அபகரிப்பது,
தமிழர் சொத்துக்களை அழிப்பது,
தமிழ் இனப் படுகொலைகளை செய்வது,
தமிழர் நிலங்களில் புத்தர் சிலைகளை நிறுவுவது,
தமிழர்களை கடத்தி கப்பம் பெறுவது,
தமிழர்களை கண்டபடி கைது செய்து சிறைகளில் வருடக் கணக்கில் அடைத்து வைப்பது,
சிறைகளில் அடைக்கப்பட்ட தமிழரிடம் பெரும் தொகை பணத்தை நீதிபதிகளும், போலீசும் கறந்து விடுதலை செய்வது,
பொய் வரலாற்றை எழுதுவது, பொய்களை கூறி ஏமாற்றுவது,
தமிழர்களை சித்திரவதை செய்வது, தமிழ் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது போன்றவை தான்.   

இது போன்ற நாசகாராச் செயல்கள் தான் தினேஷ் குணவர்தன குறிப்பிடும் சிங்கள-பௌத்தர்களின் இறையாண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடன் வாங்கியவனுக்கு.. இறையாண்மை எப்படி வரும்?

மற்றவன் சொல்லுறதுக்கெல்லாம் 'தலையாட்ட வேண்டிய' தேவை உள்ள வரை...இறையாண்மை என்பது ஒரு 'மாயை' மட்டுமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, போல் said:

சிங்கள-பௌத்தர்களின் இறையாண்மை என்பது,
தமிழர் சொத்துக்களை அபகரிப்பது,
தமிழர் சொத்துக்களை அழிப்பது,
தமிழ் இனப் படுகொலைகளை செய்வது,
தமிழர் நிலங்களில் புத்தர் சிலைகளை நிறுவுவது,
தமிழர்களை கடத்தி கப்பம் பெறுவது,
தமிழர்களை கண்டபடி கைது செய்து சிறைகளில் வருடக் கணக்கில் அடைத்து வைப்பது,
சிறைகளில் அடைக்கப்பட்ட தமிழரிடம் பெரும் தொகை பணத்தை நீதிபதிகளும், போலீசும் கறந்து விடுதலை செய்வது,
பொய் வரலாற்றை எழுதுவது, பொய்களை கூறி ஏமாற்றுவது,
தமிழர்களை சித்திரவதை செய்வது, தமிழ் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது போன்றவை தான்.   

இது போன்ற நாசகாராச் செயல்கள் தான் தினேஷ் குணவர்தன குறிப்பிடும் சிங்கள-பௌத்தர்களின் இறையாண்மை.

அந்த இறையாண்மை  தமிழரை வாழவும் விடாது, சாகவும் விடாது.

Link to comment
Share on other sites

1 hour ago, வாத்தியார் said:

தினேஷ்  மகிந்தவிற்கு நன்றாக வாலாட்டுகின்றார்.

மிக நீண்ட காலமாக தமிழர்களுக்கு எதிராக செயற்படும் மிக மிக மோசமான சிங்கள-பௌத்த இனமதவெறியர்களில் தினேஷ் குணவர்தனவும் ஒருவர். மிக நீண்ட காலமாக தமிழர்களுக்கு எதிராக செயற்படும் மிக மிக மோசமான சிங்கள-பௌத்த இனமதவெறியர்களில் தினேஷ் குணவர்தனவும் ஒருவர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிருபனின் மணிக்கூடு என்ன சொல்லுதோ தெரியாது?
    • உங்க‌ளுட‌ன் சேர்த்து 17 உற‌வுக‌ள் போட்டியில் க‌ல‌ந்து இருக்கின‌ம்🙏🥰................................  
    • நித‌ர்ச‌ன‌ உண்மை ப‌ற‌க்கும் ப‌டை இல்லை தூங்கிம் ப‌டை...................இந்த‌ தேர்த‌ல் ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌ந்த‌ தேர்த‌ல் மாதிரி தெரிய‌ வில்லை சென்னையில் போட்டியிட்ட‌ நாம் த‌மிழ‌ர் வேட்பாள‌ர் ஈவிம் மிசிலில்  மைக் சின்ன‌த்தை ஒரு ஜ‌யா அம‌த்த‌ மைக் சின்ன‌ம் வேலை செய்ய‌ வில்லை இவ‌ர்க‌ள் அதை த‌ட்டி கேட்க்க‌ ப‌தில் இல்லை  கைது செய்து பிற‌க்கு விடுவித்த‌ன‌ர்.................எம்பி தேர்த‌லில் நிக்கும் வேட்பாள‌ர் அவ‌ரின் தொகுதியில் மைக் சின்ன‌த்துக்கு ஓட்டு விழ‌ வில்லை என்றால் அது தேர்த‌ல் ஆணைய‌த்தின் பிழை............................விவ‌சாயி சின்ன‌ விடைய‌த்தில் ம‌ற்றும் வைக்கோவுக்கு திருமாள‌வ‌னுக்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம்  அனைத்தும் உண்மை புல‌வ‌ர் அண்ணா....................அந்த‌ ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சி த‌மிழ் நாட்டில் ஏதாவ‌து ஒரு தொகுதியில் பிர‌ச்சார‌ம் செய்த‌தை பார்த்திங்க‌ளா ஒரு ஊட‌க‌த்திலும் காண‌ வில்லை..................எல்லாம் போலி நாட‌க‌ம்................................
    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.