Jump to content

ஈழத்தமிழர் இன அழிப்புக்குப் பின்னால் ஒரு சித்தாந்தம் இருக்கிறது : ஜெனிவாவில் அனந்தி


Recommended Posts

ஈழத்தமிழர் இன அழிப்புக்குப் பின்னால் ஒரு சித்தாந்தம்   இருக்கிறது : ஜெனிவாவில்   அனந்தி 

 

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

இலங்கைத் தீவில் இனப்பிரச்சினையின் மூல காரணி தமிழர்களுக்கெதிரான இன அழிப்பு என்பதையும் அதற்கு ஆறு தசாப்தங்களுக்கு மேலான தொடர்ச்சியான வரலாறு இருக்கிறது என்பதையும் ஈழத்தமிழர்கள் தொடர்ச்சியாக சர்வதேச சமூகத்திற்கு முன்வைத்து வந்திருக்கிறார்கள்.  ananthi-sashitharan1.jpg

இலங்கைத் தீவில் ஈழத்தமிழர் என்ற தேசிய இனத்திற்கு எதிராக நடாத்தப்பட்டு வருகின்ற இன அழிப்புக்குப் பின்னால் ஒரு சித்தாந்தம்   இருக்கிறது.  இந்த இன அழிப்புச் சித்தாந்தம் இலங்கை அரச இயந்திரத்தினுள் பல அடுக்குகளில்  நிறுவனமயப்படுத்தப்பட்டிருக்கிறது என்று வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்  ஜெனிவாவில் தெரிவித்தார்.

ஜெனிவாவில்  நடைபெற்றுவரும்  ஐ.நா. மனித உரிமை பேரவையின்  32 ஆவது கூட்டத் தொடரில்  இன்று நடைபெற்ற உபகுழுக் கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் 

 

இதை நியாயப்படுத்தும் வகையில் இலங்கையில் அரசியல் பெரும்பான்மை சிறுபான்மை என்ற வகைப்படுத்தல் இன ரீதியாகவே பேணப்படுகின்றது. இலங்கைத் தீவில் அரசியல் ஜனநாயகம் என்பது கிடையாது. அதைப் போலத் தோற்றமளிக்கும் இனரீதியான ஜனநாயகமே அங்கிருக்கிறது. 

ஓர் இன அழிப்புச் சித்தாந்தத்தில் வேரூன்றியிருக்கும் ஒற்றையாட்சி அரசால் இனரீதியான ஜனநாயகத்தைக் கூட ஒரு நேர்மையான ஜனநாயக முறையாக  சொல்லாட்சியைப் பயன்படுத்துவதனால் 'நல்லாட்சியாக' ஒருபோதும் நடாத்த முடியாது. அதை ஒரு போலியான நாடகமாக மாத்திரமே நடாத்தமுடியும். 

இலங்கை அரசியல் யாப்பு என்பது இந்த அடுக்குகளை ஒற்றையாட்சி அரச இயந்திரம் ஒன்றூடாகக் கட்டிக்காப்பதற்குப் பொருத்தமான வகையிலேயே ஒவ்வொரு காலகட்டத்திலும் அமைக்கப்பட்டிருக்கிறது. 

இதுவே இலங்கைத் தீவின் உள்ளகத்தளமாகும்.    உலகளாவிய அரசியற்சூழல் பிராந்திய அரசியற் சூழல் என்ற இரண்டு தளங்களையும் இந்த உள்ளகத்தளத்தின் போக்குக்கு சார்பாகப் பேணிக் கொள்வது என்பதே இலங்கை ஒற்றையாட்சி அரசின் வெளியுறவுக் கொள்கையாகும்.

இந்த வெளியுறவுக்கொள்கை முழுமையாகவே ஒரு நாடகம்.  அதில் நடிப்பவர்கள் போலியான செய்திகளை உலகுக்குச் சொல்பவர்கள்.  இதற்கு அப்பால் சர்வதேச அரசியல் அரங்கிலும் ஒவ்வொரு சக்திமிக்க நாடும் தனது உள்ளகத் தேவையை முன்னிலைப்படுத்தியே தனது வெளியுறவுக்கொள்கையைத் தீர்மானிக்கும். இதிலே அவர்களுக்குத் தேவையான நாடகத்தில் இலங்கை அரசின் நாடகமும் ஒரு பங்காக அவர்களுக்குத் தேவைப்படுகிறது. 

நாடகங்களின் உலகமே ராஜதந்திரம் என்றும் இதிலே நாங்களும் நடிகர்களாக வேண்டும் என்றும் நாமும் நிர்ப்பந்திக்கப்படுகிறோம். 

இப்படியே எல்லா அரசுகளும் ஒன்று சேர்ந்து நடாத்துகின்ற இராஜதந்திர நாடகத்தின் கடுமையான தாக்கங்ளுக்குள்ளே தான் இங்கே ஜெனீவாவில் இயங்குகின்ற மனித உரிமைகளை மையப்படுத்திய சர்வதேச நீதியும் சிக்குப்பட்டுக்கிடக்கிறது. 

இங்கே தமிழர்களுக்கான வெளியறவுக்கொள்கையை முன்னெடுப்பதற்கென்று ஒரு அரசும் இல்லை.  70 மில்லியன் தமிழர்களைக் கொண்ட இந்திய அரசிடம்  தனது மக்களான தமிழக மக்களின் தமிழக அரசின் ஒன்றித்த கருத்தை மதிப்பளிக்கும் வெளியுறவுக் கொள்கை இல்லை. 

இந்தச் சூழலில் எமது காயங்களையும் எமது இழப்புகளையும் காணாமற்போன எங்கள் உறவுகளையும் கொன்று குவிக்கப்பட்ட எமது மக்களையும் குறித்து நாம் பேசுவதை குரல்கொடுப்பதைக் கூட சுதந்திரமாகச் செய்யமுடிவில்லை.  முடியாத  வகையில் எம்மைக் கையாளுவதற்கென்று பல வலயங்களையும் நடிகர்களையும் முழுநேர வேலைக்கு அமர்த்தி நாம் கையாளப்படுபவர்களாக மாற்றப்பட்டுவருகின்றோம். 

ஆகவே ஈழத்தமிழரின் சுய நிர்ணய உரிமை என்பது இந்தக் கையாளுகைகளுக்கு உட்படாமல் சுயமாக எந்த அரசின் தயவையும் கோரிநின்று மண்டியிட்டுக் கொள்ளும் அரசியலாக நாடகமாக அமையக்கூடாது.  அது  உரிமையின் பாற்பட்டதாகவும் நேர்மையானதாகவும் மனிதகுலத்திற்கு நன்மையானதாகவும் அமையவேண்டுமானால் ஈழத்தமிழரின் சுயநிர்ணயக் கோரிக்கைக்கான  வெளியகப் பரிமாணம் என்ன? அது எந்தத் தளத்தில் அமையவேண்டும்? என்பது குறித்த தெளிவான கொள்கை சார்ந்த அணுகுமுறை எம்மிடம் இருக்க வேண்டும். 

யார் எமது சர்வதேச நட்புச் சக்தி என்பதை தமிழர்கள் தெளிவாகத் தீர்மானிக்க வேண்டிய காலம் எப்போதோ வந்துவிட்டது.  மிகவும் ஆபத்தான கட்டமைப்பு இன அழிப்பை எதிர்கொண்டிருக்கும் ஈழத்தமிழர் தேசிய இனம் தனது சுயநிர்ணய உரிமைக்கான சர்வதேசப் பரிமாணத்தை எப்படி வகுத்துக்கொள்கிறது என்பதிலேயே எமது எதிர்கால இருப்பு தங்கியிருக்கிறது. 

அதைப்பற்றி ஜெனிவா நாடக மேடையில் கலந்துகொள்கிற கலந்து கொள்ளாத தமிழ்ப் பிரதிநிதிகள் அனைவரையும் பகிரங்கமாக தமது கொள்கையை முன்வைக்குமாறு எமது விடுதலைக்காகத் தம்மை ஆகுதியாக்கிய அனைவரின் ஆன்மாக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். 

ஈழத் தமிழரின் சுய நிர்ணய உரிமையின் சர்வதேசப் பரிமாணம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை வகுப்பதில் எமது முதமைச்சரான சி.வி.விக்னேஸ்வரனின்  பங்கையும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின்  பங்கும் அவசியமானதாக எனக்குப்படுகிறது.

ஈழத் தமிழரின் சுய நிர்ணய உரிமைக்கான அடுத்த நகர்வு அதன் வெளியுறவுப் பரிமாணத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று எனது கருத்தை முன்வைத்து அமர்கிறேன்என்றார்.  

http://www.virakesari.lk/article/8253

Link to comment
Share on other sites

துணிச்சலான கருத்துக்கள்!
அரசியலில் முன்னேறி வருகிறார்.

சக உறுப்பினர்களுடன் தேவையற்று முரண்படாமல், அளவாக பேசி பயணித்தால் மேலும் சிறக்க முடியும்.

Link to comment
Share on other sites

அனந்தியின் வீடு இருந்த பகுதியும்  விடுக்கப்பட்டுள்ளது. பக்கத்தில் எனது நண்பனின் வீடு இருந்தது. அந்த பகுதியில் சில வீடுகள் இப்பவும் இருக்கு ஆனால் என்னால் எதுவென்று கண்டு பிடிக்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

1 minute ago, ஜீவன் சிவா said:

அனந்தியின் வீடு இருந்த பகுதியும்  விடுக்கப்பட்டுள்ளது. பக்கத்தில் எனது நண்பனின் வீடு இருந்தது. அந்த பகுதியில் சில வீடுகள் இப்பவும் இருக்கு ஆனால் என்னால் எதுவென்று கண்டு பிடிக்க முடியவில்லை.

ஜீவன்! உங்கள் எழுத்தில் இருக்கும் வேதனை விளங்குகிறது. இந்த வேதனைகளை வார்த்தைகளில் சுலபமாக பதிந்துவிட முடியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.