Jump to content

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் பிரிட்டனின் முடிவை மதிக்க வேண்டும் - ஏங்கலா மெர்கல்


Recommended Posts

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் பிரிட்டனின் முடிவை மதிக்க வேண்டும் - ஏங்கலா மெர்கல்

 

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் பிரிட்டனின் முடிவு மதிக்கப்பட வேண்டும் என்று ஜெர்மன் அதிபர் ஏங்கலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

 

160628093502_merkel_640x360_getty_nocred

 பிரிட்டனின் வெளியேறும் முடிவை மதிக்க வேண்டும். ஆனால், சுதந்திரமான சந்தையை அது விரும்பினால் மக்கள் சுதந்திரமாக சென்று வர அனுமதிக்க வேண்டும் - ஏங்கெலா மெர்கல்

ஆனால், எதிர்காலத்தில் சுதந்திரமான சந்தையை அணுக பிரிட்டன் விரும்பினால், மக்கள் சுதந்திரமாக போய் வருவதற்கும் அது அனுமதிக்க வேண்டும் என்று ஜெர்மானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிபோது அவர் பேசியுள்ளார்.

கடந்தகால நெருக்கடிகளில் இருந்து ஐரோப்பா மீண்டு வந்துள்ளது என்று கூறிய அவர், குடியேறிகள் போன்ற பிற சவால்களை சமாளிப்பதில் இருந்து ஐரோப்பிய ஒன்றியம் கவனத்தை திசை திருப்பிவிடக் கூடாது என்று தெரிவித்திருக்கிறார்.

http://www.bbc.com/tamil/global/2016/06/160628_germany_brexit

Link to comment
Share on other sites

ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கையை பிரிட்டன் மதிக்க ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் எச்சரிக்கை

 

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகிய பிறகு, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தையை அணுகும் உரிமையைத் தக்க வைக்க பிரிட்டன் விரும்பினால், ஒன்றியத்தின் மக்கள் தங்குதடையின்றி சென்றுவர வழிவகை செய்யும் கொள்கையை பிரிட்டன் மதிக்க வேண்டியது கட்டாயம் என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

160624074725_donald_tusk_624x351_afp_noc

 

 ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க்

பிரஸ்ஸல்ஸில் நடந்த உச்சிமாநாட்டின் முடிவில் பேசிய ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க், பிரிட்டன் தனக்கு தேவையானதை தானே எடுத்துக் கொள்ளும் ''அ லா கார்ட்'' மெனு பாணியினை கடைபிடிக்க முடியாது என்று கூறினார்.

சந்தை, பொருட்கள், மக்கள் மற்றும் மூலதனம் குறித்த நான்கு சுதந்திர சுழற்சிகளை பிரிட்டன் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் முடிவினை பிரிட்டன் எடுத்த பிறகு நிலவும் நிலையில்லாத் தன்மை காலத்தை கட்டுப்படுத்த ஜெர்மன் சான்சலர் ஏங்கலா மெர்கல் பிரிட்டனை வலியுறுத்தியுள்ளார்.

http://www.bbc.com/tamil/global/2016/06/160629_britain_eu

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.