Jump to content

விடுவிக்கப்பட்ட பகுதிக்குள் இருந்த வீடுகள் படையினரால் வேண்டுமென்றே அழிப்பு! மக்கள் கவலை


Recommended Posts

வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்து கடந்த சனிக்கிழமை விடுவிக்கப்பட்டகாங்கேசன்துறையில் ஒரு பகுதியில் நிலப்பரப்பில் இருந்த 2 ஆலயங்கள், பொதுச் சந்தைமற்றும் மக்களின் 30 ற்கும் மேற்பட்ட வீடுகள் ஆகியன இருந்த இடம் தெரியாதவாறுபடையினரால் இடித்தழிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் அப்பிரதேசத்தில் இருந்த சிறிய வீதிகளையும் இராணுவத்தினர் மூடி தமதுதேவைக்காக மாற்று வீதிகளை அமைத்துள்ளனர். இதனால் எமது காணிகளை கண்டுபிடிக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது என மீள்குடியேறுவதற்காக அங்கு சென்ற மக்கள் கவலை வெளியிட்டனர்.

காங்கேசன்துறை பிரதேசத்தில் இருந்து 63 ஏக்கர் காணிகள் 26 வருடங்களுக்கு மேலான இராணுவஆக்கிரமிப்பில் இருந்து கடந்த சனிக்கிழமை விடுவிக்கப்பட்டது. குறித்த பகுதிகளில் ஏற்கனவே இருந்த உயர் பாதுகாப்பு வலய எல்லைகள் அகற்றப்பட்டுமக்கள் மீள்குடியேற விடுவிக்கப்பட்டது.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட தமது காணிகளைபார்வையிடுவதற்காக நேற்று பொது மக்கள் அங்கு ஒன்று கூடியிருந்தனர். எனினும் தமது காணிகளை அடையாளம் கண்டுகொள்ள அவர்கள் பெரும் சிரமங்களைஎதிர்கொண்டுள்ளனர்.

இங்கு நெருக்கமாக இருந்த பொது மக்களின் சுமார் 30 வீடுகள் இருந்த இடமே தெரியாதவாறு அத்திபாரங்களுடன் அழிக்கப்பட்டுள்ளதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. இது தவிர மக்களுடைய குடிமனைகளை ஒட்டியும், ரயில் நிலையத்தினை அண்மித்தும் காணப்பட்டபொதுச் சந்தை கட்டிடம் அங்கு இருந்தமைக்கான அடையாளங்களே இல்லை.

மேலும் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக காணப்பட்ட பிள்ளையார் அம்மன் ஆலயங்களும் அடியோடு அழிக்கப்பட்டுவிட்டது. குறித்த இரு ஆலயங்களுக்கு பின்புறமாக இருந்த வீரபத்திரர் ஆலயம் மட்டும் இடிபாடுகளுடன்காணப்படுகின்றது. இவ்வாலயத்தில் இருந்த விக்கிரகங்கள், வாகனங்கள் போன்ற ஆலயத்தின் பொருட்களும் இப்போது அங்கு இல்லை.

காங்கேசன்துறை பிரதான வீதியில் இருந்து பிரிந்து செல்லும் பல சிறு வீதிகளும் இருந்தஇடம் தெரியாமல் இடித்து அழிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் யுத்தத்தின் போது அழிக்கப்படவில்லை. வேண்டுமேன்றே கட்டங்கள் அனைத்தும் அத்திபாரத்துடன் அழிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் தாம் நிலை கொண்டிருக்கின்ற வீடுகள் மட்டும் உடைவுகள் ஏற்பாடாதவாறு உள்ளது. அதனை உள்வாங்கியே அவர்கள் முகாம்களை அமைத்துள்ளார்கள். ஆனால் எங்களுடையவீடுகளை வேண்டுமென்றுதான் உடைத்துள்ளார்கள் என்றும் காங்கேசன்துறையில் மீள்குடியேறச் சென்ற மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

KKS_Destruction_02.jpg


KKS_Destruction_01.jpg

 

 

http://www.tamilwin.com/development/01/109251

Link to comment
Share on other sites

விடுவிக்கப்பட்ட காணிகளில் மீண்டும் இரகசிய கண்காணிப்பில் ஈடுபடும் இராணுவம்!

காங்கேசன்துறை புகையிரத நிலையம் வரையான காணி நேற்றைய தினம் மக்கள் பார்வைக்காக விடுவிக்கப்பட்டு காங்கேசன்துறை வீதியில் அமைந்திருந்த சோதனைச் சாவடியும் அகற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில் சோதனைச் சாவடி இருந்த இடத்துக்கு அருகில் புதிதாக காவலரண் ஒன்று அமைக்கப்பட்டு இராணுவ கண்காணிப்பு நடவடிக்கைகள் அங்கு தொடர்ந்து இடம்பெறுகின்றன.

அந்த வழியாகச் செல்லும் மக்கள் கண்காணிக்கப்பட்டு வருவதுடன், வாகனங்களை பதிவு செய்யும் நடவடிக்கையும் இரகசியமாக முன்னெடுக்கப்பட்டு வருவதை நேற்று இந்தப் பகுதியில் அவதானிக்க முடிந்தது.

இந்நிலையில் இந்த வழியாகச் சென்று வருவதில் உள்ள மறைமுக அச்சுறுத்தல்கள் குறித்துப் பொதுமக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

வலி.வடக்கு ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் 201.3 ஏக்கர் காணிகள் 26 வருடங்களுக்குப் பின்னர் அண்மையில் விடுவிக்கப்பட்டன. காங்கேசன்துறையில் விடுவிக்கப்பட்ட 63 ஏக்கர் காணிகளும் இதில் உள்ளடங்கும்.

விடுவிக்கப்பட்ட 63 ஏக்கர் நிலப்பரப்பில் காங்சேன்துறையில் வீதியில் இராணுவம் அமைத்திருந்த சோதனைச் சாவடி மற்றும் காங்கேசன்துறை ரயில் நிலையம் வரையான ஒரு தொகுதி காணிகளும் உள்ளடங்கியிருந்தன. இந்தப் பகுதிகள் கடந்த 25 ஆம் திகதி விடுவிக்கப்பட்டு பொதுமக்களிடம் கையளிக்கப்படுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அறிவிக்கப்பட்டதைப் போன்றே மறுநாள் 26 ஆம் திகதி அங்கிருந்த இராணுவ சோதனைச் சாவடியும் அகற்றப்பட்டது. அங்கிருந்த படையினரும் வெளியேறிச் சென்றதைக் கண்ட மக்கள் நின்மதிப் பெருமூச்சு விட்டனர்.

இந்நிலையில் நேற்று குறித்த சோதனைச் சாவடி இருந்த இடத்திற்கு அருகில் திடீரென புதிய பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டு இராணுவத்தினர் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். அந்தக் காவலரணில் இருந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்வது குறித்து மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

KKS_Destruction_04_Sin_Terror.jpg


KKS_Destruction_03_Sin_Terror.jpg

 

http://www.tamilwin.com/politics/01/109245

Link to comment
Share on other sites

1 hour ago, போல் said:

காங்கேசன்துறை பிரதான வீதியில் இருந்து பிரிந்து செல்லும் பல சிறு வீதிகளும் இருந்தஇடம் தெரியாமல் இடித்து அழிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் யுத்தத்தின் போது அழிக்கப்படவில்லை. வேண்டுமேன்றே கட்டங்கள் அனைத்தும் அத்திபாரத்துடன் அழிக்கப்பட்டுள்ளது.

 

போல் 

80 களில் நடைபெற்ற சில கண்ணிவெடி தாக்குதல்களை தவிர காங்கேசன்துறையில் யுத்தமே  நடைபெறவில்லை. இவை யாவுமே மகிந்தவின் சிந்தனையால் சில வருடங்களின் முன்னர் புடுங்கி எறியப்பட்டவை. விடுவிக்கப்பட்ட பகுதியில்  (அதாவது கல்லூரி வீதிக்கும் பருத்தித்துறை வீதிக்கும் இடையில், தண்டவாளத்துக்கும் கே கே எஸ் வீதிக்கும் இடையான பகுதியில்) நிச்சயமாக 50 மேற்பட்ட கடைகளும், 150 மேற்பட்ட வீடுகளும், சந்தையும், ஒரு தியேட்டரும் இருந்துள்ளது. இன்று மிஞ்சி இருப்பது 5 வீடுகள் + பெட்ரோல் நிலையம் மட்டுமே. இந்த 5 வீடுகளும் எனக்கு தெரிந்தவர்களது வீடுதான். இங்கு காணியை கண்டு பிடிப்பதென்பது சிவனின் அடி முடி தேடியது போலத்தான் இருக்கும்.

கல்லூரி வீதி, தையிட்டி, ஊறணி, பலாலி, மயிலிட்டியை விட்டால் இதைவிட இன்னும் பல ஆச்சரியம் வெளிவரும். அங்கும் எதுவுமே மிச்சமில்லை.

Link to comment
Share on other sites

4 minutes ago, ஜீவன் சிவா said:

போல் 

80 களில் நடைபெற்ற சில கண்ணிவெடி தாக்குதல்களை தவிர காங்கேசன்துறையில் யுத்தமே  நடைபெறவில்லை. இவை யாவுமே மகிந்தவின் சிந்தனையால் சில வருடங்களின் முன்னர் புடுங்கி எறியப்பட்டவை. விடுவிக்கப்பட்ட பகுதியில்  (அதாவது கல்லூரி வீதிக்கும் பருத்தித்துறை வீதிக்கும் இடையில், தண்டவாளத்துக்கும் கே கே எஸ் வீதிக்கும் இடையான பகுதியில்) நிச்சயமாக 50 மேற்பட்ட கடைகளும், 150 மேற்பட்ட வீடுகளும், சந்தையும், ஒரு தியேட்டரும் இருந்துள்ளது. இன்று மிஞ்சி இருப்பது 5 வீடுகள் + பெட்ரோல் நிலையம் மட்டுமே. இந்த 5 வீடுகளும் எனக்கு தெரிந்தவர்களது வீடுதான். இங்கு காணியை கண்டு பிடிப்பதென்பது சிவனின் அடி முடி தேடியது போலத்தான் இருக்கும்.

ஜீவன்!  உண்மையில் இந்த அழிவுகளைப் பார்க்கும் போது அடையும் வேதனைகளுக்கு அளவு கணக்கு இல்லை.
யுத்தத்தின் பின்னர் யப்பான் மீண்டு எழுந்தது போல நாமும் சுறுசுறுப்பாக இயங்கி எழ வேண்டும்.
காங்கேசன்துறை சிங்கப்பூரை விஞ்சிய நகரமாக உருவெடுக்க வேண்டும்.
இந்த நோக்கத்துடன் உங்கள் (உழைப்பவர்கள் ) முயற்சிக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு. 

Link to comment
Share on other sites

நன்றி போல்

சில கிழமைக்கு முன்னர் புலம்பெயர்ந்த நண்பனை இங்கு வந்தபோது சந்திக்க அளவெட்டி போயிருந்தேன். அவனும் இது சித்தப்பாவின் வீடு, பெரியம்மாவின் வீடு, அத்தையின் வீடு, மாமாவின் வீடு என்று அடுக்கிக்கொண்டே போனான். துக்கம் தொண்டையை அடைத்தது. 26 வருடங்கள். பக்கத்து வீட்டுக்காரர்கள் அமெரிக்காவிலோ, ஆஸ்திரேலியாவிலோ, கனடாவிலோ யாம் அறியோம் பராபரமே. காங்கேசன்துறை வந்தேறு குடிகளால் நிரப்பப்பட்ட ஒரு இடம். இங்கு சாதி, மத, இன பேதமின்றி வாழ்ந்தவர்கள் நாம். இது மறுபடியும் எமக்கு கிடைக்காது. வசதி உள்ளவர்கள் ஒன்றில் புலம் பெயர்ந்து விட்டார்கள் அல்லது இங்கு எங்கேயோ சொந்தமா வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டார்கள். அவர்கள் இங்கு வந்து காணியை பாத்து போவார்களே தவிர குடியிருக்க போவதில்லை. இந்த நரகம் மறுபடியும் நகரமாக குறைந்தது 10 வருடங்களாவது பிடிக்கலாம் - அப்போது ஒரு புதிய சந்ததி இங்கு உருவாகி இருக்கும்.

Link to comment
Share on other sites

1 hour ago, ஜீவன் சிவா said:

நன்றி போல்

சில கிழமைக்கு முன்னர் புலம்பெயர்ந்த நண்பனை இங்கு வந்தபோது சந்திக்க அளவெட்டி போயிருந்தேன். அவனும் இது சித்தப்பாவின் வீடு, பெரியம்மாவின் வீடு, அத்தையின் வீடு, மாமாவின் வீடு என்று அடுக்கிக்கொண்டே போனான். துக்கம் தொண்டையை அடைத்தது. 26 வருடங்கள். பக்கத்து வீட்டுக்காரர்கள் அமெரிக்காவிலோ, ஆஸ்திரேலியாவிலோ, கனடாவிலோ யாம் அறியோம் பராபரமே. காங்கேசன்துறை வந்தேறு குடிகளால் நிரப்பப்பட்ட ஒரு இடம். இங்கு சாதி, மத, இன பேதமின்றி வாழ்ந்தவர்கள் நாம். இது மறுபடியும் எமக்கு கிடைக்காது. வசதி உள்ளவர்கள் ஒன்றில் புலம் பெயர்ந்து விட்டார்கள் அல்லது இங்கு எங்கேயோ சொந்தமா வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டார்கள். அவர்கள் இங்கு வந்து காணியை பாத்து போவார்களே தவிர குடியிருக்க போவதில்லை. இந்த நரகம் மறுபடியும் நகரமாக குறைந்தது 10 வருடங்களாவது பிடிக்கலாம் - அப்போது ஒரு புதிய சந்ததி இங்கு உருவாகி இருக்கும்.

ஒருசிலர் திரும்பும் எண்ணம் இல்லாமல் புலம் பெயர்ந்து இருக்கலாம்.

நான் அறிந்த சிலர் வட மாகாணத்தின் ஏனைய பகுதிகளிலும், சிலர் கொழும்பிலும் நிரந்தர குடிகளாக உள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் காங்கேசன்துறையில் தமது இடங்களை வீட்டுக் கொடுக்கத் தயாரில்லை. தமது வீடுகளை மீண்டும் கட்டியெழுப்ப ஆர்வமாக உள்ளனர்.

முன்னர் இருந்த சீமெந்து தூள் (மாசு) பிரச்சினை இப்போது இல்லை என பலர் மகிழ்ந்ததையும் கண்டுள்ளேன்.

மேலும்  நான் அறிந்த சில குடும்பங்கள் 2009 போரில், வாரிசுகள் கூட இல்லாமல் முழுமையாக அழிந்துவிட்டன என்பது மிகவும் கவலையான நிகழ்வுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த காலத்தில் இராணுவ முகாம்கள் விஸ்தரிக்கப்பட்டு பலரது வீடுகள் இல்லாமல் அழித்தது உண்மை தான்  அவர் இன்னும் இருந்திருந்தால் நிலைமை இன்னும் மோசமாக தான் இருந்து இருக்கும் 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.