Jump to content

கணவாய் மீன் வருவல்


Recommended Posts

கணவாய் மீன் வருவல்

‘செஃப்’ தாமுவின் ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்!ஓர் உண(ர்)வுப் பயணம்

 

p66.jpg‘உள்குத்து’ என்ற படத்தில் மீனவர்கள் சங்கத் தலைவரா நடிச்சிக்கிட்டு இருக்கேன். நாகர்கோவிலிருந்து 11 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ‘முட்டம்’ என்ற இடத்தில் படபிடிப்பு நடக்குது. ஒரு நாள் படபிடிப்பின் போது, அங்கிருந்த மீனவ மக்கள், எனக்கு மீன் குழம்பு, கனவாய் மீன் ஃபிரை, கிரேவி, கருவாடு, மாசி பொடி எல்லாம் செஞ்சு கொண்டு வந்தாங்க. இது எனக்கு புதுஅனுபவம். இதுக்கு முன்ன மீனவ மக்களிடம் நான் பழகினது கிடையாது. ஐஸ் மீன் சாப்பிட்டே பழகிப்போன எனக்கு, ஃபிரெஷ் மீன் சாப்பிடும் போது அவ்வளவு டேஸ்டா இருந்தது.
கடல் அலையோடு, கடல் காற்றோடு, மீனவ மக்களோடு, மீன் உணவுகள் சாப்பிட்ட அனுபவம் ரொம்பவே அலாதியானது. அவர்களிடம் அதை எப்படி சமைச்சாங்கனு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். இதில் ‘கனவாய் மீன்’ ஃபிரை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. இதை ‘கடம்பா மீனுன்னும் சொல்லுவாங்க. இந்த ரெசிப்பியைத்தான் இந்த முறை உங்களுக்குச் சொல்றேன்.

கனவாய் மீன் வறுவல்

தேவையானவை :
 கனவாய் மீன் - கால் கிலோ
 மிளகாய்த்தூள் -  2 டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
 இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
 பொட்டுக்கடலை மாவு - 2 கைப்பிடி அளவு
 கறிவேப்பிலை - ஒரு கொத்து
 சின்னவெங்காயம் - 2 கைப்பிடி அளவு
 பச்சை மிளகாய் - 6
 எண்ணெய் - ஒரு குழிகரண்டி அளவு
 உப்பு - தேவையான அளவு
 எலுமிச்சைப்பழம் - 1  (சாறு எடுக்கவும்)
 மிளகுத்தூள்- 2 டீஸ்பூன்

p66a.jpg

செய்முறை:
மீனை சுத்தம் செய்து, வட்டமாக நறுக்கிக்கொள்ளவும். இதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து 5 நிமிடம் ஊற வைத்துக்கொள்ளவும். இதை பொட்டுக்கடலை மாவில் புரட்டி எடுத்து, தவாவில் சிறிது எண்ணெய் விட்டு 2 நிமிடம் இருபுறமும் வேக விட்டு எடுக்கவும். 2 நிமிடத்துக்கு மேல் வேகவைத்தால், ரப்பர் போலாகிவிடும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கறிவேப்பிலை, சின்னவெங்காயம், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். இதில் மீன் சேர்த்து லேசாக வதக்கிவிட்டு, சிறிது உப்பு, எலுமிச்சைச்சாறு பிழிந்து அடுப்பை அணைக்கவும். பரிமாறும் முன்பு  மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

vikatan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது....!

கணவாயை இதுபோல் வட்டம் வட்டமாக வெட்டி முதல் தேங்காய்ப்பாலும் சிறிது மிளகாய்த் தூளும் உப்பும் போட்டுப் பிரட்டி அவித்துக் கொண்டுவர  பாலிலேயே எண்ணெய் அந்தர்யாமியாய் இருப்பதால்  அதிலேயே வத்தப் பொரித்து பின் வெங்காயம், ப. மிளகாய் , கறிவேப்பிலை போட்டு தாளித்து எடுக்க சூப்பரான சுவையாய் இருக்கும்....!  tw_blush:

Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

நன்றாக இருக்கின்றது....!

கணவாயை இதுபோல் வட்டம் வட்டமாக வெட்டி முதல் தேங்காய்ப்பாலும் சிறிது மிளகாய்த் தூளும் உப்பும் போட்டுப் பிரட்டி அவித்துக் கொண்டுவர  பாலிலேயே எண்ணெய் அந்தர்யாமியாய் இருப்பதால்  அதிலேயே வத்தப் பொரித்து பின் வெங்காயம், ப. மிளகாய் , கறிவேப்பிலை போட்டு தாளித்து எடுக்க சூப்பரான சுவையாய் இருக்கும்....!  tw_blush:

சுவியற்ற சமையலை பற்றி வெள்ளனவே தெரிந்திருந்தால் எண்ட பெண்டாட்டியாக்கி இருந்திருப்பேன்.

ஜஸ்டு மிஸ்ஸு மொமெண்ட். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஜீவன் சிவா said:

சுவியற்ற சமையலை பற்றி வெள்ளனவே தெரிந்திருந்தால் எண்ட பெண்டாட்டியாக்கி இருந்திருப்பேன்.

ஜஸ்டு மிஸ்ஸு மொமெண்ட். :grin:

இப்பவும் என்ன குறைஞ்சா போச்சுது

ஒருபால் திருமணம் நடக்கிறது தானே ?

ஆனால் என்ன..........சுவியிடம் ஒரு வார்த்தை கேளுங்கள் ??  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ யாம் வெயிட்டிங்...!  tw_blush:

Link to comment
Share on other sites

1 hour ago, ஜீவன் சிவா said:

சுவியற்ற சமையலை பற்றி வெள்ளனவே தெரிந்திருந்தால் எண்ட பெண்டாட்டியாக்கி இருந்திருப்பேன்.

ஜஸ்டு மிஸ்ஸு மொமெண்ட். :grin:

அடபாவி... இங்க என்ன நடக்குது..:grin:

1 hour ago, suvy said:

ஐ யாம் வெயிட்டிங்...!  tw_blush:

ஹாஹஹா இவர் இப்படிதான் எழுதுவர் என நினைத்தேன்..tw_blush:

Link to comment
Share on other sites

  • 3 months later...

சூப்பரான கணவாய் மீன் வறுவல்

 

 
 

வார விடுமுறைகளில் வித்தியாசமாக என்ன சமையல் செய்யலாம் என்று யோசிப்பவர்கள் கணவாய் மீன் வறுவல் செய்து அசத்தலாம்.

 
 
 
 
சூப்பரான கணவாய் மீன் வறுவல்
 
தேவையான பொருட்கள் :

கணவாய் மீன் - 300 கிராம்
இஞ்சி விழுது - 2 மேசைகரண்டி
பூண்டு விழுது - 2 மேசைகரண்டி
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - 15
தக்காளிப் பழம் - 1
எண்ணெய் - 2 மேசைகரண்டி
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
பெருஞ்சீரகம் - அரை ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
கரம்மசாலா தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை இவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

* கணவாய் மீனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் உப்பு, மிளகாய்த் தூள், கரம்மசாலத்தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, இவற்றை சேர்த்து நன்றாக கலந்து அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை விட்டு காய்ந்ததும் கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின், வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் ஊறவைத்த கணவாய் மீன் கலவையை போட்டு, கலந்து மூடியால் மூடி விடவும். (அடுப்பு நெருப்பையும் மிதமான அளவில் விடவும்)

* 20 நிமிடங்களில் கணவாய் வெந்து விடும். சட்டியில் உள்ள நீர்த்தன்மை முழுவதும் வற்றி எண்ணெய் பிரிந்து டிரையாக, உதிரியாக வரும் போது கொத்தமல்லி இலையும் சேர்த்து ஒரு நிமிடம் மூடி இறக்கி விடுங்கள்.

* சுவையான கணவாய் மீன் பொரியல் ரெடி.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேக்காரர், இலங்கையில இருந்து கொண்டு, பிரான்ஸ் பக்கமா நூல் விடுறார்... ஆ... காகா... :grin: 

Link to comment
Share on other sites

  • 2 months later...

கணவாய் மீன் வறுவல்!

 
DSC07945.JPG
 
கணவாய் மீன் வறுவல்
 
தேவையான பொருட்கள்
 
கணவாய் மீன்   - 1 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
புண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி
நெல் சீரகத் துர்ள் - 2 தே க
எண்ணை 
கடுகு உளுத்தம் பயிர்
கருவேப்பிள்ளை கொத்துமல்லி தழை.
 
(காரம், தொக்கு அதிகமாக வேண்டுமென்றால்  மேற்கொண்டு சேர்த்தக் கொள்ளங்கள்.)
 
 
DSC07905.JPG
 
முட்டை கணவா மீன்
 
DSC07908.JPG
 
நன்றாக ஆய்ந்து கழுவி எடுத்தக்கொள்ளுங்கள்.
 
DSC07909.JPG
 
 
ஒரு வாணலில் தலைகளை மட்டும் எடுத்து இரண்டாக வெட்டி (அப்படியே கூட போடலாம். எனக்கு பார்க்க பயமாக இருப்பதால் இப்படி இரண்டாக வெட்டிவிடுவேன்.... ) அதனுடன் கொஞ்சம் உப்பு கொஞ்சம் மஞ்சள் பொடி சேர்த்து தண்ணீர் விடாமல் அடுப்பில் வைத்து மிதமான தீயில் வேக விட வேண்டும். 
      கனவா தலைகள் வேகும் போதே அதிகமாக நீரை வெளியிடும். இந்த நீரை வடிகட்டி கீழே கொட்டிவிட வேண்டும். இப்படிக் கொட்டிவிடுவதால் கானவா மீனின் கவுச்சி வாடை கிட்டத்தட்ட முற்றிலுமாக போய்விடும்.
      பிறகு இதைத் தனியே எடுத்து வைத்துவிடுங்கள்.
 
DSC07913.JPG
 
வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை வெட்டி.... பின்பு
 
DSC07914.JPG
 
வாணலியை அடுப்பிலேற்றி காய்ந்ததும் எண்ணை விட்டு கடுகு உளுத்தம் பயிரு போட்டுத் தாளித்துப்.... பின்பு
 
DSC07915.JPG
 
வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி... பின்பு
 
DSC07919.JPG
 
தக்காளி, பூண்டு விழுது, கறிவேப்பிள்ளை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து....
 
DSC07922.JPG
 
நன்றாக வதக்கியப் பின்பு...
 
DSC07923.JPG
 
அதில் கனவாய் மீன், ஏற்கனவே வேகவைத்த கனவா மீன் தலை, மிளகாய்த்துாள், நெல் சீரகப்பொடி, சேர்த்து....
 
DSC07927.JPG
 
நன்றாகக் கிளறி மூடி வேகவிட வேண்டும். இந்த நேரத்தில் ருசி பார்த்து காரம் உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளலாம்.
அடிக்கடி அடிபிடிக்காமல் கிளறிவிட வேண்டும்.
 
DSC07934.JPG
 
நன்றாக வெந்து தண்ணீர் சுண்டியதும் கொத்துமல்லி தழையைக் கிள்ளி போட்டு இறக்கி விட வேண்டும்.
 
DSC07945.JPG
 
கணவாய் மீன் வறுவல் ரெடி!
 
இதுவே கணவாய் மீன் வறுவல் செய்முறை. இதை சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ளலாம்.
(மற்றபடி நல்ல சுவையான சைடிஷ்)
         நான் ஏன் இவ்வளவு விளக்கமாகச் சொன்னேன் என்றால்...... எனக்கு யாரும் இவ்வளவு விளக்கமாகச் சொல்லிக் கொடுக்கவில்லை. .....(
 
நட்புடன்
அருணா செல்வம்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பிரட்டல்  இன்னும் செமையா இருக்கும்   இந்த ஊசிக்கணவாயில்:113_tongue:

Link to comment
Share on other sites

இந்த வார இறுதியில் செய்து பார்க்கத்தான் வேண்டும்

அது சரி, கணவாயை ஏன் கணவாய் மீன் என்று சொல்லினம்? அப்ப இறாலை இறால் மீன் என்றும், நண்டை நண்டு மீன் என்றும் மட்டியை மட்டி மீன் என்றும் தானே சொல்ல வேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, நிழலி said:

இந்த வார இறுதியில் செய்து பார்க்கத்தான் வேண்டும்

அது சரி, கணவாயை ஏன் கணவாய் மீன் என்று சொல்லினம்? அப்ப இறாலை இறால் மீன் என்றும், நண்டை நண்டு மீன் என்றும் மட்டியை மட்டி மீன் என்றும் தானே சொல்ல வேண்டும்?

கிழக்கில் கணவாய் என்று தான் சொல்லுவோம் மீனை சேர்ப்பதில்லை  நிழலி 

இதில் ஊசிக்கணவாய், சாக்கு கணவாய் , ஓட்டுக்கனவாய்  மூன்று வகை உண்டு  இன்னும் இருக்கோ தெரியாது   படம் கிடைக்கும் போது இணைக்கிறேன் அவற்றின் வகையை 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

கணவாய் மீன் வறுவல்!

 
 
DSC07945.JPG
 
கணவாய் மீன் வறுவல் ரெடி!
 
(மற்றபடி நல்ல சுவையான சைடிஷ்)
         நான் ஏன் இவ்வளவு விளக்கமாகச் சொன்னேன் என்றால்...... எனக்கு யாரும் இவ்வளவு விளக்கமாகச் சொல்லிக் கொடுக்கவில்லை. .

நல்ல சுவையான சைடிஷ், என்ற படியால்... ரேஸ்ருக்கு, இதை கட்டாயம்  செய்து பார்க்கத்தான் இருக்கு. 
அத்துடன்.... செய் முறையும், பட விளக்கத்துடன்.... அந்த மாதிரி பட விளக்கத்துடன் உள்ளதால், செய்வதில் பிரச்சினை   இராது.
நெல் சீரகத் தூள் என்று, ஒரு புது அயிட்டம் தான்... கொஞ்சம் பயப்பிடுத்துது.
குறிப்புக்கு... நன்றி, நுணாவிலான். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

இந்த வார இறுதியில் செய்து பார்க்கத்தான் வேண்டும்

அது சரி, கணவாயை ஏன் கணவாய் மீன் என்று சொல்லினம்? அப்ப இறாலை இறால் மீன் என்றும், நண்டை நண்டு மீன் என்றும் மட்டியை மட்டி மீன் என்றும் தானே சொல்ல வேண்டும்?

கணவாயை ஒருத்தரும் மீன் எண்டு சொல்லுறேல்லை....
இப்பத்தையான் குடிசைத்தொழில் ஊடகங்களுக்கு ஒரு கோதாரியும் தெரியாது....

தமிழிலை ஒரு இழவும் தெரியாது....

தலையங்கம் எப்பிடி எழுதோணும் எண்டும் தெரியாது.....

சிணுங்கினால் கதறல் எண்டு தலையங்கம் போடுதுகள்....

இண்டைக்கு பாவக்காயிலை ஆயிரம் நன்மைகள் எண்டு நியூஸ் போடுங்கள்......

இரண்டு நாள் கழிச்சு பாவக்காயில் இவ்வளவு ஆபத்து ஓஓவெண்டு நியூசை போடுங்கள்.  

பால் குடிச்சால் நூறுவருசம் வாழலாம் எண்டுங்கள்...

அங்காலை ஒரு தலையங்கத்திலை பால் குடிச்சால் கான்சர் வரும் எண்டு வெருட்டுங்கள் ...

பத்து வருசத்துக்குமுதல் நடந்த செய்தியை மூண்டு மணித்தியாலத்துக்கு முதல் நடந்தமாதிரி பிரம்மை படுத்துங்கள்.

இலகுவாக்கப்பட்ட தொழில்நுட்பம் பலவீனமாக பயன்படுத்தப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

நல்ல சுவையான சைடிஷ், என்ற படியால்... ரேஸ்ருக்கு, இதை கட்டாயம்  செய்து பார்க்கத்தான் இருக்கு. 
அத்துடன்.... செய் முறையும், பட விளக்கத்துடன்.... அந்த மாதிரி பட விளக்கத்துடன் உள்ளதால், செய்வதில் பிரச்சினை   இராது.
நெல் சீரகத் தூள் என்று, ஒரு புது அயிட்டம் தான்... கொஞ்சம் பயப்பிடுத்துது.
குறிப்புக்கு... நன்றி, நுணாவிலான். :)

சிறியர் அது நற்சீரகத்தூள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இந்த சமையலை போட்டு நாவில் சுவையை   தூண்டிவிட்டீர் நூணாவிலன் இன்று  கடற்கரைக்கு போய் அப்போது பிடிபட்ட கணவாய் எடுத்து வந்து ஒரு பிரட்டல்  அவ்வளவுதான்  செம ருசி கணவாய் கணவாய் தான்   :113_tongue::113_tongue::113_tongue:

20170112_084453.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

இன்று  கடற்கரைக்கு போய் அப்போது பிடிபட்ட கணவாய் எடுத்து வந்து ஒரு பிரட்டல்  அவ்வளவுதான்  செம ருசி கணவாய் கணவாய் தான்

 

இங்க பாத்தியாக்கா புது செய்திய ???

C19Tr04VQAE5uyY.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, MEERA said:

சிறியர் அது நற்சீரகத்தூள்

மீரா...... நற்சீரகத்துக்கு, இப்படியும் ஒரு பெயர் இருப்பது... இப்ப தான் தெரியும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, முனிவர் ஜீ said:

 இந்த சமையலை போட்டு நாவில் சுவையை   தூண்டிவிட்டீர் நூணாவிலன் இன்று  கடற்கரைக்கு போய் அப்போது பிடிபட்ட கணவாய் எடுத்து வந்து ஒரு பிரட்டல்  அவ்வளவுதான்  செம ருசி கணவாய் கணவாய் தான்   :113_tongue::113_tongue::113_tongue:

20170112_084453.jpg

முனிவர் ஜீ... படத்தில் 22 கணவாய் உள்ளது.  அநேகமாக 4 கிலோவுக்கு மேல் வரும் என யூ கிக்கின்றேன்.
அங்கு... ஒரு கிலோ கணவாய், என்ன விலை போகுது. 
இங்கு... சென்ற ஆண்டு பிடித்த, ஒரு கிலோ  ஐஸ்  கணவாய் பெட்டி...  6 ஐரோ விற்கிறார்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/12/2017 at 3:43 PM, குமாரசாமி said:

 

இங்க பாத்தியாக்கா புது செய்திய ???

C19Tr04VQAE5uyY.jpg

சமைக்க ஓரளவு தெரியும் என்பதை கம்பனிக்கு அறியத்தருகிறேன் போதுமா   போட்ட படத்தை பாரும் ம்கும்tw_blush:

On 1/12/2017 at 10:31 PM, தமிழ் சிறி said:

முனிவர் ஜீ... படத்தில் 22 கணவாய் உள்ளது.  அநேகமாக 4 கிலோவுக்கு மேல் வரும் என யூ கிக்கின்றேன்.
அங்கு... ஒரு கிலோ கணவாய், என்ன விலை போகுது. 
இங்கு... சென்ற ஆண்டு பிடித்த, ஒரு கிலோ  ஐஸ்  கணவாய் பெட்டி...  6 ஐரோ விற்கிறார்கள். :)

அண்ணே கணவாய் விலை கிலோ 600, 700 கிராக்கி ஏற்பட்டால் ஆயிரம் வரைக்கும் போகும் இது நான் போய் சும்மா எடுத்து வந்தேன்  சின்னது ஒரு கிலோ வரை இருக்கும் 
ஐஸ் கணவாய் சாப்பிட மாட்டேன்  அது எத்தனை நாட் களாக இருந்ததோ தெரியாது இங்கே கிழக்கில் மீன் வகை மலிவு  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய பதிவு ஒன்று 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.