Jump to content

இலங்கை தமிழர் விடயத்தில் நேரடியாக தலையிடாது இந்தியா


Recommended Posts

இலங்கை தமிழர் விடயத்தில் நேரடியாக தலையிடாது இந்தியா
 
இலங்கை தமிழர் விடயத்தில் நேரடியாக தலையிடாது இந்தியா
 
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியா நேரடியாகத் தலையிடப் போவதில்லை. கடந்த 30 வருட கால அனுபவத்தில் நாம் கற்றுக்கொண்ட பாடம் அதிகமாகும் என இந்தியாவின் பாதுகாப்பு கற்கைகள் மற்றும் ஆய்வுக்கான நிபுணர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் தெரிவித்தனர்.
srilanka-and-india-720x480.jpg
இலங்கையின் உள்ளக விடயத்தில் மாத்திரமின்றி புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்திலும் நேரடியாக இந்தியா தலையிடாது எனவும் அந்த நிபுணர்கள் குறிப்பிட்டனர்.
 
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சென்றுள்ள ஊடகவியலாளர் குழுவை நேற்று (திங்கட்கிழமை) புதுடெல்லியில் அமைந்துள்ள பாதுகாப்பு கற்கைகள் மற்றும் ஆய்வுக்கான மையத்துள் சந்தித்த போதே அவர்கள் இதை தெரிவித்தனர்.
 
இந்த சந்திப்பின் போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 1988 ஆம் ஆண்டு இந்திய அமைதிகாப்பு படை இலங்கைக்கு வருகை தந்த போதும் புலிகளும் அரசும் செய்துகொண்ட சமரசம் மூலம் அதிகளவான இழப்புகளை நாம் சந்தித்தோம். அந்த அனுபவமும் 30 வருடகால அனுபவமும் எமக்கு அதிகமாக உள்ளது.
 
தமிழ் மக்களை பாதுகாக்கவே நாம் செயற்பட்டோம். எனினும் இந்த செயற்பாட்டால் வடக்கு கிழக்கில் மாத்திரம் ஆயிரத்துக்கும் அதிகமான இந்திய படையினர் இறந்தனர். இந்த கசப்பான அனுபவம் எமக்கு இன்றும் உள்ளது. மேலும் இலங்கைக்கு நாம் ஆதரவை வழங்கவும் ஆலோசனைகளை வழங்கவும் எப்போதும் தயாராகவே உள்ளோம்.
 
ஆரம்பத்தில் இருந்து நாம் எம்மாலான சகல உதவிகளை வழங்கி வந்தோம். 13ஆம் திருத்தத்தை நாம் முன்வைத்த போதிலும் அதில் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என நம் தெரிவித்தோம். அப்போதைய அரசாங்கம் அதை ஏற்றுக்கொண்டாலும் இதுவரையில் 13 ஆம் திருத்தத்தை அரசாங்கம் அமுல்ப்படுத்தவில்லை.
 
ஆகவே நாம் இந்த விவகாரத்தில் எம்மாலான முயற்சிகளை செய்தாலும் இறுதியான தீர்வை இலங்கை அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும். அதில் எம்மால் நேரடியாக தலையிட முடியாது. ஆகவே, இலங்கையில் நீண்டகால முரண்பாடுகளை தீர்க்க வேண்டுமாயின் அதில் எமது நேரடியான தலையீடுகள் எதையும் ஏற்படுத்திக் கொடுக்க முடியாது என நாம் நம்புக்கின்றோம்.
 
இலங்கையின் தமிழர்கள் விவகாரத்தில் இந்தியாவின் நேரடியான தலையீடுகள் எவையும் இருக்கப்போவதில்லை. மேலும் புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கம் தொடர்பில் இலங்கை தமிழர் தரப்பு தெரிவித்த போதிலும் எம்மால் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது.
 
முன்னாள் ஜனாதிபதி சமஷ்டி தீர்வு ஒன்றை முன்னரும் முன்வைத்தார். எனினும் இப்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் அப்போது அதை எதிர்த்து நின்றது. அதேபோல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பல தடவைகள் சமஷ்டி கதைகளை கூறியே தேர்தலிலும் வெற்றி பெற்றார்.
 
ஆனால், இன்று சமஷ்டி என்பது ஒரு மோசமான வார்த்தையாக இலங்கையில் மாற்றம்பெற்று விட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இந்த விவகாரத்தை மாற்றிவிட்டது. ஆகவே, இலங்கையில் தமிழர் விவகாரத்தில் இந்தியா நேரடியாக தலையிடப்போவதில்லை- என்றனர்

http://onlineuthayan.com/news/14310

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு தெரியும் நீங்கள் எல்லாம் மறைமுகமாகத்தான் செய்யிவியள் என்று

Link to comment
Share on other sites

7 hours ago, நவீனன் said:

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சென்றுள்ள ஊடகவியலாளர் குழுவை நேற்று (திங்கட்கிழமை) புதுடெல்லியில் அமைந்துள்ள பாதுகாப்பு கற்கைகள் மற்றும் ஆய்வுக்கான மையத்துள் சந்தித்த போதே அவர்கள் இதை தெரிவித்தனர்

சர்வதேச அரங்கில் ஏதாவது முக்கியமான நிகழ்வுகள் நடக்கும் போது இவ்வாறு ஒரு குழு செல்வதும், சந்திப்பதும், சகுனித்தனமான அறிக்கைகளை வெளியிடுவதும் சில வருடங்களாகவே நடந்து வருகின்றன.

அதாவது தமிழின விரோத அயல்நாட்டு நாசகாரக் கும்பலின் குழி பறிக்கும் வேலைகள் தொடரும் என்று சொல்லாமல் சொல்லியுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நவீனன் said:

இலங்கை தமிழர் விடயத்தில் நேரடியாக தலையிடாது இந்தியா

அதுதான் முள்ளிவாக்கால் அழிவிலை எல்லாம் பார்த்தமே...... Verärgert

Link to comment
Share on other sites

8 hours ago, நவீனன் said:

இலங்கை தமிழர் விடயத்தில் நேரடியாக தலையிடாது இந்தியா

இதன் அர்த்தம் மறைமுகமா தலையிடும் என்பதுதானே. அட பாவியளா எங்களை எங்கட பாட்டுக்கு இருக்க விடுங்கடா. நீங்க எக்கேடாவது கெட்டு தொலையுங்க. இதுக்கு மேல நான் ஏதாவது எழுதினால் மட்டூஸ் கத்தியோடு வந்திடுவாங்க.

"viuqv8rwy v9q8 8qr வ்åÆ ட¨- EM8C

middle finger rude gesture emoticon

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

இதன் அர்த்தம் மறைமுகமா தலையிடும் என்பதுதானே. அட பாவியளா எங்களை எங்கட பாட்டுக்கு இருக்க விடுங்கடா. நீங்க எக்கேடாவது கெட்டு தொலையுங்க. இதுக்கு மேல நான் ஏதாவது எழுதினால் மட்டூஸ் கத்தியோடு வந்திடுவாங்க.

"viuqv8rwy v9q8 8qr வ்åÆ ட¨- EM8C

middle finger rude gesture emoticon

இந்த மனுசன் ஏன் விரலைக்காட்டுது அதுவும் நடு விரலை  ?☺

Link to comment
Share on other sites

2 minutes ago, முனிவர் ஜீ said:

இந்த மனுசன் ஏன் விரலைக்காட்டுது அதுவும் நடு விரலை  ?☺

சின்ன விரலை காட்டினால், இந்தாள் ஏன் சின்ன விரலை காட்டுது எண்டு கேட்பீர்கள் எண்டுதான் நடுவிரலை காட்டுது. :grin:

எனக்கு இந்தியா மேல அவ்வளவு காண்டு - எந்த விரலையாவது காட்டியாகணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

சின்ன விரலை காட்டினால், இந்தாள் ஏன் சின்ன விரலை காட்டுது எண்டு கேட்பீர்கள் எண்டுதான் நடுவிரலை காட்டுது. :grin:

எனக்கு இந்தியா மேல அவ்வளவு காண்டு - எந்த விரலையாவது காட்டியாகணும்.

எனக்கும் தான்.தானும் படுக்காதுகள் தள்ளியும் படுக்காதுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஜீவன் சிவா said:

சின்ன விரலை காட்டினால், இந்தாள் ஏன் சின்ன விரலை காட்டுது எண்டு கேட்பீர்கள் எண்டுதான் நடுவிரலை காட்டுது. :grin:

எனக்கு இந்தியா மேல அவ்வளவு காண்டு - எந்த விரலையாவது காட்டியாகணும்.

இந்தியா மேல் காண்டுதான் கனபேருக்கு ஆனால் கபாலி படத்துக்கு வெளிநாட்டில் கனபேர் ரிக்கட் போட்டு இருக்காங்கள்??

இங்கே யும் பால் பியர் வாக்க ஆள் இருக்கிறது அண்ணே ?

தமிழகத்தை சேர்க்காமல் இருந்தால் நல்லது இந்தியா எனும் நாட்டில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியா நேரடியாகத் தலையிடப் போவதில்லை. கடந்த 30 வருட கால அனுபவத்தில் நாம் கற்றுக்கொண்ட பாடம் அதிகமாகும் என இந்தியாவின் பாதுகாப்பு கற்கைகள் மற்றும் ஆய்வுக்கான நிபுணர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் தெரிவித்தனர். இலங்கையின் உள்ளக விடயத்தில் மாத்திரமின்றி புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்திலும் நேரடியாக இந்தியா தலையிடாது எனவும் அந்த நிபுணர்கள் குறிப்பிட்டனர்.

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியா நேரடியாகத் தலையிடப் போவதில்லை. கடந்த 30 வருட கால அனுபவத்தில் நாம் கற்றுக்கொண்ட பாடம் அதிகமாகும் என இந்தியாவின் பாதுகாப்பு கற்கைகள் மற்றும் ஆய்வுக்கான நிபுணர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் தெரிவித்தனர். இலங்கையின் உள்ளக விடயத்தில் மாத்திரமின்றி புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்திலும் நேரடியாக இந்தியா தலையிடாது எனவும் அந்த நிபுணர்கள் குறிப்பிட்டனர்.

   

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சென்றுள்ள ஊடகவியலாளர் குழுவை திங்கட்கிழமை புதுடெல்லியில் அமைந்துள்ள பாதுகாப்பு கற்கைகள் மற்றும் ஆய்வுக்கான மையத்துள் சந்தித்த போதே அவர்கள் இதை தெரிவித்தனர்.

இந்த சந்திப்பின் போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 1988 ஆம் ஆண்டு இந்திய அமைதிகாப்பு படை இலங்கைக்கு வருகை தந்த போதும் புலிகளும் அரசும் செய்துகொண்ட சமரசம் மூலம் அதிகளவான இழப்புகளை நாம் சந்தித்தோம். அந்த அனுபவமும் 30 வருடகால அனுபவமும் எமக்கு அதிகமாக உள்ளது. தமிழ் மக்களை பாதுகாக்கவே நாம் செயற்பட்டோம். எனினும் இந்த செயற்பாட்டால் வடக்கு கிழக்கில் மாத்திரம் ஆயிரத்துக்கும் அதிகமான இந்திய படையினர் இறந்தனர். இந்த கசப்பான அனுபவம் எமக்கு இன்றும் உள்ளது. மேலும் இலங்கைக்கு நாம் ஆதரவை வழங்கவும் ஆலோசனைகளை வழங்கவும் எப்போதும் தயாராகவே உள்ளோம்.

ஆரம்பத்தில் இருந்து நாம் எம்மாலான சகல உதவிகளை வழங்கி வந்தோம். 13ஆம் திருத்தத்தை நாம் முன்வைத்த போதிலும் அதில் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என நம் தெரிவித்தோம். அப்போதைய அரசாங்கம் அதை ஏற்றுக்கொண்டாலும் இதுவரையில் 13 ஆம் திருத்தத்தை அரசாங்கம் அமுல்ப்படுத்தவில்லை.ஆகவே நாம் இந்த விவகாரத்தில் எம்மாலான முயற்சிகளை செய்தாலும் இறுதியான தீர்வை இலங்கை அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும். அதில் எம்மால் நேரடியாக தலையிட முடியாது. ஆகவே, இலங்கையில் நீண்டகால முரண்பாடுகளை தீர்க்க வேண்டுமாயின் அதில் எமது நேரடியான தலையீடுகள் எதையும் ஏற்படுத்திக் கொடுக்க முடியாது என நாம் நம்புக்கின்றோம்.

இலங்கையின் தமிழர்கள் விவகாரத்தில் இந்தியாவின் நேரடியான தலையீடுகள் எவையும் இருக்கப்போவதில்லை. மேலும் புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கம் தொடர்பில் இலங்கை தமிழர் தரப்பு தெரிவித்த போதிலும் எம்மால் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது. முன்னாள் ஜனாதிபதி சமஷ்டி தீர்வு ஒன்றை முன்னரும் முன்வைத்தார். எனினும் இப்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் அப்போது அதை எதிர்த்து நின்றது. அதேபோல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பல தடவைகள் சமஷ்டி கதைகளை கூறியே தேர்தலிலும் வெற்றி பெற்றார்.

ஆனால், இன்று சமஷ்டி என்பது ஒரு மோசமான வார்த்தையாக இலங்கையில் மாற்றம்பெற்று விட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இந்த விவகாரத்தை மாற்றிவிட்டது. ஆகவே, இலங்கையில் தமிழர் விவகாரத்தில் இந்தியா நேரடியாக தலையிடப்போவதில்லை- என்றனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=160457&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் தலையீடடை சரத் பொன்சேகா இப்படிக் கூறியிருந்தார். "எங்கள் போராட்டத்தை  கிளிநொச்சியுடன் நிறுத்திக் கொள்வதே எமது திட்டமாக இருந்தது. ஆனால் இந்தியாவே எம்மை தொடர்ந்து போராட வைத்தது." கோத்தா கூறினார் "இந்த போராட்டம்   இந்தியாவினுடையது, இந்தியாவுக்காகவே நாம் இதைச் செய்தோம்."  திஸ்ஸ விதாரண கூறியது "சர்வ கட்சி மாநாடைக்  கூட்டி தீர்வு வரைபு அமுல்படுத்த நாங்கள் தீர்மானித்தபோது இந்தியா என்னை அழைத்தது சில அறிவுறுத்தலைத் தந்தது." அவர் சொல்லுவாராம், இவர் கேப்பாராம். இன்னும் நாங்கள் இவர்களை நம்புவோம் என்று இவர்கள் நம்புகிறார்கள். காரணம் இன்னும் எம்மவர் அங்க படையெடுப்பதால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28.6.2016 at 8:35 AM, நவீனன் said:
இலங்கை தமிழர் விடயத்தில் நேரடியாக தலையிடாது இந்தியா
 
இலங்கை தமிழர் விடயத்தில் நேரடியாக தலையிடாது இந்தியா
 
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியா நேரடியாகத் தலையிடப் போவதில்லை. கடந்த 30 வருட கால அனுபவத்தில் நாம் கற்றுக்கொண்ட பாடம் அதிகமாகும் என இந்தியாவின் பாதுகாப்பு கற்கைகள் மற்றும் ஆய்வுக்கான நிபுணர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் தெரிவித்தனர்.
srilanka-and-india-720x480.jpg
 
 
 
 
இந்த சந்திப்பின் போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 1988 ஆம் ஆண்டு இந்திய அமைதிகாப்பு படை இலங்கைக்கு வருகை தந்த போதும் புலிகளும் அரசும் செய்துகொண்ட சமரசம் மூலம் அதிகளவான இழப்புகளை நாம் சந்தித்தோம். அந்த அனுபவமும் 30 வருடகால அனுபவமும் எமக்கு அதிகமாக உள்ளது.
 
தமிழ் மக்களை பாதுகாக்கவே நாம் செயற்பட்டோம். எனினும் இந்த செயற்பாட்டால் வடக்கு கிழக்கில் மாத்திரம் ஆயிரத்துக்கும் அதிகமான இந்திய படையினர் இறந்தனர். இந்த கசப்பான அனுபவம் எமக்கு இன்றும் உள்ளது. மேலும் இலங்கைக்கு நாம் ஆதரவை வழங்கவும் ஆலோசனைகளை வழங்கவும் எப்போதும் தயாராகவே உள்ளோம்.
 
முன்னாள் ஜனாதிபதி சமஷ்டி தீர்வு ஒன்றை முன்னரும் முன்வைத்தார். எனினும் இப்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் அப்போது அதை எதிர்த்து நின்றது.

http://onlineuthayan.com/news/14310

எல்லாவற்றையும் ஞாபகத்தில்  வைத்திருப்பவர் ராஜீவ் காந்தி சிங்கள படை வீரரிடம் அடிவாங்கியதை மறந்து விட்டார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

இவர்களின் தலையீடடை சரத் பொன்சேகா இப்படிக் கூறியிருந்தார். "எங்கள் போராட்டத்தை  கிளிநொச்சியுடன் நிறுத்திக் கொள்வதே எமது திட்டமாக இருந்தது. ஆனால் இந்தியாவே எம்மை தொடர்ந்து போராட வைத்தது." கோத்தா கூறினார் "இந்த போராட்டம்   இந்தியாவினுடையது, இந்தியாவுக்காகவே நாம் இதைச் செய்தோம்."  திஸ்ஸ விதாரண கூறியது "சர்வ கட்சி மாநாடைக்  கூட்டி தீர்வு வரைபு அமுல்படுத்த நாங்கள் தீர்மானித்தபோது இந்தியா என்னை அழைத்தது சில அறிவுறுத்தலைத் தந்தது." அவர் சொல்லுவாராம், இவர் கேப்பாராம். இன்னும் நாங்கள் இவர்களை நம்புவோம் என்று இவர்கள் நம்புகிறார்கள். காரணம் இன்னும் எம்மவர் அங்க படையெடுப்பதால்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.