Jump to content

மெஸ்ஸி தவறவிட்ட பெனால்டி கோல்; அர்ஜென்டினாவை வீழ்த்தி சிலி சாம்பியன்


Recommended Posts

மெஸ்ஸி தவறவிட்ட பெனால்டி கோல்; அர்ஜென்டினாவை வீழ்த்தி சிலி சாம்பியன்

 
Chile_2910784f_2910844f.jpg
 

'மேஜிக்' மெஸ்ஸி பெனால்டி ஷூட் அவுட்டில் கோல் அடிக்கத் தவற, இறுதிப் போட்டியில் பெனால்டி முறையில் சிலி அணி 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி தொடர்ச்சியாக 2-வது முறையாக கோப்பா அமெரிக்கா சாம்பியன் ஆனது.

ஒரு முக்கிய கோப்பையை வென்று அர்ஜென்டினாவுக்கு 23 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் காத்திருப்பு தொடர்கிறது. சிலி வீரர்கள் தங்கள் ரசிகர்களுக்கு சல்யூட் செய்தனர். நாளை சிலியில் பொது விடுமுறை, மைதானத்தில் லத்தீன் அமெரிக்க இசை, பாட்டு, கொண்டாட்டம். ‘வீ ஆர் த சாம்பியன்ஸ்’ பாடல் ஒலித்தது.

மெஸ்ஸி அதிர்ச்சியில் பெஞ்சில் வந்து அமர்ந்தார். 10 வீரர்களுக்கு சிலி அணி குறுக்கப்பட்டவுடன் முடிந்தது என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால் அவர்கள் மன உறுதியுடன் ஆடி 90 நிமிடம் மற்றும் கூடுதல் அரை மணி நேர ஆட்டத்தில் அர்ஜெண்டினாவை கோல் அடிக்க விடாமல் செய்து பிறகு ஷூட் அவுட்டில் பதற்றம் தவிர்த்து தைரியத்துடன் ஆடினர். ஆனால் ஒரு நேரத்தில் இரு அணிகளுமே 10 வீரர்களுடன் ஆடினர்.

கடந்த முறை கிளாடியோ பிராவோ, அலெக்சிஸ் சான்சேஸ், பனேகா ஆகியோரது ஹீராயிச ஆட்டத்தினால் சிலி கோப்பா அமெரிக்கா சாம்பியன் ஆனது.

பெனால்டி ஷூட் அவுட்:

இம்முறை பெனால்டி ஷூட் அவுட்டை சிலி வீரர் விடால் தொடங்கினார். நல்ல ஷாட் அல்ல, ரொமீரோ இடது புறம் பந்தை கோல் செல்லாமல் முறியடித்தார்.

இப்போது அர்ஜென்டினா, கிக் அடிக்க வந்தவர் மேஜிக் மெஸ்ஸி, விடாலை விடவும் மோசமான ஷாட், கோல் கம்பிக்கு மேலே நன்றாகவே சென்றது மெஸ்ஸி தான் என்ன செய்து விட்டோம் என்று உணரும் முன்பே இதன் விளைவுகள் தாக்கம் பெற்றன. 25

அடி 30 அடி ஃப்ரீ கிக் எல்லாம் மெஸ்சிக்கு ஒன்றுமில்லாத நிலையில் பெனால்டி ஷூட் அவுட் என்ற கண்ணாடித் தரை எப்பேர் பட்ட வீரரையும் சறுக்கச் செய்வதே. மெஸ்ஸிக்கும் அடி சறுக்கும். சறுக்கியது.

சிலி அணிக்கு காஸ்டிலோ முதல் கோலை அடித்தார். அர்ஜென்டினாவுக்கு மஸ்செரானோ எண்ணிக்கையை தொடங்கினார். மீண்டும் சிலி அணிக்கு அராங்குய் 2-வது கோலை அடித்தார். அகிரோ, சிலி கோல் கீப்பர் பிராவோவைத் தாண்டி தள்ளிவிட்டார் 2-2.

அடுத்ததாக சிலி அணிக்காக 12 ஆண்டுகள் ஆடி வரும் அனுபவ வீரர் பியூசாஜர் ஆற்றல் வாய்ந்த ஷாட், நல்ல பிளேஸ்மெண்ட் 3-2 சிலி. அர்ஜென்டினா அணியின் பிக்லியா பதற்றத்துடனே வந்தார். பதற்றத்துடனேயே அடித்தார். இதனால் பிராவோ தனது இடது புறம் கோலை தடுத்தார்.

சிலி வீரர் சில்வா வந்தார் வென்றார். 4-2 கோல் கணக்கில் சிலி சாம்பியன்.

120 நிமிட நேர கடும் சவாலான ஆட்டத்தில் 0-0:

ஆட்டம் தொடங்கி முதல் 3 நிமிடத்திலேயே லாங் பாஸ் ஒன்று வர அதனை அர்ஜென்டினா, சிலி கோலுக்கு வெளியே அடித்தது, உடனடியாகவே சிலி அணியின் விடாமல் அருமையாக அர்ஜென்டின தடுப்பரணை உடைத்துக் கொண்டு உள்ளே செல்ல அவர்

அருகில் சகாக்கள் யாரும் இல்லை, ரொமீரோ பந்தை சேகரித்தார். 6-வது நிமிடத்தில் மெஸ்ஸியின் முதல் சுவையை உணர்ந்தது சிலி. இஸ்லா மெஸ்சியை தடுக்க முயல மெஸ்ஸி பந்தை டி மரியாவிடம் அடித்தார். இது கார்னர் கொடி அருகே ஃப்ரீ கிக் ஆனது. சிலி இதனை கிளியர் செய்தது.

17-வது நிமிடத்தில் மெஸ்ஸி மின்னல் வேகம் காட்ட சிலி வீரர் டயஸ் ஃபவுல் செய்துதான் காப்பாற்ற நேரிட்டது, இதனால் இவர் புக் செய்யப்பட்டார், 35 யார்டு ஃப்ரீ கிக் கிடைத்தது, மெஸ்சி பிரீ கிக் என்றால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், ஆனால் இம்முறை சிலி கோல் கீப்பர் பிராவோவிடம் நேராக வந்தது. 20-வது நிமிடத்தில் டி மரியா ஓர் அற்புதமான நகர்வில் ஷூட் செய்யும் நிலைமையை உருவாக்கினார், ஆனால் ஷாட்டை சரியாக ஆட முடியவில்லை. பந்து மேலே சென்றது. அதேபோல் 23-வது நிமிடத்தில் ஹிகுவெய்னுக்குக் கிடைத்த வாய்ப்பையும் பிரேவ் பிராவோவினால் முறியடிக்கப்பட்டது.

28-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு முறை மெஸ்ஸிக்கென்றே நியமிக்கப்பட்ட சிலி வீரர் டயஸ் ஃபவுல் செய்ய சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். 42வது நிமிடத்தில் சிலி வீரர் விடால் பந்தை எடுத்துச் செல்ல, அர்ஜென்டின வீரர் ரோஜோ அவருக்கு கடும் சவால் அளிக்கும் முயற்சியில் தவறகா விடாலின் பின்னாலிலிருந்து தடுக்க முயன்றார். இது மஞ்சள் அட்டைக்குரிய தவறுதான் ஆனால் நடுவர் மிகக் கடுமையாக நடந்து கொண்டு ரெட் கார்டு காண்பித்தார், இரு அணிகளுமே 10 வீரர்களுக்குக் குறுக்கப்பட்டது.

2-வது பாதியில் இரு அணிகளும் ஆக்ரோஷ வார்த்தை பரிமாறல் முழங்கை இடிப்புகளுடன் தொடங்கின. இரு அணிகளுமே ஒரு சரியான லயத்திற்கு வர முடியவில்லை பாஸ்கள் தடம் மாறியபடி இருந்தன. மைதானத்தின் மத்திய வட்டத்திலேயே ஆடிக் கொண்டிருந்தனர், தாக்குதல் வீரர்கள் ஏனோ ஊடுருவ முயலவில்லை.

இப்படியே சென்று கொண்டிருந்த போது சிலியின் மும்மூர்த்திகள் சான்சேஸ், வார்கஸ், சார்ல்ஸ் அராங்குய் ஆகியோர் கூட்டிணைந்து தொல்லை கொடுக்க தொடங்கினர். வலது புறம் பந்து மாறி மாறி வந்து மரியா வார்கஸிடம் வர இறுக்கமான கோணத்திலிருந்து வார்கசின் ஷாட் அர்ஜென்டின கோல் கீப்பர் ரொமிரோவிடம் நேராக வந்தது, இது ஒரு ஹாஃப் சான்ஸ்.

மெஸ்ஸி, சிலி அணியின் 2,3 தடுப்பாட்ட வீரர்களுக்குப் போக்குகாட்டி பந்தை அகிரோவுக்கு அடிக்க அருமையான வாய்ப்பை அவர் வைடாக அடித்து தவற விட்டார். இதில் மெஸ்ஸி வெறுப்படைந்தார். மெஸ்ஸி மீண்டும் கடுமையாகவே முயன்றார். கடைசியில் சுமார் 50 அடி தூரம் வரை ஓடி பந்தை தன் வசம் வைத்திருந்தார்.

ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்றது. கூடுதல் நேர 9-வது நிமிடத்தில் வார்கஸ் கிட்டத்தட்ட கோல் அடித்திருப்பார். டைவ் அடித்து தலையால் முட்டிய பந்தை ரொமிரோ அருமையாகப் பிடித்தார்.

இதற்கு அடுத்த நிமிடத்தில்தான் அர்ஜென்டினா அதிர்ஷ்டம் சோதிக்கப்பட்டது, பந்தை அருமையாக எடுத்து வந்து அர்ஜென்டின வீரர்கள் சிலி எல்லைக்குள் புகுந்து பந்து அகிரோவுக்கு வர அகிரோவின் அபாரமான கோல் முயற்சியில் பந்து வலைக்குள் செல்லும் கடைசி விநாடியில் தன் சக்திக்கும் மீறி எம்பிய சிலி கோல் கீப்பர் பிராவோ பந்தை பாருக்கு மேலே தட்டி விட்டார், இந்த தொடரின் ஆகச் சிறந்த கோல் தடுப்பு இது என்றே கூறிவிடலாம். உண்மையில் இந்த கோல் வாய்ப்பு கடைசி விநாடியில் பிராவோவினால் தட்டி விடப்படும்போதே இது சிலிக்கான இரவு என்று தெரிந்தது. இரு அணிகளும் கடைசியில் தங்களால் இயன்ற அளவுக்கு சவாலாக ஆடினர். ஆனால் கோல் வரவில்லை. ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டுக்குச் சென்றது.

இதில் சிலி 4-2 என்ற கோல் கணக்கில் வென்று கோப்பா அமெரிக்காவை 2-வது முறையாக தொடர்ச்சியாக வென்று சாதனை படைத்தது.

http://tamil.thehindu.com/sports/மெஸ்ஸி-தவறவிட்ட-பெனால்டி-கோல்-அர்ஜென்டினாவை-வீழ்த்தி-சிலி-சாம்பியன்/article8779210.ece?homepage=true

Link to comment
Share on other sites

கோபா அமெரிக்கா தோல்வி மெஸ்சி ஓய்வு அறிவிப்பு : கால்பந்து உலகம் அதிர்ச்சி

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் டைபிரேக்கரில் பெனால்டியை மெஸ்சி வெளியே அடிக்க அர்ஜென்டினா மீண்டும் தோல்வியடைந்தது. 23 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய கோப்பையை வெல்லும் வாய்ப்பை அர்ஜென்டினா இழந்தது.கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் தோல்வி கண்டதையடுத்து மெஸ்சி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
 

cops.jpg

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் இறுதி ஆட்டம் இன்று காலை 5.30 மணிக்கு நடந்தது. நியூஜெர்சியில் நடந்த இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சிலியுடன் அர்ஜென்டினா மோதியது.  ஆட்டத்தை காண 82 ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருந்தனர். தொடக்கம் என்னவோ அர்ஜென்டினா அணிக்கு சாதகமாகத்தான்  இருந்தது. முதல் பாதியில் ஹீகுவானுக்கு கிடைத்த ஓபன் நெட் வாய்ப்பையே அவர் வீணடித்தார். தொடர்ந்து  28வது நிமிடத்தில் இரு முறை மஞ்சள் அட்டை பெற்ற சிலி வீரர் டயாஸ் களத்தை விட்டு வெளியேற்றப்பட, அந்த அணி 10 வீரர்களுடன் ஆட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

ஆனால் 42வது நிமிடத்தில் அர்ஜென்டினாவும் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. அர்ஜென்டினாவின் தடுப்பாட்ட வீரர் ரோஜா சிலி வீரர் விடாலின் கணுக்காலை குறி வைத்து  தாக்க  நேரடி சிவப்பு அட்டைக் காட்டப்பட்டது.  இரு அணிகளும் 10 வீரர்களுடன் விளையாடின. ஆனாலும் வாய்ப்புகளை கோலாக மாற்றுவதில் இரு அணி வீரர்களுமே தவறு செய்தனர்.

இதனால் 90 நிமிட ஆட்டமும் சமனில் முடிய,   கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.கூடுதல் நேரத்தின் இறுதிக்கட்டத்தில் மெஸ்சியின் ஃப்ரீகிக்கை அகுரா தலையால் முட்ட,  பந்து அட்டகாசமாக கோலை நோக்கி சென்றது.  ஆனால் சிலி கோல்கீப்பர் கிளாடியோ பிரேவோ அற்புதமான முறையில் தடுத்து விட்டார். 120 நிமிட நேர ஆட்டமும்  கோல் விழாமல் சமனில்முடிந்ததையடுத்து வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது.

man.jpg

டைபிரேக்கரில் முதல் பெனால்டியை சிலி வீரர் விடால் அடித்தார் அதனை  அர்ஜென்டினா கோல்கீப்பர் ரொமேரோ  தடுத்து விட்டார். அடுத்து பெனால்டியை அடிக்க வந்த மெஸ்சி அதனை வெளியே அடிக்க மைதானமே அதிர்ந்து போனது. இறுதியில் அர்ஜென்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் தோற்று கோப்பையை கோட்டை விட்டது. சிலி அணி நடப்புச் சாம்பியன் அந்தஸ்த்தை தக்க வைத்துக் கொண்டது.

கடந்த உலகக் கோப்பை இறுதி ஆட்டத்திலும் ஜெர்மனியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா தோற்று கோப்பையை பறி கொடுத்திருந்தது.கடந்த 1993ம் ஆண்டு அர்ஜென்டினா அணி கோபா அமெரிக்காவில் சாம்பியன் ஆனது. அதற்கு பிறகு எந்த ஒரு முக்கியத் தொடரிலும் கோப்பையை வென்றதில்லை. 

messiiiiii.jpg

இதற்கிடையே இறுதிப் போட்டி முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய லயனல் மெஸ்சி சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தற்போது 27 வயதே நிரம்பிய மெஸ்சி அர்ஜென்டினா அணிக்காக 112 சர்வதேச போட்டிகளில் விளையாடி 55 கோல்களை அடித்துள்ளார். அர்ஜென்டினா அணிக்காக சர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்த வீரர் இவர்தான்.மெஸ்சி மட்டுமல்ல அவரது  பார்சிலோனா டீம் மேட் ஜேவியர் மச்சரானாவும் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.
 

ஓய்வு பெறுவது குறித்து மெஸ்சி கூறுகையில், ''தேசிய அணிக்கு விளையாடியது போதும். என்னால் முடிந்த வரை போராடி பார்த்து விட்டேன். ஒரு சாம்பியனாக முடியாதது என்னை மிகுந்த வேதனைக்குள்ளாக்குகிறது ''என்றார்.

ஆனால் அர்ஜென்டினா அணியின் கோல்கீப்பர் ரொமேரோ, மெஸ்சி இல்லாத அர்ஜென்டினா அணியை நினைத்து கூட பார்க்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். சக வீரர்கள் மெஸ்சியை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டு கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் பிரேசில் அணியிடம் அர்ஜென்டினா தோல்வி கண்டது. கடந்த 2014ம் ஆண்டு உலகக் கோப்பையில் ஜெர்மனியிடமும்   இரு கோபா அமெரிக்கத் தொடரில் சிலி அணியிடம்  தொடர்ச்சியாக அர்ஜென்டினா தேற்றுள்ளது.

http://www.vikatan.com/news/sports/65568-chile-defending-champs-sink-messi-and-co-again.art

Link to comment
Share on other sites

கோபா அமெரிக்க கிண்ணத்தை கைப்பற்றியது சிலி: மீண்டும் வாய்ப்பை தவறவிட்டது ஆர்ஜன்டீனா (படங்கள் இணைப்பு)

Published by Pradhap on 2016-06-27 13:42:50

 

கோபா அமெரிக்க கால்பந்தாட்ட போட்டியின் இந்த ஆண்டிற்கான செம்பியன் பட்டத்தை சிலி அணி கைப்பற்றியது.

copa1.jpg

நேற்று (26) நியுயோர்கில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் சிலி மற்றும் ஆர்ஜன்டீனா அணிகள் மோதின.

நடப்பு செம்பியனான சிலி அணிக்கு கடந்த முறை பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்குமா அர்ஜன்டீனா? என்ற ரசிகர்களின் கேள்விக்கு இந்த முறை பெறும் ஏமாற்றம்தான் காத்திருந்தது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில், போட்;டியின் நேரம் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் கோல் போடவில்லை.

இதனால் இரு அணிகளுக்கும் பெனால்டிக் வாய்ப்பு வழங்கப்பட்டது.

பெனால்டிக் வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்ட சிலி அணி 4-2 என்ற கோல்கணக்கில் செம்பியன் பட்டத்தை தன் வசப்படுத்தியது.

ஆர்ஜன்டீனா அணியின் தலைவர் மெஸ்ஸிக்கு கிடைத்த பெனால்டிக் வாய்ப்பை அவர் தவறவிட்டதே அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்ததென விளையாட்டு வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

copa1.jpg

Chile-win-the-Copa-America-Centenario-fiChile-win-the-Copa-America-Centenario-fiChile-win-the-Copa-America-Centenario-fiChile-win-the-Copa-America-Centenario-fiChile-win-the-Copa-America-Centenario-fiChile-win-the-Copa-America-Centenario-fiChile-win-the-Copa-America-Centenario-fiChile-win-the-Copa-America-Centenario-fiCopa-America-Final-Penalty-shootout.jpgCopa-America-Final-Penalty-shootout__1_.

http://www.virakesari.lk/article/8175

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.