Jump to content

Recommended Posts

காந்தீய இயக்கமான சர்வோதய இயக்கத்தின் மீது நெதர்லாந்து நிறுவனம் ஒன்று வழக்கு தாக்கல் செய்துள்ளது.

சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்துக்காக நெதர்லாந்தின் நிறுவனம் ஒன்று வழங்கிய 100,000 யூரோக்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டே சுமத்தப்பட்டுள்ளது.

மொரட்டுவை நீதிமன்றத்தில் இந்த வழக்கை நெதர்லாந்து நிறுவனத்தின் சார்பில் அதன் சட்டபூர்வ இலங்கை உரிமையாளர் லச்மன் பெரேரா என்பவர் தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவில், பயாகல மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களில் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை அமைப்பதற்காக நிதி வழங்கிய போதும் அதனை மாற்றுத் தேவைக்காக சர்வோதய நிறுவனம் பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் வழங்கப்பட்ட நிதியில் 100 வீடுகள் வரை அமைக்கப்பட்டுள்ளதாக சர்வோதய நிறுவன தலைவர் ஏ டி ஆரியரட்ன தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/crime/01/109035

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.