Jump to content

வடமராட்சி கடல்பகுதி மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு


Recommended Posts

article_1466924404-a.jpg

 

வெளி மாவட்டத்தில் இருந்து அத்துமீறி வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர்களால், வடமராட்சி கடல்பகுதி மீனவர்கள் பாதிக்கப்படுகின்றமை தொடர்பாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் தலைமையில் மருதங்கேணி பிரதேச செயலகத்தில் சனிக்கிழமை (25) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

வெளி மாவட்டத்தில் இருந்து அத்துமீறி வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர்களால், வடமராட்சி கடல்பகுதியில் கரைவலை மற்றும் ஏனைய வலைகள் மூலம் தொழிலில் ஈடுபட்டுவந்த தொழிலாளர்களின் வலைகள் மற்றும் கடல் தொழில் உபகரணங்கள் சேதமாக்கப்பட்டு வந்தன.

மிக நீண்ட காலங்களாக நிலவி வந்த இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக வடமராட்சி மீனவர் சங்க சமாசம் மற்றும் சம்மேளன பிரதிநிதிகளையும் வெளி மாவட்ட மீனவப்பிரதிநிதிகளையும் இணைத்து இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேற்படி கலந்துரையாடலில் யாழ். மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தெளிவாக எடுத்து விளக்கினர். இந்தப் பாதிப்புக்களை வெளி மாவட்ட மீனவர்களும் ஏற்றுக்கொண்டனர்.

இதன்போது வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தந்து கடலட்டை தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்கள் மீன்பிடி அமைச்சினால் வழங்கப்பட்டவாறு ஐந்து கடல் மயில் தொலைவுக்கு அப்பாலும் அதே வேளை இரவு வேளைகளில் இந்த தொழிலினை மேற்கொள்ள முடியாது என்ற இணக்கப்பாட்டுடன் இப்பிரச்சினைக்கு வடமராட்சி மீனவர்களின் பிரச்சினைக்கு பாதிப்பு இல்லாத வகையில் சுமூகமான ஒரு  தீர்வு எட்டப்பட்டது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், எம்.ஏ.சுமந்திரன், வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

http://www.tamilmirror.lk/175576/வடமர-ட-ச-கடல-பக-த-ம-னவர-கள-ன-ப-ரச-ச-ன-க-க-த-ர-வ-#sthash.fahNA0jr.dpuf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.