Jump to content

பாதை மாறிய பயணத்தால் பரிதவிக்கும் தமிழர்கள்!


Recommended Posts

பாதை மாறிய பயணத்தால் பரிதவிக்கும் தமிழர்கள்!

உலக நாடுகள் தம்மை வளப்படுத்துவதற்கான முயற்சிகளில் அதிக அக்கறை காட்டுகின்றன. சில நாடுகள் மிகக்குறுகிய காலத்தினுள் முன்னேற்றமடைந்துள்ளன. வறுமை, யுத்தம், ஊழல் என்பன சில நாடுகளை பின்னோக்கித் தள்ளுகின்றன. விஞ்ஞானம் ,தொழில்; நுட்பம் என்பன வியக்கத்தக்க வகையில் முன்னேற்றமடைந்துள்ளன. இவற்றுக்குச் சரிசமமாக அகதிகளின் எண்ணிக்கையும் உலகில் அதிகரித்துள்ளன. 2015 ஆம் ஆண்டு மூன்று மில்லியன்மக்கள் அகதிகளானர்கள் என ஐநா அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2015 ஆம் ஆண்டு அகதிகளின் தொகை 5.8 சதவிதமாக அதிகரித்துள்ளது.

இலங்கையில் நடைபெற்ற உண்டட்டுக் கலவரத்தால் அகதிகளாக இந்தியவுக்குச் சென்றவர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைவதற்காகச் சென்று இந்தோனேஷியாவில் பரிதவிக்கின்றனர். இழுவைப்படகுகள் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிப்பவர்களை திருப்பி அனுப்புவதில் அந்த நாடு உறுதியாக இருக்கிறது. தங்கள் நாட்டுக்கு வரவேண்டாம் என பத்திரிக்கை இலத்திரனியல் ஆகிய ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்கிறது. அப்படி இருந்தும் அகதிகள் சிலர் படகுகள் மூலம் அவுஸ்திரேலியா நோக்கிச்செல்கிறனர். அவர்களைத் தமது நாட்டுக்குள் புகவிடாது கிறிஸ்மஸ் தீவில் அடைத்து வைத்திருக்கிறது அவுஸ்திரேலியா. அங்கிருந்து வரும் தகவல்கள் அங்கு நடைபெறும் கொடுமைகளை விபரிக்கின்றன.

இந்தநிலையில் கடந்த மாதம் இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் படகில் அவுஸ்திரேலிய நோக்கி பயணமானார்கள். நடுகடலில் அவகளது படகு பழுதடைந்தமையினால் இந்தோனேஷியாவில் உள்ள ஆச்சே கடற்கரையில் அவர்களது படகு தரை தட்டியது. இந்தோனேஷியா அரசு அவர்களை தரை இறங்க அனுமதிக்கவில்லை. ஒரு கர்ப்பிணி ஒன்பது சிறுவர்கள் கைக்குழந்தைகள் உட்பட 44 பேர் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது. அவர்களைத் தரை இறங்க அனுமதிக்கும்படி மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். அகதிகள் படகை சர்வதேச கடல் பரப்பில் கொண்டுபோய் விடுவதில் இந்தோனேஷியா குறியாக இருந்தது. படகில் இருந்து குதித்து கரையேற முற்பட்ட பெண்களை மிரட்டுவதற்காக பாதுகாப்பு அதிகாரிகள் வானை நோக்கி சுட்டனர் அகதிகளை நடுக்கடலில் தள்ளி விடவேண்டும் என்பதே இந்தோனேஷியாவின் விருப்பம். முயற்சி வெற்றியளிக்காமையினால் அகதிகள் தரை இறங்குவதற்கு அனுமதிக்க வேண்டிய நிலைக்கு இந்தோனேஷியா தள்ளப்பட்டது.

இலங்கயில் உள் நாட்டு யுத்தம் ஆரம்பமானபோது தமிழ் மக்கள் அகதிகளாக தமிழகத்துக்குச் சென்றார்கள். வந்தாரை வரவேற்கும் தமிழ்நாடு இலங்கை அகதிகளை இருகரம் கொண்டு வரவேற்றது. இலங்கையின் மீது தனது பிடியை இறுக்குவதற்காக இந்திய மத்திய அரசு இலங்கைத் தமிழர்களை பகடைக்காயாகப் பயன்படுத்தியது. தமிழக அரசியல் கட்சிகள் இலங்கைத் தமிழ் அகதிகள் மீது அதிக அக்கறை காட்டின. இலங்கை கடற்படைக்குப் போக்குக்காட்டி இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழ் மக்கள் அகதியாக இந்தியாவுக்குச் சென்றனர். ஆரம்பத்தில் இலங்கைத் தமிழ் மக்கள் மீது அன்பும் ஆதரவும் கட்டிய இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் காலப்போக்கில் வேண்டா வெறுப்பாக இலங்கைத் தமிழ் அகதிகளை கவனிக்கத் தொடங்கின.

தமிழகத்தில் 115 முகாம்களில் 73241 பேர் உள்ளனர். உறவினர் நண்பர்கள் வீடுகளில் 31802 பேர் வசிக்கின்றனர். அகதிகள் இந்தியாவில் அரச உத்தியோகம் பெறமுடியாது. அவர்கள் கூலி வேலைதான் செய்ய வேண்டும். மருத்துவத்துறையில் பயில்வதற்கு தகுதி பெற்ற இலங்கைத் தமிழ் மாணவிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பலத்த போராட்டத்தின் பின்னர் மருத்துவக் கல்லூரியில் படிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்தியாவில் உள்ள தொண்டு நிறுவனங்களும் வசதி உள்ளவர்களும் இலங்கைத் தமிழ் அகதி மாணவர்களுக்கு உதவி செய்கிறார்கள். அரசாங்கத்தின் உதவியின் மூலம் அவர்கள் சீவிக்கமுடியாது.

பங்களாதேஷ், மியன்மார், புட்டான் போன்ற நாடுகளில் இருந்து அகதியாக இந்தியாவுக்குச் சென்றவர்களுக்கு கொடுக்கப்படும் வசதிகளும் வாய்ப்புகளும் இலங்கை அகதிகளுக்குக் கொடுக்கப்படுவதில்லை. ராஜீவ் காந்தியின் கொலை இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை அந்நியப்படுத்தியது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தால் அப்பாவிகளான இந்திய மீனவர்களின் உயிர் பறிக்கப்பட்டது. இலங்கைக் கடற்படையால் அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள், கைது செய்யப்பட்டார்கள், சிறையில் அடைக்கப்பட்டார்கள். இதனை இந்திய மத்திய அரசு பெரிதாக எடுக்கவில்லை. இது சமபந்தமாக இலங்கை அரசுக்கு சிறு எச்சரிக்கை கூட விடுக்கவில்லை. தனது நாட்டுப் பிரஜையின் மீது அக்கறை காட்டாத இந்திய மத்திய அரசு இலங்கைத் தமிழ் அகதிகளைத் திரும்பிப்பார்க்காததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

இலங்கையில் புலிகள் அழிக்கப்பட்டார்கள் , யுத்தம் முடிந்தது. அமைதி நிலவுகிறது என்றார்கள். நல்லாட்சி அரசாங்கம் பதவி ஏற்றதும் இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு குறையும் இல்லை என்ற மாயை தோற்றுவிக்கப்பட்டது. முன்னைய அரசாங்கத்தில் வெளிப்படையாகச் செய்யப்பட்ட சிங்களக் குடியேற்றம், விகாரைகள் அமைத்தல், இராணுவப் பிரசன்னம் ஆகிய அனைத்தும் இன்றைய அரசாங்கத்தில் இரகசியமாகச் செய்யப்படுகிறது. முன்னைய ஆட்சியின் போது தமிழ் மக்கள் அதிகளவில் அகதிகளாக வெளியேறினர். அகதிகளை ஏற்றுக்கொள்வதில்லை என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இலட்சக் கணக்கில் பணம் செலவழித்து இலங்கையில் விளம்பரம் செய்கிறது.அகதிகளாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற பல படகுகள் பிடிபட்டதனால் அங்கு செல்வதற்கு யாரும் முயற்சிப்பதில்லை.

யுத்த பூமியான இலங்கையில் இருந்து வெளியேறினால் நிம்மதியாக வழலாம் என்ற நம்பிக்கையில் பலர் அகதியாக இந்தியவுக்குச் சென்றார்கள். அவுஸ்திரேலியாவுக்குச் சென்றால் வசதியாக வாழலாம் என்று இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகள் நம்பினார்கள். பல இன்னல்கள் நெருக்கடிகளின் மத்தியில் வாழும் அவர்கள். இந்தியாவில் இருந்து வெளியேறுவதே உசிதம் என நினைத்தார்கள். அகதிகளை ஏற்பதில்லை என்ற அவுஸ்திரலியாவின் கொள்கையை அவர்கள் உதாசீனம் செய்து அவுஸ்திரேலியாவுக்குப் பயணமானார்கள்.

ஏழை அகதிகள் என்ற நிலையில் இருந்து வசதியான அகதிகள் என்னும் எதிர்பார்ப்புடன் அவர்களின் அகதிப் பயணம் ஆரம்பமானது. இந்தியப் பணத்தில் ஒன்றரை இலட்சம் ரூபா கொடுத்து புறப்பட்டவர்களின் படகு இடைநடுவில் பழுதடைந்தமையால் இந்தோனேஷியாவில் கரை ஒதுங்கினார்கள். அகதிகளின் படகை சர்வதேச அடல் எல்லையில் தள்ளிவிட இந்தோனேஷியா அரசு முயற்சித்தது. அவர்களின் முயற்சி கைகூடவில்லை. அகதிகளுக்கான முகவரமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் அகதிகளுக்குச் சார்பாகக் குரல் கொடுத்தன. இறுதியில் அவர்களை கரை இறங்க அனுமதிக்க வேண்டிய நிலைக்கு இந்தோனேஷியா தள்ளப்பட்டது.

இந்தோனேஷியாவில் 13 ஆயிரம் அகதிகள் இருகிறார்கள். இலங்கை அகதிகளையும் வைத்து பராமரிக்க முடியாது என்று இந்தோனேஷியா கருதுகிறது. படகை திருத்தி அவர்களை கடலில் தள்ளி விடுவதற்கு இந்தோனேஷியா முயர்சிக்கிறது. அகதிகளாக யாரும் வந்தால் அவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பப் போவதாக அவுஸ்திரேலிய அறிவித்துள்ளது. இந்தோனேஷியாவில் இருக்கும் இலங்கை அகதிகளை ஏற்கத் தயாராக இருப்பதாக இலங்கை அறிவித்துள்ளது.இந்தியாவுக்கும் இலங்கைக்கும் போகமாட்டோம்.அவுஸ்திரேலியாவுக்குத்தான் போகப்போகிறோம் என அகதிகள் தெரிவித்துள்ளனர் அகதியாகப் போனவ்ர்கள் திரி சங்கு சொர்க்கத்தில் இருக்கிறார்கள். போனவ்ர்கள்.

வன்முறை பொருளாதார வீழ்ச்சி,உள்நாட்டு யுத்தம், உயிர் அச்சுறுத்தல் தாய் நாட்டில் வாழமுடியாத பலர் அகதிகளாக வெளிநாடுகளை வாழ்கின்றனர். பலஸ்தினத்தில் இருந்து 5 மில்லியன், 4.9 சிரியாவிலிருந்து 4.9 மில்லியன் ஆப்கானிஸ்தானில் இருந்து 2,.7 மில்லியன் மக்கள் அகதிகளாக வெளிநாடுகளில் வாழ்கின்றனர்.

வர்மா.

http://thuliyam.com/?p=31763

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.