Jump to content

'கங்குலி என்னிடம் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை!'- குமுறும் ரவி சாஸ்திரி


Recommended Posts

'கங்குலி என்னிடம் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை!'- குமுறும் ரவி சாஸ்திரி

ந்திய அணியின் பயிற்சியாளர் பதவி கிடைக்காததால், தான் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளாகியிருப்பதாக ரவி சாஸ்திரி வேதனை தெரிவித்துள்ளார்.  அத்துடன் கங்குலி, நேர்காணலின்போது ஸ்கைப்பில் வந்து கூட தன்னிடம் கேள்வி கேட்வில்லையென்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

gang.jpg

இந்திய அணியின் பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் கங்குலி, சச்சின், வி.வி.எஸ். லக்ஷ்மண் ஆகியோருடன், பிசிசிஐ ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் ஜக்தாலேவும் இடம் பெற்றிருதார்

பயிற்சியாளருக்கான நேர்காணல், கொல்கத்தா தாஜ் பெங்கால் ஹோட்டலில் நடந்துள்ளது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடந்த பயிற்சியாளருக்கான நேர்காணலில், ரவி சாஸ்திரி பங்கேற்றார். ஆனால் நேர்காணலின் போது கங்குலி அந்த இடத்திலேயே இல்லையாம். சஞ்சய் ஜக்தாலேவும் லக்ஷ்மணும்தான் அங்கிருந்துள்ளனர். லண்டனில் இருந்து சச்சின், ஸ்கைப் வழியாக நேர்காணலில் பங்கேற்றுள்ளார். ஆனால் ரவிசாஸ்திரிக்கு நேர்காணல் நடந்தபோது, பெங்கால் கிரிக்கெட் சங்கத்தில் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற கங்குலி, நேர்காணலில் எந்த வகையிலும் பங்கேற்கவில்லை.

இது குறித்து ரவிசாஸ்திரி அளித்துள்ள பேட்டியில், '' இந்திய அணி பயிற்சியாளராக வாய்ப்பு கிடைக்காதது  உண்மையிலேயே என்னை மிகுந்த வருத்தத்திற்குள்ளாக்கியுள்ளது. கடந்த 18 மாத காலமாக இந்திய அணிக்காக கடுமையாக உழைத்துள்ளேன். டெஸ்ட் போட்டியில்  நம்பர் ஒன், டி20யிலும் நம்பர் ஒன். ஒருநாள் போட்டியில் 2வது இடத்தில் அணி இருக்கிறது. இளம் அணியிடம் இத்தகைய முன்னேற்றத்தை எதிர்பார்க்கவில்லை. நேர்மையாகவும் கடுமையாகவும் அணிக்காக நான் உழைத்துள்ளேன். சப்போர்ட்டிங் ஸ்டாப்புகளும் மிகுந்த ஒத்துழைப்பு அளித்தனர். இத்தனைக்கும் கிரிக்கெட் வாரியத்தை உச்ச நீதிமன்றம் பலமாக  தலையில் கொட்டிக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. அந்த சமயத்தில் கூட கிரிக்கெட் விளையாட்டு, மக்களிடம் வெறுப்பை சம்பாதிக்காமல் இருக்கும் வகையில், அணி தொடர்ந்து வெற்றியை பெற்றுக் கொண்டிருந்தது. 

நேர்காணலின் போது,  சில கேள்விகளை சச்சினும், லக்ஷ்மணும் முன் வைத்தனர். ஜக்தாலேவும் என்னிடம் சில கேள்விகளைக் கேட்டார். எதிர்காலத்தில் இந்திய அணியை எப்படி வழிநடத்துவீர்கள்,  வேகப்பந்துவீச்சாளர்களை உருவாக்குவதில் உங்களது ஐடியா என்ன  என்பதெல்லாம் அவர்களது கேள்விகளாக இருந்தன. ஆனால் கங்குலி நேர்காணலில் பங்கற்கவில்லை, ஸ்கைப்பிலும் வரவில்லை. கும்ப்ளேவை பொறுத்த வரையில், எல்லாவிதமான திறமையும் நிறைந்த அனைத்து ஃபார்மெட்டுகளிலும் அசத்தும் அணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அந்த இடத்திற்கு கும்ப்ளே கொண்டு வரப்பட்டிருக்கிறார். நல்லதொரு திறமை வாய்ந்த அணியை வழி நடத்தும் வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை. அதனை நான் இழந்து விட்டேன். எனது சந்தோஷமே அந்த அணிதான். எனது இதயம் எப்போதும் அவர்களுடன் இருக்கும்.'' என்று கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/sports/65542-ganguly-wasnt-there-when-interviewed-ravi-shastri.art

Link to comment
Share on other sites

முட்டாள் உலகில் வாழ்கிறாரா ரவி சாஸ்திரி? - சவுரவ் கங்குலி காட்டமான பதிலடி

 
கோப்புப் படம்: வி.கணேசன்.
கோப்புப் படம்: வி.கணேசன்.

தன்னைப் பயிற்சியாளராக தேர்வு செய்யாதது குறித்து கடும் ஏமாற்றமடைந்துள்ள ரவி சாஸ்திரி, ஆலோசனைக் குழுவில் உள்ள சவுரவ் கங்குலி தன் மீது மரியாதை குறைவாக இருந்ததாக குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்துள்ள கங்குலி, தன் மீது ரவி சாஸ்திரி வைப்பது தனிநபர் தாக்குதல் என்றார்.

அவர் இது பற்றி கூறியதாவது:

நான் மிகவும் வருந்துகிறேன், ஏமாற்றமடைகிறேன். அவர் (ரவி சாஸ்திரி) இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியுடன் பேசியிருக்கலாம். அவரது கருத்துகள் எல்லாம் தனிநபர் மீதான விமர்சனம்.

தலைமைப் பயிற்சியாளராக அவர் தேர்வு செய்யப்படாததற்கு நான் பொறுப்பு என்று அவர் நினைத்தாரென்றால் அவர் முட்டாள்களின் உலகில் வாழ்கிறார் என்றே நான் கூற வேண்டியுள்ளது.

இப்படிப்பட்ட குழுவில் அவரே 10 ஆண்டுகளாக இருந்திருக்கிறார் எனும்போது அவருக்கு தெரிந்திருக்கும் இதனால்தான் அவரது கருத்து ஏமாற்றமளிக்கிறது.

சாஸ்திரிக்கு நான் அறிவுரை ஒன்றை வழங்குகிறேன், இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு தேர்வு நடைபெற்று கொண்டிருக்கும் போது, மிகவும் உயர்பதவிக்கான நேர்காணல் நடைபெறும் போது, அவர் நேரில் தனது நேர்காணலை அட்டெண்ட் செய்திருக்க வேண்டும். பாங்காக்கில் விடுமுறையைக் கழித்துக் கொண்டு கேமராவில் தனது நேர்காணலை செய்திருக்கக் கூடாது. குறிப்பாக இந்தியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் நேர்காணலில் இருந்தார் எனும்போது.

நான் அனில் கும்ப்ளேவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், உலகின் சிறந்த வீரர்களில் அவர் ஒருவர், கிரேட் கிரிக்கெட்டர்.

இவ்வாறு கூறினார் சவுரவ் கங்குலி.

http://tamil.thehindu.com/sports/முட்டாள்-உலகில்-வாழ்கிறாரா-ரவி-சாஸ்திரி-சவுரவ்-கங்குலி-காட்டமான-பதிலடி/article8788648.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.