Jump to content

'இந்துக்களின் நல்லெண்ணங்களை மதிக்கின்றேன்'


Recommended Posts


'இந்துக்களின் நல்லெண்ணங்களை மதிக்கின்றேன்'
 
 

article_1466834774-bbbbbbbbbbbbb.jpg

“நான் இந்துக்களை மதிக்கின்றேன். இதுவரை இந்துக்கள் எந்த ஒரு மாற்று மதத்தவரின் இடத்தையும் கைப்பற்றி இடையூறு செய்ததாக எனக்கு முறைப்பாடுகள் வந்ததில்லை. உங்கள் எல்லை கடந்த பொறுமையையும் நல்லெண்ணங்களையும் நான் மதிக்கின்றேன்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய வளாகத்தில் மாற்று மதத்தினர் பலாத்காரமாக சிலை வைத்துள்ள விவகாரம் தொடர்பாகவும் மட்டகளப்பு காசி லிங்கேஸ்வரர் ஆலய வரலாற்று தொல்பொருள் சின்னங்கள் அமைந்துள்ள பிரதேசம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகின்ற விடயங்கள் தொடர்பாகவும் இந்துக்கள் எதிர்நோக்கும் சமகால பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதியை தெளிவூட்டும் அவசர சந்திப்பொன்று இந்து சம்மேளனத்தின் தலைவர் அருண்காந்த் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதிக்கு அருண்காந்தால் புனித பகவத் கீதை நூல் ஒன்று நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

இங்கு இந்து சம்மேளனத்தின் தலைவர் அருண்காந்த் கூறுகையில்,

“நாம் என்றுமே இந்து மதம் விதந்துரைத்துள்ள அஹிம்சை கொள்கைகளையே கடைபிடித்து வருகின்றோம். இலங்கையில் மட்டுமல்ல உலகில் எங்குமே மாற்று மதத்தவரின் புனித இடங்களில் அநாவசியமாக எமது மதச் சின்னங்களை நிறுவிய வரலாறு கிடையாது. அப்படி இருக்கையில் எமது அஹிம்சை கொள்கையை பலவீனமாக கருதி பல்வேறு மதப்பிரிவினர் எமது ஆலயங்களுக்குச் சொந்தமான இடங்களைக் கைப்பற்றுவது மட்டுமல்லாது அவ்விடங்களில் அநாவசியமாக சிலைகளையும் நிறுவி வருகின்றனர்.

ஏன் அஹிம்சையை மதிக்கின்ற, பின்பற்றுகின்ற எங்கள் மக்களுக்கு மட்டும் இவ்வாறு இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றது? நாம் இந்த நாட்டில் சமய நல்லிணக்கத்தை வேண்டுகின்றவர்கள். அதனால் தான் பௌத்த இந்து மாநாடுகளை நடாத்தி வருகின்றோம். இதன் மூலம்  பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து வருகின்றது.

எனினும், எங்களால் இவ்விரண்டு பிரச்சினைகளையும் தீர்க்க முடியாததற்கு காரணம் இவ்விரண்டு பிரச்சினைகளிலுமே அரசியல்வாதிகள் பின்புலமாக இருந்து அவரவர் மக்களை பிழையாக வழிநடாத்தி வருகின்றனர்.

எனவே, இந்துக்களின் ஆத்மாவாக விளங்கும் திருக்கேதீஸ்வர வளாகத்தினை காப்பாற்றித் தாருங்கள்” என்றார்.

இதனை  செவிமடுத்த ஜனாதிபதி  தமது பதிலுரையில் கூறியதாவது,“

“நான் இந்துக்களை மதிக்கின்றேன். இதுவரை இந்துக்கள் எந்த ஒரு மாற்று மதத்தவரின் இடத்தையும் கைப்பற்றி இடையூறு செய்ததாக எனக்கு முறைப்பாடுகள் வந்ததில்லை. உங்கள் எல்லை கடந்த பொறுமையையும் நல்லெண்ணங்களையும் நான் மதிக்கின்றேன்.

இந்து பௌத்த சமயங்களில் சொல்லப்படுகின்ற மற்றவர்களுக்கு ஊறு விளைவிக்காத மனிதத்துவத்தை, பசுவதையில் ஈடுபடாமை போன்ற விடயங்களில் நீங்கள் உறுதியாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது. எனினும், மற்றைய மதத்தினர் அவரவர் மதங்களில் சொல்லப்பட்டிருப்பதை அவர்கள் பின்பற்றுவதை நாம் எதிர்க்கத் தேவையில்லை.

நான் உங்களுடைய புனித பிரதேசமான திருக்கேதீஸ்வரம் ஆலய வளாகத்தில் இடம்பெற்றுள்ள பிரச்சினை தொடர்பாகவும், மட்டகளப்பு காசிலிங்கேஸ்வரர் ஆலய தொல்பொருள் பிரதேசம் தொடர்பாகவும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி கூறுவதற்காகவும் நீங்கள் குறிப்பிட்ட மூன்று அமைச்சர்களையும் உடனடியாக அழைத்துப் பேசுவேன்.

நீங்கள் என் மீதும் எனது அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைக்கலாம். நீங்கள் எனக்கு வழங்கிய பகவத்கீதையை நான் ஒரு உயர்ந்த பொக்கிஷமாகவும் தினம் வாசிக்கும்படியும் பத்திரப்படுத்துவேன்” என்றார்.

இந்தச் சந்திப்பில் இந்து சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.

article_1466834784-cccccccccccccccc.jpg

- See more at: http://www.tamilmirror.lk/175517/-இந-த-க-கள-ன-நல-ல-ண-ணங-கள-மத-க-க-ன-ற-ன-#sthash.sxPLUMvG.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, நவீனன் said:

உலகில் எங்குமே மாற்று மதத்தவரின் புனித இடங்களில் அநாவசியமாக எமது மதச் சின்னங்களை நிறுவிய வரலாறு கிடையாது. அப்படி இருக்கையில்

அப்ப அயோத்தியில் ராமர் கோவில் அமைத்தமை

Link to comment
Share on other sites

5 minutes ago, putthan said:

அப்ப அயோத்தியில் ராமர் கோவில் அமைத்தமை

அங்கு முன்னர் இருந்த ராமர் கோவிலை மீண்டும் ஸ்தாபித்துள்ளார்கள். அவ்வளவு தான். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது. இன்னும் முழுமையாக பழைய நிலைக்கு வரவில்லை.

இப்படி சொல்வது அங்குள்ளவர்கள்.

1 hour ago, நவீனன் said:

இந்துக்கள் எந்த ஒரு மாற்று மதத்தவரின் இடத்தையும் கைப்பற்றி இடையூறு செய்ததாக எனக்கு முறைப்பாடுகள் வந்ததில்லை.

இது உண்மையே!
வலிந்து தாக்குதல் நடத்தும் குணம் இந்துக்களிடம் இல்லை. இதை மற்றவர்கள், சிங்கள-பௌத்த இனமதவெறியர்கள் உட்பட, துஸ்பிரயோகம் செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் அரசியல் என்று சொல்வது ........
நேர போய் ஆப்பை இறுக்கினால் ஜனாதிபதிக்கும் வேறு வழியில்லை 
இப்படித்தான் பேசி ஆகணும்.

சமய தலீவர் அள்வுக்கு கூட அரசியல் தலீவர்கள் செய்யவில்லை.
எஜமானுக்கு காக்கா பிடிப்பதில் காலம் கழிகிறது. 

1 hour ago, போல் said:

அங்கு முன்னர் இருந்த ராமர் கோவிலை மீண்டும் ஸ்தாபித்துள்ளார்கள். அவ்வளவு தான். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது. இன்னும் முழுமையாக பழைய நிலைக்கு வரவில்லை.

இப்படி சொல்வது அங்குள்ளவர்கள்.

இது உண்மையே!
வலிந்து தாக்குதல் நடத்தும் குணம் இந்துக்களிடம் இல்லை. இதை மற்றவர்கள், சிங்கள-பௌத்த இனமதவெறியர்கள் உட்பட, துஸ்பிரயோகம் செய்கிறார்கள்.

ராமர் கோவில் பூமியை பிச்சுக்கொண்டு மேல் எழுந்தா ?
அதுவும் ஆரிய ஆக்கிரமிப்பால்தான் வந்தது.

பல நூற்றாண்டு பழைமைவாய்ந்த பாமர் மஸூதியை இடிப்பது என்பது 
இந்து வெறி வேறு ஒன்றுமில்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை இந்துக்கள் எந்த ஒரு மாற்று மதத்தவரின் இடத்தையும் கைப்பற்றி இடையூறு செய்ததாக எனக்கு முறைப்பாடுகள் வந்ததில்லை. உங்கள் எல்லை கடந்த பொறுமையையும் நல்லெண்ணங்களையும் நான் மதிக்கின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இதுவரை இந்துக்கள் எந்த ஒரு மாற்று மதத்தவரின் இடத்தையும் கைப்பற்றி இடையூறு செய்ததாக எனக்கு முறைப்பாடுகள் வந்ததில்லை. உங்கள் எல்லை கடந்த பொறுமையையும் நல்லெண்ணங்களையும் நான் மதிக்கின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

   

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய வளாகத்தில் மாற்று மதத்தினர் பலாத்காரமாக சிலை வைத்துள்ள விவகாரம் தொடர்பாகவும் மட்டகளப்பு காசி லிங்கேஸ்வரர் ஆலய வரலாற்று தொல்பொருள் சின்னங்கள் அமைந்துள்ள பிரதேசம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகின்ற விடயங்கள் தொடர்பாகவும் இந்துக்கள் எதிர்நோக்கும் சமகால பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதியை தெளிவூட்டும் அவசர சந்திப்பொன்று இந்து சம்மேளனத்தின் தலைவர் அருண்காந்த் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதிக்கு புனித பகவத் கீதை நூல் ஒன்று நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. இங்கு இந்து சம்மேளனத்தின் தலைவர் அருண்காந்த் கூறுகையில், “நாம் என்றுமே இந்து மதம் விதந்துரைத்துள்ள அஹிம்சை கொள்கைகளையே கடைபிடித்து வருகின்றோம். இலங்கையில் மட்டுமல்ல உலகில் எங்குமே மாற்று மதத்தவரின் புனித இடங்களில் அநாவசியமாக எமது மதச் சின்னங்களை நிறுவிய வரலாறு கிடையாது. அப்படி இருக்கையில் எமது அஹிம்சை கொள்கையை பலவீனமாக கருதி பல்வேறு மதப்பிரிவினர் எமது ஆலயங்களுக்குச் சொந்தமான இடங்களைக் கைப்பற்றுவது மட்டுமல்லாது அவ்விடங்களில் அநாவசியமாக சிலைகளையும் நிறுவி வருகின்றனர்.

ஏன் அஹிம்சையை மதிக்கின்ற, பின்பற்றுகின்ற எங்கள் மக்களுக்கு மட்டும் இவ்வாறு இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றது? நாம் இந்த நாட்டில் சமய நல்லிணக்கத்தை வேண்டுகின்றவர்கள். அதனால் தான் பௌத்த இந்து மாநாடுகளை நடாத்தி வருகின்றோம். இதன் மூலம் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து வருகின்றது. எனினும், எங்களால் இவ்விரண்டு பிரச்சினைகளையும் தீர்க்க முடியாததற்கு காரணம் இவ்விரண்டு பிரச்சினைகளிலுமே அரசியல்வாதிகள் பின்புலமாக இருந்து அவரவர் மக்களை பிழையாக வழிநடாத்தி வருகின்றனர். எனவே, இந்துக்களின் ஆத்மாவாக விளங்கும் திருக்கேதீஸ்வர வளாகத்தினை காப்பாற்றித் தாருங்கள்” என்றார்.

இதனை செவிமடுத்த ஜனாதிபதி தமது பதிலுரையில் கூறியதாவது,“ “நான் இந்துக்களை மதிக்கின்றேன். இதுவரை இந்துக்கள் எந்த ஒரு மாற்று மதத்தவரின் இடத்தையும் கைப்பற்றி இடையூறு செய்ததாக எனக்கு முறைப்பாடுகள் வந்ததில்லை. உங்கள் எல்லை கடந்த பொறுமையையும் நல்லெண்ணங்களையும் நான் மதிக்கின்றேன். இந்து பௌத்த சமயங்களில் சொல்லப்படுகின்ற மற்றவர்களுக்கு ஊறு விளைவிக்காத மனிதத்துவத்தை, பசுவதையில் ஈடுபடாமை போன்ற விடயங்களில் நீங்கள் உறுதியாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது. எனினும், மற்றைய மதத்தினர் அவரவர் மதங்களில் சொல்லப்பட்டிருப்பதை அவர்கள் பின்பற்றுவதை நாம் எதிர்க்கத் தேவையில்லை.

நான் உங்களுடைய புனித பிரதேசமான திருக்கேதீஸ்வரம் ஆலய வளாகத்தில் இடம்பெற்றுள்ள பிரச்சினை தொடர்பாகவும், மட்டகளப்பு காசிலிங்கேஸ்வரர் ஆலய தொல்பொருள் பிரதேசம் தொடர்பாகவும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி கூறுவதற்காகவும் நீங்கள் குறிப்பிட்ட மூன்று அமைச்சர்களையும் உடனடியாக அழைத்துப் பேசுவேன். நீங்கள் என் மீதும் எனது அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைக்கலாம். நீங்கள் எனக்கு வழங்கிய பகவத்கீதையை நான் ஒரு உயர்ந்த பொக்கிஷமாகவும் தினம் வாசிக்கும்படியும் பத்திரப்படுத்துவேன்” என்றார். இந்தச் சந்திப்பில் இந்து சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=160236&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

3 hours ago, Maruthankerny said:

இதைத்தான் அரசியல் என்று சொல்வது ........
நேர போய் ஆப்பை இறுக்கினால் ஜனாதிபதிக்கும் வேறு வழியில்லை 
இப்படித்தான் பேசி ஆகணும்.

சமய தலீவர் அள்வுக்கு கூட அரசியல் தலீவர்கள் செய்யவில்லை.
எஜமானுக்கு காக்கா பிடிப்பதில் காலம் கழிகிறது. 

ராமர் கோவில் பூமியை பிச்சுக்கொண்டு மேல் எழுந்தா ?
அதுவும் ஆரிய ஆக்கிரமிப்பால்தான் வந்தது.

பல நூற்றாண்டு பழைமைவாய்ந்த பாமர் மஸூதியை இடிப்பது என்பது 
இந்து வெறி வேறு ஒன்றுமில்லை.  

எந்த வெறியிலிருந்து எந்த வெறி ஆரம்பித்தது என்று அடிமுடி தேடி ஒரு ஆராய்ச்சி செய்து எழுதினால் நல்லா இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத பலத்துடன் அதிகாரத்தில் உள்ளவனின் வெறி வெற்றியடிகிறது ...சரித்திரம் ஆகிறது

Link to comment
Share on other sites

3 hours ago, putthan said:

ஆயுத பலத்துடன் அதிகாரத்தில் உள்ளவனின் வெறி வெற்றியடிகிறது ...சரித்திரம் ஆகிறது

100% உண்மை!

பலமே வாழ்வு! பலவீனமே மரணம்!!! - என்று சொல்வார்கள்.

Link to comment
Share on other sites

அவருடைய சிங்கள-பௌத்த இனமதவெறிக் கும்பலே தமிழர்களின் காணியை கொள்ளையடித்து ஆக்கிரமிப்பு சிலைகளை வைக்கும் போது, திருக்கேதீஸ்வரத்தில் காடையர்களால் போலி வரலாற்றை புனைந்து சில ஆயிரம் வருடங்கள் பழமையான கோவில் காணியை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து, இரவுடன் இரவாக சிலை வைக்கும் சர்வதேச மாபியாக்களை எப்படி அவர் கட்டுப்படுத்துவார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால். இப்ப GOAT ல பிசி🤣.  பிகு நான் விஜை ஆதரவாளனோ பிரச்சாரகரோ இல்லை. ஒரு போதும் ஆக போவதில்லை. ஆனால் நம்ம மருமகன். சினிமாவில் பிழைக்க முடியாமல் போனபின் கட்சி தொடங்காமல் - நினைத்து பார்க்க முடியாத பணம் கொட்டும் வியாபாரத்தை விட்டு விட்டு வருகிறார். திரிசாவோ, நயனோ நாசம் பண்ணி விட்டார் என பொதுவெளிக்கு வரவில்லை🤣. இன்னும் கள்ளன் என நினைக்கும்படி எதுவும் மாட்டவில்லை. ஆகவே இப்போதைக்கு இவருக்கு benefit of the doubt ஐ கொடுக்கலாம்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.