Jump to content

வட,கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்படும்: அரசாங்கம்


Recommended Posts

வட,கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்படும்: அரசாங்கம்
 
 
வட,கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்படும்: அரசாங்கம்
1466312310_download%20%281%29.jpg
வடக்குக் கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அரச படையினரை அகற்றிக்கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் காலங்களில் நிறைவேற்றப்படும் என அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். 
 
வடக்கு கிழக்கிலிருக்கும் இராணுவத்தை வெளியேற்றும் நடவடிக்கைகள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்காவின் அனைத்துக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்தியில் தெரிவித்த  தூதுவர் இந்த விடயத்தில் இலங்கை  அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றும் என்றும் உறுதியளித்துள்ளார். 
 
அடுத்துவரும் இரண்டு வருடங்களுக்குள் இராணுவம் அகற்றிக்கொள்ளப்பட்டு தேவைக்கு ஏற்றளவு படையினர் மாத்திரம் நிலைநிறுத்தப்படுவர் என்றும் பிரசாத் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கையின் அமெரிக்காவிற்கான தூதுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உரையாற்றிய இலங்கையின்  இன மற்றும் மத சுதந்திரத்திற்கான அமெரிக்க காங்கிரஸ் குழுக் கூட்டத்தை டெனி டேவிஸ் மற்றும் பில் ஜொன்சன் ஆகிய காங்கிரஸ் உறுப்பினர்களால் வழிநடத்தப்பட்டது. 
 
sumanthiran5.jpg
இலங்கையின்  மனித உரிமை நிலமைகள் தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் சபைக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காகவே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 
 
இலங்கை இராணுவம் உட்பட அரச படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைப்பதாக  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உறுதியளித்து ஒன்றரை வருடங்கள் கடந்தும் வடக்கு கிழக்கில் அரச படையினரால் கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகளில் 70 வீதமானவை இன்னமும் படையினர் வசமே இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்த மேடையில் குற்றம்சாட்டினார்.
 
இதற்கு பதிலளித்த இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் படையினர் கையகப்படுத்தி வைத்துள்ள தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன் வடக்கை விட அதிகமான காணிகள் கிழக்கில் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 
 
இந்த விடயத்தில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகக் கூறிய அவர் எனினும் அந்தப் பணிகள் மந்தமாகவே இடம்பெறுவதாகவும் ஏற்றுக்கொண்டார். 
 
எனினும் இதனை நிராகரித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  இராணுவம் தொடர்ந்தும் சுற்றுலா விடுதிகள் விவசாயப் பண்ணைகளை நடத்தி  பொருளாதாரத்திற்கு பங்கம் விளைவித்து வருவதாக குற்றம்சாட்டினார்.  
 
ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் யோசனைகளுக்கு அமைய  அரசாங்கம் அரச படைக் கட்டமைப்பில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்த அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும தெரிவித்தார். 
 
அரச படைக் கடடமைப்பை மறுசீரமைப்பதற்காக உண்மை நீதி மற்றும் மீண்டும் மோதல்கள் ஏற்படாத வகையில் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதி பெப்லோ டி கிறிப்பின் ஆலோசனைகளை பெற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையின்  சட்டக் கட்டமைப்பு இராணுவம் பொலிஸ் மற்றும் புலனாய்வுத்துறை ஆகியன பாரியஅளவில் மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் சிறப்புப் பிரதிநிதி பெப்லோ டி கிறீப் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் போது வலியுறுத்தியிருந்தார். 
 
எவ்வாறாயினும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலான முன்வைக்கப்பட்ட யோசனைகளை படைத் தரப்பினரின் கடும் எதிர்ப்பை அடுத்து அரசாங்கம்  கைவிட்டுள்ளதாக தெரிவித்த சுமந்திரன் புதிதாக அரசாங்கம் கொண்டுவரவுள்ள சட்டங்கள் படையினரை திருப்திப்படுத்துவதாகவே அமையும் என்றும் சாடியுள்ளார். 
 
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலாக முன்வைக்கப்படும் சட்டமூலம் உட்பட மேலும் மூன்று சட்டமூலங்கள் யூன் மாத இறுதிக்குள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த பிரசாத் காரியவசம் எனினும் அந்த சட்டங்களின் உள்ளடக்கங்கள் குறித்து தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.
 
கிழக்கு மாகாணத்தில் அரசாங்கம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை முன்னெடுத்து வருவதாக குற்றம்சாட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனால் குடிப்பரம்பல் மோசமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
 
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் பொறுமையின் எல்லைக்கே வந்துவிட்டதாகவும் தெரிவித்த அவர் இந்த நிலை தொடர்ந்தும் நீடிக்காது என்றும் சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்
 
Link to comment
Share on other sites

17 minutes ago, நவீனன் said:

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலாக முன்வைக்கப்படும் சட்டமூலம் உட்பட மேலும் மூன்று சட்டமூலங்கள் யூன் மாத இறுதிக்குள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த பிரசாத் காரியவசம் எனினும் அந்த சட்டங்களின் உள்ளடக்கங்கள் குறித்து தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.

சூழ்நிலைக்கு ஏற்ப வாய் கூசாமல் பொய் சொல்லி ஊரை ஏமாற்றுவதில் சிங்கள-பௌத்த இனமதவெறி பிடித்தவர்களை வெல்ல இந்த உலகில் யாராலும் முடியாது.

இவர்கள் தான் மகா பொய் வம்சத்தின் (මහා බොරු වංශය) சொந்தக்காரர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வட,கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்படும்: அரசாங்கம்
வட,கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்படும்: அரசாங்கம்
1466312310_download%20(1).jpg
வடக்குக் கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அரச படையினரை அகற்றிக்கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் காலங்களில் நிறைவேற்றப்படும் என அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். 
 
வடக்கு கிழக்கிலிருக்கும் இராணுவத்தை வெளியேற்றும் நடவடிக்கைகள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்காவின் அனைத்துக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்தியில் தெரிவித்த  தூதுவர் இந்த விடயத்தில் இலங்கை  அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றும் என்றும் உறுதியளித்துள்ளார். 
 
அடுத்துவரும் இரண்டு வருடங்களுக்குள் இராணுவம் அகற்றிக்கொள்ளப்பட்டு தேவைக்கு ஏற்றளவு படையினர் மாத்திரம் நிலைநிறுத்தப்படுவர் என்றும் பிரசாத் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கையின் அமெரிக்காவிற்கான தூதுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உரையாற்றிய இலங்கையின்  இன மற்றும் மத சுதந்திரத்திற்கான அமெரிக்க காங்கிரஸ் குழுக் கூட்டத்தை டெனி டேவிஸ் மற்றும் பில் ஜொன்சன் ஆகிய காங்கிரஸ் உறுப்பினர்களால் வழிநடத்தப்பட்டது. 
 
sumanthiran5.jpg
இலங்கையின்  மனித உரிமை நிலமைகள் தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் சபைக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காகவே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 
 
இலங்கை இராணுவம் உட்பட அரச படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைப்பதாக  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உறுதியளித்து ஒன்றரை வருடங்கள் கடந்தும் வடக்கு கிழக்கில் அரச படையினரால் கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகளில் 70 வீதமானவை இன்னமும் படையினர் வசமே இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்த மேடையில் குற்றம்சாட்டினார்.
 
இதற்கு பதிலளித்த இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் படையினர் கையகப்படுத்தி வைத்துள்ள தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன் வடக்கை விட அதிகமான காணிகள் கிழக்கில் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 
 
இந்த விடயத்தில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகக் கூறிய அவர் எனினும் அந்தப் பணிகள் மந்தமாகவே இடம்பெறுவதாகவும் ஏற்றுக்கொண்டார். 
 
எனினும் இதனை நிராகரித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  இராணுவம் தொடர்ந்தும் சுற்றுலா விடுதிகள் விவசாயப் பண்ணைகளை நடத்தி  பொருளாதாரத்திற்கு பங்கம் விளைவித்து வருவதாக குற்றம்சாட்டினார்.  
 
ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் யோசனைகளுக்கு அமைய  அரசாங்கம் அரச படைக் கட்டமைப்பில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்த அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும தெரிவித்தார். 
 
அரச படைக் கடடமைப்பை மறுசீரமைப்பதற்காக உண்மை நீதி மற்றும் மீண்டும் மோதல்கள் ஏற்படாத வகையில் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதி பெப்லோ டி கிறிப்பின் ஆலோசனைகளை பெற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையின்  சட்டக் கட்டமைப்பு இராணுவம் பொலிஸ் மற்றும் புலனாய்வுத்துறை ஆகியன பாரியஅளவில் மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் சிறப்புப் பிரதிநிதி பெப்லோ டி கிறீப் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் போது வலியுறுத்தியிருந்தார். 
 
எவ்வாறாயினும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலான முன்வைக்கப்பட்ட யோசனைகளை படைத் தரப்பினரின் கடும் எதிர்ப்பை அடுத்து அரசாங்கம்  கைவிட்டுள்ளதாக தெரிவித்த சுமந்திரன் புதிதாக அரசாங்கம் கொண்டுவரவுள்ள சட்டங்கள் படையினரை திருப்திப்படுத்துவதாகவே அமையும் என்றும் சாடியுள்ளார். 
 
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலாக முன்வைக்கப்படும் சட்டமூலம் உட்பட மேலும் மூன்று சட்டமூலங்கள் யூன் மாத இறுதிக்குள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த பிரசாத் காரியவசம் எனினும் அந்த சட்டங்களின் உள்ளடக்கங்கள் குறித்து தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.
 
கிழக்கு மாகாணத்தில் அரசாங்கம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை முன்னெடுத்து வருவதாக குற்றம்சாட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனால் குடிப்பரம்பல் மோசமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
 
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் பொறுமையின் எல்லைக்கே வந்துவிட்டதாகவும் தெரிவித்த அவர் இந்த நிலை தொடர்ந்தும் நீடிக்காது என்றும் சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

 

http://onlineuthayan.com/news/13873

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 உந்த வெறும் வார்த்தைக்கே பாராட்டி, பரிசுக்கும் சிபாரிசு செய்வினம்.

Link to comment
Share on other sites

உப்பிடி எத்தனை பொய் வாக்குறுதிக்ளை தமிழ் மக்கள் கேட்டுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nochchi said:
இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் படையினர் கையகப்படுத்தி வைத்துள்ள தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன் வடக்கை விட அதிகமான காணிகள் கிழக்கில் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 
 
இந்த விடயத்தில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகக் கூறிய அவர் எனினும் அந்தப் பணிகள் மந்தமாகவே இடம்பெறுவதாகவும் ஏற்றுக்கொண்டார். 

தருவம்,விடுவம் எண்டு சொல்லீனம் தானே பிறகேன் அவசரப்படுவான். ஒண்டும் செய்யேலாது எண்டே சொல்லீனம்?? இல்லயே!!!! :cool:

Link to comment
Share on other sites

மைத்திரி ஒரு நேர்மையான, பண்பான, எளிமையான மனிதர் என்றே பலரும் என்னைப்போல் நினைக்கின்றார்கள். அது உண்மையும் கூட. ஆனால் இப்பண்புகள் தான் நினைத்ததை செய்ய உதவவில்லை என்பதுதான் பெரும் சோகம். இவரால் முப்படைகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. இதனால்தான் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட பல பகுதிகளை விடுவிக்க முடியாதுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஜீவன் சிவா said:

மைத்திரி ஒரு நேர்மையான, பண்பான, எளிமையான மனிதர் என்றே பலரும் என்னைப்போல் நினைக்கின்றார்கள். அது உண்மையும் கூட. ஆனால் இப்பண்புகள் தான் நினைத்ததை செய்ய உதவவில்லை என்பதுதான் பெரும் சோகம். இவரால் முப்படைகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. இதனால்தான் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட பல பகுதிகளை விடுவிக்க முடியாதுள்ளது.

ரணிலுக்குப் பதிலாக வந்த முகமே மைத்திரி. ரணிலை நம்பியிறக்க முடியாத(வெல்லமாட்டார்; மகிந்தவின் போர் வெற்றிச் சூழலலை சாய்ப்பது கடினம்) சூழலில், மேற்குலகு சந்திரிகாவூடாகக் காய் நகர்த்தி மைத்திரியை வைத்து இனப்படுகொலை அரசை வெள்ளையரசாகக் காட்ட, வெள்ளையடிக்கப் பல்வேறு முனைப்புகளைச் செய்துவருகிறது. அதனது ஒரு அங்கமே இந்த சில நடவடிக்கைகளாகும். ஒரு சிலவற்றையாவது சிறிலங்காவும் அனைத்துலகும் செய்ய வேண்டிய கடப்பாடொன்று ஏற்பட்டள்ளதேயன்றித் தமிழ் மக்கள் மீதான பரிவோ அக்கறையோ அல்ல. அப்படியொன்றிருந்திருப்பின் சலாவ வெடிவிபத்திலே பாதிக்கப்பட்ட மக்களைவிட அதிகளவான உயிர் உடலுறுப்பு பொருளிழப்பு என்பவற்றைக் கொண்ட தமிழினத்துக்கு அவர்களது வாழ்வாதார மேம்பாடுகளை விரைவுபடுத்தியிருக்க வேண்டும். அவர்களை வாழவிடவேண்டும். 

மிகவும் நேர்த்தியாகக் கட்டுமைக்கப்பட்டுள்ள பௌத்த பேரிவாதச் சிந்தனை, அதாவது மகாவம்ச மனோநிலை மாறாதவரை, தமிழினம் சார்ந்து அவர்களது சுதந்திரமான வாழ்வு சார்ந்து எதுவும் செய்ய முடியாது. செய்யமாட்டார்கள். தமிழினத்தை ஆக்கிரமித்து கபளீகரம் செய்து அனாதைகளாக்கிவிட்டு அவர்களது நிலங்களில் விவசாயம் முதல் விடுதிகள் வரையமைத்து வாழத்தலைப்பட்டுள்ள சிங்களத்திலேயிருந்து தமிழரை ஏற்கும் பண்போடு எவருமே இல்லை என்பதே யதார்த்தமாகும். இது 1956முதல் 2002வரையான பட்டறிவு. இதே மைத்திரியவர்கள்தான் இறுதியுத்த காலத்தில் பாதுகாப்பமைச்சராக இருந்தவர். மகிந்தவை மாலைபோட்டு 17.05.2009இல் கட்டுநாயக்காவில் வரவேற்றவரும் கூட. 


சிங்களவரது அரிச்சுவடியானது இலங்கைத்தீவைச் சிங்களமயமாக்குதல் என்றே போதிக்கிறது. செய்கிறது. நடக்கிறது.

ஒருவேளை உங்கள் நம்பிக்கை சரியாயின் ஏன் உலகிலேயே அதிக அதிகாரங்களைக் கொண்ட அதிபராட்சிமுறையைக் கொண்டவரென்ற வகையிலே, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு வர்த்மானி அறிவித்தலூடாகச் செய்துவிடலாமே. 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.