Jump to content

ஆள்மாற்றம் மாற்றம் ஆட்சிமாற்றமல்ல – சாணக்கியர்


Recommended Posts

ஆள்மாற்றம் மாற்றம் ஆட்சிமாற்றமல்ல - சாணக்கியர்

மாமன்னர் மகிந்தர் மீது (நிதி துஸ்பிரயோகம் உட்பட ) எந்த குற்றச்சாட்டும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன சொல்லியிருக்கிறார். மன்னரது சுற்றத்தாருக்கு மட்டும் தான் வழக்கு இருக்கிறதாம்.

மன்னர் நல்லவராம், கூடின கூட்டம்தான் சரியில்லை என்கிறவகையில் சொல்லியிருப்பது, சிறிலங்கா அமைச்சரவையின் பேச்சாளர்.

மாற்றம் என்று சொல்லப்பட்டதன் முக்கிய பங்காளி.

ஏற்கனவே மகிந்தர் மீது போர்க்குற்ற விசாரணை இல்லை, அவரை சர்வதேச விசாரணைகளில் இருந்து பாதுகாத்துவிட்டேன், இனியும் பாதுகாப்பேன் என்று அதிமேதகு மைத்திரி அடிக்கடி சொல்லிவருகிறார்.

சிங்கள குடியேற்றங்கள், மகிந்தர் செய்த வேகத்திலேயே தொடர்ந்து நடக்கிறது. விகாரைகள் மகிந்தர் காலத்தை விட வேகமாக முளைக்கிறது. இராணுவ குடியிருப்புகள் சத்தமின்றி திறந்து வைக்கப்படுகின்றது. எமது ஊடகங்கள், மாற்றத்துக்கு வக்காலத்து வாங்கிய வெட்கத்திலோ என்னவோ அவை பற்றி பெரியளவில் பேசாது இருக்கின்றன.

தமிழ் நிலங்களில் இராணுவச்செறிவு (6:1) எந்த விதத்திலும் குறைக்கப்படவில்லை. மாறாக, தமிழ் நிலங்களில் தற்காலிக கட்டடங்களில் இருந்த இராணுவமுக்காம்களில் பெரும்பான்மையானவை, தனியார் கட்டடங்களை விடுகிறோம் என்கிற போர்வையில், நிரந்தர கட்டுமானங்களாக அமைக்கப்பட்டுவருகிறது. அவை, இனி எப்போதும் நிரந்தரமானவை என்பதற்கு மேலாக, தனியார் கட்டடங்களை விட்டு இடமாற்றுமின்ற (இடம்மாற்றுகின்ற மட்டும்) இந்த நடவடிக்கைகளை தமிழர்களே வரவேற்க வைக்கப்படுகிறார்கள்.

அரச காணிகளில் இராணுவ முகாம்கள் அமைக்கப்ப்டுவது பிழையே இல்லை என்று (இராணுவ அடர்த்தி மாற்றப்படாதது குறித்த கரிசனை ஏதுமின்றி) மென்வலு போரளிகளும், ஊடகவியலாளர்கள் என தம்மை கூறிக்கொள்ளும் சிலரும் வரிந்து கட்டிக்கொண்டு “நல்லெண்ணம்” பேசுகின்ற துயரமும் வளர்கிறது. காணிகள் சில விடப்பட்டுள்ளது உண்மை தான். அவை கூட மகிந்தர் காலத்திலேயே விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டவை என அதிகாரிகள் சொல்கின்றனர். இதற்கு மேலாக, வலிவடக்கில் ஆரம்பத்தில விடப்பட்ட காணிகளிற்கான சான்றிதழில் மகிந்தரினதும் அப்போதைய காணி அமைச்சரின் கையெழுத்துமே இருக்கின்றன) வடக்கில் அதுவும் யாழ்ப்பாணத்தில் விடப்படுபவை மட்டும் தான் ஊதிப்பெருப்பித்து ஊடகங்களில் காட்டப்ப்டுகின்றன. வடக்கின் ஏனைய மாவட்டங்கள் குறித்தோ, தென்தமிழீழத்தில் அபகரிக்கப்பட்ட அபகரிக்கப்படுகின்ற காணிகள் குறித்தோ யாரும் பேசுவதில்லை. இவ்வளவு கதைக்கும் என்னிடம் கூட, வெட்கம்கெட்ட தனமாக, தென் தமிழீழம் குறித்த தரவுகள் இல்லை.

அதைவிட, விடப்பட்ட காணிகளின் அளவையும் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் அளவையும் ஒப்பிட்டு பார்த்தால், உண்மை தானாக தெரியும் .

13497751_257053227985188_878360586336046

மகிந்தவிற்கு எதிராக குற்றசாட்டு எதுவுமில்லை – அரசு

13524433_257053191318525_478548875725072

வட்டுவாகலில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த தூபி

13529197_257053557985155_892756883206136

சனவரி 2015 இற்கு பின்னர் விடுவிக்கப்பட்ட காணிகள் விபரம்

13533050_257053144651863_531368380359516

அரசுமாற்றம் வந்தபோதும் அதனால் தமிழர்களுக்கு எந்த மாற்றமுமில்லை – பிரிஎப்

தமிழர் அரசியல் கைதிகள் சம்பந்தமாக, வடகிழக்கு தமிழ் அரசிய்லவாதிகளோடு ஒப்பிடுகையில் குறிப்பிடத்க்க அளவு தீவிரமாக செயல்பட்டு வந்த மனோகணேசன் கூட, இவற்றை பற்றி இப்போது கதைப்பது மகிந்தரை மீண்டும் வரவைக்கும் என்கிற சாணக்கியத்தை கையில் எடுத்து , அமைச்சராகி அமைதியாகிவிட்டார் .

கடந்த காலத்தில் நடந்த மனித உரிமை, போர்க்குற்றம் 2015 வரை அதிதீவிரமாக கவலைப்பட்ட மேற்கு நாடுகள், தற்போது அதை மறந்து, இனி எதிர்காலத்தை பற்றி மட்டும் கதையுங்கள் என்று போதனை செய்கின்றன.2015 இற்கு முன்னும் பின்னுமாக தமிழ் மக்களுடனான அவர்களின் ஒவ்வொரு சந்திப்பும் , இந்த மாற்றத்தை தெளிவாக வெளிக்காட்டுகின்றன. இன்னொருவகையில் 2015 வரைக்கும் அவர்களுக்கு மிகத்தேவையாக இருந்த தமிழரின் குரல், தற்போது, தேவையற்ற இடைஞ்சலான சத்தம் ஆகிவிட்டது.

அப்படி, சர்வதேசத்துக்கு தேவையாக இருந்த வேளையில் எமக்கானதை கேட்டு, அதற்கு ஒரு பேரத்தை பேச எமது தலைவர்களாலும் முடிந்திருக்கவில்லை.

ஆக மொத்தத்தில் மாற்றத்தின் அர்த்தம், மகிந்தரை மாற்றுவது மட்டும் தான் என்பதாகிவிட்டது.

கூட்டிக்கழித்து பார்த்தால், சிங்கள தேசம் எதையும் இழக்கவில்லை. மாறாக, பல்வற்றை சம்பாதித்திருக்கிறது. இரத்தக்கறை படிந்திருந்த இராணுவ வெற்றியை, மிக சாதுரியமாக, ஒரு அரசியல் வெற்றியாக மாற்றி இருக்கிறது. எம் மக்களில் கணிசமானோரை, எம் அரசியல்வாதிகளின் துணையுடன், ராஜதந்திரம், யதார்த்த அரசியல் என்கிற பெயரில் தம்மை நோக்கி இழுத்து, அதற்கும் மேலாக தமக்காக கதைக்கவும் பண்ணியிருக்கிறது.

அதற்கும் மேலாக, மிக முக்கியமாக அவர்களை தமிழ் தேசிய உணர்வு நீக்கம் செய்திருக்கிறது. விளையாட்டு, கலை, இலக்கியம், கொண்டாட்டம், பண்பாடு என அனைத்து தளத்திலும் சிங்கள தேசம் இந்த அரசியலை செய்ய, அவற்றையெல்லாம் அரசியலாக பார்க்க கூடாது, விளையாட்டு விளையாட்டு தான், இலக்கியம் இலக்கியம் தான் என்று போதிப்பது தான் புத்திஜீவித்தனம் என நம்புகின்ற ஒரு குழுமமே எமக்குள் வேர்விடுகின்றது. சிறிலங்கா சுதந்திர தினத்தை இரத்ததானம் செய்து கெளரவமாக தாயகத்தை நேர்ந்த தமிழ் சனசமூக இளைஞர்கள் கொண்டாடியதாகவும் பத்திரிகைகள் தெரிவித்து இருந்தது.

இது தான் உண்மையில் அவர்களது வெற்றி, முள்ளிவாய்க்காலில் பெற்றது அல்ல. இது தான் உண்மையான மாற்றம்.

மறுபுறமாக , தமிழர் தேசம் நிஜமாகவே பெற்றது என்ன??? எமது தீர்வுக்கான திறவுகோலாக அமையும் என கருதப்பட்ட, சர்வதேச விசாரணையை ஒன்றுமில்லாததாக்கியதை விட தமிழர் தேசம் பெற்றது என்ன?? எம்மிடம் இருந்த துரும்பு சீட்டுகள் அனைத்தையும், நிபந்தனையற்று இழந்ததை விட, தமிழர் தேசம் பெற்றது என்ன?

இதை யாரையும் சீண்டி குறை சொல்லுதற்காக எழுதவில்லை. யாரையும் வீண்விவாதத்துக்கு இழுப்பதற்கும் இது எழுதப்படவில்லை. நாங்கள் அனைவரும் எங்களுக்குள்ளேயே சிந்தித்து தெளிவு பெறவேண்டும் என்பதற்காக மட்டும் எழுதப்பட்டது.

படங்கள் & தகவல்கள் – பிரித்தானிய தமிழர் பேரவை

http://thuliyam.com/?p=31567

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.