Jump to content

யாழ்ப்பாணத்தில் GPL கிரிக்கெட் போட்டிகள் .


Recommended Posts

யாழ்ப்பாணத்தில் GPL கிரிக்கெட் போட்டிகள் . 

 

2யாழ்ப்பாணத்தில் GPL கிரிக்கெட் போட்டிகள் .

தெல்லிப்பளை மகாஜனக்கல்லூரியின் விளையாட்டு தரத்தை மேம்படுத்தவும் பாடசாலையை விட்டு வெளியேற்றிய மகாஜனன்கள் நல்ல பண்புடையவர்களாகவும் ஆரோக்கியமானவர்களையும் சமூகத்தில் சிறந்து விளங்கவும் என்ற உன்னத நோக்கத்துடன் 1960 இல் ஆரம்பிக்கப்பட்டதுதான் கிறாஸ்கொப்பர்ஸ் வி.கழகம்.

கிறாஸ்கொப்பரஸ் பழைய, புதிய வீரர்களையும் மகாஜனன்களையும் ஒன்றிணைத்து சினேக பூர்வ துடுப்பாட்ட போட்டி யொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் பதிவு செய்த 19 விளையாட்டு கழகங்களிலிடமிருந்து 2 சகல துறை வீரர்களை தெரிவு
செய்து அத்துடன் எமது கிறாஸ்கொப்பர்ஸ் கழகத்தில் இருந்து போகும் 4 பேரை உள்ளடக்கி 42 வீரர்களை உள்வாங்கி 6 அணிகளாக வகுத்து இந்த துடுப்பாட்ட நிகழ்வை ஒரு நாளில் நடத்துவதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டிகள் 6 பேர் கொண்ட 5 ஓவர் போட்டியாக இடம்பெறவுள்ளது.

1986ம் ஆண்டு சென்ஜோன்ஸ் கல்லூரியில் நடைபெற்று 6 பேர் கொண்ட 5 பேர் போட்டியில் கிறாஸ்கொப்பர்ஸ் வி.கழகம் மாவட்ட வெற்றி வீரர்களாக வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தனர்.

இந்த அணியிலே அமரர்களான றோகான்ரூபவ் சங்கர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். எனவே அவர்களை நினைவுகூரும் போட்டியாக இது அமைவது சிறப்பம்சமாகும்.

6 அணிகளையும் 6 உரிமையாளர்கள் பெற்றுக் கொண்டனர், வீரர்களும் ஏலத்தில் பெறப்படடமை சிறப்பம்சமாகும்.

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை இந்தப் போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 4 1 g1facebook

http://vilaiyattu.com/யாழ்ப்பாணத்தில்-gpl-கிரிக்/

 

Link to comment
Share on other sites

ஜே.பி.எல்: சென்றலைட்ஸ், கொக்குவில் மத்தி, சென்றல் வெற்றி
 
 

article_1467029320-JPL-%281%29Firstwekksயாழ்ப்பாணத்தின் அண்மைக்கால கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான தொடர்களில் ஒன்றான யாழ்ப்பாண பிறீமியர் லீக் (ஜே.பி.எல்) கடந்த வாரயிறுதியில் ஆரம்பித்திருந்த நிலையில், முதல் வாரப் போட்டிகளில், சென்றலைட்ஸ், கொக்குவில் மத்தி, சென்றல் ஆகியவை வெற்றி பெற்றுள்ளன.

சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் பற்றீசியன்ஸ் விளையாட்டுக் கழகத்துக்குமிடையிலான முதலாவது போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சென்றலைட்ஸ், பற்றீசியன்ஸை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய பற்றீசியன்ஸ், 19.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 100 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக நோபேர்ட் 28, டானியல் 20 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சென்றலைட்ஸ் சார்பாக கோகுலன் மூன்று விக்கெட்டுகளையும் வதூசனன், மயூரன், கிருபா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதிலுக்கு 101 என்ற வெற்றி இலக்கோடு ஆடிய சென்றலைட்ஸ், 12.3 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, ஜனோசன் 34, ஜூலியஸ் 24, வதூசனன் 22 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், பற்றீசியன்ஸ் சார்பாக, அஜித், மொறிஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக ஜனோசன் தெரிவானார்.

இரண்டாவது போட்டியில், கொக்குவில் மத்தி கிரிக்கெட் கழகத்தை எதிர்த்து ஸ்கந்தா ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகம் மோதியிருந்த நிலையில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொக்குவில் மத்தி, ஸ்கந்தா ஸ்டார்ஸை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது.

அத்ந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தா ஸ்டார்ஸ், 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, விஷ்ணு 29, சுயந்தன் 27 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கொக்குவில் மத்தி சார்பாக, உத்தமன் நான்கு விக்கெட்டுகளையும் இராகுலன், ஜெயரூபன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 104 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு ஆடிய கொக்குவில் மத்தி, எதுவித விக்கெட் இழப்புமின்றி 9.3 ஓவர்களில் அதிரடியாக வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, ஜெயரூபன் ஆட்டமிழக்காமல் 76 ஓட்டங்களையும் சசிகரன் ஆட்டமிழக்காமல் 14 ஓட்டங்களையும் பெற்றனர். போட்டியின் நாயகனாக ஜெயரூபன் தெரிவானார்.

சென்றல் விளையாட்டுக் கழகத்துக்கும் யூனியன்ஸ் விளையாட்டுக் கழகத்துக்குமிடையிலான மூன்றாவது போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய யூனியன்ஸ், 19.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 102 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக ஆகீஸன் 12, கனிஸ்ரன், மகதீரன் ஆகியோர் தலா 11 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் சென்றல் சார்பாக, காலஸ், திருக்குமரன், உல்ஹப், சலிஸ்ரன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் ரஜீவ்குமார் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 103 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய சென்றல், 12.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, ரஜீவ்குமார் ஆட்டமிழக்காமல் 40, கலிஸ்ரன் 22 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், யூனியன்ஸ் சார்பாக அருண்ராஜ் இரண்டு விக்கெட்டுகளையும் சுஜந்தன், தயாளன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக ரஜீவ்குமார் தெரிவானார்.

- See more at: http://www.tamilmirror.lk/175713/ஜ-ப-எல-ச-ன-றல-ட-ஸ-க-க-க-வ-ல-மத-த-ச-ன-றல-வ-ற-ற-#sthash.L8xs2UvD.dpuf
Link to comment
Share on other sites

ஜான்சனின் அதிரடியால் சென்றலைட்ஸ் வெற்றி
 
04-07-2016 09:09 AM
Comments - 0       Views - 2

யாழ்ப்பாணத்தின் அண்மைக்கால கிரிக்கெட் வரலாற்றின் மிக முக்கியமான தொடர்களில் ஒன்றான யாழ்ப்பாண பிறீமியர் லீக்கின் கடந்த வாரயிறுதியில் இடம்பெற்ற போட்டிகளில், ஜொலிஸ்டார், ஸ்ரீகாமாட்சி, சென்றலைட்ஸ், மானிப்பாய் பரிஷ்,, ஜொனியன்ஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

article_1467632682-InserjfjjdyhLEAD-%283

அந்தவகையில், பற்றீசியன்ஸ், ஜொலிஸ்டார் அணிகளுக்கிடையிலான குழு ஒன்று போட்டியொன்றில் எட்டு விக்கெட்டுகளால் ஜொலிஸ்டார் வெற்றி பெற்றிருந்தது. இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பற்றீசியன்ஸ், ரீயூடரின் 22, சதானந்தனின் 16 ஓட்டங்களோடு 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பந்துவீச்சில் ஜொலிஸ்டார் சார்பாக வாமணன் 3, கல்கோகன், மது, கஜானா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பதிலுக்கு 125 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஜொலிஸ்டார், 14.2 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, சஜீகன் ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களையும் கல்கோகன் 42 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பற்றீசியன்ஸ் சார்பாக மொறிஸ், நோபேர்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை வீழ்த்தினர். போட்டியின் நாயகனாக சஜீகன் தெரிவானார்.

ஸ்ரீகாமாட்சி, கொக்குவில் மத்தி கிரிக்கெட் கழகத்துக்குமிடையிலான போட்டியில் ஐந்து ஓட்டங்களால் ஸ்ரீகாமாட்சி வெற்றி பெற்றிருந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்ரீகாமாட்சி, 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, மோகன்ராஜ் 43, ரஜீவராஜ் 31, துவாரகன் 23, சுஜன் 22 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கொக்குவில் மத்தி கிரிக்கெட் கழகம் சார்பாக இராகுலன், தனுசன் தலா இரண்டு விக்கெட்டுகளையும் உத்தமன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு 156 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் மத்தி கிரிக்கெட் கழகம் 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களை மாத்திரமே பெற்று ஐந்து ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக சசிகரன் 32, ஜெயரூபன் 22, ஆதித்தன் 20, இராகுலன் 13 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்ரீகாமாட்சி சார்பாக சுஜன் 3, லிங்கநாதன், ராம் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர். இப்போட்டியின் நாயகனாக சுஜன் தெரிவானார்.

இதேவேளை, சென்றலைட்ஸ், கிறாஸ்கொப்பர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் 103 ஓட்டங்களால் கிறாஸ்கொப்பர்ஸை சென்றலைட்ஸ் தோற்கடித்தது. இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய சென்றலைட்ஸ், 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 239 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக ஜேம்ஸ் ஜான்ஸன் 134, ஜூலியஸ் 44 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கிறாஸ்கொப்பர்ஸ் சார்பாக, ஜனந்தன், சரண்ராஜ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கபிலன், கோகுலன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

240 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய கிறாஸ்கொப்பர்ஸ், 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 136 ஓட்டங்களைப் பெற்று 103 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, மதுஷன் 24, சாரங்கன் 22, டிலோஷன் 17, கபிலன், அஜித் ஆகியோர் தலா 14 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் சென்றலைட்ஸ் சார்பாக கிருபா நான்கு விக்கெட்டுகளையும் ஜெரிக், கோகுலன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் ஜான்சன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக ஜான்சன் தெரிவானார்.

article_1467632712-InsenjajshfdhsaLEAD-%

தின்னைவேலி கிரிக்கெட் கழகம், மானிப்பாய் பரிஷ், ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் ஆறு விக்கெட்டுகளினால் மானிப்பாய் பரிஸ் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய தின்னைவேலி கிரிக்கெட் கழகம், 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, சிவரதன் 42, றொஹான் 24, லவகாந் 23, கீர்த்திகன் 18, சசிந்தன் 13 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் மானிப்பாய் பரிஷ் சார்பாக வினோத், ஹட்ரிக் உள்ளடங்கலாக ஐந்து விக்கெட்டுகளையும் டிலக்ஷன் 2, கிஷோக்குமார் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு 152 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கோடு ஆடிய மானிப்பாய் பரிஷ், 17.4 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, வினோத் ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களையும் கோபிரஷாந் 35 ஓட்டங்களையும் கிஷோக்குமார் 28 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில், தின்னைவேலி கிரிக்கெட் கழகம் சார்பாக சுரேந்திரன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போட்டியின் நாயகனாக  வினோத் தெரிவானார்.

ஸ்ரீகாமாட்சி, ஜொனியன்ஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், ஆறு விக்கெட்டுகளினால் ஜொனியன்ஸ் வெற்றி பெற்றது. இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்ரீகாமாட்சி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக  தீபன் 30, பபிதரன் 28, கஜீவன் 18, துவாரகன் 13 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஜொனியன்ஸ் சார்பாக, அன்புஜன் 3, டக்சன் 2, லவேந்திரா, பிருந்தாபன், சஞ்சயன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

பதிலுக்கு 139 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஜொனியன்ஸ், 18.3 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக கபில்ராஜ் ஆட்டமிழக்காமல் 67, அன்புஜன் 25 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்ரீகாமாட்சி சார்பாக மோகன்ராஜ் 2, சுதர்சன் 1 விக்கெட்டினைக் கைப்பற்றினர். இப்போட்டியின் நாயகனாக கபில்ராஜ் தெரிவானார்.  

நாளை மறுதினம் புதன்கிழமை (06) காலை எட்டு மணிக்கு இடம்பெறவுள்ள போட்டியில், மானிப்பாய் பரிஸை எதிர்த்து ஸ்‌கந்தாஸ்டார்ஸ் மோதவுள்ளதுடன், பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெறவுள்ள போட்டியில், சென்றலை எதிர்த்து கிறாஸ்கொப்பர்ஸ் மோதவுள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/176217/ஜ-ன-சன-ன-அத-ரட-ய-ல-ச-ன-றல-ட-ஸ-வ-ற-ற-#sthash.08UD6b7u.dpuf
Link to comment
Share on other sites

ஜே.பி.எல்: கிறாஸ்கொப்பர்ஸ், ஸ்கந்தாஸ்டார்ஸ் வெற்றி
 
07-07-2016 06:22 AM
Comments - 0       Views - 2

யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வரும் யாழ்ப்பாண பிறீமியர் லீக்கின் புதன்கிழமை (06) இடம்பெற்ற போட்டிகளில் கிறாஸ்கொப்பர்ஸ், ஸ்கந்தாஸ்டார்ஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

மானிப்பாய் பரிஷ், ஸ்கந்தாஸ்டார்ஸ் ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பரிஷ் முதலில் துடுப்பெடுத்தாடி, 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, சஜீத் 82, ஜெயதீபன் 23, நிதர்ஷன் 18, கோபிரஷாந்த் 12  ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்கந்தாஸ்டார்ஸ் சார்பாக, துவிசன், சிந்துஜன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் விஷ்ணுபிரகாஷ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு 160 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தாஸ்டார்ஸ்,  18.1 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, கதியோன் 53, துவிசன் 22, நிரோஜன் 21, சயந்தன் 17 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் பரிஷ் சார்பாக, சுபாஸ் மூன்று, யாழினியன், கிசோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் சஜீத் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக கதியோன் தெரிவானார்.

article_1467881631-InpuiudmdJpl--%281%29

சென்றல், கிறாஸ்கொப்பர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சென்றல், கிறாஸ்கொப்பர்ஸ் அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது. அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய கிறாஸ்கொப்பர்ஸ்20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 246 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, அஜித் ஆட்டமிழக்காமல் 107, கபிலன் 48, மதுஷன் 35, டிலோஜன் 34 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் சென்றல் சார்பாக சலிஸ்ரன் இரண்டு, மில்லர் ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

பதிலுக்கு 247 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய சென்றல், 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 56 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக சலிஸ்ரன் 79, காளஸ் 68, பாலேந்திரா 15 ஓட்டங்களைப் பெற்றனர்.  பந்துவீச்சில் கிறாஸ்கொப்பர்ஸ் சார்பாக ஜனந்தன், ஹட்ரிக் உள்ளடங்கலாக ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு, ராஜகாந்தன் ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார். போட்டியின் நாயகனாக அஜித் தெரிவானார்.

 

- See more at: http://www.tamilmirror.lk/176486/ஜ-ப-எல-க-ற-ஸ-க-ப-பர-ஸ-ஸ-கந-த-ஸ-ட-ர-ஸ-வ-ற-ற-#sthash.BYiKW465.dpuf
Link to comment
Share on other sites

JPL: ஜொனியன்ஸ், சென்றலைட்ஸ், ஸ்கந்தா ஸ்டார் வெற்றி
 
11-07-2016 01:49 AM
Comments - 0       Views - 3

article_1468149277-JPL.jpgஇடம்பெற்றுவரும் யாழ்ப்பாண பிறீமியர் லீக்கில், கடந்த சனிக்கிழமை (09) இடம்பெற்ற போட்டிகளில் ஜொனியன்ஸ், ஸ்கந்தா ஸ்டார், சென்றலைட்ஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன. 

ஜொனியன்ஸ், கொக்குவில் மத்தி கிரிக்கெட் கழகம் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய  ஜொனியன்ஸ், 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக பிருந்தாபன் ஆட்டமிழக்காமல் 35, அகிலன் 34, ஜதுசன் 21 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கொக்குவில் மத்தி சார்பாக, சாம்பவன் 3, தனுக்ஷன், உத்தமன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

பதிலுக்கு, 193 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் மத்தி கிரிக்கெட் கழகம், 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை மாத்திரமே இழந்து 55 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக ஆதித்தான் 34, ஜனுதாஸ் 31, பானுஜன் 27 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஜொனியன்ஸ் சார்பாக பிருந்தாவன் 2, கபிலன், லவேந்திரா, ஜதூசனன், சன்சயன், அன்புஜன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர். இப்போட்டியின் நாயகனாக பிருந்தாபன் தெரிவானார். 

சென்றலைட்ஸ், ஜொலிஸ்ஸ்டார் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சென்றலைட்ஸ், ஜொலிஸ்ஸ்டாரை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது. அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஜொலிஸ்ஸ்டார், 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக, கல்கோவன் 50, சஜீகன் 41, வாமணன் 32  ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சென்றலைட்ஸ் சார்பாக மயூரன் 3, மதூஷணன் 1 விக்கெட்டினைக் கைப்பற்றினர். 

212 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய சென்றலைட்ஸ், 19 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக ஜேம்ஸ் 74, இம்முறை இடம்பெற்ற வடக்கின் மாபெரும் சமரில் சதம்பெற்ற கிருபா ஆட்டமிழக்காமல் 43, ஜெனோசன் 21 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஜொலிஸ்ஸ்டார் சார்பாக வாமணன் 3, குவானந்த், தீபன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் வீழ்த்தினர். போட்டியின் நாயகனாக ஜேம்ஸ் தெரிவானார். 

ஸ்ரீகாமாட்சி, ஸ்கந்தாஸ்டார் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கந்தாஸ்டார், ஸ்ரீகாமாட்சியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது. அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்ரீகாமாட்சி, 12.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 102 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, மோகன்ராஜ், கஜீவராஜ், சுதர்சன் ஆகியோர் தலா 15 ஓட்டங்களையும் சுஜன் 10 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்கந்தாஸ்டார் சார்பாக புருஜோத்தமன், சிந்துஜன், தரணிதரன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் விஷ்ணு பிரசாந், துவிசன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

103 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தாஸ்டார், 10.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக கஜீவன், கதியோன்‌ ஆகியோர் ஆட்டமிழக்காமல் தலா 36 ஓட்டங்களையும் மிதுஷாந் 22 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்ரீகாமாட்சி சார்பாக வீழ்த்தப்பட்ட விக்கெட்டை, ராம் வீழ்த்தினார். போட்டியின் நாயகனாக கஜீவன் தெரிவானார்.

- See more at: http://www.tamilmirror.lk/176667/JPL-ஜ-ன-யன-ஸ-ச-ன-றல-ட-ஸ-ஸ-கந-த-ஸ-ட-ர-வ-ற-ற-#sthash.ve7Sha2z.dpuf
Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ஜேம்ஸின் அதிரடியால் அரையிறுதிக்குள் சென்றலைட்ஸ்
 
26-07-2016 06:34 PM
Comments - 0       Views - 1

article_1469534721-LEADSisbgsfnsgera.jpg

-குணசேகரன் சுரேன்

யாழ்ப்பாண பிறிமியர் லீக்கின் காலிறுதி ஆட்டமொன்றில் துரைராசா ஜேம்ஸ் ஜான்சனின் அதிரடி ஆட்டத்தின் மூலம் சென்றலைட்ஸ் அணி அரையிறுதிக்கு நுழைந்தது.

யுவ பிரண்ட்ஸ் பவுண்டேஸன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஜே.பி.எல் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் இருபது – 20 கிரிக்கெட் போட்டிகள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதி முதல் வருகின்றது.

யாழ்ப்பாணத்திலுள்ள 12 முன்னணிக் கழக்கங்கள் இந்தச் சுற்றுப்போட்டியில் பங்குபற்றின. அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முன்னணி வகித்த நான்கு அணிகள் வீதம் காலிறுதிக்கு 8 அணிகள் தெரிவாகின.

கொக்குவில் மத்திய சனசமூக நிலையம், சென்றலைட்ஸ், சென்ரல், ஸ்கந்தாஸ்ரார், திருநெல்வேலி கிரிக்கெட் விளையாட்டுக்கழகம், ஜொனியன்ஸ், ஜொலிஸ்ரார்ஸ், கிறாஸ்கோப்பார்ஸ் ஆகிய 8 அணிகள் காலிறுதிக்குள் நுழைந்தன.

இதில் முதலாவது காலிறுதியாட்டம் ஞாயிற்றுக்கிழமை (24) சென்றலைட்ஸ் அணிக்கும் ஸ்கந்தாஸ்ரார்ஸ் அணிக்கும் இடையில் நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தா ஸ்ரார்ஸ் அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து, 99 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஸ்ரீ.ஸ்ரீகுமார் 38, ஜே.கதியோன் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் சென்றலைட்ஸ் அணி சார்பாக எஸ்.வதூஸன் மற்றும் கே.கோகுலன் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் என்.மயூரனன் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

100 என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சென்றலைட்ஸ் அணி, ஜேம்ஸ் ஜான்சனின் 45 ஓட்டங்களுடன் 12.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் என்.டர்வின் 21 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் ஸ்கந்தா அணி சார்பாக எம்.புருசோத், எஸ்.சஞ்சயன் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக ஜேம்ஸ் ஜான்சன் தெரிவு செய்யப்பட்டார்.

- See more at: http://www.tamilmirror.lk/177988/ஜ-ம-ஸ-ன-அத-ரட-ய-ல-அர-ய-ற-த-க-க-ள-ச-ன-றல-ட-ஸ-#sthash.GXIXiP7q.dpuf
Link to comment
Share on other sites

அரையிறுதியில் திருநெல்வேலி கிரிக்கெட் கழகம்
 
28-07-2016 07:06 PM
Comments - 0       Views - 5

article_1469868003-LEADThridcjdgsjindei.-குணசேகரன் சுரேன்

யாழ்ப்பாண பிறீமியர் லீக்கின் காலிறுதி ஆட்டமொன்றில், அணித்தலைவர்  சிவலிங்கம் சிவராஜ்ஜின் பொறுப்பான ஆட்டத்தால் திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் அரையிறுதிக்குள் நுழைந்தது.

யுவ பிரண்ட்ஸ் பவுண்டேஸன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஜே.பி.எல் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் இருபது – 20 கிரிக்கெட் போட்டிகள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதி முதல் வருகின்றது.

யாழ்ப்பாணத்திலுள்ள 12 முன்னணிக் கழக்கங்கள் இந்தச் சுற்றுப்போட்டியில் பங்குபற்றின. அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முன்னணி வகித்த நான்கு அணிகள் வீதம் காலிறுதிக்கு 8 அணிகள் தெரிவாகின.

கொக்குவில் மத்திய சனசமூக நிலையம், சென்றலைட்ஸ், சென்ரல், ஸ்கந்தாஸ்ரார், திருநெல்வேலி கிரிக்கெட் கழகம், ஜொனியன்ஸ், ஜொலிஸ்ரார்ஸ், கிறாஸ்கோப்பார்ஸ் ஆகிய 8 அணிகள் காலிறுதிக்குள் நுழைந்தன.

இரண்டாவது காலிறுதியாட்டம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் கடந்த வாரயிறுதியில் நடைபெற்றது. இதில் சென்ரல் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து திருநெல்வேலி கிரிக்கெட் விளையாட்டுக்கழக அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் ஆடிய சென்ரல் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் கமலேந்திரன் கலிஸ்ரன் 32, விமலதாஸன் ரஜீவ்குமார், என்.பாலேந்திரா ஆகியோர் தலா 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் திருநெல்வேலி அணி சார்பாக எம்.ஜெசிந்தன் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும், நவரட்ணம் சுரேந்திரன் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

154 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு ஆடிய திருநெல்வேலி அணி முதல் 5 விக்கெட்களையும் 62 ஓட்டங்களுக்கு இழந்தது. எனினும் அதன் பின்னர் ஜோடி சேர்ந்த அணித்தலைவர் சிவராஜ் மற்றும் கணேசலிங்கம் றோகான் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டம் மற்றும் சுரேந்திரனின் இறுதிநேர அதிரடி மூலம், 18.3 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் சிவராஜ் 46, றோகான் மற்றும் சுரேந்திரன் ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே 26 மற்றும் 22 ஓட்டங்களைப் பெற்றுனர். பந்துவீச்சில் ஏ.சுபதீஸ் 3 விக்கெட்களையும், பெனடிக் சலிஸ்ரன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக சிவராஜ் தெரிவு செய்யப்பட்டார்.

- See more at: http://www.tamilmirror.lk/178266/அர-ய-ற-த-ய-ல-த-ர-ந-ல-வ-ல-க-ர-க-க-ட-கழகம-#sthash.w5eVnKeh.dpuf
Link to comment
Share on other sites

மூன்றாவது தடவையாகவும் சம்பியனானது சென்றலைட்ஸ்
 
 

InJPL16Champion.jpg

யாழ்ப்பாண பிறிமியர் லீக் (ஜே.பி.எல்) தொடரின் இறுதிப் போட்டியில், துடுப்பாட்ட வீரர்களின் பலத்தால், சென்றலைட்ஸ் அணி, 42 ஓட்டங்களால் திருநெல்வேலி கிரிக்கெட் விளையாட்டுக் கழக அணியை வென்று, தொடர்ந்து 3ஆவது முறையாகச் சம்பியனாகியது.

article_1470051898-InIPL16Runner-Up-Team

இருபதுக்கு-20 தொடரான இத்தொடரின் 4ஆவது பருவகாலப் போட்டிகள், ஜூன் மாதம் 25 ஆம் திகதி முதல், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வந்தன. யாழ்ப்பாணத்திலுள்ள 12 முன்னணிக் கழகங்கள், இத்தொடரில் பங்குபற்றின. அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முன்னணி வகித்த 4 அணிகள் வீதம் காலிறுதிக்கு 8 அணிகள் தெரிவாகின.

article_1470051939-InJPL16Winning-Team-C

ஞாயிற்றுக்கிழமை (31) பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமான இறுதிப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வென்ற சென்றலைட்ஸ் அணித் தலைவர் குலேந்திரன் செல்ரன், முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.
அதற்கிணங்கக் களமிறங்கிய சென்றலைட்ஸ் அணியினர், பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். அவ்வணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 223 ஓட்டங்களைப் பெற்றது. பூபாலசிங்கம் டர்வின் 42, சுரேஸ் கார்த்தீபன் 33, நாகராசா ஜனோசன் 32, குலேந்திரன் செல்ரன் 26, ரவி வதூஸனன் 26, பத்திநாதன் நிரோஜன் 22, சின்னத்துரை ஜேம்ஸ் ஜான்சன் 20 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் பி.பிறகோவன், 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

224 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய திருநெல்வேலி அணி சார்பில் விதுன் மிகுந்த போராட்டத்தை வெளிப்படுத்தினார். எனினும், மற்றைய வீரர்கள் கைகொடுக்காமையால் திருநெல்வேலி அணியின் போராட்டம் வீணாகியது. 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 181 ஓட்டங்களை மாத்திரம் அவ்வணி பெற்றது. துடுப்பாட்டத்தில் முத்துக்குமார் விதுன் அதிரடியாக 83 ஓட்டங்களையும், அபயராஜா ஜசீந்தன் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ரி.கோகுலன் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

article_1470051914-INJPL16Man-of-the-mat

போட்டியின் நாயகனாக, திருநெல்வேலி அணியின் விதுனும் தொடர்நாயகனாக சென்றலைட்ஸ் அணியின் ஜேம்ஸ் ஜான்சனும் தெரிவு செய்யப்பட்டனர்.article_1470051926-INJPL16Man-of-the-Ser

ஜே.பி.எல் 1ஆவது பருவகாலத்தில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி சம்பியனாகியதுடன், மிகுதி 3 வருடங்களிலும் தொடர்ச்சியாக சென்றலைட்ஸ் அணி சம்பியனாகியமையும் குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/178445/ம-ன-ற-வத-தடவ-ய-கவ-ம-சம-ப-யன-னத-ச-ன-றல-ட-ஸ-#sthash.r8OwNcX6.dpuf
- See more at: http://www.tamilmirror.lk/178445/ம-ன-ற-வத-தடவ-ய-கவ-ம-சம-ப-யன-னத-ச-ன-றல-ட-ஸ-#sthash.r8OwNcX6.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ந‌ண்பா🙏🥰............................................
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • 0.50 ஈரோ பொருளை 2 ஈரோவுக்கு விற்றது சப்பை மேட்டர்தான்….. இது எழுதாமலே விளங்க வேணும்…. எழுதியிம் விளங்கவில்லை எண்டால் கஸ்டம்தான்🤣. ————— அம்சமான ஹம்சமாலி ரேஞ் ரோவரில் சுத்துறா…. அர்ஜூன் மகேந்திரன் அப்பீட்டு…. இலங்கை கிரிகெட்டில் கொள்ளை ரிப்பீட்டு…. திறைசேரியிலே திருட்டு…. ஷப்டர் தன் கழுத்தை தானே நெரித்தார்……. இதெல்லாம்தான் சப்பை மேட்டர்….80 ரூபா வடை அல்ல🤣. பிகு அது சரி எங்க நம்மட குட்டி சிறிதரன்? ஒரு கேள்வியோடு ஓடினவர்தான் - 2 நாளா தலை கறுப்பை காணோம்🤣 @பையன்26 பாருங்கோ சிறி அண்ணாவும் இது இப்ப நடந்தது என்கிறார்.
    • இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை........ ஆயினும் எங்கு பார்த்தாலும் ஆண்கள் குடித்துவிட்டு புரளுவதும் பெண்கள் ஆலயம் ஆலயமாய் அலைவதும்தான் எல்லோருக்கும் தெரிகின்றது ......அதுதான் ஆண்களின் சார்பாய் எனக்கு வேதனை தருகின்றது.......!  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.