Jump to content

விபத்தில் யாழ். மத்திய கல்லூரி மாணவன் பலி


Recommended Posts

விபத்தில் யாழ். மத்திய கல்லூரி மாணவன் பலி
 
 

article_1466742395-accident.jpg-சொர்ணகுமார் சொரூபன்

யாழ். காங்சேசன்துறை வீதி வண்ணார்பண்ணை பகுதியில் நேற்று வியாழக்கிழமை (23) இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்து, யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும், தாவடி காளி கோவிலடியைச் சேர்ந்த தேவராஜா நிறோஜன் (வயது 17) என்ற மாணவனே உயிரிழந்தார்.

சைக்கிளில்; பாடசாலைக்குச் சென்ற மாணவனை வேகமாக வந்த பட்டா வாகனம் மோதித்தள்ளியது. இதில் மாணவன் பலத்த காயங்களுக்குள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

- See more at: http://www.tamilmirror.lk/175429#sthash.H9tM2MiD.dpuf
Link to comment
Share on other sites

யாழ் மத்திய கல்லூரி மாணவன் விபத்திற்கு காரணம் டிமோ பட்டா அல்ல நிறுத்தப்பட்டடிருந்த ஹயஸ் வாகனமே.

வாகனத்தில் இருந்து இறங்கும் மனிதன் தம்மை அல்லது தமது சாரதியை தக்க வைத்துக் கொள்ளவே சைக்கிளை எடுத்து வந்து ஓரமாக்கிவிட்டு ஒன்றும் தெரியாதவர்கள் போல நிற்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிக போக்குவரத்து உள்ள பகுதியில் வாகனத்தை தான் தோன்றித்தனமாக நிறுத்தியதும்,  போக்குவரத்து நடைபெற்றுக்குக் கொண்டிருக்கும் பக்கத்தில் அந்த வாகனச் சாரதியே.... பக்க  கண்ணாடியை பார்க்காமல் கதவை திறந்ததால்,
எதிர்கால கனவுடன் பாடசாலை சென்ற மாணவனை கொலை செய்து விட்டார்கள்  பாவிகள்.
ஆம்... இது விபத்தல்ல, கொலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல். 

பெற்றோரின் கனவையும் தனது கனவையும் சுமந்த மாணவன் அனியாயமாகச் சவடைந்தது........... 

இதுபோன்ற அனியாயாச்சாவுகள் குறித்து அரசோ காவல்துறையோ கவலைகொள்ளாது. தமிழரென்பதால் பெரியவிடையமே இல்லை. ஆனால் குமுகாய நலன்விரும்பிகள் தத்தமது பகுதியின் வீதிகளின் வளங்களுக்கேற்ற நடைமுறைகளை மாநகர, நகர, பட்டணசபைகள் ஊடாக அமுலாக்க முன்வருவதனூடாக இதுபோன்ற சாவுகளைத் தடுக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயச் சாவு.... ஆழ்ந்த இரங்கல்கள்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொம்பர் செல் அடி காலங்களில் கூட இப்படி நாளும் சாவுன்னு ஊர் இருந்ததில்லை. இப்ப தினமும் அநியாயச் சாவுகள். கவனயீனமான நிர்வாக முறைமைகளும்.. காத்திரமற்ற காவல்துறையும்.. நீதியை நாட்ட விரும்பினாலும் நாட்ட முடியாமல் இயங்கும் நீதித்துறையும்.. எமது மக்களுக்கு ஆக்கிரமிப்பு அளித்த பரிசுகளாகி விட்டன. :rolleyes:tw_angry:

மத்தியின் மைந்தனுக்கு ஆழ்ந்த இரங்கலும் கண்ணீரஞ்சலியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை கனவுகளுடன் இந்தப் பிள்ளை வாழ்ந்திருக்கும்.
இரு மனிதர்களின் கவனக்குறைவால் இப்படி ஒரு விபத்து நடந்தது என்று நம்பமுடியவில்லை.
ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டம் ஒழுங்குகள் கடைப்பிடிக்காமையினால் ஒரு மரணம்....
ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

கதவைத் திறந்த சாரதி கைது
 

article_1467194995-bbbbbbbbbbbbb.jpg

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம் சிவன் கோவிலுக்கருகில் வானின் கதவைத் திறந்தமையால் விபத்துக்குள்ளாகிய மாணவன் உயிரிழந்தமை தொடர்பில், வானின் கதவைத் திறந்த வானின் சாரதியை, இன்று புதன்கிழமை (29) கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் பகுதியைச் சேர்ந்த மேற்படி நபரை, சி.சி.டி.வி கமெராவின் உதவியுடன் கைது செய்ததாக பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சிவன் கோயிலுக்கு அருகில் கடந்த 23ஆம் திகதி, சிறியரக வாகனத்துடன் மோதுண்டு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்விகற்கும் தாவடி, காளிகோவிலடியைச் சேர்ந்த தேவராஜா நிறோஜன்
(வயது 17) என்ற மாணவன் உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பில் சிறியரக வாகனச் சாரதியைக் கைது செய்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்ட போது, விபத்து நடைபெற்ற இடத்தில் அமைந்துள்ள கடையொன்றின் சி.சி.டி.வி கமெரா பதிவு கிடைத்தது.

அதில், விபத்து இடம்பெற்ற காட்சியைப் பார்த்த போது, அந்தக் கடையின் முன்பாக நிறுத்தப்பட்ட வானொன்றின் கதவை, அந்த வானின் சாரதி சடுதியாக திறந்தவேளை, பின்னால் சைக்கிளில் வந்துகொண்டிருந்த மாணவன் வான் கதவுடன் மோதுண்டு, கீழே வீழ்ந்துள்ளமையும், அதன் பின்னரே, சிறியரக வாகனம் மாணவனை மோதியமையும் தெரியவந்தது.

இதனையடுத்து, வானின் இலகத்தகட்டு இலக்கத்தை வைத்து, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினூடாக வானைச் செலுத்தி வந்த புத்தளத்தைச் சேர்ந்த நபரை இனங்கண்ட பொலிஸார், அவரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

பொலிஸ் நிலையம் வந்த நபரை விசாரணை செய்த பொலிஸார், விசாரணை முடிந்த பின்னர் அவரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்துள்ள சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

சிறியரக வாகன சாரதி, ஏற்கெனவே யாழ்ப்பாண நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/175848/கதவ-த-த-றந-த-ச-ரத-க-த-#sthash.6G25nshG.dpuf
Link to comment
Share on other sites

இரண்டு வாகன சாரதிகளும் பாரிய விதி மீறலைச் செய்துள்ளனர்.

குறுகிய பாதையில் நிற்கும் ஒரு வாகனத்தை, அதுவும் முன்னால் செல்லும் துவிச்சக்கர வாகனத்தைப் பற்றி கவலைப்படாமல் அதிக வேகத்தில் கடக்க முயன்ற பட்டா ரக வாகன சாரதியும் தவறு செய்தவர் ஆகின்றார்.

இது சாதாரண விபத்து என்பதற்கு அப்பால் கொலை என்றே கருத வேண்டும். மாணவர் குடும்பத்துக்கு குறைந்தது 1 கோடி ரூபா நஷ்ட ஈட்டை இரண்டு வாகன சாரதிகள் / உரிமையாளர்கள் செலுத்த வேண்டும்.

அப்போது தான் இது போன்ற குற்றங்கள் குறையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப் பையனின் ஆத்மா சாந்தியடையட்டும்...வாகனத்தை பிழையான திசையில் பாக் பண்ணினதும் பத்தாமல்,யார் வருகிறார்கள் என பார்க்காமல் கதவைத் திறந்த டிரைவரைத் தான் தூக்கில போடோனும்...இந்த வீடியோவை அந்தப் பெற்றோர்கள் பார்த்தால் எப்படி துடிச்சுப் போவார்கள்!

Link to comment
Share on other sites

யாழில் உள்ள பிரபல கல்லூரியால் நிராகரிக்கப்பட்ட 17 வயது மாணவன் அமரர் நிரோஜ் தேவராஜா என்பவரை யாழ் மத்திய கல்லூரியில் இணைத்து கற்பிக்க முன்வந்தமை கல்லூரியின் சிறந்த நற்செயல்.

 

 

அதே நேரம் முதல் நாளிளேயே அவன் இறந்த விட்ட அவலம் நெஞ்சைப் பிளந்து விட்டது.

அவர்களும் பாடசாலையில் அவனை இணைத்திரா விட்டால் யாழ் மத்திய கல்லூரி மாணவன் என்ற அடையாளம் இல்லாமல் அநாதையாக இறந்திருப்பான்.

ஆனால் விதி, உயர்தரத்தில் முதல்நாளே படிக்கச் சென்ற அவன் நேற்றுடன் இந்த உலகை விட்டுச் செ(வெ)ன்று விட்டான்.

பாடசாலை மாணவர்கள் குழப்படி செய்கிறார்கள் என்று பாடசாலைகள் ஒதுக்கி விட்டால், அவர்களை வழிநடத்தி நல்ல மாணவர் சமூகத்தை உருவாக்கித் தருவது யார்?

பெயருக்கும் புகழுக்கும் பாடசாலைகளை இயக்குவதால் சமூகத்தில் விளையும் நன்மை எதுவுமில்லை.

அந்த மாணவன் யாரோ செய்த குற்றத்துக்காக வகுப்புக்கு சென்ற போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டான்.

நான் அறிந்த வரையில் அவன் பெரிய குற்றங்கள் எதுவும் புரியவில்லை.

இதை ஒரு காரணமாக வைத்து O/L வரை படித்த அந்த மாணவனை உயர்தர வகுப்பில் கற்க பாடசாலை அனுமதிக்கவில்லை.

தாயார் கதறியழுது கெஞ்சி இரந்து கேட்டும் அந்தப் பாடசாலைச் சமூகம் அவனுக்கு பாடசாலையில் கற்க இடம் தரவில்லை.

இறுதியாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அந்த மாணவனுக்கு அடைக்கலம் கொடுத்து அரவணைத்தது.

அடுத்த (முதல்) நாள் ஆசையோடு பாடசாலைக்குச் செல்லும் வழியில்,

யாழ் நகருக்கு அண்மையில் நின்ற வாகனம் ஒழுங்கு முறைகளுக்கு முரணாக அவன் வருவதை அவதானிக்காது முன்கதவைத் திறக்கவும் சைக்கிளில் வந்த மாணவன் கதவுடன் மோதிக் கீழே விழுந்த போது பின்னால் வேகமாக வந்த வாகனம் அவன்மீதேறி அடித்துகொன்று விட்டு அப்பால் நின்றது.

பெறுபேறுகளுக்காக பாடசாலை நடாத்துவதை விட

வாழ்வில் தடம் புரள முற்படும் மாணவர்களை அனைத்து ஆரோக்கியமான மாணவர்களை பாடசாலைகள் செய்ய மறுத்து வருகின்றனவா?

அந்த மாணவன் அந்தப் பாடசாலையிலேயே அனுமதிக்கப்பட்டிருந்தால், அவன் யாழ் நகருக்கு சென்றிருக்கவும் மாட்டான், இறந்திருக்கவும் மாட்டான்.

இனி என்ன செய்வது, குற்றுயிராக 3 மணித்தியாலங்களுக்கு மேலாகவும் யாழ் போதனா வைத்தியசாலையில் துடிதுடித்து இறந்து போனான்.

கடைசி நேரத்திலும் போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் அவன் உயிர்காக்க தொடர்ந்து போராடினார்கள் என்பது மட்டும் ஆறுதல் தருகிறது.

அவன் இப்போது இந்தப் மனதமற்ற ஜட மனிதர்களின் போலி வாழ்வில் இருந்து மீண்டு நிரந்தர வாழ்வை அடைந்து விட்டான்.

உண்மையின் தரிசனம்
ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன்

முகநூல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் முழுவதும் வாகன மயம் இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டும் வாகனங்கள் கூடுதலாக வடக்கு கிழக்கில் விற்பனை ஆனால் இவர்கள் சட்ட முறையில் ஓட்டும் அனுமதி பத்திரம் பெறாமல் உள்ளால வாங்கி விடுகிறார்கள் இதனால் இவர்கள் ஒரு நிறைவான சாரதி கிடையாது உதாரணமாக கண்ணாடி பார்த்து வாகனத்தை செலுத்துவதில்லை இதனால் தான் கூடிய விபத்துகள் நடக்கின்றது. 

ஆழ்ந்த இரங்கல்கள் அம்மாணவனுக்கு 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அகவை என்பது ஒரு எண்ணிக்கை  அவ்வளவுதான்!   முக்கியம் வேண்டியது  ஆரோக்கியமும் வலிமையையும்  நல்ல சிந்தனையும் கருத்தாடலும்    அது தான் என் எண்ணம் அது இருக்கும் மட்டும் நீ இளைஞனே    ஆகவே நான் மௌனமாகிறேன் 
    • இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்) இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம்.   நாளை நாடு திரும்புகிறோம்... இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன். நன்றி.
    • மின்னம்பலம்  சர்வே : விழுப்புரம் விஸ்வரூபம் எடுப்பது யார்? Apr 15, 2024 21:54PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விழுப்புரம்(தனி) தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்ரவிகுமார் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் முரளிசங்கர் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் இயக்குநர் மு.களஞ்சியம் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  விழுப்புரம்,  திண்டிவனம்(தனி) ,  விக்கிரவாண்டி,  திருக்கோயிலூர்,  உளுந்தூர்பேட்டை மற்றும் வானூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிகுமார் 42% வாக்குகளைப் பெற்று மீண்டும்இரண்டாவது முறையாக விழுப்புரம் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் 34% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்.  பாமக வேட்பாளர் முரளிசங்கர் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயக்குநர் களஞ்சியம் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விழுப்புரம் தொகுதியில் இந்த முறையும் ரவிகுமார் வெற்றி பெற்று விடுதலை சிறுத்தைகளின்கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-vilupuram-constituency-who-wins-the-race/   மின்னம்பலம் மெகா சர்வே: நாகப்பட்டினம்… வெல்லப் போவது யார்? Apr 16, 2024 08:32AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் நாகப்பட்டினம் (தனி) தொகுதியில்  திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)  சார்பில் வை.செல்வராஜ் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கர் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்த்திகா போட்டியிடுகிறார். சிபிஐ, அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில்,  இத்தொகுதி மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நாகப்பட்டினம்  நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருத்துறைப்பூண்டி (தனி),  நாகப்பட்டினம்,  வேதாரண்யம்,  திருவாரூர்,  நன்னிலம் மற்றும் கீழ்வேளூர் (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் 49% வாக்குகளைப் பெற்று நாகப்பட்டினம் தொகுதியில் முன்னிலை பெறுகிறார்.  அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்த்திகா 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, நாகப்பட்டினம் தொகுதியில் இந்த முறை வை.செல்வராஜ் வெற்றி பெற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpi-candidate-vai-selvaraj-will-win-with-49-percent-votes-in-nagapattinam-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: சேலம்… வெற்றிக் கனி பறிப்பது யார்? Apr 16, 2024 10:34AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் செல்வகணபதி களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் விக்னேஷ் போட்டியிடுகிறார். பாமக சார்பில் அண்ணாதுரை போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின்சார்பில் க.மனோஜ்குமார் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சேலம் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சேலம் (மேற்கு),  சேலம் (வடக்கு),  சேலம் (தெற்கு),  எடப்பாடி,  வீரபாண்டி மற்றும் ஓமலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் செல்வகணபதி 45% வாக்குகளைப் பெற்று சேலம் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் அண்ணாதுரை 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.மனோஜ்குமார் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சேலம் தொகுதியில் இந்த முறை செல்வகணபதி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-selvaganapathy-will-win-with-45-percent-votes-in-salem-parliamentary-constituency/   மின்னம்பலம் மெகா சர்வே: தூத்துக்குடி… யார் கப்பலில் வெற்றிக் கொடி? Apr 16, 2024 13:55PM IST  2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? தூத்துக்குடி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ரொவினா ரூத் ஜேன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தூத்துக்குடி, விளாத்திக்குளம், திருச்செந்தூர்,  ஒட்டப்பிடாரம்,  கோவில்பட்டி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் கனிமொழி 50% வாக்குகளைப் பெற்று மீண்டும் தூத்துக்குடி தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தூத்துக்குடி தொகுதியில் இந்த முறை கனிமொழி வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-kanimozhi-won-tuticorin-loksabha-constituency-in-minnambalam-mega-survey/   மின்னம்பலம் மெகா சர்வே : விருதுநகர் Apr 16, 2024 14:46PM IST   2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணிக்கம் தாகூர் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சி.கவுசிக் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்குஎன்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பரங்குன்றம்,  திருமங்கலம்,  சாத்தூர்,  சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் பகுதிகளில் நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 45% வாக்குகளைப் பெற்று மீண்டும் விருதுநகர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சி.கவுசிக் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விருதுநகர் தொகுதியில் இந்த முறையும் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்று மீண்டும் காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-virudhunagar-constituency-result-congress-manickam-thakoor-wins-dmdk-came-second-place/
    • பையா உடல்நலத்தைக் கவனாமாகப் பேணவும் ........!   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.