Jump to content

இறைவி -"இறைவி"க்குப் பதில் "மனிதி" பொருத்தமான பெயர் - அன்னா பொன்னம்பலம்


Recommended Posts

இறைவி -"இறைவி"க்குப் பதில் "மனிதி" பொருத்தமான பெயர் - அன்னா பொன்னம்பலம்:-



இறைவிக்குப் பதிலாக மனிதி என்றே பெயர் வைத்திருக்கலாம். ஏனெனில் எம் சமூகத்தில் பெண்ணைத் தம்மைப் போல் விருப்பு, வெறுப்பு, ஆசைகள், உணர்ச்சிகள், இலட்சியங்கள் உடைய சக‌மனிசியாக அங்கீகரிக்கப் பின்வாங்குபவர்கள் பலர் அவள் தன் சுயமிழந்து முற்றிலும் கணவனைச் சார்ந்து குடும்பத்துக்காகத் தம்மை இழக்கும் பெண்களை இறைவிகளாக்க ஓடிவருவார்கள். அவர்களின் சிந்தனையைத் தூண்ட இப்படத்தில் வரும் பெண்கள் சக மனித உயிர்கள் என அடித்துச் சொல்லப்பட்டிருக்க வேண்டும்.

உலகம் உனதாய் வரைவாய் மனிதி!

மனிதி வெளியே வா!

மனிதன் என்ற சொல்லுக்குள்ளே அடங்காதே பெண்ணே!

உயர‌ம் உனதே தான்!

அமர்ந்தால் உயரம் தெரியாது - நீ நிமிர்ந்தே வா பெண்ணே!

மனிதி வெளியே வா!

பாட்டு நன்றாக எழுதப்பட்டுள்ளது. அதைக் கடைசியில் போட்டதிற்குப் பதிலாக படத்தின் இடை இடையே போட்டு இறைவிகளாகச் சித்தரித்துருக்கும் ஒருவராவது முழுதாக இந்த சமூக ஒடுக்குமுறையிலிருந்து முற்றிலும் வெளியே வருவதாகக் காட்டியிருக்கலாம். இந்தப்பாட்டை எத்தனை பேர் கேட்டிருப்பார்களெனத் தெரியாது. ஏனெனில் இப்பாட்டு இறுதியில் ஒலிக்கத்தொடங்கும்போதே பலர் சினிமா அரங்கை விட்டு வெளியேறத் தொடங்கிவிட்டனர். ஆனால் கேட்கப்  படவேண்டிய பாட்டே. மனிதி வெளியே வா என்ற இறுதியில் போட்ட பாட்டை படத்தில் இடை இடையே போட்டு படத்தின் முக்கிய மூன்று பெண் பாத்திரங்களில் இருவரையாவது வெளியில் வரச்செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

சில woMEN கதை என்று போடப்பட்டிருந்தது. நான்கு பெண்களும் அவர்களின் வாழ்க்கையில் முழுதாக ஆதிக்கம் செலுத்தும் ஆண்களைப் பற்றியதுமான கதை. ஆண்களின் கதாபாத்திரங்கள் தான் கதையை முழுதாக ஆக்கிரமித்திருக்கிறது.

முக்கியமாக‌ மூன்று பெண்கதாபாத்திரங்கள்: மலர்விழி, பொன்னி, யாழினி.

கணவனை இழந்த மலர்விழி, love and other drugs என்ற ஆங்கிலப் படத்தில் வரும் Anne Hathaway இன் கதாபாத்திரத்தை ஞாபகப்படுத்தியது. ஆனால் இந்தப் படத்தில் ஒரு குழப்பமான கதாப்பாத்திரமாக இருக்கிறது. தனக்கு உடலுறவு மட்டுமே வேண்டும் எனத் துணிவாகக் கூறிய பின் எதற்கு அவனைப் போகச் சொல்லி விட்டு அழவேண்டும். அவளுக்குப் பிடித்திருந்தால் ஒன்றாக வாழ்க்கை நடத்த எந்தத் தடையும் இருப்பதாகத் தெரியவில்லையே. ஒருவேளை ஆண்களின் பார்வையிலிருந்து எடுக்கப்பட்டதால், பெண்களால் மனரீதியாகக் காதலில்லாமல் இம்மாதிரியான உறவுகளில் எடுபட்டுச் சந்தோசமாக இருக்க மாட்டார்கள் எனக் கார்த்திக்  நினைத்தாரோ? அல்லது அப்படிக் காட்டினால் தான் மக்கள் அவளை இறைவியாகப் பார்ப்பார்கள் அல்லது கெட்டவளாகவே பார்க்கப்படுவாள் என யோசித்தாரா தெரியவில்லை. இந்தக் கதாபாத்திரம் மைக்கலின் மாமாவைச் சந்திக்கும் காட்சி வரை நன்றாகவே இருந்து பின் எதற்காகச் சிதைக்கப்பட்டதென்று விளங்கவேயில்லை.

இப்படத்தில் பிடித்த கதாபாத்திரமென்றால் பொன்னி என்பேன். கட்டுக்கோப்பாக, பெண்ணின் வாழ்வென்றால் திருமணம், கணவன், குழந்தைகள் என்ற குறுகிய வட்டம் மட்டுமே என்று பிறந்ததிலிருந்தே யாழினி சொல்வது மாதிரி template வாழ்க்கைக்கு வளர்க்கப்பட்டவள். அதையே தான் அவள் கனவு காண்கிறாள். ஒன்றுமே தெரியாது மாதிரி இருந்தாலும் எல்லாவற்றையும் புரிந்தே கணவனுடன் வாழ்கிறாள். பின் சந்தர்ப்பம் வரும் போது கணவனை மிகத் துணிச்சலாக எதிர் கொள்கிறாள். இவள் தான் கொஞ்சமாவது வெளியே வரத் துணிகிறாள் போலத்தெரிகிறது. அவள் மழையில் கடைசியில் நனைவது அதைக் காட்டத்தானோ?

யாழினி எனது சமூகத்தில் பெண்கள் படித்து நல்ல வேலைக்குப் போகிறார்கள் என்பதற்காக மட்டுமே அவர்கள் சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட எல்லைக்குள் வெளியே சிந்திப்பார்கள் என நிச்சயமாகச் சொல்ல முடியாது என்பதற்கு நல்ல உதாரணம். கணவன் அவ்வளவு அட்டகாசம் செய்த பின்பும், தனிய இருக்க வசதி இருந்தும் ஏன் பெற்றோருடன் இருந்து பெற்றோர் பேச்சுக்குக் கட்டுப்படுவான்? மறுமணத்தைப் பற்றி யோசிக்கும் போது அவள் நண்பி இந்தத் திருமணத்தை விட்டு வெளியே வா - எனச்சொல்லும் போது அவளால் முடியவில்லை. ஏன்? கடைசி வரையும் மழையிலும் நனைய யோசிக்க வில்லை.

சிற்பி தனது மனைவியை சித்திரவதை எல்லாம் செய்துவிட்டு தாவரமாகிய நிலையில் இறைவி என்று விளிப்பது சகிக்கவில்லை. மைக்கல் உன்னை மட்டுமே காதலிக்கிறேன் மறக்க முடியவில்லை என மலர்விழியிடம் சொல்லி, ஆனால் அவள் வேறொருவனுடன் இருக்கிறாள் என நினைத்த அடுத்த நிமிடத்திலிருந்து தனது மனைவியிடம் உருகுவதும் சகிக்க முடியவில்லை.

ஜெகன், மற்ற இருவருடன் இருந்து குடிக்கும் போது பெண்களை இழிவாக நடத்துவது பற்றிக் கதைப்பது சிரிப்பை வரவழைத்தது. மற்ற இருவர் போலவும் பலர் கதைக்கும் போது அக்கூட்டத்தில் ஒரு ஆணாவது ஜெகனை மாதிரி அதை எதிர்த்துக் கதைத்து இதுவரை பார்த்ததில்லை.  பெண்ணியப் பார்வையுடன் சில இடங்களில் கதைப்பது போல் தெரிந்தாலும் பல தடவைகள் ஜெகன் கதைக்கும் போது benevolent sexism தல தூக்குகிறது. ஏதோ பெண்களைச் அவர்கள் நினைத்த மாதிரிச் சுதந்திரமாக வாழவிடு என்று நல்லது சொல்வது போலுள்ளது எனப் பார்த்தால் பின் ஜெகனும் பொன்னி தானே முடிவெடுத்து வேண்டாமெனச் சென்ற பின்பும் அவளுக்கு எது நல்லது என்று தனக்குத் தான் தெரியும் என்கிறான்.

கடைசியில் அருள் சொல்வது எல்லா ஆண்களும் அவர்களைப் போலத் தான் - பொறுத்து, சகித்துப் போக நாங்கள் என்ன பெண்களா எனக் கேட்பது பிடிக்கவில்லை. ஏற்கனவே சமூகம் அப்படித் தான் நினைத்துக் கொண்டிருக்குது. "ஆம்பிளைகளென்றால் அப்படித்தானே இருப்பினம். நீங்கள் தான் பொறுத்துப் போகவேண்டும்" என எத்தனை பேர் இன்னும் சொல்லிக்கொண்டிருக்கினம்.

இந்தப் படத்தின் செய்தியை இவ்வளவு சிக்கலான ஒரு கதைக்குள் வைத்து ஏன் சொல்ல முயற்சி செய்தினம் எனப் புரியவில்லை. இந்தப் பெண் கதாபாத்திரங்கள் சகஜமாக நாம் வாழ்க்கையில் பார்ப்பவர்கள் (மலர்விழியைத் தவிர‌). ஆனால் அது தான் சகஜம் என அதைப் பற்றி யோசிக்காமல்/ கேள்வி கேட்காமல் கடந்து போபவர்களே பலர். ஆனால் நாம் பலர் இதைச் சமூகத்தில் கேள்வி கேட்கிறோம். இவ்வாறு தத்தளிக்கும் பெண்களை எமது அன்றாட வாழ்வில் சந்திக்க நேரும் போது அவர்களுடன் கதைத்து முற்றாக இல்லாவிட்டாலும் இயலுமானவரை வெளியில் வர உதவி செய்கிறோம். இப்படிக் கேள்வி கேட்கும் பல பெண்கள் சமூகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதை யாரும் காது கொடுத்துக் கேட்பதில்லை என்பதே நிஜம். எத்தனை ஆண்களிடம் நான் இதைப் பற்றி கதைத்திருக்கிறேன். ஆனால் அதை ஒரு நக்கலாக/ வீண் விவாதமாகக் கடந்து போவோரே பலர். அதனால் தான் இந்தப் படம் போல், இச்சமூகத்தில் இந்த மாதிரிக் கோணத்தில் யாரும் கேட்டதில்லை - இது பலரை யோசிக்க வைக்கும் என்று சிலர் சொன்ன போது விரக்தியாக இருந்தது. பெண்கள் சிலர் கதைக்கும் போது காது கொடுத்துக் கேட்க நினைக்காதவர்கள் ஒரு ஆண் 13 மில்லியன் ரூபாயில் படம் எடுத்து mansplain பன்ணும் போது தான் பெண் என்பவள் பெண்ணுறுப்பையும் கருப்பையையும் தாண்டி ஒரு சக மனித உயிர் என்பது உங்களுக்கு விளங்குதென்றால், அப்படியாவது சிந்தியுங்கள் என்பதைத் தாண்டி வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை.

இதன் பிறகாவது இந்த விடயங்கள் முக்கியம் - இவற்றை கதைக்க/விவாதிக்க வேண்டும் - நாம் உணர்ந்து எமது வழக்கங்களை, நம்பிக்கைகளை மாற்ற வேண்டும் எனத் தோன்றினால், வாருங்கள் கதைக்கலாம்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133343/language/ta-IN/article.aspx

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.  
    • Yarl IT hub தொடர்பாக நானும் ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன் என மிகுந்த அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் 😀    
    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • இப்போ பெரும்பாலான கடைகளில் தாச்சியில் கொத்த்தை - கொத்தாமல் கிண்டுகிறார்கள் அண்ணை. நான் ஒரு கொத்து அடிப்படைவாதி. தகரத்தில் கொத்தும் கடை தேடியே பல மணிகளை வீணடித்தேன்🤣
    • சுலபமான மாலை நேர சிற்றூண்டி... - உருளைக்கிழங்கு முட்டை  ப்ரை     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.