Jump to content

இங்கிலாந்து எதிர் இலங்கை ஒருநாள் போட்டி தொடர் செய்திகள்


Recommended Posts

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் முடிவு

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் முடிவு:-

 

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி எதிர்பாராத விதமாக சமனிலையில் முடிவடைந்துள்ளது.


இரண்டு அணிகளுமே நிர்ணயிக்கப்பட்ட ஐம்பது ஓவர்களில் தலா 286 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இங்கிலாந்து அணி வீரர் ப்லான்கெட் இறுதிப் பந்தில் ஆறு ஓட்டம் பெற்று போட்டியை சமநிலை செய்தார்.


நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி இலங்கையைத் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.


இதன்படி களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.


இதில் அணித் தலைவர் அன்ஜலோ மெத்யூஸ் 73 ஓட்டங்களையும் சீக்குகே பிரசன்ன 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.


பந்து வீச்சில் வோகஸ், வில்லி மற்றும் ப்லான்கெட் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.


பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.


இதில் கிறிஸ் வோகஸ் ஆட்டமிழக்காது 95 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 93 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.


பந்து வீச்சில் சுரங்க லக்மால், அன்ஜலோ மெத்யூஸ் மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.


போட்டியின் ஆட்ட நாயகனாக கிறிஸ் வோகஸ் தெரிவு செய்யப்பட்டார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133350/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

பரபரப்பான போட்டி சமநிலையில் முடிவடைந்தது (காணொளி இணைப்பு)

 

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

Sr_vs_En.jpg

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கட்டுகளை இழந்து 286 ஓட்டங்களை பெற்றது.

அணிக்காக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் மெத்தியுஸ் 73 ஓட்டங்களை பெற்றதோடு, அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சீக்குகே பிரசன்ன 28 பந்துகளில் 59 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார்.

 

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சினை பொருத்தவரையில், வில்லி, வோர்க்ஸ் மற்றும் பிளங்கட் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் தடுமாறியது. 82 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது.

இதன்பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வோர்க்ஸ் ஆட்டமிழக்காமல் 95 ஓட்டங்களை பெற்றதோடு, பட்லர் 93 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

இறுதியில் 1 பந்துக்கு 7 ஓட்டங்கள் தேவையென்ற நிலையில் பிளங்கட் 6 ஓட்டத்தை விளாசி போட்டியை சமநிலை படுத்தினார்.

இங்கிலாந்து அணி 8 விக்கட்டுகளை இழந்து 286 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் மெத்தியுஸ், லக்மால் மற்றும் பிரதீப் தலா 2 விக்கட்டுக்களை கைப்பற்றினர். போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின் கிரிஸ் வோர்க்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.

http://www.virakesari.lk/article/7921

Link to comment
Share on other sites

பிளன்கெட் அடித்த கடைசி பந்து சிக்ஸ்: 'டை' ஆன இலங்கை - இங்கிலாந்து போட்டி

 
 
படம்: கெட்டி இமேஜஸ்
படம்: கெட்டி இமேஜஸ்

டிரெண்ட் பிரிட்ஜில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் 286 ரன்கள் ஸ்கோரை விரட்டிய இங்கிலாந்து அணி பிளன்கெட் அடித்த பரபரப்பான கடைசி பந்து சிக்ஸரினால் 286 ரன்கள் எடுக்க போட்டி அரிதான முறையில் ‘டை’ ஆகி வெற்றி தோல்வியின்றி முடிந்தது.

இங்கிலாந்தின் கடைசி வீரர் பிளன்கெட் இறங்கும்போது இங்கிலாந்து வெற்றி பெற 26 பந்துகளில் 52 ரன்கள் தேவைப்பட்டது. இலங்கை வெற்றி பெற்றிருக்க வேண்டும் இப்போதே, ஆனால் கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் என்பதாக நிலைமை மாறியது.

கிரீசில் பிளங்கெட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் நின்று கொண்டிருந்தனர், இருவரும் 49-வது ஓவரில் பவுண்டரிகள் அடித்து 16 ரன்களைச் சேர்த்தனர். கடைசி ஓவரின் முதல் 5 பந்துகளில் 7 ரன்களை இருவரும் எடுத்தனர், கடைசி பந்தில் டை செய்ய 6 ரன்கள் தேவை. நுவான் பிரதீப் கடைசி பந்தை சற்றே ஷார்ட்டாக வீச லியாம் பிளன்கெட் நேராக பவுலர் தலைக்கு மேல் சக்தி வாய்ந்த சிக்சை அடிக்க ஆட்டம் டை ஆனது.

இங்கிலாந்தை ஒரு விதத்தில் இலங்கை ஆடவிட்டது என்றே கூற வேண்டும், காரணம் ஜேசன் ராய், ஹேல்ஸ், ஜோ ரூட், மோர்கன் (43), மொயின் அலி ஆகியோர் பெவிலியன் திரும்ப 18-வது ஓவர் முடிவில் இங்கிலாந்து 82/6 என்று தோல்வி முகம் காட்டியது.

அதன் பிறகு 7-வது விக்கெட்டுக்காக சாதனைக் கூட்டணி அமைத்த கிறிஸ் வோக்ஸ் (95 நாட் அவுட்), ஜோஸ் பட்லர் (93) ஆகியோர் 7-வது விக்கெட்டுக்காக 138 ரன்களைச் சேர்த்தனர். 149 பந்துகளில் 138 ரன்கள் சேர்க்கப்பட்டது, 7-வது விக்கெட்டுக்காக இது 2-வது அதிக ரன் கூட்டணியாகும்.

ஜோஸ் பட்லர் 30/4 என்ற நிலையில் களமிறங்கினார், நிதானமாகத் தொடங்கி 99 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 93 ரன்கள் எடுத்து சீகூகே பிரசன்னாவிடம் ஆட்டமிழந்தார், ஷனகா பிடித்த கேட்ச் அருமையானது. கிறிஸ் வோக்ஸ் 92 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 95 ரன்கள் எடுத்தார். லியாம் பிளன்கெட் 11 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 22 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்ததோடு, டை-யிற்கான சிக்ஸரையும் அடித்தார்.

ஆஞ்சேலோ மேத்யூஸ் பேட்டிங்கில் நிதானமான 73 ரன்களை எடுத்து அணியை கரை சேர்த்ததோடு, ஜேசன் ராய், ஜோ ரூட் ஆகிய அபாயகரமான விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

பேட்டிங்கில் இலங்கை அணி 56/3 என்று 8.4 ஓவர்களில் தடுமாறியது. சந்திமால் 37 ரன்கள் எடுத்தார். குசல் பெரேரா (24), மெண்டிஸ் (17) ஆகியோர் தொடங்கி பிறகு ஆட்டமிழந்தனர். சந்திமால் ஆட்டமிழந்த பிறகு நடுவில் ஒரு 8 ஓவர்கள் சீகூகே பிரசன்னாவின் அனாயசமான அதிரடியைக் காணமுடிந்தது, ஒரு புறம் ரன்களே வராமல் இருந்த நிலை போக இவர் இறங்கியவுடன் தாறுமாறு அடியாக மாறிப்போனது, அன்று ஜெயசூரியாவின் 48 பந்து சத சாதனையை நூலிழையில் தவறவிட்ட சீகுகே நேற்று முதல் 16 பந்துகளில் 15 ரன்களை எடுத்தார், ஆனால் அதன் பிறகு 12 பந்துகளில் 44 ரன்களை விளாசினார். அதிர்ச்சியூட்டும் அதிரடி.

அதாவது 28 பந்துகளில் 8 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 59 ரன்கள் எடுத்தார், மொத்தம் 56 ரன்கள் ஓடவேண்டிய தேவையில்லாமல் பவுண்டரிகளாக்வே வந்தது. மொயின் அலி, பிளென்கெட் வீசிய ஒரு 5 பந்துகளில் 4 சிக்சர்கள். அந்தத் தருணத்தில் 3 ஓவர்களில் இலங்கை 49 ரன்கள் விளாசியது, எங்கிருந்தோ வந்தார் இதுதாண்டா நான் என்றார் சீகுகெ பிரசன்னா. ஒரு காலத்தில் அரவிந்த டிசில்வா இப்படித்தான் நம்பமுடியாத அதிரடி ஆட்டம் ஆடுவார்.

இலங்கை அணி ஷனகாவின் 20 ரன்களுடனும், மஹரூஃபின் 31 ரன்களுடனும் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது.

ஆட்ட நாயகனாக கிறிஸ் வோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார். 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி எத்தரப்பிற்கும் வெற்றி தோல்வியின்றி ‘டை’ ஆனது.

http://tamil.thehindu.com/sports/பிளன்கெட்-அடித்த-கடைசி-பந்து-சிக்ஸ்-டை-ஆன-இலங்கை-இங்கிலாந்து-போட்டி/article8759761.ece

Link to comment
Share on other sites

இலங்கை-இங்கிலாந்து ஒ. நா.ச.போ. தொடர்
 
21-06-2016 12:11 AM
Comments - 0       Views - 6

- ச.விமல்

Inkvacasrf.jpg

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், டெஸ்ட் போட்டிகளிலும் பார்க்க அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கும் என நம்பலாம்.

டெஸ்ட் போட்டிகளிலும் பார்க்க ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இலங்கை அணி பலமானது. இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய சவாலை வழங்கும் என எதிர்பார்க்க முடியும். ஆனால் இங்கேயும் துடுப்பாட்டம் இலங்கை அணி சார்பாக  கேள்விக்குறியாக உள்ளது. குஷால் பெரேரா மீண்டும் அணிக்குள் வந்துள்ளமை ஆரம்ப துடுப்பாட்டத்தில் பலம்.

டில்ஷான் இந்தத் தொடரில் விளையாடவில்லை. இது இலங்கை அணிக்கு பின்னடைவை உருவாக்கலாம். தனுஷ்க குணதிலக அடுத்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர். குஷால், குணதிலக ஜோடி எதிர்காலத்தில் சாதிக்கும் ஜோடியாக வலம் வரும் என நம்பலாம். அதிரடி மற்றும் நிதானம் கலந்த கலவை. குணதிலகவின் மித வேகப்பந்து வீச்சு மேலதிக பலம்.

அயர்லாந்து தொடரில் லஹிரு திரிமான்ன விளையாடவில்லை. குஷால் மென்டிஸ் மீது மத்தியூஸ் நம்பிக்கை வைத்துள்ளார். அயர்லாந்துடனான முதற் போட்டியில் அறிமுக அரைச்சதமடித்து  நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். இதே போன்று இங்கிலாந்து அணியுடன் தொடர முடியுமா? பார்க்கலாம். லஹிரு திரிமான்ன வெளியே இருக்கும் போது குஷால் மென்டிஸ், உபுல் தரங்க ஆகியோர் அணிக்குள் இருப்பது வேடிக்கையாக உள்ளது. அதிலும் தரங்க பின் மத்திய வரிசை வீரர். சீக்குகே பிரசன்ன சரியாக பந்து வீசாவிட்டாலும் அதிரடி மூலம் மீண்டும் அணிக்குள் இடம் பிடித்துள்ளார்.  தினேஷ் சந்திமால், அஞ்சலோ மத்தியூஸ் ஆகியோர் நம்பிக்கையானவர்கள்.

அடுத்த இடத்தில் இருந்த நம்பிக்கையான சகலதுறை வீரரான மிலிந்த சிரிவர்தன அணியால் நீக்கப்பட்டுள்ளார்.  நம்பிக்கையூட்டும் விதமாக அணியில் செயற்பட்டமை இவர் செய்த தவறா? முக்கிய துடுப்பாட்ட வீரர்கள் ஆட்டமிழந்த வேளைகளில் பின் வரிசை வீரர்களுடன் இணைந்து அணிக்கான ஓட்ட்ங்களை பெற்றுக் கொடுத்துள்ளார். பந்து வீச்சில் வாய்ப்புக்கு கிடைத்த வேளைகளில் விக்கெட்டுகளை கைப்பற்றியுளார். 13 போட்டிகளின் 10 இனிங்ஸில் 262 ஓட்டங்களை 29.11 என்ற சராசரியிலும், 40.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுளார். ஆறாம், ஏழாமிடங்களில் களமிறங்கும் வீரர் ஒருவருக்கு மோசமான பெறுதியா? முன் வரிசையில் விளையாடும் வீரர்களுக்கே இவ்வாறுதான் பெறுதிகள் இங்கே காணப்படுகின்றன. இவர் அணியால் நீக்கப்பட்டமைக்கான காரணம் சனத் ஜெயசூர்யாவுக்கே வெளிச்சம்.

தசுன் சானக அறிமுக ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி நல்ல ஆரம்பத்தை பெற்றுள்ள போதும் இங்கிலாந்து அணிக்கு எதிராக இவரின் வேகம் போதாது என அணியால் நீக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதுக்கில்லை. சுழற் பந்து வீச்சாளர்கள் ஏற்கனவே இலங்கை அணிக்காக விளையாடியுள்ள போதும் இந்த அணியில் உள்ளவர்கள் மீண்டும் வாய்ப்பை பெற்றவர்கள். எனவே புதியவர்கள்தான். உள்ளூர் போட்டிகளில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளையாடும் தனஞ்ய டி சில்வா ஒன்பதாவது இடத்தில் களமிறங்கினார். ஒரு ஓவர் மாத்திரம் பந்து வீசினார். அடுத்த போட்டியில் அணியில் இல்லை. அடடா இதுவல்லோ அறிமுகம்.

பர்வீஸ் மஹ்ரூப் அடுத்த போட்டியில் களமிறங்கினார். துடுப்பாட்டம் அதிரடியாக அமைந்தது. பந்து வீச்சு எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. ஷமின்ட ஏரங்க தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மஹ்ரூப் விளையாடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. நுவான் பிரதீப், சுரங்க லக்மால் ஆகியோரே வேகப் பந்துவீச்சில்    நிச்சயம் விளையாடவுள்ள வீரர்கள். சீக்குகே பிரசன்ன முழு நேர சுழற் பந்து வீச்சாளராக களமிறங்குவார் என நம்பலாம். சகலதுறை வீரர்கள் அணியில் அதிகம் உள்ளமையினால் 50 ஓவர்கள் பந்து வீசுவது என்பது சமாளிக்க கூடியளவில் இருக்கும்.

அணியாக பார்த்தால் புதிய அணி. பலமான இங்கிலாந்து அணியை இந்த அணியால் எதிர்கொள்ள முடியுமா?

இங்கிலாந்து அணி இந்த வருடத்தில் விளையாடும் இரண்டாவது தொடர் இது. தென்னாபிரிக்கா தொடரில் 2-3 என்ற தொடரில் தோல்வியடைந்துள்ளது. அதற்கு முதலில் பாகிஸ்தான் அணியை 4-1 என வென்றுளள்து. பலமான சமபலம் கொண்ட புதிய அணி. ஒய்ன் மோர்கனின் தலைமையில் சிறப்பாக வெற்றிகளைப் பெற்று வருகின்றது.

ஆரம்ப ஜோடி மிகப் பலமானது என கூற முடியாது என்றாலும் அலெக்ஸ் ஹேல்ஸ் அண்மைக்காலமாக ஓட்டங்களை அபாரமாக பெற்று வருகின்றார். ஜோ ரூட் மூன்றாமிலக்க வீரர். சமகால சிறந்த துடுப்பாட்ட வீரர்களுக்கன போட்டியில் உள்ளவர்களில் இவரும் ஒருவர். தலைவர் மோர்கன். அண்மைக்காலமாக  நல்ல போர்மில் இல்லை. ஆனால் இவர் மத்திய வரிசையில் சிறந்த வீரர். அடுத்தவர் ஜோஸ் பட்லர். ஜோ ரூட், ஜோஸ் பட்லர் ஜோடி இணைந்தால் இங்கிலாந்து அணிக்கு ஓட்ட மழை பொழியும். பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக அணியால் நீக்கப்பட்டுள்ளமையினால் ஜொனி பெயர்ஸ்டோ அணியில் இடம் பிடிப்பார் என நம்பலாம். டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்கு எதிராக அடித்தாடிய விதம் போர்ம் என்பன இவருக்கான வாய்ப்புகளை வழங்கும்.

மொயின் அலி அடுத்த இடத்தை பிடிப்பார். இவரின் அதிரடி   துடுப்பாட்டம், சுழற் பந்து வீச்சு என்பன நிச்சயம் கை கொடுக்கும். கிறிஸ் வோக்ஸ் சகலதுறை வீரர். டேவிட் வில்லியும் சகலதுறை வீரர். இவர்களுக்கான போட்டி ஒன்று நிச்சயம் இருக்கும். ஸ்டீபன் பின், கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் முழு நேர வேக்கப்பந்து வீச்சாளராக களமிறங்குவார். ஜோர்டானின் துடுப்பாட்டம் மேலதிக பலம்.

இங்கிலாந்து அணி மிக நீண்ட துடுப்பாட்ட வரிசையை கொண்டுள்ளது. இதை தகர்க்கும் பலமான பந்து வீச்சு இலங்கை அணியிடம் உண்டா? சிறப்பான இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை எதிர்கொண்டு இங்கிலாந்து அணியை வெற்றி பெறும் அளவுக்கு இலங்கை அணியின் துடுப்பாட்டம் நிலைத்து நின்று அதிரடியாக துடுப்பாட்ட கைவரிசையை காட்டுமா? இந்த ஒப்பீடுகளில் இலங்கை அணி பலவீனமாகவே உள்ளது. புதிய வீரர்கள். யார் விளையாடப் போகின்றார்கள் என்பதை இங்கிலாந்து அணி கணிக்க இயலாத நிலை உண்டு. இந்த பலவீனத்தை பலமாக மாற்றினால் தொடரைக் கைப்பற்றாவிடடாலும் போட்டிகளில் வெற்றி பெற முடியும்.

ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் இலங்கை அணியே இங்கிலாந்து அணியிலும் பார்க்க பலமானது. 64 போட்டிகளில் இலங்கை அணி 34 வெற்றிகளையும்  இங்கிலாந்து அணி 30 வெற்றிகளையும் பெற்றுள்ளன.

 

இங்கிலாந்தில் சம பலம்.  26 போட்டிகளில் இரு அணிகளும் தலா 13 வெற்றிகளை பெற்றுள்ளன. 2014ஆம் ஆண்டு இலங்கை அணி இங்கிலாந்தில் வைத்து 3-2 என்ற வெற்றியைப் பெற்றுக் கொண்டது. பின்னர் இலங்கையில் வைத்து 5-2 என்ற தொடர் வெற்றியைப் பெற்றது. வெற்றிகள் தொடருமா? இங்கிலாந்து அணி பழி தீர்க்குமா?

குழு விபரம்

இலங்கை

அஞ்சலோ மத்தியூஸ் (தலைவர் ), லஹிரு திரிமான்ன, தினேஷ் சந்திமால், குஷால் பெரேரா, தனுஷ்க குணதிலக, உபுல் தரங்க, தனஞ்சய டி சில்வா, நுவான் பிரதீப், சுரங்க லக்மால், குஷால் மென்டிஸ், தசுன் சானக, பர்வீஸ் மஹ்ரூப், சுராஜ் ரந்தீவ், சீக்குகே பிரசன்ன

 

இங்கிலாந்து

ஒய்ன் மோர்கன், (தலைவர்), மொயின் அலி, ஜொனி பெயர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், ஸ்டீவன் பின், கிறிஸ் ஜோர்டான், அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் பிளங்கட், அடில் ரஷீத், ஜோ ரூட், ஜேஸன் ரோய், ஜேம்ஸ் வின்சென்ட், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ்

முதற் போட்டி

ஜுன் 21, செவாய்க்கிழமை  மாலை 6.30 - ரென்ட் பிரிட்ஜ், நொட்டிங்ஹாம்

இரண்டாவது போட்டி

ஜுன் 24,  வெள்ளிக்கிழமை  மாலை 6.30 - எட்ஜ்பஸ்டன், பேர்மிங்ஹாம்

மூன்றாவது போட்டி

 ஜுன் 26,  ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 - கவுண்டி கிரவுண்ட், பிரிஸ்டல்

நான்காவது போட்டி

ஜுன் 29, புதன் கிழமை மாலை 5.30 - கென்னிங்டன் ஓவல், லண்டன்

ஐந்தாவது போட்டி

ஜூலை 02, சனிக்கிழமை   மாலை 3.00  - சோபியா கார்டின்ஸ், கார்டிப்

- See more at: http://www.tamilmirror.lk/175241/இலங-க-இங-க-ல-ந-த-ஒ-ந-ச-ப-த-டர-#sthash.7OHRwah0.dpuf
Link to comment
Share on other sites


2ஆவது போட்டி நாளை: சந்தேகத்தில் மத்தியூஸ்
 

article_1466683718-Tamidouwhj2ndhMathewsஇங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 2ஆவது போட்டி, நாளை இடம்பெறவுள்ளது. இப்போட்டியில், இலங்கையின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் கலந்து கொள்வாரா என்பது குறித்துச் சந்தேகம் நிலவுகிறது. எட்ஜ்பஸ்டனில் இடம்பெறும் இப்போட்டி, இலங்கை நேரப்படி மாலை 6.30க்கு ஆரம்பிக்கவுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டி, சமநிலையில் முடிவடைந்திருந்தது. இலங்கை அணி தடுமாறிய போது 73 ஓட்டங்களைப் பெற்ற மத்தியூஸ், பந்துவீச்சில் 6 ஓவர்களில் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். ஆனால், அதன் பின்னர் காயம் காரணமாக மைதானத்திலிருந்து வெளியேறியிருந்தார். அதுவரை வெற்றியைத் தம்வசம் வைத்திருந்த இலங்கை, பின்னர் களத்தடுப்பிலும் உத்திகளிலும் மோசமாகச் செயற்பட்டுத் தோற்றிருந்தது.

மத்தியூஸூக்கு ஏற்பட்ட பின்தொடைத் தசைநார் உபாதை இன்றும் சரியாகாவிட்டால், இன்றைய போட்டியில் அவர் பங்குபற்ற மாட்டார் என்பதோடு, இலங்கை அணி துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் தலைமைத்துவத்திலும் பாரிய இழப்பைச் சந்திக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, பந்தை எறிவதாக நிரூபிக்கப்பட்டு, பந்துவீசத் தடை விதிக்கப்பட்டுள்ள ஷமின்ட எரங்கவுக்குப் பதிலாக, மாற்று வீரரொருவரை இங்கிலாந்துக்கு வந்துள்ள இலங்கை ‘ஏ” அணியிலிருந்து பெற்றுக்கொள்ளவுள்ளதாக, இலங்கை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/175416/-ஆவத-ப-ட-ட-ந-ள-சந-த-கத-த-ல-மத-த-ய-ஸ-#sthash.FC0rOr5m.dpuf
Link to comment
Share on other sites

இங்கிலாந்துடனான 2 ஆவது ஒருநாள் போட்டி: நாணயச் சுழற்சியில் இலங்கை வெற்றி: மெத்யூஸ் களமிறங்குகிறார்
2016-06-24 18:20:25

17563angelow.jpgபேர்மிங்ஹாம் நகரில் நடைபெறும் இங்கிலாந்துடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் நாணயச் சுழற்சியில் இலங்கை அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் வெற்றிபெற்றார்.  அதையடுத்து இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.


இப்போட்டியில் ஏஞ்சலோ மெத்யூஸ் விளையாடுவாரா என்பதே சந்தேகத்திற்கிடமாக இருந்தது. எனினும் அவர் இப்போட்டியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=17563#sthash.AcdTInFK.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தந்திரோபாயத்தில் கிடைத்த ஒரு வெற்றியின் அடிப்படையில் மீண்டும் மீண்டும் அதே தந்திரோபாயத்தை கண்மூடித்தனமாக உபயோகிக்க கூடாது நிலைமைகளுக்கேற்ப தந்திரோபாயத்தை மற்ற வேண்டும் . -சன் சு 

Link to comment
Share on other sites

இலங்கையுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 10 விக்கெட்களால் வென்றது
2016-06-25 00:59:18

இலங்கையுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்களால் வென்றது.

 

பேர்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 254 ஓட்டங்களைக் குவித்தது.

 

17565dinesh-chandimal-2nd-ODI.jpg


உபுல் தரங்க 49 பந்துகளில்ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 86  பந்துகளில் 52 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 54 பந்துகளில்  44 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் ஆதில் ரஷீட் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும்  லியம் பிளன்கெட் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டேவிட் வில்லே 65 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

 

175662nd-odi-alex-hales.jpg

 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 34.1  ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.

 

அலெக்ஸ் ஹேல் 110 . பந்துகளில் ஆட்டமிழக்காமல்  133  ஓட்டங்களையும் ஜேஸன் ரோய் 95 பந்துகளில் ஆட்டமிழக்கமல்112 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

இத்தொடரின் முதல் போட்டி சமநிலையில் முடிவுற்றது. 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் தற்போது இங்கிலாந்து 1:0 விகிதத்தில் முன்னிலையில் உள்ளது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=17566#sthash.XoWwfkL6.dpuf
Link to comment
Share on other sites

மழை குறுக்கிட்டதால் போட்டி தாமதம்

 

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 249 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை இலங்கை நிர்ணயித்துள்ளது.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை சார்பில் சந்திமால் 62 ஓட்டங்களையும் மெத்தியூஸ் 56 ஓட்டங்களையும் விளாசினர்.

இதன்படி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்த அந்த அணி, 248 ஓட்டங்களை பெற்றது.

இந்தநிலையில், 249 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட இங்கிலாந்து ஆரம்பித்த வேளை, மழை குறுக்கிட்டதால் போட்டி தாமதமடைந்துள்ளது.

http://tamil.adaderana.lk/news.php?nid=81054

Link to comment
Share on other sites

இலங்கை - இங்கிலாந்து மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது
2016-06-26 22:23:58

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

 

17582dinesh-chandimal-3rd-ODI.jpg

 

பிரிஸ்டல் நகரில் இன்று ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 248 ஓட்டங்களைப் பெற்றது. தினேஷ் சந்திமால் 65 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 56 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 53 ஓட்டங்களையும் உபுல் தரங்க 40 ஓட்டங்களையும் பெற்றனர்.


இங்கிலாந்து அணி 4 ஓவர்களில்  ஒரு விக்கெட் இழப்புக்கு 16 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் மழை பெய்ய ஆரம்பித்தது. மீண்டும் போட்டியை ஆரம்பிக்க முடியாத நிலையில் இப்போட்டி கைவிடப்பட்டது.

 

5 போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் போட்டி சமநிலையில் முடிவுற்றது. 2 ஆவது போட்டியில் இங்கிலாந்து 10 விக்கெட்களால் வென்றது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=17582#sthash.L7EgBPpb.dpuf
Link to comment
Share on other sites

நாடு திரும்பினார் திரிமன்னே :  அணிக்குள் டிக்வெல்ல

 

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் லகிரு திரிமன்னே காயம் காரணமாக இங்கிலாந்து தொடரிலிருந்து விலகி நாடு திரும்பியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

lahiru-thirimanne.jpg

இலங்கிலாந்து அணிக்கெதிராக 5 போட்டிகளைக் கொண்ட  சர்வதேச ஒரு நாள்தொடர் இடம்பெற்று வருகின்றது.

இதில் முதலாவது போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைய, 2 ஆவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் 3 ஆவது போட்டி இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடிய நிலையில் மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது.

 

இதையடுத்து ஏனைய போட்டிகளில் திரிமன்னே காயம் காரணமாக விளையாட முடியாது நாடு திரும்பியுள்ள நிலையில் அவருக்குப் பதிலாக நிரோஷன் டிக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

 

விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான நிரோஷன் டிக்வெல்ல, இங்கிலாந்துக்கு பயணமாகியுள்ள இலங்கை ஏ அணியில் இடம்பிடித்துள்ளதுடன் இலங்கிலாந்து அணிக்கெதிராக விளையாடிய இலங்கை டெஸ்ட் குழாமில் இடம்பெற்றிருந்தார்.

 

 

இதேவேளை, அஞ்சலோ மெத்தியுஸ் மற்றும் டினேஷ் சந்திமால் ஆகியோர்  ஏற்கனவே தொடைப்பிடிப்பினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையில் 2 போட்டிகள் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/8210

Link to comment
Share on other sites

தொடர் தோல்விகளை தவிர்க்குமா இலங்கை? தொடரை தீர்மானிக்கும் தீர்க்கமான 4ஆவது போட்டி இன்று

 

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 4 ஆவது ஒருநாள் போட்டி இன்று (29) லண்டன், கெனிங்டன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

aaaaaa.jpg

இலங்கை நேரப்படி மாலை 6.30 மணியளவில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது.

ஒருநாள் தொடரின் 3 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 2 போட்டிகள் சமனிலையில் நிறைவுபெற்றதுடன், ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றுள்ளது.

இந்த 4 ஆவது போட்டி இரண்டு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாகும்.

ஒருநாள் தொடரை கைப்பற்றவதுற்கு இங்கிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றிபெறவேண்டும். 

அதேநேரம் தொடரை சமப்படுத்துவதற்கும், தொடர் தோல்வியை தவிர்ப்பதற்கும் இலங்கை அணி கட்டாயம் இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது.

இலங்கை  அணி சார்பில் உபாதை காரணமாக லஹிரு திரிமான்னே நாடு திரும்பியுள்ள நிலையில், நிரோஷன் டிக்வெல்ல அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியை பொருத்தவரையில் அணி தலைவர் மெத்தியுஸ், இந்த போட்டியில் வெற்றிபெறும் உத்வேகத்தில் களமிறங்குவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இதேவேளை இங்கிலாந்து அணி தலைவர் இயர்ன் மோர்கன் இந்த போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றவேண்டும் என்ற நோக்கில் அணியை வழிநடத்துவார்.

http://www.virakesari.lk/article/8269

Link to comment
Share on other sites

ஜேசன் ரோய் அதிரடி : ஒருநாள் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

 

இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-0 எனக் கைப்பற்றியுள்ளது.

ASC.jpg

ஒருநாள் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் 4ஆவது ஒருநாள் போட்டி நேற்று (29) லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணியின் தலைவர் இயர்ன் மோர்கன் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.

போட்டியின் இடையில் மழைக் குறுக்கிட்டதன் காரணமாக டக்வர்த் லுவிஸ் முறைப்படி அணிக்கு தலா 42 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தொடரை சமப்படுத்தும் நோக்கில் களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்ப விக்கட் 8 ஓட்டங்களில் வீழ்த்தப்பட்டது.

குசல் பெரேரா ரன் அவுட் முறையில் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். 

இரண்டாம் விக்கட்டுக்காக இணைந்த மெண்டிஸ் மற்றும் குணதிலக்க ஜோடி சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது.

மெண்டிஸ் 77 ஓட்டங்களையும், குணதிலக்க 62 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

அடுத்ததாக களமிறங்கிய சந்திமால் 63 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்த நிலையில், அணித்தலைவர் மெத்தியுஸ் ஆட்டமிழக்காமல் 67 ஒட்டங்களை பெற அணியின் ஓட்ட எண்ணிக்கை 305 ஆக உயர்ந்தது. 

இங்கிலாந்து அணி சார்பாக வில்லி மற்றும் ரஷீட் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

டக்வர்த் லுவிஸ் முறைப்படி இங்கிலாந்து அணிக்கு 42 ஓவர்களில் 308 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 40.1 ஓவர்களில் 4 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இங்கிலாந்து அணி சார்பாக சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடிய ஜேசன் ரோய் தனது முதலாவது 150 ஓட்டங்களை கடந்து 162 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் ஜோ ரூட் 65 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

இலங்கை அணி சார்பில் பிரதீப் 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இதனடிப்படையில் 2-0 என இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. 

இலங்கை இங்கிலாந்து மோதும் இறுதி ஒருநாள் போட்டி ஜுலை 2 ஆம் திகதி கர்டிப், சொபியா கார்டன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

http://www.virakesari.lk/article/8317

Link to comment
Share on other sites

இலங்கையுடனான 5 ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 122 ஓட்டங்களால் வென்றது
2016-07-02 22:41:35

இலங்கை அணியுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5 ஆவது போட்டியில் இங்கிலாந்து அணி 122 ஓட்டங்களால் வென்றது.

 

17736england-vs-Sri-Lanka.jpg

 

வேல்ஸின் கர்டிவ் நகரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 0 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 324 ஓட்டங்களைப் பெற்றது. ஜோ ரூட் 93 ஓட்டங்களையும் ஜோஸ் பட்லர் 70 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களில் தனுஷ்க குணதிலக்க 48 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 42.4  ஓவர்களில் 202 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. இத்தொடரின் முதல் போட்டி சமநிலையில் முடிவுற்றது. 3 ஆவது போட்டி கைவிடப்பட்டது. இதனால் இத்தொடரின் வெற்றியை 3-0 விகிதத்தில் இங்கிலாந்து அணி சுவீகரித்தது.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=17736#sthash.lqQLyVjD.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.