Jump to content

குட்டிக் கதைகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில், ரசித்த...  குட்டிக் கதைகள்.

ஒருவருக்கு வீட்டில் டெலிபோன் பில் அதிகமாக வந்தது..
அவர் தன் மனைவியிடம் கூறினார் நான் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்ய அலுவலக போனை பயன்படுத்துகிறேன் நீதான் அதிகமாக பேசியிருப்பாய் என கூறினார்..
ஆனால் அவர் மனைவியோ தானும் தான் வேலைசெய்யும் இடத்தில்தான் போன் பேசுகிறேன்..
நம் மகன் அவனது நண்பர்களிடம் பேசியதால் பில் அதிகரித்திருக்கலாம் என்றார் அவர் மனைவி..
மகனோ எனக்கும் நான் வேலைசெய்யும் கம்பெனியில் போன் உண்டு அதிலிருந்துதான் நான் போன் செய்கிறேன் என்றான்..
நம் வீட்டில் வேலை செய்யும் பெண் டெலிபோனை சுற்றிவருவதை பார்த்திருக்கிறேன் என்றான் மகன்..
வேலைக்காரியோ, என்னை எதற்காக திட்டுகிறீர்கள் உங்களைப்போல நானும் வேலை செய்யும் இடத்திலிருந்துதான் என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் போன் பேசுகிறேன் என அவர் கூறியதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்..!!!
???

உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தம்..
இதே அடுத்தவனுக்கு வந்தா, தக்காளி சட்டினியா!!???

  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • Replies 207
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

அன்புத்தம்பி

ஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார். அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை. அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.

தமிழ் சிறி

இணையத்தில், ரசித்த...  குட்டிக் கதைகள். ஒருவருக்கு வீட்டில் டெலிபோன் பில் அதிகமாக வந்தது..அவர் தன் மனைவியிடம் கூறினார் நான் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்ய அலுவலக போனை பயன்படுத்துகிறேன் நீதா

தமிழ் சிறி

படித்ததில் பிடித்த...  உண்மைக் கதை. உலகில் சூரியன் முதலில் உதிக்கும் நாடு நியூசிலாந்து, கடைசியாக உதிக்கும் இடம்... அமெரிக்கா நாட்டில் உள்ள, சமோவா தீவுகள். அதற்காக அமெரிக்கா பெரிதாக கவலைப்பட்டதாக

  • கருத்துக்கள உறவுகள்

472280404-customer-speaks-with-an-employ

வங்கி மேலாளருக்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கும் இடையே நடந்த உரையாடல்.
"ஏம்பா! மாடு வாங்கணும்ன்னு லோன் கேக்குறியே? பணத்தை ஒழுங்கா திருப்பி கட்டுவியா?"
"என்ன சார் நீங்க? கட்டலைன்னா மாடு ஓடிடாதா? நிச்சயமா கட்டி வைப்பேன் சார்."
"நான் கேட்டது மாட்டை இல்லை.!"
"மாடுதான் இன்னும் வாங்கவே இல்லையே. அப்புறம் அதை எப்படி சார் கேப்பிங்க?"
"அப்ப வாங்கினப்புறம் கேட்டா?"
"வாங்கினப்புறம் கேட்டாலும் மாடு சொல்லாது சார்."
"மாட்டை கேக்குறதுன்னு நான் சொன்னது மாட்டை இல்லை."
"பின்னே எதை?"
"மாடு வாங்குனப்புறம் மாட்டைக் கேட்டா குடுத்துடுவியான்னேன்."
"மாட்டைக் கேட்டா மாடுதான் குடுக்கும். நான் எப்படி குடுப்பேன்?"
"ஐயோ.... சரி ஆரம்பிச்ச இடதுக்கே வருவோமா? கட்டுவியான்னு கேட்டது மாட்டை இல்லை."
"நானும் ஆரம்பிச்ச இடத்துக்கே வரேன். கட்டுவியான்னு என்னைத்தானே கேட்டிங்க..?"
"உன்னை ஏன் கட்டணும்?"
"என்னைக் கேட்டா? நீங்கதானே கட்டுவியான்னு கேட்டது மாட்டை இல்லைன்னு சொன்னீங்க. அப்ப
என்னைன்னு தானே அர்த்தம்."
"கேட்டது உன்னைத்தான்."
"அப்பிடீன்னா ஏன் என்னைக் கட்டனும்னு நீங்களே சொல்லிடுங்க."
"கட்டறதுன்னா மாடும், நீயும்தானா..? 
மூணாவதா ஒண்ணு இருக்கே. அதைக் கட்டுவியா ஒழுங்கா?"
"மூணாவதான்னா..? இங்க நீங்கதான் இருக்கிங்க."
"என்னைப் பிடிச்சி கட்டிடு. இல்லேனா கடிச்சாலும் கடிச்சிடுவேன்."
"அப்பவே சொன்னாங்க! பேங்க் மேனேஜர் ஒரு பைத்தியம்ன்னு."
நான்தான் கேக்கல...!

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

13782228_707082632778558_395358278229340

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

728x410_550_husband-wife-fight.jpg

டாக்டர்: கணவன் உடம்பை சோதித்துவிட்டு "இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க...."

மாலை 5 மணி : கண்ணீர் மல்க விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்தான் கணவன். துடித்தாள் அவள்.

கணவன்: எனக்கு உன் கையால வெங்காய தோசையும், கெட்டி சட்னியும் செஞ்சி குடும்மா இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு.
சரிங்க ....

மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்...

தோ உடனே செய்றங்க...

இரவு 10 மணி : நல்ல பசும்பாலில் உங்கையால சொஞ்சமா சக்கர போட்டு எனக்கு குடும்மா..இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு....!!!

ஒகேங்க

இரவு 12 மணி : தூங்கும் மனைவியை எழுப்புகிறான்.
மனைவி : பேசாம படுங்க...காலைல எழுந்தவுடன் ஆயிரம் வேல இருக்கு. சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்ல புக் பண்ணனும்.....

உங்களுக்கு காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல.....!!

:grin:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13882577_708345872652234_722290228356140

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

13606641_699518993534922_317689489439157

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13962564_716390435181111_741899936230144

 

##################################################################################################################

13935124_716850728468415_638320668494835

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வாயால்,  வந்த வினை...

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

14322283_737590663061088_7300014931691385314_n.jpg?oh=5b79b6eefd80290c8d1601780cbe5434&oe=587A74CE

ஒரு நாட்டில் ஒரு ரஷ்யர், ஒரு சீனர், ஒரு இந்தியர் ஆகிய மூவரும் மது அருந்திய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டனர்.
மூவருக்கும் தலா 50 சவுக்கடிகள் கொடுக்க நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் அவர்கள் கேட்கும் ஏதாவது 2 கோரிக்கைகளை நிறைவேற்றலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
முதலில் வந்த ரஷ்யர், தனது சவுக்கடிகளை 25 ஆகக் குறைக்க வேண்டும் என்று கோரினார்.
இதற்கு ஒப்புக்கொள்ளப் பட்டது.
இரண்டாவதாக தன் முதுகில் 2 தலையணைகளைக் கட்ட வேண்டும் என்று கூறினார். அவ்வாறே செய்யப்பட்டது.
ஆனால் பத்து சவுக்கடியில்.. தலையணை கிழிந்து அவர்.. பலமான காயத்துக்கு ஆளானார்.
அடுத்து சீனர்.
“எனக்கும் 50 சவுக்கடிகளை பாதியாகக் குறைத்து 25 அடி கொடுங்கள்” என்றார்.
ஒப்புக்கொள்ளப்பட்டது.
இரண்டாவதாக தன் முதுகில் 2 தலையணைகளைக் கட்டச் சொன் னார்.
அவ்வாறே செய்யப்பட்டது.
15 சவுக்கடிகளில் தலையணை கள் கிழிந்து அவரது முதுகு பிளந்தது.
அடுத்து இந்தியர்.
“எனக்கு வழங்கப்பட்ட 50 சவுக்கடிகளை 75 ஆக உயர்த் துங்கள்..!” என்றார்.
அங்கிருந்த அனைவரும் அதிர்ச் சியுடன் இதற்கு ஒப்புக்கொண்டனர்.
இரண்டாவது கோரிக்கை என்ன என்று கேட்கப்பட்டது.
“எனக்கு தண்டனை கொடுத்த.. நீதிபதியை.. என் முதுகில் தூக்கி கட்டுங்கள்” என்றார். 
:grin:

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14457350_741989255954562_7694495709282225459_n.jpg?oh=51d429297687cbf1bc556bd421660fe8&oe=5865E02B

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

14708220_592398594278046_1039187200182760885_n.jpg?oh=d336ecfa85c699a8861310f5a1c7c73c&oe=589C6FF6

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
உன் பேர் சொல்லு
ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு.
அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய அவரோட வேலை பாத்தவங்க சொல்லி இருக்காங்க. அதனால எதுக்கும் தயாராத்தான் அவர் வந்தார்.
முதல்ல ஒரு வகுப்புக்குள்ள போன உடனே பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னு வணக்கம் சொன்னாங்க!.
சரி எதாவது கேள்வி கேக்க வேண்டாம்ன்னு முதல் பையன எழுப்பி. .
"உன் பேர் சொல்லு"
"பழனி"
"உன் அப்பா பேரு"
"பழனியப்பா",
அடுத்தப் பையன எழுப்பி , 
"உன் பேர் சொல்லு"
"மாரி"
"உன் அப்பா பேரு"
"மாரியப்பா"
அவருக்கு கொஞ்சம் டவுட் வருது.
இருந்தும் அடுத்தப் பையன எழுப்பி.
"உன் பேர் சொல்லு"
"பிச்சை"
"உன் அப்பா பேரு" 
"பிச்சையப்பா"
இப்பொ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு,
சரி பசங்க ஆரம்பிச்சுட்டாங்க அப்படினு புரிஞ்சுருச்சு.
அடுத்தப் பையன எழுப்பினாரு.
"முதல்ல நீ உன் அப்பா பேரைச் சொல்லு."
(மனசுக்குள்ள ஒரு பெருமிதம்)
"ஜான்"
"இப்பொ உன் பேரைச் சொல்லு" 
"ஜான்சன்"
கொஞ்சமா டென்சன் ஆயிட்டு, அடுத்த பையன எழுப்பி,
உன் அப்பா பேர சொல்லு,
"ரிச்சர்டு"
உன் பேரு,
"ரிச்சர்டசன்"
கொலவெறி ஆயிட்டாரு,
கொஞ்ச நேரம் நிதானமா யோசிச்சி,
அடுத்த பையன எழுப்பி,
உன் தாத்தா பேர சொல்லு,
"அப்பாவோட தாத்தாவா?,
அம்மாவோட தாத்தாவா?"
ஆய்வாளர் பல்ல கடிச்சிக்கிட்டு,
அப்பாவோட தாத்தான்னாரு
"மணி",
"சரி அப்பா பேரு?",
"ரமணி",
"உன் பேரு?",
"வீரமணி"
அப்புறம் என்ன !!!! அதுக்கு அப்பறம் அந்த
பள்ளிக்கு எந்த ஆய்வாளரும் வரதே இல்ல.
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

15178214_782212231932264_1602843865838976386_n.jpg?oh=65891e8404baab9a1514ac8009cf4b85&oe=58CD55B6

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சம்பளம் உயர்த்திக் கேட்ட வேலையாளுக்கு, BOSS வைத்த TEST..!!
#BOSS: நீ FLIGHT - லபோய்கிட்டு இருக்க.. அதுல 50 செங்கல் இருக்கு.. அதுல ஒன்னை தூக்கி வெளிய போட்டுட்டா, மீதி எவ்ளோ இருக்கும்..??
*வேலையாள்: 49 இருக்கும்..!!
#ஒரு யானையை எப்படி ஃப்ரிட்ஜுக்குள் வைப்பது..??
*ஃப்ரிட்ஜை திறக்கனும், யானைய உள்ள வைக்கனும், ஃப்ரிட்ஜை மூடனும்..!!
#ஒரு மானை எப்படி ஃப்ரிட்ஜுக்குள் வைப்பது..??
*ஃப்ரிட்ஜை திறக்கனும், யானைய வெளிய எடுக்கனும், மானை உள்ள வைக்கனும், ஃப்ரிட்ஜை மூடனும்..!! 
#அன்னைக்கு சிங்கத்தோட பிறந்தநாள்..!! எல்லா விலங்குகளும் வந்துடுச்சு..!! ஒன்னு மட்டும் வரல, அது என்ன..??
*மான், ஏன்னா.. அது ஃப்ரிட்ஜுக்குள்ள இருக்கு..!!
#முதலைகள் வாழும் குளத்தை ஒரு பாட்டி கடக்கனும்.. என்ன பண்ணுவாங்க..??
*தாரளமா கடக்கலாம்..
எல்லா முதலைகளும் சிங்கத்தோட பிறந்தநாள் பார்ட்டிக்கு போயிருச்சு..!!
#ஆனாலும் பாட்டி இறந்துட்டாங்க, எப்படி..??
*குளத்தில் மூழ்கிட்டாங்க..!!
#அதான் இல்ல, முதல்ல FLIGHT - ல இருந்து ஒரு செங்கலை தூங்கி போட்டேல.. அது பாட்டி மண்டையில் விழுந்துருச்சு..!!
இப்படி கவனம் இல்லாம தான் நீ வேலை பார்த்துட்டு இருக்க.. இதுல உனக்கு சம்பளம் வேற கூட கேக்குற..!!
ஒழுங்கா கவனமா வேலைய பார்.. இல்லன்னா சீட்டு கிழிச்சிரும்..!!

☆☆☆
நீதி: கட்டம் கட்ட முடிவு பண்ணிட்டா, எந்த பருப்பும் வேகாது..!!

@@படித்ததில் பிடித்தது@@

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

Link to comment
Share on other sites

 

பழங்கால ரிகர்ஸிவ் குட்டிக் கதை

 

ஒரு ஊரில் ஒரு குருவி இருந்தது. காலையில் குப்பையைக் கிளறியதில் குருவிக்கு ஒரணா கிடைத்தது.

எடுத்துக் கொண்டு ஊர் சுற்றியதில், ராஜா அரண்மனையில் பல் தேய்த்துக் கொண்டிருந்தார். மரத்தில் வந்தமர்ந்து "ராஜாகிட்ட பணமில்லே... என்கிட்டதான் பணமிருக்கு! ராஜாகிட்ட பணமில்லே... என்கிட்டதான் பணமிருக்கு!" என்று கத்தியது.

கடுப்பான ராஜா, ஏவலாள்களை விட்டு குருவியின் ஓரணாவைப் பிடுங்கச் செய்தார்.

இப்போ குருவி, "என்னை விட கேடுகெட்ட ராஜா, என் காசைப் பிடுங்கறார்" என்று கூவியது.

வெறுப்பான ராஜா, ஓரணாவை, குருவிகிட்டயே விட்டெறிஞ்சார்.

குருவி விடாமல், "என்னைப் பார்த்து பயந்து போன ராஜா, என் காசை திரும்பக் கொடுக்கிறார்", என்று தொடர்ந்தது.

 

 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மாறன் said:

 

பழங்கால ரிகர்ஸிவ் குட்டிக் கதை

ஒரு ஊரில் ஒரு குருவி இருந்தது. காலையில் குப்பையைக் கிளறியதில் குருவிக்கு ஒரணா கிடைத்தது.

எடுத்துக் கொண்டு ஊர் சுற்றியதில், ராஜா அரண்மனையில் பல் தேய்த்துக் கொண்டிருந்தார். மரத்தில் வந்தமர்ந்து "ராஜாகிட்ட பணமில்லே... என்கிட்டதான் பணமிருக்கு! ராஜாகிட்ட பணமில்லே... என்கிட்டதான் பணமிருக்கு!" என்று கத்தியது.

கடுப்பான ராஜா, ஏவலாள்களை விட்டு குருவியின் ஓரணாவைப் பிடுங்கச் செய்தார்.

இப்போ குருவி, "என்னை விட கேடுகெட்ட ராஜா, என் காசைப் பிடுங்கறார்" என்று கூவியது.

வெறுப்பான ராஜா, ஓரணாவை, குருவிகிட்டயே விட்டெறிஞ்சார்.

குருவி விடாமல், "என்னைப் பார்த்து பயந்து போன ராஜா, என் காசை திரும்பக் கொடுக்கிறார்", என்று தொடர்ந்தது.

கி... கீ..... கீ.... 
கிளியை....  தொட்டாலும் பிரச்சினை, சும்மா.... விட் டாலும்,  பிரச்சினை. :grin:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்ததில் பிடித்த...  உண்மைக் கதை.

உலகில் சூரியன் முதலில் உதிக்கும் நாடு நியூசிலாந்து, கடைசியாக உதிக்கும் இடம்... அமெரிக்கா நாட்டில் உள்ள, சமோவா தீவுகள். அதற்காக அமெரிக்கா பெரிதாக கவலைப்பட்டதாக தெரியவில்லை

ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார். ஆனால் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார்
பில்கேட்ஸ் தனது 30 களிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார் ஆனால் "INDITEX SPAIN" நிறுவனத்தை தனது 50 ஆவது வயதில் தான் தொடங்கி... அமான்சியோ ஓர்டேகா,  80 வயதில் தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர் ஆனார்.
இளமை காலங்களில் வாய்ப்பு கிடைக்காமலும், சரியான திரைப்படங்கள் அமையாமலும்... தடுமாறிய விக்ரமிற்கு 34 வது வயதில் தான் சேது படம் அமைந்து திருப்பத்தை ஏற்படுத்தியது.

24 வயதில் திருமணம் செய்த... என் தந்தை தனது 30 வது வயதில் இறந்தார், தனது 40 வயதில் திருமணம் செய்த... என் பெரியப்பா தற்போது 62 வயதில் உடல் நலத்துடன் உள்ளார், தனது மகளுக்கு தெம்பாக வரன் பார்த்து வருகிறார்

எல்லோருக்கும்.... எல்லாமும்,  அது அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது. எனவே உங்களுக்கு ஒன்று கிடைத்து விட்டால்... அது கிடைக்காமல் போராடும் மற்றவரை ஏளனம் செய்யாதீர்கள். உங்களை மற்றவரோடு சதா ஒப்பிட்டு, உங்களிடம் இல்லாததை நினைத்து புலம்பாதீர்கள். யார் கண்டது.... அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்று. இந்த உலகமே ஒரு பெரிய விபத்தால் உருவானது தான். எனவே எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை எல்லாம் கட்டுப்படுத்த நினைப்பது முட்டாள்தனம். இங்கே.... இப்போது,  இந்த நொடியில்..... என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ,  அதை முழுமையாக விழிப்புணர்வுடன் செய்யுங்கள். அடுத்த நொடி நிச்சயம் அழகாய் மலரும்.

தேவைகளை நிச்சயம் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.  

ஆனால்  ஆசைகள்... ஓட்டை குடம் போல  எப்போதும் நிறைவு செய்ய முடியாது. 

Edited by தமிழ் சிறி
  • Like 4
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மாடியில... லைட் எரியுது. :grin:

Bild könnte enthalten: Text

 

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வுக் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கட்சிக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன். ஓம்.  பிஜேபி இப்போ தன் தலைமையில் கூட்டணி வைக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கை பிரிக்கும் வேலை முடிந்ததும், பி டீம், ஏ டீமுடன் இணையும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.