Jump to content

பிரித்வெளி (brexit): உங்கள் பார்வை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் ஒரு பிரெண்ட் இருக்கிறா. அவட கார் உடைந்து,கொஞ்சநாள் பஸ்சில் பிள்ளைகளை அனுப்ப அவ பட்ட பாடு இருக்கே

Link to comment
Share on other sites

  • Replies 70
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

வேறென்ன எல்லாம் சுயநலம் தான் காரணம் அண்ணெய்...இவர்களது வருகைகள் கூட,கூட வீட்டு விலைகள் கூடுகிறது.வாடகை அதிகரிக்கின்றது.பத்தாததற்கு வேலைகள் எல்லாத்தையும் அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள்...ஒரு சாரார் ஜரோப்பாவில் இருந்து வரும் போதே சொத்து,சுகங்களோட வாறது,வீடுகளை வாங்கி வாடகைக்கு விட்டுப் போட்டு,களவாய் வேலை செய்து கொண்டு,பெனிபிட் எடுத்துக் கொண்டு பேசாமல் இருந்தால்,நாங்களும் பேசாமல் இருந்திருப்போம். ஆனால் இங்கே இருக்கும் ஆட்களை கேவலமாய் பார்ப்பினம் பாருங்கோ! அதற்குத் தான் இந்த வோட்டு

அது, ஆரையோ இடிக்கிற மாதிரிக் கிடக்குது. ஆனாலும் நூறுக்கு நூறு சப்போட்.

நாங்கள், பிரிஜ்க்க 5 நாளென்ன,10 நாளாம் வச்சுச் தின்னுவம்.... எங்கண்ட வீடு... எங்கண்ட பிரிஜ். அவை போனாப் பொறவு போய் பார்க்கத் தான் இருக்கு, அங்க என்ன வெளயாட்டுக் காட்டுகினம் எண்டு!

என்னக்கா! :cool:

 மறு வாக்குப் பதிவு  தேர்தல் தேவை வேண்டும் என்று பாராளுமன்றைக் கோரி மனுத்தாக்கல்  2,500,000.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

மன்னிக்கவும் ரதி, நெடுக்ஸ் 


உங்கள் கருத்துக்கள் ஏதோ நீங்கள் இங்கிலாந்தில் பல தலைமுறைகளா வாழுற மாதிரியும், மற்ற குடி வரவாளர்கள் உங்களின் உரிமைகளை பறிப்பது போலவும் உள்ளன. ஆனால் நீங்களும் ஒரு நாள் வந்தேறு குடிகளாக இந்த நாட்டுக்குள் புகுந்ததை வசதியா மறந்து விட்டீர்கள்.

தமிழனா கொக்கா? கேவலம் கெட்ட இனம்.

நீங்கள் புரியாமல் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

பிரித்தானியாவுக்கு பலர் வர விரும்புவதற்கு காரணம் இங்குள்ள தாராளமான அரச மானிய கொடுப்பனவு.

கொம்பியூட்டர் வளராத 90 களில், முழு நேர வேலையாக ஒவ்வொரு கவுன்சில் (லண்டனில் மட்டும் 33) ஏரியாவிலும் அகதியாக வேறு பெயரில் பதிந்து, வீடு வாடைக்கு எடுத்து, அதை வேறு ஆட்களுக்கு வாடகைக்கு கொடுத்து, அதன் மூலம் பணமும், அந்தந்த கவுன்சில் அனுப்பி வைத்த கொடுப்பனவு புத்தகத்தினை தபால் நிலையம் சென்று காட்டி பணம் வாங்கி கொழுத்த பணம் உழைத்து தாம் ஏதோ வெட்டிப் புடுங்கின மாதிரி அடுத்தவரை கேவலமாக பார்ப்பார்கள். ஒரு படி மேல போய் மட்டை யாவாரம் வேற..

பிடிபட்டு உள்ள போய் வந்த பொறவு தான் அடங்கி இருப்பினம்.

 

Link to comment
Share on other sites

5 minutes ago, Nathamuni said:

கொம்பியூட்டர் வளராத 90 களில், முழு நேர வேலையாக ஒவ்வொரு கவுன்சில் (லண்டனில் மட்டும் 33) ஏரியாவிலும் அகதியாக வேறு பெயரில் பதிந்து, வீடு வாடைக்கு எடுத்து, அதை வேறு ஆட்களுக்கு வாடகைக்கு கொடுத்து, அதன் மூலம் பணமும், அந்தந்த கவுன்சில் அனுப்பி வைத்த கொடுப்பனவு புத்தகத்தினை தபால் நிலையம் சென்று காட்டி பணம் வாங்கி கொழுத்த பணம் உழைத்து கேவலமாய் பார்ப்பினம்.

தமிழனா கொக்கா? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

மன்னிக்கவும் ரதி, நெடுக்ஸ் 


உங்கள் கருத்துக்கள் ஏதோ நீங்கள் இங்கிலாந்தில் பல தலைமுறைகளா வாழுற மாதிரியும், மற்ற குடி வரவாளர்கள் உங்களின் உரிமைகளை பறிப்பது போலவும் உள்ளன. ஆனால் நீங்களும் ஒரு நாள் வந்தேறு குடிகளாக இந்த நாட்டுக்குள் புகுந்ததை வசதியா மறந்து விட்டீர்கள்.

தமிழனா கொக்கா? கேவலம் கெட்ட இனம்.

 

மனித மனம்தான் எவ்வளவு தன்னலமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருத்தரும் வாக்களித்தற்கான காரணங்களை சொல்கின்றீர்கள். அதிலும் தனிப்பட்ட பிரச்சனைகளை காரணம் காட்டுகின்றீர்கள். இருந்தாலும் இங்கிலாந்து விலகியதையிட்டு ஜேர்மனிக்கு மனதுக்குள் ஒரு சந்தோசமாம்....விலை கொஞ்சம் அதிகம் தான். ஆனால் தனிக்காட்டு ராஜா.:cool:

Link to comment
Share on other sites

பிரித்தானியா பிரிய வேண்டும் என்று விரும்பியவர்கள் கூறும் காரணங்கள் பல நொண்டிச் சாட்டுகள். பிரித்தானியா பிரிய வேண்டும் என வாக்களித்தவர்களே இன்று பிரித்தானியா பிரிவதை நினைத்துப் பயப்பட ஆரம்பித்துள்ளனர். ஜேர்மனியில் இன்று கூடிய முக்கிய 6 ஐரோப்பிய அதிகாரிகள் பிரித்தானியா காலம் தாழ்த்தாமல் விரைவில் பிரிந்து செல்ல வேண்டும் என விரும்புகிறார்கள்.

பிரான்சில் இன்று எதிர்க் கட்சித் தலைவர்கள் உட்பட முக்கிய அனைத்துத் தரப்புத் பிரதிகளைச் சந்தித்த பிரெஞ்சு ஜனாதிபதியும் பிரித்தானியாவின் பிரிவில் கடும் போக்கைக் கடைப் பிடிக்கப் போவதாகத் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஜீவன் சிவா said:

மன்னிக்கவும் ரதி, நெடுக்ஸ் 


உங்கள் கருத்துக்கள் ஏதோ நீங்கள் இங்கிலாந்தில் பல தலைமுறைகளா வாழுற மாதிரியும், மற்ற குடி வரவாளர்கள் உங்களின் உரிமைகளை பறிப்பது போலவும் உள்ளன. ஆனால் நீங்களும் ஒரு நாள் வந்தேறு குடிகளாக இந்த நாட்டுக்குள் புகுந்ததை வசதியா மறந்து விட்டீர்கள்.

தமிழனா கொக்கா? கேவலம் கெட்ட இனம்.

நாங்க அகதியாக வரவும் இல்லை.. இல்ல வேறு வடிவில் வந்தோ.. இந்த நாட்டு மக்களின் பொருண்மியத்தை சுரண்டவும் இல்லை. மாறாக இந்த நாட்டின் பொருண்மியத்தில் பங்களிக்கிற குடியேற்றக்காரர்கள். அந்த வகையில் இந்த மண்ணின் மக்களின் மாண்பில் அக்கறை செய்வது தவறும் அல்ல. 

நாங்கள் பிரித்தானியா வெளியேற வேண்டும் என வாக்களித்ததிற்கு காரணம்.. பிரித்தானிய மக்களே பிரித்தானியாவுக்குள் சுய பெறுமதி அற்று வாழ வேண்டிய நிலை வந்தது தான். (ஊரில நாங்க ஏன் சிங்களவனுக்கு வாக்களிக்கிறமில்லை.. சிங்களவன்ர அரசாங்கத்தின் கீழ் வாழ்ந்து கொண்டு..  எமது சுயம் பாதுகாக்கப்பட்டனும் எமது தேவைகளை நம்மவர் தான் உணர முடியும்..என்பதற்காகத்தான்.)  நாங்க வரும் போது பிரித்தானிய மக்களால் நிறைந்திருந்த தெருக்கள் எல்லாம்.. இன்று குடியேற்றக்காரர்களால் நிரம்பி வழிகிறது. பிரித்தானிய values கொஞ்சமும் மதிக்கப்படுவதில்லை.

மேலும்.. பிரித்தானியா EU.. NON-EU என்று இரண்டு பாரபட்சமான அணுகுமுறைகளை கடைப்பிடித்து வந்தது. அதில்.. EU பணக்கார வலயம் ஒப்பீட்டளவில்.. ஏழை நாடுகளை அதிகம் கொண்ட NON-EU வலயத்திலும் அதிக நன்மைகளைப் பெற்று வந்தது. அது குடியேற்றமாக இருக்கட்டும்.. மாணவர்களாக இருக்கட்டும்.. வேலை வாய்ப்பாக இருக்கட்டும். பிரித்தானியா காலனித்துவம் செய்து அதிகம் கொள்ளையடித்தது.. EU வில் அல்ல. மாறாக.. NON-EU இல் தான். பிரிட்டனின் முன்னாள் காலனித்துவ நாடுகளைக் கொண்ட பொதுநலவாயத்துக்கு வாக்களிக்க உள்ள உரிமை.. குடிவரவில்.. பொருண்மியத்தில்.. மற்றும் EU பெறும் அநேக சலுகைகளில் கிடையாது. இந்த பாரபட்சமான நடைமுறைகளில் இருந்தும் பிரித்தானியாவும் பிரித்தானிய மக்களும் வெளி வரனும்... என்ற நோக்கமும் தான். 

EU என்ற கொழுத்த எருமைக்கு.. பிரித்தானியக் கரிக்குருவி உண்ணி எடுத்துக் கொண்டிருப்பதிலும்.. வெளியேறி கரிக்குருவி.. ஊரெல்லாம் பறந்து பறந்து அதன் சுயத்தோடு அது விரும்பிய மந்தையில் உண்ணி பொறுக்கி வாழும் அதன் சுயத்தை மீட்பது தான்.. அதுக்கும் நல்லம்.. உலகமயமாக்கம்.. ஏழைகளின் வயிற்றில் அடிப்பதைத் தடுக்கும். 

இதுக்கு மேல. வேறு சில்லி காரணங்களை எல்லாம் நாங்க முன்வைச்சு வாக்குப் போடுவதில்லை. tw_blush:

------------------------------------------------------

உதாரணத்துக்கு..

ஒரு பிரான்ஸ் மாணவர் பிரித்தானியவில்  Imperial college இல் படிக்க விரும்பினால்..

அவரது கல்விக் கட்டணம்.. பிரித்தானிய உள்ளூர் மாணவர்களுக்கு சமனானது..

முழுக் கடன் வசதி உண்டு.

பாரமரிப்புக் கடன் வசதி உண்டு.

விசா கட்டணங்கள் எதுவும் இல்லை...

படிச்சு முடிந்ததும் நிரந்தரமாக தங்கி இருந்து வேலை தேடலாம்.. வேலை செய்யலாம்.

நிம்மதியான கல்வி.

 

இதே ஒரு இலங்கை மாணவன் படிக்கனும் என்றால்..

கட்டணம். பிரித்தானியக் கட்டணத்தை விட 3 மடங்கு கூடிய கட்டணம்.

கடன் வசதிகள் எதுவும் இல்லை.

பராமரிப்புச் செலவுக்கும் மாணவரே பொறுப்பு.

விசாக்கட்டணங்கள் உச்சம்.

மேலும் சுகாதாரக் கட்டணம்.

படிச்சு முடிஞ்சதும்.. நாடு திரும்பனும். வேலை தேடுவது என்றால் அங்கிருந்து தேடிக் கொண்டு மீண்டும் நுழையனும். அதற்கு தனியான கட்டணங்கள்.

இதில்... இருவரும் மாணவர்கள் தான். EU மாணவரை விட அதிக பொருண்மியத்தை பிரித்தானியாவுக்கு கொண்டு வரும்.. ஒரு NON-EU மாணவன்.. வெகு சிறு சலுகை தானும் பெற முடிவதில்லை. இந்த பாரபட்சத்தை.. EU கண்டிச்சதும் இல்லை கண்டு கொண்டதும் இல்லை. அந்தக் கொழுத்த எருமைக்கு நலிந்து கிடக்கும் ஏழை செம்மறி ஆடுகளின் பாதிப்பு, நன்மை குறித்த கவலையோ அக்கறையோ இருந்ததும் இல்லை. அதுவும்.. ஏழைகளை ஏழைகளாக இருக்க வைச்சு அவர்களிடமே சுரண்டி வளரும்.. அதன் உலகமயமாக்கல் கொள்கையும் உடையனும் என்பதும் தான் எங்கள் வாக்கின் உண்மையான நோக்கம் ஆகும். அது நடக்கனும்... அதன் ஆம்பமாக இது இருந்தால் நல்லம். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பிரித்தானியா வெளியேற வேண்டும் என வாக்களித்ததிற்கு காரணம் -சொரிலன்காவில் பாதுகாப்பு இல்லை என்று அன்று அமைதியாகவிருந்த uk யில் வாழ வந்தம் இன்று eu எனும் முத்தின பயித்தியம் தீவிர மதவாதிகளையும் தீவிர மத வெறியர்களையும் ukக்கு ஏற்றுமதி செய்வதில் உடந்தையாக இருக்கிறது. எதிர்காலத்தில் இவர்களால் பாரிய குழப்ப நிலை உருவாகும் இதை தவிர்க்கணும் என்றால் எடுத்ததுக்கு எல்லாம் கதை பேசும் கிழடுகள் போன்று இருக்கும் eu வை விட்டு விலகுவதே நல்லது.

மதவாதிகளால் பிரச்சினை இப்பவே ஆரம்பிக்கபட்டு விட்டது ஈஸ்ட்காமில் உள்ள கவுன்சிலில்  முறைப்படி  அனுமதி பெற்று கட்டபெற்ற இந்துக்கோவில் இங்குள்ள முஸ்லிம் மதவெறியர்களால் எதிர்ப்பு தெரிவிக்கபட்டு இடை நிறுத்தப்பட்டது மீண்டும் கோட் படியேறி மிகுந்த அல்லைதொல்லைக்கிடையில் வேலைகள் தொடர்கிறது வந்த இடத்தில் மதவெறியை பரப்புகிறார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலவச இணைப்பாக எங்கடை சனத்துக்கும் நாலு தட்டு தட்டினால் தான் தாயகத்தில் உள்ள மக்களின் நிலமை கொஞ்சமாவது விழங்கும்.

Link to comment
Share on other sites

On 27 juin 2016 at 0:09 AM, பெருமாள் said:

நான் பிரித்தானியா வெளியேற வேண்டும் என வாக்களித்ததிற்கு காரணம் -சொரிலன்காவில் பாதுகாப்பு இல்லை என்று அன்று அமைதியாகவிருந்த uk யில் வாழ வந்தம் இன்று eu எனும் முத்தின பயித்தியம் தீவிர மதவாதிகளையும் தீவிர மத வெறியர்களையும் ukக்கு ஏற்றுமதி செய்வதில் உடந்தையாக இருக்கிறது. எதிர்காலத்தில் இவர்களால் பாரிய குழப்ப நிலை உருவாகும் இதை தவிர்க்கணும் என்றால் எடுத்ததுக்கு எல்லாம் கதை பேசும் கிழடுகள் போன்று இருக்கும் eu வை விட்டு விலகுவதே நல்லது.

மதவாதிகளால் பிரச்சினை இப்பவே ஆரம்பிக்கபட்டு விட்டது ஈஸ்ட்காமில் உள்ள கவுன்சிலில்  முறைப்படி  அனுமதி பெற்று கட்டபெற்ற இந்துக்கோவில் இங்குள்ள முஸ்லிம் மதவெறியர்களால் எதிர்ப்பு தெரிவிக்கபட்டு இடை நிறுத்தப்பட்டது மீண்டும் கோட் படியேறி மிகுந்த அல்லைதொல்லைக்கிடையில் வேலைகள் தொடர்கிறது வந்த இடத்தில் மதவெறியை பரப்புகிறார்கள்.

 

பிரித்தானியா பிரிந்தால் ஐரோப்பிய நாடுகள் தமது நாடுகளுக்கு இடையிலான எல்லைகளைத் திறந்துவிடும். குறிப்பாக பிரான்ஸ் தனது கல்லேயில் உள்ள தடுப்பு முகாம்களைத் திறந்துவிடும். இலகுவாக இங்கிலாந்து எல்லை வரை வரலாம்.  இங்கிலாந்து உள்நாட்டிலேயே வரும் அகதிகளைப் பராமரிக்க வேண்டி வரும். 
 

வெள்ளையின பிரித்தானியர்களிடம் மதம் கல்வி வேலைவாய்ப்பு விடயங்களில் போட்டியிடும் வெளிநாட்டவர்களிடமிருந்து  இலங்கைத் தமிழரைப் பிரித்துத் தனித்துவமாக உயர்ந்த இடத்தில் வைத்திருப்பார்கள் என்று அநேகமான இலங்கைத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இணையவன் said:

பிரித்தானியா பிரிந்தால் ஐரோப்பிய நாடுகள் தமது நாடுகளுக்கு இடையிலான எல்லைகளைத் திறந்துவிடும். குறிப்பாக பிரான்ஸ் தனது கல்லேயில் உள்ள தடுப்பு முகாம்களைத் திறந்துவிடும். இலகுவாக இங்கிலாந்து எல்லை வரை வரலாம்.  இங்கிலாந்து உள்நாட்டிலேயே வரும் அகதிகளைப் பராமரிக்க வேண்டி வரும். 
 

வெள்ளையின பிரித்தானியர்களிடம் மதம் கல்வி வேலைவாய்ப்பு விடயங்களில் போட்டியிடும் வெளிநாட்டவர்களிடமிருந்து  இலங்கைத் தமிழரைப் பிரித்துத் தனித்துவமாக உயர்ந்த இடத்தில் வைத்திருப்பார்கள் என்று அநேகமான இலங்கைத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஏற்கனவே உங்க கல்லேயில் திறந்து விட்டுத்தான் பிரச்சினையே அதை விளங்கி கொள்ளாமல் இந்த பிரசினையை விளங்கி கொளவது கஷ்ட்டம் அண்ணை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"You were fighting for the exit...why are you here?"

 

Link to comment
Share on other sites

ஒருவன் போர் அகதியாக வந்தான்; பொருளாதார அகதியாக வந்தான்; படிப்புக்காக வந்தான்; வேலைக்காக வந்தான்.. இவையெல்லாம் பிரச்சினையில்லை. அவனுக்கு குடியுரிமை ஒன்று கிடைத்துவிட்டால் அதன்பிறகு அவனுக்கு எந்த முடிவும் எடுக்கும் தகுதி கிடைத்துவிடும். அவன் வந்த பின்புலத்தை வைத்து அவனுக்கான உரிமையை மறுப்பது பாகுபாடு காட்டும் செயலாகும். :unsure:

Link to comment
Share on other sites

On 29 juin 2016 at 1:06 AM, பெருமாள் said:

ஏற்கனவே உங்க கல்லேயில் திறந்து விட்டுத்தான் பிரச்சினையே அதை விளங்கி கொள்ளாமல் இந்த பிரசினையை விளங்கி கொளவது கஷ்ட்டம் அண்ணை.

பிரித்தானியா பிரிவதால் கல்லேயில் உள்ள தடுப்பு முகாம்களை அகற்றப் போவதாக பிரான்ஸ் கூறியதை அடுத்து பிரித்தானியா பிரான்சுடன் பேச்சு நடத்தி ஒரு இணக்கத்துக்கு வந்துள்ளது. அதன்படி பிரான்ஸ் தடுப்பு முகாம்களை மூடாது. பதிலுக்கு பிரித்தானியா, எல்லைப் பாதுகாப்பைப் பலப்படுத்த ஆகப்போகும் செலவினைப் பிரான்சுக்கு வழங்கும். 

https://fr.news.yahoo.com/les-accords-franco-britanniques-sur-calais-maintenus-135236652.html?nhp=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருமல் கிழவியைக் குடுத்து  தும்மல் கிழவியை வங்கியமாதிரிப் போய்க்கொண்டு இருக்கு கதை....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரதான அரசியல் கட்சிகள் தலைமைத்துவப் போட்டியில் சிக்கியுள்ளன. எப்படியும் பொருளாதாரம் ஆட்டம் காணும். இனவாதம் அதிகமாகும். வேலையில்லாப் பிரச்சினை தலைதூக்கும். 

நாட்டை துப்பரவு செய்ய இவை வழிவகுக்கும்! பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறவேண்டும் என்று வாக்குப்போட்டேன். எதிர்பார்த்தது எல்லாம் நடக்கின்றது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பிரதான அரசியல் கட்சிகள் தலைமைத்துவப் போட்டியில் சிக்கியுள்ளன. எப்படியும் பொருளாதாரம் ஆட்டம் காணும். இனவாதம் அதிகமாகும். வேலையில்லாப் பிரச்சினை தலைதூக்கும். 

நாட்டை துப்பரவு செய்ய இவை வழிவகுக்கும்! பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறவேண்டும் என்று வாக்குப்போட்டேன். எதிர்பார்த்தது எல்லாம் நடக்கின்றது!

ஏதோ உங்களுக்கு சொந்தமான இடத்தில் இருந்து அவர்கள் வெளியேற வேண்டி வாக்குப் போட்டு இருக்கிறியள் போல கிடக்குது.

நல்லது... நாளைக்கு நம்மளையும் போகச் சொல்லுவார்கள்... எதிர் பார்த்து இருங்கோ. அதுவும் நடக்கும்.

எங்களது சொந்த இடத்திலிருந்தே சிங்களவன் துரத்த ஓடி வந்த நாங்க, வெள்ளையன் தனது சொந்த நிலத்திலிருந்து போகச் சொல்லும் போது, போக வேண்டியது தான்.

ஒன்றை நாம் மறக்கக் கூடாது: கிழக்கு ஐரோப்பாவோ, பிரித்தானியவோ..... வெள்ளை தோல் ஐயா, வெள்ளைத் தோல்..... நாம் எல்லாம் இரண்டாம் தரம்.

சும்மா பீலா விடப் படாது.... முதலுக்கே மோசம்..tw_bawling:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

ஏதோ உங்களுக்கு சொந்தமான இடத்தில் இருந்து அவர்கள் வெளியேற வேண்டி வாக்குப் போட்டு இருக்கிறியள் போல கிடக்குது.

நல்லது... நாளைக்கு நம்மளையும் போகச் சொல்லுவார்கள்... எதிர் பார்த்து இருங்கோ. அதுவும் நடக்கும்.

எங்களது சொந்த இடத்திலிருந்தே சிங்களவன் துரத்த ஓடி வந்த நாங்க, வெள்ளையன் தனது சொந்த நிலத்திலிருந்து போகச் சொல்லுவார்கள்.

ஒன்றை நாம் மறக்கக் கூடாது: கிழக்கு ஐரோப்பாவோ, பிரித்தானியவோ..... வெள்ளை தோல் ஐயா, வெள்ளைத் தோல்..... நாம் எல்லாம் இரண்டாம் தரம்.

பிரித்தானியாவிலிருந்து வெளியேறுவதுதான் திட்டம்! மேற்கு நோக்கிப் போவதா, கிழக்கு நோக்கிப் போவதா என்று யோசித்து காலம் இழுபட்டுக்கொண்டிருக்கின்றது. பிறநாட்டவர் வெளியேறவேண்டும் என்ற அழுத்தம் வராது. ஆனால் நாடு போகும் நிலைமையைப் பார்த்து நாமே வெளியேறலாம் என்றுதான் இப்போது நினைக்கின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

பிரித்தானியாவிலிருந்து வெளியேறுவதுதான் திட்டம்! மேற்கு நோக்கிப் போவதா, கிழக்கு நோக்கிப் போவதா என்று யோசித்து காலம் இழுபட்டுக்கொண்டிருக்கின்றது. பிறநாட்டவர் வெளியேறவேண்டும் என்ற அழுத்தம் வராது. ஆனால் நாடு போகும் நிலைமையைப் பார்த்து நாமே வெளியேறலாம் என்றுதான் இப்போது நினைக்கின்றேன்!

போறது எண்டு நினைத்து இருந்தால், இருப்போருக்கு உதவ வில்லையே....tw_cold_sweat:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.