Jump to content

நான்கு தமிழர்கள் கதைக்க இருவர் ஒட்டுக்கேட்கிறார்கள்


Recommended Posts

நல்லெண்ணை நிறம். நீண்ட ஆரோக்கியமான விரல்கள். கருமையான கேசம். உருண்டை விழிகள். கிளிச்சொண்டு மூக்கு. கழுத்தில் பெயர் பட்டி. பெயரை வாசிக்கு முன்னர் கைப்பை மறைத்துக்கொள்கிறது. ஜேர்மன் பொறியியல் போன்ற உடல் அசைவுகள். அவள் ஒரு சஞ்சிகையினைப் படித்துக் கொண்டிருக்கிறாள்.

நல்லெண்ணைக்கும் கருமைக்கும் இடையில் ஒரு நிறம். குழந்தைக் கொழுப்பு வாலிபத்திலும் அவனோடு இருக்கிறது. மொழுமொழு கைகள். கொழுத்த கன்னங்கள். தலை நிறைய முடி. தலையினை இருக்கையில் சரித்து இருந்தபடி தூங்குகிறான். குறட்டை உரிமைக்குரல் போன்று ஒலிக்கிறது.

அவள் காதிற்குள் இசையில்லை. கண்கள் சஞ்சிகையில். அரை அடி தள்ளி அவன் இருக்கை. சமரசமற்ற அவன் குறட்டை. அவள் இருப்பை அவனோ அவன் குறட்டையினை அவளோ உணர்ந்ததற்கான அறிகுறிகளே இல்லை.

புகையிரதத்திற்குள் யாரிற்கோ நெஞ்சுவலி. ஆம்புலன்ஸ் வருகைக்காகப் புகையிரதம் காத்திருக்கிறது. ஜன்னல் வெளியே இரு புறாக்கள். ஒன்று ஆண் மற்றையது பெண். ஆண் பெண்ணின் ஒத்துழைப்பைப் பெறுதற்காய்ப் படாத பாடு படுகிறது. புறாவிற்கு மயிலாட்டம் வரும் என்பதைப் புகையிரதம் பார்க்கிறது. பத்து நிமிடங்கள் நாட்டிய நிகழ்ச்சி தொடர்கிறது. எத்தனையோ அடவுகள் எத்தனையோ உத்திகள். பெண் மசியவே இல்லை. ஆண் பெண்ணின் மண்டையில் இறுக்கி ஒருதரம் கொத்திவிட்டுப் பறந்து செல்கிறது.

ஆண் புகையிரதம் நின்றதே தெரியாது உறங்கிக் கிடக்கிறது. பெண் வைத்த கண் வாங்காது சஞ்சிகை படிக்கிறது.

காலைகள் சமன்பாட்டிற்குக் கட்டுப்பட்டே பிறக்கின்றன. விழித்தவாக்கில் பணி பற்றிக்கொள்கிறது. தனக்குள் நடப்பதைப் பார்;ப்பதற்கோ தனது சத்தங்கங்களைக் கேட்பதற்கோ அவகாசமில்லை. மூளையின் அனைத்து விசையும் சமன்பாடுகளின் பிரகாரம் உள்ளீடுகள் இடப்படுவதையும் வெளியீடுகள் அடையப்படுவதையும் உறுதி செய்வதிலேயே குவிகிறது. இரவு மணிக்கூட்டின் பிரகாரம் வந்து போகிறது.

பக்கத்தில் நான்கு இருக்கைகள். இன்றைக்கு அதில் நான்கு தமிழர்கள். எங்கோ வழமைக்கு மாறாய்ச் செல்கிறார்கள். அதனால் புகையிரதம் சார்ந்தும் அதன் ஒவ்வொரு அசைவுகள் சார்ந்தும் அவர்கள் விழிப்பாய் இருக்கிறார்கள். தாங்கள் இறங்கும் இடம் எப்போ வரும் என்று அவர்களிற்குத் தெரிந்திருக்கவில்லை என்பது தெரிகிறது. அதனால் அனைத்தையும் உணர்ந்தபடி உட்கார்ந்திருக்கிறார்கள். நாளாந்த பயணிகளிற் பலரிற்கு றெயில் பயணம் பலபத்தாண்டுகள் கழிந்த தாம்பத்தியம் போன்று ஆகிப்போகிறது. புதுப்பயணிகள் நால்வரும் பயணத்தைக் கொண்டாடுகிறார்கள். தமக்குள் சத்தமாய்த் தமிழில் பேசிக்கொள்கிறார்கள். அவர்களுள் ஒரு முதிய தம்பதி, ஒரு நடுத்தர வயது மனிதன் ஒரு இளைஞன். இளைஞனும் முதியவரும் சத்தமாய்ப் பேசிக் கொள்கிறார்கள் தமிழிழ்.

'....அந்தக் காலத்தில, ஏ.எல் பெயிலானோண்ண அப்பர் பிடிச்சு கொம்பனியில சேத்து விட்டிட்டார். அப்பரிட்ட படிச்ச பெடியன் தான் அங்க எம்.டி. போனா பீல்ட் வேர்க். அப்ப காரிற்க எப்பவும் போத்தில் இருக்கும். கடனிற்குச் தையல் மெசின் அப்பிடி வாங்கிப்போட்டு கட்டுக்காசு கட்டமுடியாத சனத்திட்ட காசு வாங்கிற உத்தியோகம். கஸ்ரப்பட்ட சனங்களோட தான் வாழ்க்கை. அதுகள் ராச மரியாதை தருங்கள். பதினஞ்சு ரூபா கட்டுக்காசாய் இருக்கும் அதுகள் தாற அரிசி, கோளி அது இது அதுக்கு மேலால இருக்கும். என்ர ஒரு நாள் பேட்டாவே முப்பது ரூபா. அப்ப நான் அங்க ரெண்டு மூண்டு நாள் நிண்டு அதுகளோட பம்பலடிச்சுப் போட்டு இஞ்ச வந்து நான் போட்ட எக்ஸ்ற்றா பேட்டாவை வச்சு அதுகளின்ர கட்டுக்காசைக் கட்டுவன். அப்பிடி ஒரு வாழ்க்கை அது. இனி வராது. சிங்களம், மட்டக்களப்பு நுவரேலியா என்டு அது நினைக்க முடியாது'

'அப்ப இவவை எங்க சந்திச்சனீங்கள்'

'இவளையோ—நானெங்க சந்திச்சது. அங்க காவாலிக்கு ஒருத்தனும் பொம்பிளை தர மாட்டாங்கள். கஸ்ரப்பட்ட ஆக்கள், தரங்குறைஞ்ச ஆக்கள் இப்பிடி ஏதாவது வந்தா தான். ஆனா எனக்கு ஒரு பெட்டை இருந்தவள். இப்ப அவளும் வெளிநாட்டில தான் இருக்கிறாள்'

'அப்ப என்ன பேஸ்புக்கில அவவோட தொடர்பில இருக்கிறீங்களே'



'அவள் கிழவி, எனக்கு வேற வேலையில்லையே அந்தக் கிழவியோட கதைக்க'

 

'எப்பிடி இவ்வளவு இளமையா இருக்கிறியள்?'

 

'நாங்கள் ரெண்டு பேரும் ஒவ்வொருநாளும் நிறைய தூரம் நடக்கிறனாங்கள். வின்ரர் சமறெண்டில்ல. எக்கச்சக்கமாக நடக்கிறனாங்கள்.'

 

'ஏன் தனிய இருக்கிறீங்கள். மகள் பேரப்பிள்ளையளளோட பம்பலாய்ப் போய் இருக்கலாமே'

 

'ச்ச்சீ.. ஒரு நாளும் கூடாது. நாங்கள் இவளிற்கு வேற கோப்பை எனக்கு வேற கோப்பை எண்டு வச்சுத் தான் சாப்பிடுறநாங்கள். எலி வளை எண்டாலும் தனி வளை வேணும். நான் நடந்து போட்டு வந்தால் ஜட்டியோட கதிரையில ஒரு பத்து நிமிசம் கிடப்பன். ஒரு கவலை இல்லை. பிள்ளை வீடெண்டால் மருமோன் வந்தால் ஒதுக்கோணும். பேத்தி வழந்திட்டாள் எண்டு பாக்கோணும். வேற வேலையில்லையே'

 

'எத்தினை வருசம் நீங்கள் வெளிக்கிட்டு'

 

'எண்பதில வந்தனான். முதல் ஜேர்மன் போய், பிறகு ஓப்பிண் விசாவில வந்தன். அப்ப ஒருநாயும் ஒருத்தனுக்கும் இந்த முறையள சொல்லிக்குடுக்கிறேல்ல. எனக்கு ஒரு கரிபியன் காரன் தான் சொல்லித்தந்தவன்'

 

'ஊரிற்குப் போனனீங்களே'

 

'நானேன் போறன். அங்க நான் போய் என்னத்தைச் செய்யிறது. ஒருத்தரும் எனக்கு அங்க இல்லை'

 

'உங்கட கொம்பனியில உங்களோட பம்பல் அடிச்ச ஆக்கள் இல்லையே'



'அவங்கள் எல்லாம் செத்துப் போனாங்கள். நான் குடியை விட்டிட்டு, ஆரோக்கியமா வாழுறதால இருக்கிறன். ஆனால் இப்ப இஞ்ச இருந்து நாலு பிள்ளைக் காரன் கூட அங்க போய் ஏழை எழியதுகளைக் களியாணம் கட்டிப்போட்டு வந்து இங்க இருந்து மாசாமாசம் காசனுப்பிக்கொண்டிருக்கிறாங்கள். அதால அதுகளும் நல்லா வாழுதுகள் தானே'

 

'இங்க நாலு பிள்ளை உள்ளவன், ஏன் அங்க கலியாணம் கட்டோணும். காசனுப்பேலும் எண்டா சும்மா அனுப்ப வேண்டியது தானே?'

 

'அவளின்ர வியாதிக்கு யார் நீயே போய் மருந்து குடுக்கப்போறாய்..?'

 

சமன்பாட்டிற்குக் கட்டுப்பட்டுப் புகையிரதத்தில் பயணிப்போரைக் குலுக்கிப் போடும் சம்பாசனை. பாசை புரியாததால் பலர் றோபோட்டுக்களாய்க் கிடந்தார்கள். மூன்று இருக்கைள் தள்ளி பாதையோரம் இருந்த இருக்கையில் கோபுரத்தில் வேலைக்கேற்ற ஆடையணிந்திருந்த ஒரு தமிழ் தெரிந்த பெண் இந்த நால்வர் திசை நோக்கி நெருப்பைக் கொட்டுப் பார்வையினைச் செலுத்தினாள். கிழவர் கண்டுகொண்டதாய்த் தெரியவில்லை. ஆம்புலன்ஸ் வந்ததால் நெஞ்சுவலி நீங்க, புகையிரதம் நகர்ந்தது.


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை வாசித்தவுடனே புரிந்து கொண்டேன் ...வழமையாக உங்களது கதைகளை இரண்டு மூன்று தடவைகள்   வாசித்தால் தான்எனக்கு  புரியும்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்...நல்ல யதார்த்தமான கதை...70,80 களில் லண்டன் வந்தவர்களது அலப்பறை தாங்க முடிகிறதில்லை...அது சரி கோளி என்டால் என்ன?

அண்மையில் ஒரு வெள்ளை நீ இலங்கையா என்று கேட்டார்.நான் ஆம்,ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் சொன்னார் இலங்கையர்களுக்கு அழகான ஸ்கின்னாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ரதி said:

அண்மையில் ஒரு வெள்ளை நீ இலங்கையா என்று கேட்டார்.நான் ஆம்,ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் சொன்னார் இலங்கையர்களுக்கு அழகான ஸ்கின்னாம்

கேட்டவருக்கு யாருக்கு எப்படிச் சொல்லிக் குளிரவைக்கலாம் என்று தெரிந்திருக்கின்றதுtw_blush:

 

கதையில் வரும் வயது முதிர்ந்தவர் விடுப்புக் கேட்பவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் தனது வாழ்வின் அடிப்படைகளைச் சொல்லுவது பிடித்திருக்கின்றது.

Link to comment
Share on other sites

நன்றி புத்தன்,  ரதி, கிருபன் புங்கையூரான் மற்றும் நுணாவிலான். கோழியில் இருந்த எழுத்துப்பிழையினைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி ரதி. 'ள',  'ழ' எத்தனை முயன்றும் சரிப்படுத்தமுடியாத ஒரு பிரச்சினை எனக்கு.

அந்த முதியவர் கதைத்த பல விடயங்கள் வடிகட்டிய அயோக்கியத்தனம் அல்லது மடைமை போன்று வெளிப்படைக்கு எடுத்த எடுப்பில் தோன்றினும் அந்த சம்பாசனையில் பல சுவாரசியமான விடயங்கள் தோன்றின. ஒரு வகையில் பார்த்தால், ஜன்னல் வெளியே தெரிந்த புறாக்களின் அளவிற்கு மனிதத்தை அதன் அத்தனை பகட்டுக்கள், பித்தலாட்டங்கள், இட்டுக்கட்டிய கற்பிதங்களில்களில் எல்லாம்இருந்து பிரித்தெடுத்து அடிப்படை விலங்கு நிலைக்கு இட்டுவந்ததாய்த் தோன்றியது. எந்த ஒரு அதிர்ச்சியும் எதைச் சார்ந்தும் அடையாத ஒரு பேர்வழியாக, முன்முடிவுகள் இன்றி இயற்கையினை அதன் இயல்பில் பார்க்கக்கூடியவராக வெளிப்பட்டமை சுவாரசியமாக இருந்தது. அதனால் பகிhந்துகொண்டேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நோயாளியை அவசர ஊர்தி வந்து கூட்டிப் போவதற்குள் நடந்த ஒரு யதார்த்தமான சம்பாஷனையை அழகாய்ச் சொல்லியுள்ளீர்கள்...! இன்றைய காலகட்டத்தில் வயதானவர்களானாலும் தனிய இருப்பதுதான் வசதியென்பதை அந்த வயசானவர் சொல்வது நிஜம்....!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பம் கொஞ்சம் குழப்பமாக இருந்து எரிச்சலைத் தந்தது. மனைவி வேற்று இனத்தவரா என்ற குழப்பம் வேறு?? முடிவு ஓகே :mellow:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவனின் ஆக்கமென்றால் வாசிக்காமல் கடந்து செல்வதில்லை. நல்ல யதாா்த்தமான சொல்லாடல். வந்தமண்ணில் எத்தனை வருடங்கள் வாழ்ந்தாலும் சொந்தமண்ணின் வாசனை எம்மில் மணந்து கொண்டுதான் இருபு்பதை அந்த முதியவாின் உரையாடல் விளக்குகிறது, என்றாலும் பக்கம் பாா்த்து உரையாடும் நாகாிகத்தை எம்மவா் படிப்பது அவசியம் என்பதை இவ் ஆக்கம் எடுத்து சொல்கிறது,பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.