Jump to content

புத்தகக் கண்காட்சி, விவசாய விழிப்பு உணர்வு: இப்படியும் நடத்தலாம் திருமணம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

couple600.jpg

யிரம் காலத்துப் பயிர் என திருமணத்திற்கு முக்கியத்துவம் தந்த காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. தனக்கு சரியெனப்பட்டதை தயக்கமின்றி கூறும் இன்றைய தலைமுறை தன் வாழ்க்கை இணையை தேர்வு செய்யும் வைபவத்திலும் அத்தகைய அணுகுமுறையையே கையாண்டு அசத்துகிறார்கள். 

திருவாரூரில் நடந்த புத்தக கண்காட்சி விவசாய விழிப்பு உணர்வு என அசத்தலான அம்சங்களுடன் அரங்கேறியது ஒரு திருமணம். திருவாரூர் வேலுடையார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.எஸ்.எஸ்.தியாகபாரி. இவரது மகள் கவுசல்யாவிற்கு திருமணம் நடைபெற்றது. நகரின் முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் என திரளான பேர் கலந்துகொண்ட இந்த திருமணத்தில் நிகழ்ந்த பல அம்சங்கள் அனைவரையும் கவர்ந்தது. தமிழக கலாச்சாரப்படி அட்சதையாக நெல்மணிகள் தரப்பட்டதே முதல் ஆச்சர்யம்.

bookfaircouple2.jpg

மணவிழா அரங்கில் ஸ்டால்கள் பல இடம்பெற்றிருந்தன. ஒரு ஸ்டாலில் திருவாரூரில் இயங்கி வரும் 'மாற்றத்திற்கான மக்கள் களம்' சார்பில் சமுதாய விழிப்புணர்வு புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. மற்றொரு ஸ்டாலில், 'நமது நெல்லைக் காப்போம்' அமைப்பின் சார்பில் பாரம்பரிய விவசாயத்தின் முக்கியத்துவமும், நெல் சேமிக்கும் கோட்டையும் மற்றும் அடுத்த தலைமுறை விவசாய எடுகோள்கள் குறித்த கண்காட்சியும் இடம்பெற்றன. கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் சில ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன.

agrifair600.jpg

ஒரு பெரிய அரங்கில் புத்தகக் கண்காட்சியும் இடம்பெற்றது. அதில், பலதரப்பட்ட நூல்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. 'யாழ் நூலங்காடி' ஏற்படுத்திய இந்த ஸ்டாலில் விற்பனையாகும் புத்தகங்கள் அனைத்திற்கும் 50% தள்ளுபடி தரப்பட்டது. அதாவது நாம் வாங்கும் புத்தகங்களின் பாதித் தொகையை நாம் செலுத்தினால் போதும், மீதித் தொகையினை மணமக்கள் சார்பில் செலுத்துவார்கள் என அறிவிக்கப்பட்டது.

agrifair2.jpg

திருமணத்திற்கு வந்தவர்கள் இதைப் பார்த்து ஆச்சரியப்படவும், பாராட்டவும் செய்தனர். இதுவரை மஞ்சள் பையும், மரக்கன்றுகளும் கொடுத்து வந்த திருமண வீடுகள் புது வகையில் அறிவை விரிவு செய்யும் வகையில் புத்தகக் களஞ்சியத்தை தந்தது இதுவே முதல்முறை.  இதனால் திருமணத்திற்கு சென்ற பலரும் கையில் மரக்கன்றுகளுடனும், புத்தகங்களுடனும் திரும்பினர்.

வசதி படைத்தவர் வீட்டு திருமணங்கள் என்றால் நகர் முழுக்க ஃப்ளக்ஸ் போர்டுகள், சுவர் விளம்பரங்கள், விளக்கு அலங்காரங்கள் எனப் பலவிதங்களில் பணம் செலவழித்து தங்கள் படோடோபத்தை காட்டும் திருமண நிகழ்ச்சிகளில், இந்தத் திருமணம் அந்த பிம்பத்தை மாற்றி இருக்கிறது. இப்படியும் பயனுள்ள வகையில் செலவழிக்கலாம் என வகுத்துக் கொடுத்திருக்கிறது. திருமணத்திற்கு முந்தைய நாள் தொடங்கிய இந்த புத்தகக் கண்காட்சி திருமண நாளோடு நிறைவடையாமல் இன்னும் ஒரு நாள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காகவும் நீட்டிக்கப்படிருக்கிறது.

handcraftfair1.jpg

யாழ் நூலங்காடி உரிமையாளர் கந்தன் பேசினோம், '' இது போன்ற திருமண விழாக்களில் புத்தகக் கண்காட்சி நடத்துவது இதுதான் முதல்முறை. பணத்தை  ஃப்ளக்ஸ் போர்டுகள், சுவர் விளம்பரங்கள், விளக்கு அலங்காரங்கள் என  வீண் ஆடம்பரத்திற்கு செலவு செய்வதை விட்டு, பிறருக்கு வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் இதுபோன்ற அறிவுசார் புத்தகங்களில் முதலீடு செய்தால் நமது பெயரை காலத்திற்கும் கொண்டு செல்லும். அந்த  வகையில் நானும் இதற்கு ஒரு  வகையில் பயன்பட்டிருப்பது மகிழ்ச்சியே'' என்றார்.

couplebookfair.jpg

http://www.vikatan.com/news/tamilnadu/65068-marriage-made-in-bookfaira-different-marriage.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.