Jump to content

கென்டக்கி சிக்கினா ??????


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றுக் காலமை கடையைத் திறந்து இரண்டு மணிநேரம் வேலை செய்கிறேன் என்று முதலாளி நம்பிக்கொண்டு இருக்க முகநூலையும் யாழ் இணையத்தையும் ஓடிஓடிப் பாத்துக்கொண்டு வாறவர்களையும் கவனிச்சுக்கொண்டு இன்னும் ஆறு மணித்தியாலம் இருக்கே என்று மனதுள் நொந்துகொண்டு வேலை செய்துகொண்டிருக்க, கடைக் கதவைத் தள்ளிக்கொண்டு ஒரு பெண். பார்க்கப் புதிதாக இருக்கிறாரே எண்டு எண்ணிக்கொண்டே வணக்கம் எண்டன். ஆளிட்டையிருந்து பதில் வணக்கம் வராமல் ஒரு முறைப்புத்தான் வந்திது. சரி ஆரோ ஒரு பழக்க வழக்கம் தெரியாத மூதேவி இது என்று மனதுள் எண்ணிக்கொண்டு என்ன வேணும் என்று நைசாத்தான் கேட்டன். "அண்ணை இல்லையோ" என்றார். இந்தப் பெரிய ஆள் முன்னுக்கு நிக்கிறன். உனக்கு அண்ணையைத்தான் கேக்குதோ எண்டு மனதில் எண்ணிக்கொண்டே அண்ணை பின்னேரம் தான் வருவார் என்றேன். கொஞ்ச நேரம் எதோ யோசித்துடுவிட்டு "கென்டக்கி இருக்கோ" என்றார்??? கென்டக்கியா??? என்று நானும் யோசித்துவிட்டு "நீங்கள் மாறி வந்திட்டியள். இது சிக்கின் கடை இல்லை. offlicence. கொஞ்சம் தள்ளிப் போனால் KFC இருக்கு" என்றேன். "நீ என்ன வேலைக்குப் புதுசே? நான் நெடுக வந்து அண்ணனிட்ட வாங்கிறனான். கடையிலை என்ன சாமான் இருக்கெண்டு தெரியாமல் வேலை செய்யிறியோ" எண்டார். எனக்கு வந்த கோவத்தை எப்படி அடக்கினேன் என்று தெரியாது. அதுக்குக் காரணம் நெடுக வந்து வாங்கிறனான் என்று வேற சொல்லுறாளே என எண்ணிக்கொண்டு "கென்டக்கி சிக்கன் தான் லண்டனில இருக்கு. எங்கட கடையில அந்தப் பெயரில ஒண்டும் இல்லை. உங்களிலும் மோசமா என்னாலும் கதைக்க முடியும். பண்பாக் கதைச்சுப் பழகுங்கோ முதல்ல" என்றுவிட்டு வாசலை நோக்கிக் கையைக் காட்ட எதோ புறுபுறுத்தபடி வெளியே போனார்.

என்னைப் போய் ஒரு பட்டிக்காடு இப்பிடிப் பேசிப் போட்டுதே என்ற வெப்பியாரத்தோட உடன அண்ணனுக்குப் போனைப் போட்டன். அண்ணா ஒண்டு வந்து கென்டக்கி என்று கேட்டு இல்லை எண்டதும் எனக்கு ஏசிப்போட்டுப் போகுது. அப்பிடி  ஏதும் எங்கடை கடையில இருக்கோ எண்டன். அவரும் கொஞ்சநேரம் யோசிக்க ... உங்களிட்டை வந்து நெடுக வாங்கிறது என்று சொன்னாளே என்று நான் கேட்ட விதத்திலையே அவருக்கு ஞாபகம் வந்திட்டுது. அந்தப் பிள்ளையோட வந்த பொம்பிளையே எண்டுவிட்டு அது கென்டக்கி இல்லை kinder tea என்றார்.

ஜேர்மன் நாட்டில் பிள்ளைகளுக்குக் கொடுக்கும் தேநீர் வகைகளும் எமது கடையில் விக்கின்றோம். அதைத்தான் அவர் தவறாகக் கேட்டுவிட்டார். எனக்கு விளங்கவே முடியேல்லை. இதை விபரமாக ஏன் அவர் என்னிடம் கேட்கவில்லை என்று யோசித்தவண்ணம் மவளே அடுத்தமுறை வா உனக்கு இருக்கு என்று கறுவியபடி காத்திருக்கிறன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெண்ணும் போகும்போது நினைத்திருக்கும் இதென்னடா புதுசா ஒரு பட்டிக்காடு வேலைக்கு வந்திருக்கு என்டு...! அந்தப் பிள்ளை நிக்கும்போதே  போன் பண்ணிக்  கேட்டிருக்கலாம் ....! அடுத்தமுறை அவவும் தேயிலைப் பெட்டியைக் கொண்டுவந்து , இதுதான் கென்டக்கி என்டு விட்டெறியப் போகுது கவனம்...!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனுசி இதென்னடா புதிசாய் ஒரு மூதேவி கடையுக்கை நிக்கிது எண்டு திட்டிக்கொண்டு போயிருக்கும்......எங்கையும் ரோட்டிலை காணட்டும் உவவுக்கு காட்டுறன் விளையாட்டை...tw_blush:

Link to comment
Share on other sites

4 minutes ago, குமாரசாமி said:

மனுசி இதென்னடா புதிசாய் ஒரு மூதேவி கடையுக்கை நிக்கிது எண்டு திட்டிக்கொண்டு போயிருக்கும்......எங்கையும் ரோட்டிலை காணட்டும் உவவுக்கு காட்டுறன் விளையாட்டை...tw_blush:

roflmao emoticon

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடை ஒன்று ந‌டத்தும்போது இப்படி பலர் வருவார்கள்.


அந்தபிள்ளை திரும்ப திரும்ப அண்ணனிடம் வாங்குவதா கூறியாதல் அந்த உடனே அண்ணனுக்கு கோல் அடித்து என்ன பொருள் என் விபரமாக‌ கேட்டு இருக்காலாம். இங்கு ஓர் sales opportunity இழக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகை தந்து கருத்துக்களைப் பதிந்த பச்சை தந்த சுவி அண்ணா, குமாரசாமி, ஜீவன் சிவா, கொழும்பான், நந்தன், புத்தன் ஆகியோருக்கு மிக நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/06/2016 at 5:19 PM, colomban said:

கடை ஒன்று ந‌டத்தும்போது இப்படி பலர் வருவார்கள்.
அந்தபிள்ளை திரும்ப திரும்ப அண்ணனிடம் வாங்குவதா கூறியாதல் அந்த உடனே அண்ணனுக்கு கோல் அடித்து என்ன பொருள் என் விபரமாக‌ கேட்டு இருக்காலாம். இங்கு ஓர் sales opportunity இழக்கப்பட்டுள்ளது.

நீங்க வேற....

அதுவரைக்கும் யாழையும் முகநூலையும் பார்க்காமல் எப்படி???

(நேற்றுக் காலமை கடையைத் திறந்து இரண்டு மணிநேரம் வேலை செய்கிறேன் என்று முதலாளி நம்பிக்கொண்டு இருக்க முகநூலையும் யாழ் இணையத்தையும் ஓடிஓடிப் பாத்துக்கொண்டு வாறவர்களையும் கவனிச்சுக்கொண்டு இன்னும் ஆறு மணித்தியாலம் இருக்கே என்று மனதுள் நொந்துகொண்டு வேலை செய்துகொண்டிருக்க, 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, விசுகு said:

நீங்க வேற....

அதுவரைக்கும் யாழையும் முகநூலையும் பார்க்காமல் எப்படி???

(நேற்றுக் காலமை கடையைத் திறந்து இரண்டு மணிநேரம் வேலை செய்கிறேன் என்று முதலாளி நம்பிக்கொண்டு இருக்க முகநூலையும் யாழ் இணையத்தையும் ஓடிஓடிப் பாத்துக்கொண்டு வாறவர்களையும் கவனிச்சுக்கொண்டு இன்னும் ஆறு மணித்தியாலம் இருக்கே என்று மனதுள் நொந்துகொண்டு வேலை செய்துகொண்டிருக்க, 

tw_blush:tw_blush:tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.