Jump to content

16 வயதுக்குள் 300இற்கும் அதிகமான நிகழ்ச்சிகளில் நாதஸ்வரம் வாசித்த அரிஹரசுதன்


Recommended Posts

16 வயதுக்குள் 300இற்கும் அதிகமான நிகழ்ச்சிகளில் நாதஸ்வரம் வாசித்த அரிஹரசுதன்
 

(சிலாபம் திண்­ண­னூரான்)

 

“உங்­க­ளிடம் இருக்கும் சக்­தியை முயற்­சியின் ஊடாக செயல்­ப­டுத்­தினால் அது முற்றுப்பெறும். அந்த சக்­திக்கு அடிப்­ப­டை­யாக இருப்­பது முயற்­சியின் மூலக்­கூறு. அதையே துணிவு என்­கிறோம்.

 

157DSCF2939.jpg

 

துணிவு இருந்­தாலே போதும். அதுவே இந்த உல­கத்தை சிறி­தாகக் காட்டும். தாழ்வு மற்றும் அச்­சத்­துக்கு தளர்வு கொடுங்கள். அப்­போது துணிவு பிறந்­து­விடும்” என்­கிறார் நாதஸ்­வர கலைஞர் என். அரி­ஹ­ர­சுதன்.

 

ஒரு திரு­மண நிகழ்வின் சுதன் நாதஸ்­வர இசைக்­க­ரு­வியை தன் வாயில் வைத்து, தன் இரு கைகளின் விரல்­க­ளையும் நாதஸ்­வ­ரத்தின் துளை­களில் அங்கும் இங்கும் பாய வைத்து, நாதஸ்­வர ஓசையை வெளியே கக்கிக் கொண்­டி­ருந்தார். அந்த நேரத்­தி­லேயே எமக்கு சுதனின் அறி­முகம் கிடைத்­தது.

 

முதலில் உங்­க­ளுக்கு எத்­தனை வயது எனக் கேட்­டதும் மெல்­லிய புன்­ன­கை­யோடு “பதி­னாறு” என சிக்­க­னமாய் பதிலை கொடுத்தார். உண்­மை­யி­லேயே அவரின் வயதை அவரின் முகம் அடை­யா­ளப்­ப­டுத்­தி­யது.

 

“நான் தனியார் பாட­சா­லை­யொன்றில் ஆங்­கில மொழி மூல­மான கல்­வியை கற்று வரு­கின்றேன். எனக்கு விபரம் தெரிந்த சின்­னஞ்­சிறு வயதில் எனது கைகளால் தாளம் போடு­வேனாம்.

 

எனது ஐந்து வயதில் நாதஸ்­வ­ரத்தை கையி­லெ­டுத்­துள்ளேன். என் உருவ உய­ரத்தை விட நாதஸ்­வ­ரத்தின் வருவம் அன்று பெரி­தாக இருந்­துள்­ளது.

 

157DSCF2944.jpgஅன்று எனது வாயில் வைத்து நாதஸ்­வ­ரத்தை வாசிக்க பெரும் சிர­மப்­பட்­டுள்ளேன்.

 

எனது அம்­மா தான் காலையும் மாலையும் ஒரு கையில் நாதஸ்­வ­ரத்தை தூக்கிக் கொண்டு மறுகையில் என் கையைப் ­பி­டித்துக் கொண்டு என் குரு­நாதர் வீட்­டுக்கு அழைத்துச் சென்­றுள்ளார்.

 

எனது குரு­நாதர் நாதஸ்வர வித்­துவான் ஆர்.மகேந்­திரன். இப்­போது என் 16 வயதில் 300 இற்கும் மேற்­பட்ட நிகழ்­வு­களில் நாதஸ்­வரம் வாசிக்க எனது குரு­நா­தரின் பயிற்­சியே முன்­நின்­கின்­றது.

 

அவ­ருக்கு என்றும் தலை­ வ­ணங்­கு­கிறேன்” என தன்னைப் பற்றி தெரி­வித்தார் சுதன்.

 

“எனது ஆறு வயதில் கொழும்பில் முருகன் ஆலய திரு­வி­ழா­வொன்றில் முதன் முத­லாக பகி­ரங்­க­மாக பொது­மக்கள் முன்­னி­லையில் நாதஸ்­வரம் வாசித்தேன். நான் அன்­றைய தினம் பொது­மக்­க­ளுக்கு ஒரு பொம்­மை­யாக காட்­சி­ய­ளித்தேன். பலரும் என்னை புது­மை­யாக வேடிக்­கை­யாகப் பார்­வை­யிட்­டனர். 

 

இந்த வயதில் இப்­ப­டி­யொரு திற­மை­சா­லியா? வியப்­ப­டைந்த அந்த மக்கள் மனங்­களில் குடி­கொண்டேன்.

 

எனது அப்பா தவில் வித்­துவான். அவர் தன்­னுடன் நாதஸ்­வரம் வாசிக்க ஒருவர் இல்­லாது சிர­மப்­பட்டார். அவர் பெரும் முரு­க­ பக்தர். அப்பா எப்­போதும் தனக்கு ஒரு நாதஸ்­வர கலை­ஞரை வழங்கி உத­வு­மாறு முரு­க­னிடம் வேண்டிக் கொள்வார்.

 

அதன் எதி­ரொ­லி­யாக நான் நாதஸ்­வர கலை­ஞ­ராக உரு­வானேன். எனது அம்­மாவே பெரும் எதிர்­பார்ப்­புடன் எனது நாதஸ்­வர பயிற்­சிக்கு பெரும் அத்­தி­வா­ர­மாக விளங்­கி­யதை என்­றுமே என்னால் மறக்க இய­லாது” என்­ற­வரை தடுத்து கேள்வி அம்­பு­களை ஏவினோம். 

 

இது காலம்­வரை எத்­தனை நிகழ்­வு­களில் கலந்து கொண்­டுள்­ளீர்கள்?


பல்­வேறு வகை­க­ளி­லான நிகழ்ச்­சி­களில் இணைந்து எனது திற­மையை அடை­யா­ளப்­ப­டுத்தியுள்ளேன் எனது ஆறு­வ­யதில் ஆரம்­ப­மான இக் ­கலைப் பய­ணத்தில் சுமார் 300 இற்கும் மேற்­பட்ட நிகழ்ச்­சி­களில் நாதஸ்­வரம் வாசித்­துள்ளேன்.

 

2011 இல் அல­ரி­மா­ளிகை நிகழ்­வொன்­றிலும் இணைந்து எனது திற­மையை அடை­யாளம் காட்­டி­யுள்ளேன். அப்­போது எனக்கு வயது பதி­னொன்று.

 

அல­ரி­மா­ளிகை அதி­கா­ரிகள் அன்று அங்­கு­ வ­ருகை தந்­தி­ருந்த அர­சியல் வாதிகள் உள்­ளிட்ட அனை­வ­ரையும் பூபாளம் வாசித்து அவர்­களின் காது நரம்­பு­களைச் சுகப்­ப­டுத்தி அவர்­களின் இத­யத்­தையும் மென்­மை­யாக்கி அவர்­களை என்­ வசம் இழுத்­தெ­டுத்தேன்.

 

அதே ஆண்டு மலே­ஷி­யாவில் மூன்று மேடைக் கச்­சே­ரி­களில் நாதஸ்­வ­ரத்தை வாசித்து அனை­வ­ரையும் சொக்க வைத்தேன் என அவர் பதி­ல­ளித்தார்.

 

மீண்டும் அவரே பேச்சை தொடர்ந்தார். “தேர் ஏறி சுவாமி வீதிக்கு புறப்­ப­டு­கையில் மல்­லாரி ராகத்­தி­லேயே நாதஸ்­வ­ரத்தை வா­சிக்க வேண்டும்.

 

ஆனால், சிலர் ஆகம விதிகள் தெரி­யாது சினிமா பாடல்­களை பாடச் சொல்லி நச்­ச­ரிப்­பார்கள். எமது தொழில் தெய்­வீ­கத்­துடன் இணைந்­தது. அதற்­கென மதிப்பும், மரி­யா­தையும் உண்டு. பாரம்­ப­ரிய கட்­டுப்­பாட்டு விதி­களும் உண்டு. 

 

அடி வயிற்­றி­லி­ருந்து காற்றை இழுத்­தெ­டுத்து நாதஸ்­வர இசை­க் க­ரு­வியின் துவா­ரங்­களில் இரு கை விரல்­களை அங்கும் இங்கும் ஓட­வைத்து நாதஸ்­வர ஓசையை வெளியே இரா­கத்­தோடு கொண்டு வர­வேண்டும்.

 

சுரங்­களால் அசை­வுகள் உண்­டா­கி­றது. நாதஸ்­வர கரு­விக்குள் பல இரா­கங்கள் மறைந்­துள்­ளன.

 

அதை வெளியே கொண்­டு­வ­ரு­வது எமது கட­மை­யாகும். ஏழு சுரங்­களும் உள்­ளன. இவ்­வா­றான சுரங்­களை வெளியே படைப்­பது மிக எளி­தான விட­ய­மல்ல.

 

மற்­று­மொரு வித இசைக்­க­ரு­வி­யான மகுடி ஊதுகு­ழ­லா­னது நாகப்­பாம்பை வைத்து உழைக்கும் பாம்­பாட்­டிக்கு எவ்­வ­ளவு முக்­கி­யமோ அதே போன்று இறை­ப­ணியில் நாதஸ்­வ­ரமும், மேளமும் மிக­ முக்­கி­ய­மா­னது.

 

நாக­வ­ராளி பாடினால் நாகப் ­பாம்பும் படம் எடுத்து ஆடும்” என பல இர­க­சி­யங்­களை தெரி­விக்க நாமும் வியப்பில் அடி­பட்ட பாம்பாய் சுருண்டு போய்­விட்டோம். 

 

தேர் ஊர்­வலம் இடம்பெறு­கையில் ஏதும் விப­ரீ­தங்கள் ஏற்­ப­டுமா? என கொக்­கியைப் போட்டோம்.

“ஆமாம். தேர் ஊர்­வலம் இடம் பெறு­கையில் சுவா­மி­க­ளுக்கு முன்னாள் கச்­சேரி இடம்­பெறும். ஊர்­வலம் பல மைல்­க­ளுக்கு அப்­பாலும் இடம்­பெறும். இவ்­வா­றான நேரத்தில் கூட்­டத்­தினர் அங்கும் இங்கும் என் மீது மோது­வார்கள்.

 

இவ்­வாறு ஊர்­வ­லங்­களில் மக்கள் நாதஸ்­வ­ரத்தில் மோது­கையில் நாதஸ்­வ­ரத்தின் சீவாளி உதட்டில் குத்தி உதடு வெடிக்கும். அல்­லது காயம் ஏற்­படும். இது பல­ருக்குத் தெரி­யாது.

 

இடித்­த­வர்கள் “சொரி” என சொல்லி விட்டு கூட்­டத்­தோடு கூட்­ட­மாக நகர்ந்து விடு­வார்கள். நான் படும் வேதனை எனக்குத் தான் தெரியும்” எனக் கூறினார் அரி­ஹ­ர­சுதன்.

 

சீவாளி எனப்­ப­டு­வது என்ன? 

“நாதஸ்­வ­ரத்தில் பழுப்­பான வெள்ளை நிறத்தில் பல சீவா­ளிகள் தொங்கும். இது புல்லால் தயா­ரிக்­கப்­ப­டு­கி­றது. சீவா­ளியே நாதஸ்­வ­ரத்தின் ஒலிக்கு உயிர் கொடுக்­கின்­றது. நாதஸ்­வர ஓசையின் உயிர்­நா­டியே சீவா­ளி­யாகும்.

 

உங்­களின் எதிர்­கால நோக்கம் எவ்­வாறு? 

இன்று தமிழன் கண்­டு­பி­டித்த பல இசைக்­க­ரு­விகள் கணி­னி­யோடு முடங்கி அதன் பெருமை அழிக்­கப்­பட்டு விட்­டது.

 

அன்று தமிழன் கண்­டு­பி­டித்த இசைக்­க­ரு­விகள் அனைத்தும் வாழ்க்­கை­யோடு இணைந்­தி­ருந்­தன. எதையும் கால­வே­கத்தில் தொலைக்­கலாம். தமி­ழனின் கலை, கலா­சா­ரத்தை தொலைக்க இய­லாது. 

 

அதைப் பாது­காக்க வேண்­டிய கட்­டாயம் இன்­றைய  இளம் சமூ­கத்­திற்கு உள்­ளது. இன்று கணனி மூல­மாக தவிலும் நாதஸ்­வர இசை­யையும் கொண்டு வர இய­லாத உள்­ளது.

 

நான் இன்னும் இத்­ து­றையில் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். கற்றல் மூலமே சாத­னை­களை முன்னெக்கலாம். ஆங்­கில மொழி கற்றல் கூட எனக்கு பெரும் உத­வி­யாக உள்­ளது.

 

நாதஸ்­வரம், தவில் கலையை மேலைத்தேய நாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

 

இது தெய்வீகக் கலை இன்று தமிழகத்தில் பல ஆங்கிலேயர்கள் இக் கலையைக் கற்று வருகின்றனர்.

 

இந்து மதத்தினர் இக் கலையைக் கற்றுக் கொள்ளவேண்டும். இதற்கு ஆலயங்கள் முன்வர வேண்டும் என ஒரு போடு போட்டார் சுதன்.  

 

இவரின் முயற்சிகள் வெற்றி பெற வேண்டும் உங்களைப் போன்ற இளைஞர்கள் இன்றைய சமூகத்துக்கு உதாரணமாக வாழ்வதற்கும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து அவரிடமிருந்து விடை பெற்றோம்.

 

சுதன் தனது வாயில் நாதஸ்வர இசைக் கருவியை வைத்து எழுப்பிய நாதஸ்வர ஓசை அந்த மேடையில் மீண்டும் ஒலித்து எம்மை வியப் பில் ஆழ்த்தியது. 

- See more at: http://www.metronews.lk/feature.php?feature=157&display=0#sthash.iqn1YUmV.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்...! பகிர்வுக்கு நன்றி நவீனன்....!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன் மைண்ட் வொய்ஸ்:   அப்பாடா .......... பெரியப்பாவுடன்  10 பேர் ஆச்சுது ....... இனி போட்டிக்கு பங்கமில்லை........!  😂 கிருபன் & பையன்.......!  🤣
    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.