Jump to content

யாழ்ப்பாணம் 10 வருடங்களுக்குள் தீவாக மாற்றமடையும் சாத்தியம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் 10 வருடங்களுக்குள் தீவாக மாற்றமடையும் சாத்தியம்

[ Wednesday,1 June 2016, 05:31:41 ]   
_13451165250.jpg

எதிர்வரும் 10 வருடங்களுக்குள் கடல் மட்டம் ஒரு மீற்றர் வரை உயரக்கூடும் என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் கலாநிதி செனவி ஏபிடவத்த தெரிவித்துள்ளார்.

தனது கருத்துக்கு எதிராக சில கலாநிதிகளும், பேராசிரியர்களும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், கடலில் மாற்றங்கள் ஏற்படுவதனை தற்போதே காணக்கூடியதாக உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று கடந்த காலங்களில் ஏற்பட்ட சூழல் மாற்றங்களால் உஷ்னத்தன்மை, மழை வீழ்ச்சி மற்றும் காற்றின் வேகம் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமையை காணக்கூடியதாக உள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். குடா நாட்டிலுள்ள களப்புக்கள் மற்றும் கடலிலும் இதனை மிக தெளிவாக அவதானிக்க முடியும் என கலாநிதி செனவி ஏபிடவத்த குறிப்பிட்டுள்ளார்.

அதனால் எதிர்வரும் காலங்களில் யாழ். குடா நாட்டின் வரைபடத்தில் மாற்றங்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக காணப்படுவதாகவும் அவர் உறுதியாக கூறியுள்ளார்.

அதேபோன்று யாழ்ப்பாணம் ஒரு தீவாக மாற்றமடையக்கூடிய சந்தர்ப்பமும் காணப்படுவதாக கலாநிதி குறிப்பிட்டுள்ளார்.

http://ibctamil.com/news/index/24521

Link to comment
Share on other sites

கடல்மட்ட உயர்வு: இந்தியாவுக்குப் பேராபத்து ஐநா அறிக்கை

சனி, 21 மே 2016

1463788809.jpg

ஐநா சுற்றுச்சூழல் மாநாடு கென்யா தலைநகர் நைரோபியில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இதையடுத்து, ‘சர்வதேச பருவநிலை மாறுபாடு’ என்ற தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்றை ஐநா வெளியிட்டுள்ளது.

அதில்,"பருவநிலை மாறுபாட்டால் உலக நாடுகள் அனைத்தும் எதிர்காலத்தில் பேரிடர்களைச் சந்திக்கும் என்றபோதிலும், பசிபிக், தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பிராந்தியங்களைச் சேர்ந்த நாடுகளே அதிக அளவில் பாதிக்கப்படும். நகரமயமாக்கல், மாசு அதிகரிப்பு, நீர்நிலைகள் அழிப்பு உள்ளிட்ட காரணங்களால் எதிர்வரும் 2050-ம் ஆண்டுவாக்கில் கடல்மட்டம் அபரிமிதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்படி கடல்மட்டம் அதிகரித்தால் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சீனா, இந்தியா, வங்கதேசம், தாய்லாந்து, பிலிப்பின்ஸ் உள்ளிட்ட 10 முக்கிய நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகும். இந்தப் பட்டியலில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் கடலோர நகரங்களில் வசிக்கும் சுமார் 10 கோடி பேர் இந்தப் பேராபத்தினை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் பெரிய அளவில் பாதிப்பு இருக்கும். சீனாவின் குவாங்சூ, ஷாங்காய், வங்கதேசத்தின் டாக்கா, மியான்மரின் யாங்கூன், தாய்லாந்தின் பாங்காக், வியட்நாமின் ஹாய்ஃபோங் ஆகிய நகரங்களும் கடுமையான ஆபத்தைச் சந்திக்க நேரிடும். கடல்மட்ட உயர்வால் உண்டாகும் பேரிடர் நிகழ்வுகளால் கடும் வறட்சி, எண்ணற்ற உயிரிழப்புகள் ஆகியவை ஏற்படும். இதனைத்தடுக்க, பொருளாதாரத்தை அதிகரிக்க வேண்டிய பல்வேறு நாடுகளில் கிராமங்களை அழித்து நகரமயமாக்கும் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். காடுகளை அழித்து நகரங்களை உருவாக்கும்போது மற்ற இடங்களில் காடுகளை வளர்ப்பதில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும். நகரப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பொதுப் போக்குவரத்து வசதி, வீடுகள், மின்சாரம், குடிநீர் ஆகியவற்றை குறைந்த விலையில் வழங்குவது போல, கிராமப்பகுதி மக்களுக்கும் இந்த வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். அப்போதுதான், நகர்ப்புறங்களை நோக்கி நகராமல் கிராமங்களில் மக்களைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பருவநிலை மாறுபாடு உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் சூழலில், ஐநா-வின் இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

 

 

https://minnambalam.com/k/1463788809

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கை இருக்கிற காணியை.... இப்பவே, யாருக்கும் வித்துவிட்டு... மலைநாட்டில், ஒரு காணியை வாங்குவதுதான் நல்லம் போலை கிடக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.