Jump to content

துருக்கிக்குக் கடுப்பை ஏற்படுத்தும் ஜேர்மனியின் 'ஆர்மேனிய இனவழிப்பு' வாக்கெடுப்பு


Recommended Posts

துருக்கிக்குக் கடுப்பை ஏற்படுத்தும் ஜேர்மனியின் 'ஆர்மேனிய இனவழிப்பு' வாக்கெடுப்பு
 
 

article_1464687762-GenocideArTukagerbaa.ஒட்டோமான் படைகளால் ஆர்மேனியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், ஓர் இனவழிப்பு என்பதை ஏற்றுக் கொள்ளும் தீர்மானமொன்றில், ஜேர்மனிய நாடாளுமன்றம், நாளை மறுதினம் வியாழக்கிழமை (02) வாக்களிக்கவுள்ளது. துருக்கியின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியிலேயே இந்த வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

சிறுபான்மையினரான ஆர்மேனியர்களை, ஒட்டோமானிலுள்ள அவர்களின் பூர்வீக இடத்தில் வைத்து, ஒட்டோமான் அரசாங்கத்தால் கட்டமைப்புரீதியாகக் கொன்றொழித்தமை, ஆர்மேனிய இனவழிப்பு எனப்படுகிறது. ஏப்ரல் 24, 1915ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த நடவடிக்கையில், 1.5 மில்லியன் வரையிலானோர் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது.
ஒட்டோமான் பேரரசு, நடப்பு துருக்கியாக மாற்றம்பெற்ற நிலையில், குறித்த படுகொலைகளை, இனவழிப்பு என விளிப்பதை துருக்கி ஏற்றுக் கொள்வதில்லை.

இந்நிலையிலேயே '1915இலும் 1916இலும் ஆர்மேனியர்களினதும் ஏனைய கிறிஸ்தவ சிறுபான்மையினரதும் இனவழிப்பின் நினைவும் நினைவுகூர்தலும்" எனத் தலைப்பிடப்பட்ட இந்தத் தீர்மானம், ஆளுங்கூட்டணியாலும் எதிர்க்கட்சியினராலும் வரையப்பட்டது. இந்த வாக்கெடுப்புத் தொடர்பாக எச்சரித்த துருக்கி, 'துருக்கியுடனான உறவுகள் தொடர்பாக, ஜேர்மனி கவனத்துடன் இருக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையிலேயே, நாளை மறுதினம் இடம்பெறவுள்ள வாக்கெடுப்பு, அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
இன்றுவரை, 29 நாடுகள், இந்தப் படுகொலைகளை இனவழிப்பு என உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/173480/-த-ர-க-க-க-க-க-கட-ப-ப-ஏற-பட-த-த-ம-ஜ-ர-மன-ய-ன-ஆர-ம-ன-ய-இனவழ-ப-ப-வ-க-க-ட-ப-ப-#sthash.18YBx4hG.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கியர் கொஞ்ச நாளாய்  ஐரோப்பிய யூனியனோடை விடுற சண்டித்தனத்துக்கு எங்கையோ ஆப்பு வைக்கப்போறாங்கள் போலை கிடக்கு :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நவீனன் said:

ஏப்ரல் 24, 1915

அடப்பாவிகளா ....1915 இற்கே இப்பதான் இனஅழிப்பு தீர்மானம் போடுறினம் ...அப்ப  நமக்கெலாம் ..அதுதான் சிங்களவன் துணிந்து செய்திருக்கிறான்
 

Link to comment
Share on other sites

ஆர்மேனியாவில் நடந்தது இனவழிப்பே: ஜேர்மனி
 
03-06-2016 02:14 AM
Comments - 0       Views - 4

article_1464939914-lx7e7lk3.jpgஇரண்டாம் உலகப் போரின்போது ஒட்டோமான் படைகளால் 1915ஆம் ஆண்டு ஆர்மேனியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், ஓர் இனவழிப்பு என்பதை ஏற்றுக் கொள்ளும் தீர்மானமொன்றுக்கு, ஜேர்மனிய நாடாளுமன்றம், அங்கிகாரமளித்துள்ளது.

இந்த வாக்கெடுப்பில், ஒரே ஒருவர் எதிர்த்து வாக்களித்ததோடு, மற்றைய ஒருவர், வாக்களிப்பதிலிருந்து விலகியிருந்தார். ஏனைய அனைவருமே, தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

ஆர்மேனியர்களை, ஒட்டோமானில் வைத்து, ஒட்டோமான் அரசாங்கம் கட்டமைப்புரீதியாகக் கொன்றொழித்தமை, ஆர்மேனிய இனவழிப்பு எனப்படுகிறது. இந்த நடவடிக்கையில், 1.5 மில்லியன் வரையிலானோர் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. ஒட்டோமான் பேரரசு, நடப்பு துருக்கியாக மாற்றம்பெற்ற நிலையில், குறித்த படுகொலைகளை, இனவழிப்பு என விளிப்பதை துருக்கி ஏற்றுக் கொள்வதில்லை.

இந்த வாக்களிப்பு முடிவை, ஆர்மேனிய வெளிநாட்டமைச்சர் வரவேற்றுள்ளதோடு, ஆர்மேனிய இனவழிப்பை சர்வதேச மட்டத்தில் ஏற்றுக் கொள்ள வைப்பதற்காக பெறுமதிமிக்க பங்களிப்பு என வர்ணித்தார்.

மறுபுறத்தில் துருக்கி, ஜேர்மனிக்கான தனது தூதுவரை, 'ஆலோசனை" நோக்கங்களுக்காக, திரும்ப அழைப்பதாகத் தெரிவித்துள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/173790/ஆர-ம-ன-ய-வ-ல-நடந-தத-இனவழ-ப-ப-ஜ-ர-மன-#sthash.DcTMcpIn.dpuf
Link to comment
Share on other sites

இனவழிப்புத் தொடர்பில் பேச, ஜேர்மனிக்கு உரிமையில்லை: துருக்கி ஜனாதிபதி
 
05-06-2016 12:50 PM
Comments - 0       Views - 11

article_1465122038-LEADErjeraru.jpgஒட்டோமான் பேரரசால், ஆர்மேனியர்கள் மீது இனவழிப்பு மேற்கொள்ளப்பட்டது என்ற குற்றச்சாட்டுகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லையெனத் தெரிவித்துள்ள துருக்கிய ஜனாதிபதி றெசெப் தய்யீப் எர்டொவான், அவ்வாறான இனவழிப்புக் குற்றச்சாட்டுகள், துருக்கியை மிரட்டுவதற்கே கொண்டுவரப்படுகின்றன எனவும் தெரிவித்தார்.

1915ஆம் ஆண்டிலிருந்து, ஒட்டோமான் பேரரசால் ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளால், ஆர்மேனியர்களில், ஏறத்தாழ 1.5 மில்லியன் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அப்பகுதியிலிருந்து, ஆர்மேனியர்களை ஒழிக்கும் நோக்கத்தில், ஒட்டோமான் பேரரசின் உயர்நிலை அதிகாரிகளால், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
இதன்காரணமாக, இதை இனவழிப்பு எனச் சில நாடுகள் தெரிவித்துவருவதோடு, ஜேர்மனியும், அண்மையில் அதை இனவழிப்பாக ஏற்றுக் கொண்டிருந்தது. ஒட்டோமான் பேரரசருக்குப் பின்னர் அப்பகுதி, துருக்கியாக உருவான நிலையில், அதை இனவழிப்பு என ஏற்றுக் கொள்வதற்கு, அந்நாடு மறுத்து வருகிறது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி எர்டொவான், 'இங்குள்ள பிரச்சினை, ஆர்மேனியர்கள் அல்லர். ஆர்மேனியர்கள் விடயம், துருக்கியை இலகுவாக மிரட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது" என்று தெரிவித்தார். 'முழு உலகத்துக்கும் நான் தெரிவிக்கிறேன். நீங்கள் விரும்பலாம், நீங்கள் விரும்பாமலிருக்கலாம். ஆர்மேனியர்கள் விடயத்தில் எங்கள் நிலைப்பாடு, ஆரம்பத்திலிருந்தே தெளிவாக இருக்கிறது. இனவழிப்பு என்ற குற்றச்சாட்டுகளை, நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்" என அவர் மேலும் குறிப்பிட்டார்.

முதலாவது உலகப் போரின்போது, அனைத்துப் பக்கத்திலிருந்து ஒட்டோமான் பேரரசு, முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தெரிவித்த எர்டொவான், அந்தப் பகுதியின் ஒழுங்கை மீளக்கொண்டுவருவதற்கு, சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்ததாகத் தெரிவித்தார்.

இரண்டாம் உலகப் போரிலும் நமீபியாவிலும் ஜேர்மனியின் கடந்தகால வரலாற்றை வைத்துப் பார்க்கும் போது, இனவழிப்புத் தொடர்பில் அந்நாடும் ஏனைய நாடுகளும் கருத்துத் தெரிவிப்பதற்கு, உரிமையில்லை என அவர் இங்கு குறிப்பிட்டார். 'ஆர்மேனிய இனவழிப்புத் தீர்மானங்களூடாக எங்களை மிரட்டுகின்ற இந்த நாடுகள், மில்லியன்கணக்கான அப்பாவிகளின் இரத்தத்தைத் தங்கள் கைகளில் கொண்டுள்ளன" என்றார் அவர்.

ஜேர்மனியின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் துருக்கிக்குமிடையிலான முறுகலை, மேலும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, ஐரோப்பாவுக்குள் அதிகரித்துள்ள அகதிகள் வருகையைக் கட்டுப்படுத்தி, அவர்களைத் துருக்கிக்கு அனுப்புவதற்கு, ஐரோப்பிய ஒன்றியம் முயன்று வரும் நிலையில், இந்த நேரத்தில் துருக்கியை மேலும் கோபப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

- See more at: http://www.tamilmirror.lk/173925#sthash.nsoYQlEv.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, நவீனன் said:
இனவழிப்புத் தொடர்பில் பேச, ஜேர்மனிக்கு உரிமையில்லை: துருக்கி ஜனாதிபதி
 
05-06-2016 12:50 PM

.

இரண்டாம் உலகப் போரிலும் நமீபியாவிலும் ஜேர்மனியின் கடந்தகால வரலாற்றை வைத்துப் பார்க்கும் போது, இனவழிப்புத் தொடர்பில் அந்நாடும் ஏனைய நாடுகளும் கருத்துத் தெரிவிப்பதற்கு, உரிமையில்லை என அவர் இங்கு குறிப்பிட்டார். 'ஆர்மேனிய இனவழிப்புத் தீர்மானங்களூடாக எங்களை மிரட்டுகின்ற இந்த நாடுகள், மில்லியன்கணக்கான அப்பாவிகளின் இரத்தத்தைத் தங்கள் கைகளில் கொண்டுள்ளன" என்றார் அவர்.

 

- See more at: http://www.tamilmirror.lk/173925#sthash.nsoYQlEv.dpuf

ஜேர்மனி ஹிட்லரின் காலத்தில் இடம்பெற்ற பாரிய ஜூத இன அழிப்பிற்கு மன்னிப்புக்கோரியதுடன் மட்டும் நிற்காமல் இன்றும் உயிருடன் வாழும் சில அன்றைய இன அழிப்பில்
தொடர்புடையவர்களுக்குத் தண்டனை அளித்தே  வருகின்றது.
இது ஏர்டோகானிற்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.