Jump to content

யாழ். கூழ்.... ஜேர்மன் முறையில் தயாரிக்கும் முறை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். கூழ்.... ஜேர்மன் முறையில் தயாரிக்கும்  முறை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உவரை எங்கையோ பார்த்த ஞாபகமாய் கிடக்கு.....கூழ் சூப்பராய் இருக்கு tw_thumbsup:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

உவரை எங்கையோ பார்த்த ஞாபகமாய் கிடக்கு.....கூழ் சூப்பராய் இருக்கு tw_thumbsup:

உண்மையாகவா... குமாரசாமி அண்ணை...
ஆள் அடிக்கடி, சோ .. சோ... என்ற வார்த்ததையை பாவித்த போதும், 
கூழுக்கு போட்ட உப்புப் பக்கற்றிலை தான்... இது, ஜேர்மன் கூழ் என்று கண்டு பிடித்தேன்.
அந்த... உப்பு பக்கற்றில் .... ஜேர்மன் எழுத்துக்கள் வடிவாக எழுதியுள்ளது. 
அது.... அல்டியில், விற்கும் உப்பு. 
ஒரு உப்பாலை.... புலனாய்வு செய்யக் கூடிய, இனம் நாங்கள்.tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

உவரை எங்கையோ பார்த்த ஞாபகமாய் கிடக்கு.....கூழ் சூப்பராய் இருக்கு tw_thumbsup:

ஏதோ ஒரு மூஞ்சு புத்தகத்தில் நானூம் பார்த்த ஞாபகம் வருகிறது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி தமிழ் சிறி .

10 hours ago, தமிழ் சிறி said:

உண்மையாகவா... குமாரசாமி அண்ணை...
ஆள் அடிக்கடி, சோ .. சோ... என்ற வார்த்ததையை பாவித்த போதும், 
கூழுக்கு போட்ட உப்புப் பக்கற்றிலை தான்... இது, ஜேர்மன் கூழ் என்று கண்டு பிடித்தேன்.
அந்த... உப்பு பக்கற்றில் .... ஜேர்மன் எழுத்துக்கள் வடிவாக எழுதியுள்ளது. 

அது.... அல்டியில், விற்கும் உப்பு. 
ஒரு உப்பாலை.... புலனாய்வு செய்யக் கூடிய, இனம் நாங்கள்.tw_blush:

அட பாவியள ...... இப்படி கவனிச்சு பார்க்கின்றார்களே ! கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும் இவர்களோட tw_blush:

அல்டி இங்கு பிரிதானியவிலும் இருக்கின்றது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் செய்முறையைப்  பார்க்க கூழ் குடித்தமாதிரி இருக்கு. சூப்பர்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூழ் என்று இரு எழுத்தில் எழுதினாலும் எப்படி தயாரிப்பது உடம்புக்கு எந்த வகையில் நல்லது என்று எழுதுவதென்றால் ஒரு புத்தகமே எழுதலாம்.
எனக்கு மிகவும் பிடித்த ஒரு சாப்பாடு. ஏன் கெடு என்று கூட சொல்லலாம்.
இணைப்புக்கு நன்றி சிறி.

Link to comment
Share on other sites

17 hours ago, தமிழ் சிறி said:

யாழ். கூழ்.... ஜேர்மன் முறையில் தயாரிக்கும்  முறை.

 

15 hours ago, குமாரசாமி said:

உவரை எங்கையோ பார்த்த ஞாபகமாய் கிடக்கு.....கூழ் சூப்பராய் இருக்கு tw_thumbsup:

 

3 hours ago, suvy said:

அவரின் செய்முறையைப்  பார்க்க கூழ் குடித்தமாதிரி இருக்கு. சூப்பர்....!  tw_blush:

கூழ் ... 


ருசியை விட பெரியப்பா குடும்பம், சித்தப்பா குடும்பம், அத்தை குடும்பம், பெரியம்மா குடும்பம் என்று ஒரு குத்துமதிப்பா 30 பேர் எங்கட  வீட்டு நாட்சாரத்தில குந்தியிருந்து பிலா இலையில் செய்த பணுவிலில் குடித்த அந்த காலம்தான் இனிமையானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழரசு said:

பகிர்வுக்கு நன்றி தமிழ் சிறி .

அட பாவியள ...... இப்படி கவனிச்சு பார்க்கின்றார்களே ! கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும் இவர்களோட tw_blush:

அல்டி இங்கு பிரிதானியவிலும் இருக்கின்றது  

உதென்ன பெரியவிசயம். நாங்கள் உப்பு பெட்டியைப்பாத்து எந்த ஏரியா அல்டியிலை உப்பு வாங்கியிருக்கினம் எண்டதையே அச்சொட்டாய் சொல்லுவம் கண்டியளோ.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஜீவன் சிவா said:

 

 

கூழ் ... 


ருசியை விட பெரியப்பா குடும்பம், சித்தப்பா குடும்பம், அத்தை குடும்பம், பெரியம்மா குடும்பம் என்று ஒரு குத்துமதிப்பா 30 பேர் எங்கட  வீட்டு நாட்சாரத்தில குந்தியிருந்து பிலா இலையில் செய்த பணுவிலில் குடித்த அந்த காலம்தான் இனிமையானது.

ம்ம்ம்...முப்பது பேருக்குக் கூழ் காய்ச்சிறது எண்டால்...இவ்வளவு பெரிய 'குண்டான்' தேவைப்பட்டிருக்குமே?

1307-1-9afb5d7cf2a58fab7c28966052d0d5f5.

 

ஆனால் பிலா இலைப் பணுவிலைக் கண்டதும்....மிச்சம் தானாகவே விளங்கீட்டுது!

odiyal-2.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழரசு said:

பகிர்வுக்கு நன்றி தமிழ் சிறி .

அட பாவியள ...... இப்படி கவனிச்சு பார்க்கின்றார்களே ! கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும் இவர்களோட tw_blush:

அல்டி இங்கு பிரிதானியவிலும் இருக்கின்றது  

இது ஜேர்மன் அல்டியில்.... வாங்கிய உப்பு தமிழரசு.
9´வது நிமிடத்தில் வரும் உப்பு பெட்டியில்..... JodSalz சென்று எழுதியுள்ளது. பிரித்தானியா என்றால்..... Salt என்று எழுதியிருப்பார்கள்.tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.