Jump to content

மரபணுத் திருத்தம் மூலம் எச்.ஐ.வி வைரஸ் மற்றும் மரபணுக்களை நிச்சயமாக நீக்கமுடியும்: - ஆய்வில் வெற்றி!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஹியூமன் இம்மியூனோ டெபிஷியன்ஷி வைரஸ் (எச்.ஐ.வி) எனப்படும் ஒருவகையான வைரஸ் தொற்று ஏற்படுவதன் காரணமாக காலப்போக்கில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி முற்றிலுமாக குறைந்து மனித உடலானது பல்வேறு நோய்களின் தாக்கத்துக்கு உள்ளாவதே ‘எய்ட்ஸ் நோய்’ அல்லது ‘அக்கொயர்டு இம்மியூனோ டெபிஷியன்ஷி சிண்ட்ரோம்’ என்று அழைக்கப்படுகிறது.  கடந்த 19–வது நூற்றாண்டின் முடிவிலோ அல்லது 20–வது நூற்றாண்டின் தொடக்கத்திலோ மேற்கு மத்திய ஆப்பிரிக்காவில் முதன்முதலாக தோன்றியதாக கருதப்படும் எய்ட்ஸ் நோயானது, கடந்த 1981–ம் ஆண்டு அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் ஆய்வாளர்களால் முதன்முதலாக கண்டறியப்பட்டது.

ஹியூமன் இம்மியூனோ டெபிஷியன்ஷி வைரஸ் (எச்.ஐ.வி) எனப்படும் ஒருவகையான வைரஸ் தொற்று ஏற்படுவதன் காரணமாக காலப்போக்கில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி முற்றிலுமாக குறைந்து மனித உடலானது பல்வேறு நோய்களின் தாக்கத்துக்கு உள்ளாவதே ‘எய்ட்ஸ் நோய்’ அல்லது ‘அக்கொயர்டு இம்மியூனோ டெபிஷியன்ஷி சிண்ட்ரோம்’ என்று அழைக்கப்படுகிறது. கடந்த 19–வது நூற்றாண்டின் முடிவிலோ அல்லது 20–வது நூற்றாண்டின் தொடக்கத்திலோ மேற்கு மத்திய ஆப்பிரிக்காவில் முதன்முதலாக தோன்றியதாக கருதப்படும் எய்ட்ஸ் நோயானது, கடந்த 1981–ம் ஆண்டு அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் ஆய்வாளர்களால் முதன்முதலாக கண்டறியப்பட்டது.

   

பின்னர் சில ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயானது எச்.ஐ.வி. எனும் வைரஸ் மூலமாக ஏற்படுகிறது என்பதும் கண்டறியப்பட்டது. அன்று தொடங்கி இன்று வரை பல கோடி மக்கள் எய்ட்ஸ் நோயால் உயிரிழந்துள்ளனர். உதாரணமாக, கடந்த 2014–ம் ஆண்டில் சுமார் 3.69 கோடி மக்கள் எய்ட்ஸ் நோயுடன் வாழ்வதாகவும், சுமார் 12 லட்சம் பேர் எய்ட்ஸ் நோய் காரணமாக இறந்துள்ளனர் என்றும் கூறுகிறது ஒரு புள்ளி விவரம்.

மனித சமூகத்தை பல்வேறு தளங்களில் உலுக்கிப்போட்ட எய்ட்ஸ் நோயை குணப்படுத்த எச்.ஐ.வி. வைரஸ்களுக்கு எதிராக செயல்படும் நூற்றுக்கணக்கான மருந்துகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. ஆனாலும் எய்ட்ஸ் நோய்க்கு எதிராக வெற்றிகரமாக செயல்படும் மருந்தைக் கண்டறியும் ஆய்வுப்பயணம் இன்னும் தொடர்ந்து வருகிறது.

அந்த வரிசையில், அமெரிக்காவில் உள்ள டெம்புல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கமெல் கலீலி தலைமையிலான ஆய்வுக்குழு உலகில் முதல் முறையாக, மரபணுத்திருத்த தொழில்நுட்பமான கிறிஸ்பர் (CRISPR) மூலம் எச்.ஐ.வி. வைரஸ் தொற்றுக்குள்ளான விலங்குகளின் மரபுத்தொகையில் இருந்த எச்.ஐ.வி. மரபணுக்களை வெற்றிகரமாக நீக்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

‘ஜீன் தெரபி’ என்னும் மருத்துவ இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வானது எலிகள் மற்றும் சுண்டெலிகள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலில் எலிகளின் உடலிலுள்ள எல்லா உயிரணுக்களிலும் எச்.ஐ.வி. மரபணுக்கள் இருக்கும்படியான நிலையை உருவாக்க சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் கிறிஸ்பர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எலிகளின் மூளை, காது, கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல், மண்ணீரல் மற்றும் ரத்தம் உள்ளிட்ட எலிகளின் உடலிலுள்ள பெரும்பாலான பகுதிகளுக்கு பரவியிருந்த எச்.ஐ.வி. வைரஸ் மரபணுக்களை வெற்றிகரமாக நீக்கியுள்ளது கமெல் கலீலியின் ஆய்வுக்குழு.

முக்கியமாக, இதே ஆய்வுக்குழு, கடந்த 2014–ம் ஆண்டில் எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட உயிரணுக்களில் உள்ள எச்.ஐ.வி. மரபணுக்களை வெற்றிகரமாக நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது எச்.ஐ.வி. தொற்று கொண்ட ‘உயிருள்ள’ விலங்குகளின் உடலில் இருந்து கிறிஸ்பர் மூலம் எச்.ஐ.வி. மரபணுக்களை நீக்கியுள்ளது மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு முன்னேற்றமாக கருதப் படுகிறது. இதன் மூலம் எய்ட்ஸ் நோயாளிகளின் உடலில் இருக்கும் எச்.ஐ.வி. வைரஸ் மற்றும் மரபணுக்களையும் நிச்சயமாக நீக்கமுடியும் என்ற நம்பிக்கை மற்றும் சாத்தியக்கூறு ஏற்பட்டுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது. மிக முக்கியமாக, இந்த ஆய்வில் சுமார் 50 சதவீதம் உயிரணுக்களில் இருந்து எச்.ஐ.வி. மரபணுக்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எச்.ஐ.வி. மரபணுக்களை நீக்கும் இந்த கிறிஸ்பர் தொழில்நுட்பமானது மனித நோயாளிகளை குணப்படுத்தும் அளவுக்கு வளர்ந்து மருத்துவமனைகளில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்பொழுது மிகவும் சிக்கலானதாக இருக்காது என்கிறார் கலீலி. மாறாக நோயாளிகள் மருத்துவமனைக்கு கூட வராமல் அவர்கள் இருக்கும் இடத்திலேயே கூட மேற்கொள்ளும் அளவுக்கு மிகவும் வசதியான ஒரு தொழில்நுட்பமாக இருக்கும் என்று ஆச்சரியப்படுத்துகிறார் கலீலி.

இந்த கிறிஸ்பர் தொழில்நுட்பமானது எச்.ஐ.வி. மரபணுக்களை மட்டும் மிகவும் துல்லியமாக நீக்குவதால் உடலில் எந்தவிதமான பின்விளைவுகளையும் ஏற்படுத்தாது என்பது கூடுதல் மகிழ்ச்சியான செய்திதானே!

http://www.seithy.com/breifNews.php?newsID=158520&category=CommonNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.