Jump to content

சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறக்கவில்லை! - ஆசிரமம் ஒன்றில் பண்டாரி என்ற பெயரில் வாழ்ந்தார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
மேற்கு வங்கத்தில் 1960களில் ஆசிரமம் ஒன்றில் பண்டாரி என்ற பெயரில் நேதாஜி வாழ்ந்தார் என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது. சுதந்திர போராட்ட வீரர் நேதாஜியின் கடைசி காலம் குறித்து பல்வேறு யூகங்கள் நிலவி வருகின்றன. அவர் விமான விபத்தில் இறந்தார், பீகாரில் மாறு வேடத்தில் வாழ்ந்தார் என பல்வேறு செய்திகள் கூறப்படுகின்றன. இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக மத்திய அரசு நேதாஜி குறித்த ரகசிய ஆவணங்களை படிப்படியாக வெளியிட்டு வருகிறது. இதில் கடந்த 27ம் தேதி சில ஆவணங்களை வெளியிட்டது. அதில் 1960களில் மேற்கு வங்கம் ஒன்றில் ஒரு ஆசிரமத்தில் பண்டாரி என்ற பெயரில் நேதாஜி வசித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் 1960களில் ஆசிரமம் ஒன்றில் பண்டாரி என்ற பெயரில் நேதாஜி வாழ்ந்தார் என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது. சுதந்திர போராட்ட வீரர் நேதாஜியின் கடைசி காலம் குறித்து பல்வேறு யூகங்கள் நிலவி வருகின்றன. அவர் விமான விபத்தில் இறந்தார், பீகாரில் மாறு வேடத்தில் வாழ்ந்தார் என பல்வேறு செய்திகள் கூறப்படுகின்றன. இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக மத்திய அரசு நேதாஜி குறித்த ரகசிய ஆவணங்களை படிப்படியாக வெளியிட்டு வருகிறது. இதில் கடந்த 27ம் தேதி சில ஆவணங்களை வெளியிட்டது. அதில் 1960களில் மேற்கு வங்கம் ஒன்றில் ஒரு ஆசிரமத்தில் பண்டாரி என்ற பெயரில் நேதாஜி வசித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

   

மத்திய அரசு வெளியிட்டுள்ள அந்த ஆவணங்களில் கடிதம் ஒன்றில் 1963ம் ஆண்டு பண்டாரி என்பவர்தான் நேதாஜியா என்பது குறித்து அரசு விவாதித்துள்ளது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள சலுமாரி ஆசிரம நிர்வாகி ரமணி ரஞ்சன் தாஸ் என்பவர் அப்போதைய பிரதமர் நேருவுக்கு எழுதிய கடிதத்தில் இது பற்றி குறிப்பு உள்ளது. உடனடியாக நேருவின் தனி செயலர் ராம், உளவுத்துறை இயக்குனர் மாலிக்கு இது குறித்து ரகசிய உத்தரவு பிறப்பித்து ஆணை ஒன்றை அனுப்பியுள்ளார். பின்னர் இது தொடர்பாக மாலிக்கும் பதில் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

பின்னர் தொடர்ச்சியாக இந்த பண்டாரி என்பவர் குறித்து பிரதமர் அலுவலகமும், உளவுத்துறையும் கடிதங்கள் பரிமாறிக் கொண்டுள்ளது. அந்த ஆவணங்களில் பண்டாரி என்பவர் நேதாஜியாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் சலுமாரி பாபா தோற்றத்தை கண்டு அவர்தான் நேதாஜி என்ற வதந்தியும் நாடு முழுவதும் பரவியது. பின்னர் இதை முகர்ஜி கமிட்டி நிராகரித்து விட்டது. பாபா, நேதாஜி அல்ல என்று கூறப்பட்ட போதிலும் ஆசிரமத்தில் தங்கியிருந்த பண்டாரி நேதாஜியாக இருக்கலாம் என இந்த கடிதங்கள் மூலம் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=158545&category=IndianNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.