Jump to content

பொருத்து வீடுகள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது


Recommended Posts

பொருத்து வீடுகள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது
 

article_1464607949-aaaaaaaaaaaaaa.jpg

-எஸ்.ஜெகநாதன்

அரசாங்கத்தின் 65 ஆயிரம் வீட்டுத்திட்டங்கள் அமைக்கும் செயற்றிட்டத்தின் கீழ் அமைக்கப்படவிருந்த பொருத்து வீடுகள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (30) நடைபெற்றது. இதன்போது இணைத்தலைவர்களில் ஒருவராகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

'ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்ட இந்தப் பொருத்து வீடுகள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளன. இதனால் அதனைப் பற்றி கதைக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்களுக்கு சரியான வீட்டுத்திட்டங்கள் கிடைக்கும். இதன் மூலம் மீள்குடியேறிய அனைவருக்கும் வீடுகள் கிடைக்கும்' என்றார்.

மீள்குடியேற்ற அமைச்சால் அமைக்கப்படவிருந்த இந்த பொருத்து வீடுகள் ஒவ்வொன்றும் தலா 2.1 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையவை. இந்த பொருத்து வீடுகள் யாழ்ப்பாண சூழ்நிலைக்கு பொருத்தமில்லாத மற்றும் தரமில்லாத வீடுகள் என வடமாகாண சபையால் நிராகரிக்கப்பட்டது. எனினும், இது நடைமுறைப்படுத்தப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கூறியிருந்தார். இழுபறி நிலையில் இருந்த இந்த வீட்டுத்திட்டம் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சிறுவர் இராஜாங்க அமைச்சர் கூறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/173374#sthash.3BG1jRMh.dpuf
Link to comment
Share on other sites

45 minutes ago, நவீனன் said:

பொருத்து வீடுகள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது

பூனைக்கு விளையாடு சுண்டெலிக்கு சீவன் போகுதாம்.

இவர்கள் இவ்வளவு கத்தியும் இந்த 65.000 வீடுகளிற்கு, வீடுகளற்ற 95,000 இடம்பெயர்ந்த குடும்பங்கள் விண்ணப்பித்திருந்தார்கள். அவர்கள் கதி - அதோ கதிதானா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்வன திருந்தச்செய்....

two+frogs.bmp

ஒரு குளத்தில் இரண்டு தவளைகள் இருந்தன.வெயில் காலம் வந்தபோது அந்த குளத்தில் நீர் வற்றத் தொடங்கியது.

ஆகவே அத்தவளைகள் குளத்திலிருந்து வெளியேறி வேறு இடம் தேடிச்சென்றன.

வழியில் தண்ணீர் நிறைந்திருந்த கிணற்றைப் பார்த்தன.உடன் ஒரு தவளை " நாம் இக்கிணற்றில் இறங்கி...இதிலேயே இருப்போம்.தண்ணீர் நிறைய இருக்கிறது" என்றது.

உடன் இரண்டாவது தவளை ...'வெயில் அதிகமாக அதிகமாக ...இக்கிணற்று நீரும் வற்றிவிட்டால் இந்த ஆழமான கிணற்றிலிருந்து நாம் எப்ப்டி வெளியே வருவது' என்று கேட்டது.

இரண்டாவது தவளை....புத்திசாலித்தனமாக யோசித்து ...ஒரு காரியத்தில் ஈடுபடும்போது ....அதற்குப்பின்னால் ஏற்படும் விளைவுகளைப்பற்றியும் யோசித்தது.

நாமும் எந்தக் காரியத்தை செய்தாலும் அதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை யோசித்து....செய்யும் காரியத்தை திருந்தச் செய்யவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:
பொருத்து வீடுகள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது

 

article_1464607949-aaaaaaaaaaaaaa.jpg

'ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்ட இந்தப் பொருத்து வீடுகள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளன. இதனால் அதனைப் பற்றி கதைக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்களுக்கு சரியான வீட்டுத்திட்டங்கள் கிடைக்கும். இதன் மூலம் மீள்குடியேறிய அனைவருக்கும் வீடுகள் கிடைக்கும்' என்றார்.

மக்கள் தெரிவித்த, ஆட்சேபனைகளை..... ஏற்றுக் கொண்ட. 
அமைச்சர்  விஜயகலா மகேஸ்வரனுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

செய்வன திருந்தச்செய்....

two+frogs.bmp

ஒரு குளத்தில் இரண்டு தவளைகள் இருந்தன.வெயில் காலம் வந்தபோது அந்த குளத்தில் நீர் வற்றத் தொடங்கியது.

ஆகவே அத்தவளைகள் குளத்திலிருந்து வெளியேறி வேறு இடம் தேடிச்சென்றன.

வழியில் தண்ணீர் நிறைந்திருந்த கிணற்றைப் பார்த்தன.உடன் ஒரு தவளை " நாம் இக்கிணற்றில் இறங்கி...இதிலேயே இருப்போம்.தண்ணீர் நிறைய இருக்கிறது" என்றது.

உடன் இரண்டாவது தவளை ...'வெயில் அதிகமாக அதிகமாக ...இக்கிணற்று நீரும் வற்றிவிட்டால் இந்த ஆழமான கிணற்றிலிருந்து நாம் எப்ப்டி வெளியே வருவது' என்று கேட்டது.

இரண்டாவது தவளை....புத்திசாலித்தனமாக யோசித்து ...ஒரு காரியத்தில் ஈடுபடும்போது ....அதற்குப்பின்னால் ஏற்படும் விளைவுகளைப்பற்றியும் யோசித்தது.

நாமும் எந்தக் காரியத்தை செய்தாலும் அதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை யோசித்து....செய்யும் காரியத்தை திருந்தச் செய்யவேண்டும். 

அதுசரி அதுவரை வெய்யிலிலும்  மழையிலும் இந்த அரசியல்வாதிகளா வேதனைப்பட போகின்றார்கள். 

தவளைகளுக்கு அடுத்த  நீர் நிலை கிடைக்கும்  வரை அவை இருந்தாலென்ன மடிந்தாலென்ன. எமக்கு தேவை எமது பிடிவாதங்களே. தவளைகள் இறந்தாலும் அழ யாருமில்லைதானே.

இந்தியா வாக்கு கொடுத்த 50,000 வீடுகளிற்கும், அரசு வீடுகட்ட கொடுத்த பணத்திற்கும் கடந்த 6 வருடங்களில்  நடந்தததை கொஞ்சம் பின்னோக்கி பாருங்கள் - எல்லாமே புரியும்.

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

செய்வன திருந்தச்செய்....

two+frogs.bmp

ஒரு குளத்தில் இரண்டு தவளைகள் இருந்தன.வெயில் காலம் வந்தபோது அந்த குளத்தில் நீர் வற்றத் தொடங்கியது.

ஆகவே அத்தவளைகள் குளத்திலிருந்து வெளியேறி வேறு இடம் தேடிச்சென்றன.

வழியில் தண்ணீர் நிறைந்திருந்த கிணற்றைப் பார்த்தன.உடன் ஒரு தவளை " நாம் இக்கிணற்றில் இறங்கி...இதிலேயே இருப்போம்.தண்ணீர் நிறைய இருக்கிறது" என்றது.

உடன் இரண்டாவது தவளை ...'வெயில் அதிகமாக அதிகமாக ...இக்கிணற்று நீரும் வற்றிவிட்டால் இந்த ஆழமான கிணற்றிலிருந்து நாம் எப்ப்டி வெளியே வருவது' என்று கேட்டது.

இரண்டாவது தவளை....புத்திசாலித்தனமாக யோசித்து ...ஒரு காரியத்தில் ஈடுபடும்போது ....அதற்குப்பின்னால் ஏற்படும் விளைவுகளைப்பற்றியும் யோசித்தது.

நாமும் எந்தக் காரியத்தை செய்தாலும் அதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை யோசித்து....செய்யும் காரியத்தை திருந்தச் செய்யவேண்டும். 

போராடிய புலிகளை அழிப்பதற்குத் துணைபோன தமிழர்களும் இந்தத் தவளைபோல் புத்திசாலித்தனமாக யோசித்துப் போராட்டத்திற்குத் துணைபோயிருந்தால், இன்று தமிழனுக்கென்று ஒரு நாடு உலகத்தில் தோன்றியிருக்கும். தமிழன் யாரிடமும் பிச்சைக்குப் போகவேண்டிய நிலை வந்திராது. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Temple_T_Maheswaran.jpgBildergebnis für mahesvaran shot dead in templeSri_Lankan_government_investigators.jpg

விஜயகலா  மகேஸ்வரன், அவர்கள்.... 
ஒட்டுக் குழுக்களின்..... செயல்களால் அவரின் கணவரை,  கோவிலில் சென்று தரிசனம் செய்த போது, இரத்தம் சிந்த... சுட்டுக் கொன்றவர்கள்  இதே.... ஒட்டுக் குழுக்கள். அவரின் கணவர் மகேஸ்வரன் அப்போது.... ஐ. தே. க. கட்சியின் முக்கிய அமைச்சர். அந்த நேரம் புலிகளும் ஒரு உறவுப் பாட்டை இவர்களுடன் வைத்திருந்தது  எல்லாருக்கும் தெரியும். அது... ஒரு அரசியல்.

நிற்க.... 
இப்போது....  விஜயகலா  மகேஸ்வரன், செய்வதை.... விமர்சிக்க, எந்த உரிமையும் உங்களுக்கில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் இவ்வளவு துன்பங்களை இவ்வளவு காலமும் அனுபவிக்க விட்டுவிட்டு.. இப்ப பொருத்துவீடு கொடுத்து சமாளிக்கினமாம். முறையான அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நிரந்தர வீடுகள் சகல வசதிகளோடும் கட்டுக்கொடுக்கப்படுவதே... அந்த மக்களின் இன்னலில் பங்கெடுத்தவர்கள் செய்ய வேண்டிய காரியம். 

அங்கால நாவற்குழியில்.. நிரந்தர கல்வீடுகளோடு சிங்களக் குடியேற்றம் தடல்புடலா நடக்குது. இங்கு எம் மக்களுக்கு பொருத்து இரும்பு வீடு கிடைக்கல்லைன்னு சிலர் கவலைப்படுகினம். அவை ஏதோ கென்ரெயினர் வீடுகளில் வாழ்வது போல. 

இது நாவற்குழியில் அமைந்து வரும்..

சிங்களக் குடியேற்றமான.. சிங்கள ராவய.. குடியேற்றத்திட்டத்தில் அமையும் வீடுகளும் கட்டுமானங்களும்...

‘Sinhala Ravaya’ colony in Jaffna

Naavatkuzhi_03.jpg

 

Naavatkuzhi_02.jpg

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=38271

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த நிலங்களைப் பாதுகாப்பு வலயம் எனும் பேரில் பறித்து விட்டு எங்கோ ஒரு வரண்ட தேசத்தில் பொருத்து வீடு அல்ல எதைக் கொடுத்தாலும் மக்களுக்கு நிம்மதி இருக்காது.
சொந்தக்காணியைத் திருப்பிக் கொடுங்கள் அதில் அவர்கள் ஒரு கொட்டிலைப் போட்டாவது நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்வார்கள்

Link to comment
Share on other sites

ஏதோ ஒரு வளர்ந்த நாட்டில்  இருந்து கருத்து கந்தசாமிமாதிரி அலட்டாமல், வெள்ளத்துக்குள்ளும், மழைக்குள்ளும், வெக்கைக்குள்ளும் தகர டப்பாக்குள்ள வாழும் இந்த மனிதரை பற்றி நான் எழுதுகிறேன். சென்றலைஸ்ட் வேண்டிலேசனுக்க இருந்து கதைப்பவருக்கு இது புரியாது. புரிய வேண்டுமென்று எதிர்பார்க்க நானும் இல்லை. இதைத்தானே 30 வருடமா செய்தீர்கள் . இனியாவது  அவர்களை வாழ விடுங்கள்.

3 hours ago, Paanch said:

போராடிய புலிகளை அழிப்பதற்குத் துணைபோன தமிழர்களும் இந்தத் தவளைபோல் புத்திசாலித்தனமாக யோசித்துப் போராட்டத்திற்குத் துணைபோயிருந்தால், இன்று தமிழனுக்கென்று ஒரு நாடு உலகத்தில் தோன்றியிருக்கும். தமிழன் யாரிடமும் பிச்சைக்குப் போகவேண்டிய நிலை வந்திராது. :(

புத்திசாலித்தனமா யோசித்த தவளைகளை போட்டு தள்ளியதுதான் எமது போராட்டமே - அப்புறம் எப்படி?

1 hour ago, வாத்தியார் said:

சொந்த நிலங்களைப் பாதுகாப்பு வலயம் எனும் பேரில் பறித்து விட்டு எங்கோ ஒரு வரண்ட தேசத்தில் பொருத்து வீடு அல்ல எதைக் கொடுத்தாலும் மக்களுக்கு நிம்மதி இருக்காது.
சொந்தக்காணியைத் திருப்பிக் கொடுங்கள் அதில் அவர்கள் ஒரு கொட்டிலைப் போட்டாவது நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்வார்கள்

இந்த வீட்டை அவர்களது சொந்த காணியில்தான் கட்டிக்கொடுக்க போறாங்கள். சொந்தமா காணி இல்லாதவருக்குதான் காணியும் கொடுத்து வீட்டையும் கட்டி கொடுக்க முயற்சி செய்யுறாங்கள் அண்ணை. கொஞ்சமாவது இதை பற்றி வாசித்துவிட்டு பதிலை தரவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் கடந்த 35 வருசமா உரிமையையும் இழந்து உடமையையும் இழந்து.. ஊரையும் இழந்து.. இவ்வளவு கஸ்டப்படுகினம்.. அது யாரால்... அந்த மக்களை ஆளுகிறம் என்று சொல்லும் அரசின் நடவடிக்கையால் தான். ஜே வி பி யுத்தம் செய்த போது தெற்கில்.. ஒரு பாதுகாப்பு வலயம் இருக்கவில்லை. சிங்கள மக்கள் அகதிகளாக விரட்டி அடிக்கப்படவில்லை. செல் அடிக்கவில்லை. விமானத்தாக்குதல் நடத்தவில்லை. ஆனால் ஜே வி பி பொலிஸ் நிலையங்கள்.. இராணுவ முகாம்களை கூட தாக்கி இருந்தது. 

எமது மக்களின் நிரந்தரக் கஸ்டம் நீக்கப்பட வேண்டும்.. அதற்கு அவர்களுக்கு சரியான திட்டமிடலுடன் கூடிய நிரந்தர அபிவிருத்தியே தேவை. சும்மா பொருத்து வீடுகள் அல்ல.

எனி பொருத்து வீட்டை விட்டிட்டு கென்ரயினர் வீடு வைச்சாலும் சிலர் வக்காளத்துக்கு வாங்குவினம்.. தகரம் கொட்டகை என்று.

அந்த மக்களை வாழ்விடங்களை விட்டு இராணுவத்தை ஏவி அடித்துக் கலைத்துவிட்டு தகரமும் கொட்டகைகளும் வெக்கை.. வெப்பம்... கொடுத்ததும் இவர்களே தான்.  எனி கென்ரயினர் வீடு கொடுப்பார்கள்.

guest-cargo-720x480-c.png

இந்தக் கென்ரயினர் வீடாவது நல்லா ஏசி எல்லாம் போட்டு சூப்பரா இருக்கு. இதை கொடுக்கலாம்.. என்று சொல்ல இங்க ஆக்கள் இருக்கினம். அந்தளவுக்கு சிங்கள  விசுவாச வெறி தலைக்கேறிப் போய் இருக்கிறார்கள். இவை தற்காலிக பொழுதுபோக்கிற்கானவையே தவிர நிரந்தர வதிவிடங்கள் அல்ல. அதற்காக இவை வடிவமைக்கப்பட்டவையும் அல்ல. பொருத்து வீடுகளுக்கும் இது பொருந்தும். 

ஆனால் சிங்களவர்களுக்கு கல் வீடும்.. மாட மாளிகைகளும் கட்டிக் கொடுக்கப்படும்.. அரச நிதியில்.. அதுவும் அவர்கள் எப்போதுமே வாழ்ந்திராத ஒரு நிலத்தில்.. புதிய புத்தகோவில்களோடு. அதை கேட்கப் பேச தடுக்க ஒரு மனுசரில்லை. tw_blush:

Link to comment
Share on other sites

22 minutes ago, nedukkalapoovan said:

மக்கள் கடந்த 35 வருசமா உரிமையையும் இழந்து உடமையையும் இழந்து.. ஊரையும் இழந்து.. இவ்வளவு கஸ்டப்படுகினம்.. அது யாரால்... அந்த மக்களை ஆளுகிறம் என்று சொல்லும் அரசின் நடவடிக்கையால் தான். ஜே வி பி யுத்தம் செய்த போது தெற்கில்.. ஒரு பாதுகாப்பு வலயம் இருக்கவில்லை. சிங்கள மக்கள் அகதிகளாக விரட்டி அடிக்கப்படவில்லை. செல் அடிக்கவில்லை. விமானத்தாக்குதல் நடத்தவில்லை. ஆனால் ஜே வி பி பொலிஸ் நிலையங்கள்.. இராணுவ முகாம்களை கூட தாக்கி இருந்தது. 

எமது மக்களின் நிரந்தரக் கஸ்டம் நீக்கப்பட வேண்டும்.. அதற்கு அவர்களுக்கு சரியான திட்டமிடலுடன் கூடிய நிரந்தர அபிவிருத்தியே தேவை. சும்மா பொருத்து வீடுகள் அல்ல.

எனி பொருத்து வீட்டை விட்டிட்டு கென்ரயினர் வீடு வைச்சாலும் சிலர் வக்காளத்துக்கு வாங்குவினம்.. தகரம் கொட்டகை என்று.

அந்த மக்களை வாழ்விடங்களை விட்டு இராணுவத்தை ஏவி அடித்துக் கலைத்துவிட்டு தகரமும் கொட்டகைகளும் வெக்கை.. வெப்பம்... கொடுத்ததும் இவர்களே தான்.  எனி கென்ரயினர் வீடு கொடுப்பார்கள்.

guest-cargo-720x480-c.png

இந்தக் கென்ரயினர் வீடாவது நல்லா ஏசி எல்லாம் போட்டு சூப்பரா இருக்கு. இதை கொடுக்கலாம்.. என்று சொல்ல இங்க ஆக்கள் இருக்கினம். அந்தளவுக்கு சிங்கள  விசுவாச வெறி தலைக்கேறிப் போய் இருக்கிறார்கள். இவை தற்காலிக பொழுதுபோக்கிற்கானவையே தவிர நிரந்தர வதிவிடங்கள் அல்ல. அதற்காக இவை வடிவமைக்கப்பட்டவையும் அல்ல. பொருத்து வீடுகளுக்கும் இது பொருந்தும். 

ஆனால் சிங்களவர்களுக்கு கல் வீடும்.. மாட மாளிகைகளும் கட்டிக் கொடுக்கப்படும்.. அரச நிதியில்.. அதுவும் அவர்கள் எப்போதுமே வாழ்ந்திராத ஒரு நிலத்தில்.. புதிய புத்தகோவில்களோடு. அதை கேட்கப் பேச தடுக்க ஒரு மனுசரில்லை. tw_blush:

:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

இந்த வீட்டை அவர்களது சொந்த காணியில்தான் கட்டிக்கொடுக்க போறாங்கள். சொந்தமா காணி இல்லாதவருக்குதான் காணியும் கொடுத்து வீட்டையும் கட்டி கொடுக்க முயற்சி செய்யுறாங்கள் அண்ணை. கொஞ்சமாவது இதை பற்றி வாசித்துவிட்டு பதிலை தரவும். 

அப்படியா
அப்ப பலாலி படைத்தளத்தைச் சுற்றியும் இந்த வீடுகளை சிங்கள அரசு கட்டிக்கொடுக்கின்றதா??

Link to comment
Share on other sites

8 minutes ago, வாத்தியார் said:

அப்படியா
அப்ப பலாலி படைத்தளத்தைச் சுற்றியும் இந்த வீடுகளை சிங்கள அரசு கட்டிக்கொடுக்கின்றதா??

காங்கேசந்துரையில் உள்ள நடேஸ்வரா கல்லூரியே 2ம் திகதிதான் திறக்கீனமாம். அதுவும் மாவிட்டபுரத்தில இருந்து பஸ்சில கூட்டிக்கொண்டு போய் விடுவினமாம்,  அப்புறம் கூட்டிக்கொண்டு வந்து மறுபடியும் மாவிட்டபுரத்தில விடுவினமாம். உங்களுக்கு அதுக்குள்ள இந்த கேள்வி.அந்த இடத்தை சேர்ந்த நாங்களே பாடசாலயாவது திறக்கப்படுகுதேன்று சந்தொசப்படுரம், உங்களுக்கு அதுவும் பிடிக்கவில்லையா?  

36 minutes ago, nedukkalapoovan said:

இந்தக் கென்ரயினர் வீடாவது நல்லா ஏசி எல்லாம் போட்டு சூப்பரா இருக்கு. இதை கொடுக்கலாம்.. என்று சொல்ல இங்க ஆக்கள் இருக்கினம். அந்தளவுக்கு சிங்கள  விசுவாச வெறி தலைக்கேறிப் போய் இருக்கிறார்கள். இவை தற்காலிக பொழுதுபோக்கிற்கானவையே தவிர நிரந்தர வதிவிடங்கள் அல்ல. அதற்காக இவை வடிவமைக்கப்பட்டவையும் அல்ல. பொருத்து வீடுகளுக்கும் இது பொருந்தும். 

இது கொண்டைனர் வீடு இல்லை எண்டதுகூட புரியாமல் ஒருவர். இதற்குத்தான் சிரித்தேன். :grin::grin::grin:

18 minutes ago, ஜீவன் சிவா said:

எனி பொருத்து வீட்டை விட்டிட்டு கென்ரயினர் வீடு வைச்சாலும் சிலர் வக்காளத்துக்கு வாங்குவினம்.. தகரம் கொட்டகை என்று.

:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கென்ரெயினர் வீடுகள்..

http://containers4saleuk.com/container-homes-inspiration.html

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை தான் மக்களின் மீது திணிக்கப்பாடுபடுகிறார்கள். மக்களை முதலில் இதில் இருந்து காக்கனும். இதில சிங்களவனுக்கு வாக்காளத்து வேற. tw_blush:

Link to comment
Share on other sites

5 minutes ago, nedukkalapoovan said:

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை தான் மக்களின் மீது திணிக்கப்பாடுபடுகிறார்கள். மக்களை முதலில் இதில் இருந்து காக்கனும். இதில சிங்களவனுக்கு வாக்காளத்து வேற. tw_blush:

நான் எழுதியது மக்கள் படும் கஷ்டங்களை, உங்களுக்கு அவர்களுக்கு அவர்கள் படும் கஷ்டங்கள் புரிவதில்லை என்பது ஏற்கனவே தெரிந்த விடயம்தான். இங்கும் மக்களின் கஷ்டங்களை விட உங்கள் பிடிவாதங்களே + வாந்திகளே மேல்.

அதுசரி 2015இல் மீள் குடியேற்றத்திற்கு ஒதுக்கப்பட்ட 15 ஆயிரம் மில்லியன் ரூபாவில் 12 ஆயிரம் மில்லியன் ஏன் பாவிக்கப்படாமல் திறைசேரிக்கு திரும்பியது. உங்கட ஐயாவ கொண்டு 4 வீடாவது கட்டி கொடுத்திருக்கலாமே. சனம் கஷ்டப்பட்டாதான் உங்களுக்கு  கொண்டாட்டம் என்றால், அதற்கு இங்கு  யாரும் தயாரில்லை.

சென்ற டிசெம்பரில் கந்தரோடை இடம்பெயர்ந்தவர்கள்  முகாமிற்கு போயிருந்தேன் (மழை வெள்ளத்தின் போது) - உங்கிருந்து இன்னமும் கணனியில் வாந்தி எடுப்பவர்கள் வந்து பார்த்திருந்தால்  - மனசாட்சி உள்ளவனுக்கு வாந்தி உண்மையில் வந்திருக்கும். உங்களுக்கு வாராது.

வரும் ஆனா வேற வாந்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மக்கள் கேட்பது வீடல்ல. சொந்த இடத்தில்... நிரந்தர வதிவிடம்.  இதை தான் பிரித்தானிய பிரதமர் வந்த போதும் மக்கள் கேட்டார்கள். இந்தா எல்லாம் நடத்தி முடிக்கிறம் என்றான் சிங்களவன். இப்ப பொருத்து வீட்டை தனக்கு வசதியான இடத்தில் கட்டிவிச்சு மக்களை அதில் வலுக்கட்டாயமாக இருத்த நினைக்கிறான்.

ஏலவே இந்திய வீட்டுத்திட்டம் என்றார்கள். 50,000 வீடு என்றார்கள். 500 வீடு தன்னும் கையளிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதுக்கிடையில்...  பொருத்து வீடு நுழைஞ்சுது. இந்தக் கெடுபிடிகளால்... தான் வடக்கு மாகாண சபை ஒரு தெளிவான திட்டமிடலை செய்ய முடியாதுள்ளது. அதற்கு ஆயிரம் முட்டுக்கட்டைகள். கடைசியில் குற்றச்சாட்டு வேற.. வந்த காசை பாவிக்கல்லை. பாவிக்க விட்டால் தானே. அரசே அதுக்குள்ள தானும் தானும் என்று எல்லாத்தையும் குழப்பி அடிக்கும் போது.. மாகாண சபை என்ன செய்யும்.

இந்தத் திட்டங்களை மாகாண சபையோடு இணைந்து சர்வதேசமும்.. ஹிந்தியாவும்.. சொறிலங்கா அரசும் இணைந்து செய்ய வேண்டுமே தவிர ஆளாளுக்கு ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் என்பது தான் மக்களின் தெளிவான நிலைப்பாடு. 

அது சிங்களக் காவடி தூக்கிகளுக்குப் புரியல்ல. இதில விக்கி ஐயா மீது பாய்ச்சல். இப்ப ஆளும் கட்சி இணையமைச்சரே இதை நிறுத்திட்டா. என்ன பண்ணப் போகினம். இதனை அமுலாக்கியே தீருவன் என்ற அமைச்சர் சுவாமிநாதன் என்ன பண்ணுவார். அவருடைய ஈகோவுக்கு.. மக்கள் பலிக்கடா. அதை ஒத்துக்கொள்ள ஒரு வக்கில்ல.  tw_blush:

Link to comment
Share on other sites

9 minutes ago, nedukkalapoovan said:

அந்த மக்கள் கேட்பது வீடல்ல. சொந்த இடத்தில்... நிரந்தர வதிவிடம்.  இதை தான் பிரித்தானிய பிரதமர் வந்த போதும் மக்கள் கேட்டார்கள். இந்தா எல்லாம் நடத்தி முடிக்கிறம் என்றான் சிங்களவன். இப்ப பொருத்து வீட்டை தனக்கு வசதியான இடத்தில் கட்டிவிச்சு மக்களை அதில் வலுக்கட்டாயமாக இருத்த நினைக்கிறான்.

ஏலவே இந்திய வீட்டுத்திட்டம் என்றார்கள். 50,000 வீடு என்றார்கள். 500 வீடு தன்னும் கையளிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதுக்கிடையில்...  பொருத்து வீடு நுழைஞ்சுது. இந்தக் கெடுபிடிகளால்... தான் வடக்கு மாகாண சபை ஒரு தெளிவான திட்டமிடலை செய்ய முடியாதுள்ளது. அதற்கு ஆயிரம் முட்டுக்கட்டைகள். கடைசியில் குற்றச்சாட்டு வேற.. வந்த காசை பாவிக்கல்லை. பாவிக்க விட்டால் தானே. அரசே அதுக்குள்ள தானும் தானும் என்று எல்லாத்தையும் குழப்பி அடிக்கும் போது.. மாகாண சபை என்ன செய்யும்.

இந்தத் திட்டங்களை மாகாண சபையோடு இணைந்து சர்வதேசமும்.. ஹிந்தியாவும்.. சொறிலங்கா அரசும் இணைந்து செய்ய வேண்டுமே தவிர ஆளாளுக்கு ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் என்பது தான் மக்களின் தெளிவான நிலைப்பாடு. 

அது சிங்களக் காவடி தூக்கிகளுக்குப் புரியல்ல. இதில விக்கி ஐயா மீது பாய்ச்சல். இப்ப ஆளும் கட்சி இணையமைச்சரே இதை நிறுத்திட்டா. என்ன பண்ணப் போகினம். இதனை அமுலாக்கியே தீருவன் என்ற அமைச்சர் சுவாமிநாதன் என்ன பண்ணுவார். அவருடைய ஈகோவுக்கு.. மக்கள் பலிக்கடா. அதை ஒத்துக்கொள்ள ஒரு வக்கில்ல.  tw_blush:

அதுசரி 2015இல் மீள் குடியேற்றத்திற்கு ஒதுக்கப்பட்ட 15 ஆயிரம் மில்லியன் ரூபாவில் 12 ஆயிரம் மில்லியன் ஏன் பாவிக்கப்படாமல் திறைசேரிக்கு திரும்பியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

அதுசரி 2015இல் மீள் குடியேற்றத்திற்கு ஒதுக்கப்பட்ட 15 ஆயிரம் மில்லியன் ரூபாவில் 12 ஆயிரம் மில்லியன் ஏன் பாவிக்கப்படாமல் திறைசேரிக்கு திரும்பியது.

இதற்கான விளக்கத்தை ஏலவே.. முதலமைச்சரே ஊடக சந்திப்பொன்றில் வழங்கிட்டார். மேலும்.. அமைச்சர் ஐங்கரநேசனும் வழங்கினவர். அறியாமையில் இருப்பது மக்களோ மாகாண சபையோ அல்ல.. சிங்கள விசுவாசிகள் மட்டுமே. tw_blush:

Link to comment
Share on other sites

12 minutes ago, nedukkalapoovan said:

இதற்கான விளக்கத்தை ஏலவே.. முதலமைச்சரே ஊடக சந்திப்பொன்றில் வழங்கிட்டார். மேலும்.. அமைச்சர் ஐங்கரநேசனும் வழங்கினவர். அறியாமையில் இருப்பது மக்களோ மாகாண சபையோ அல்ல.. சிங்கள விசுவாசிகள் மட்டுமே. tw_blush:

மீள் குடியேற்றத்திற்கு ஒதுக்கப்பட்ட 15000,743,574 ரூபாயில் 3000,563,668 ரூபாய்கள் மட்டும் செலவழிக்கப்பட்ட மர்மம் என்ன தலைவா? அரசு காசை தந்திட்டு செலவழிக்க விடவில்லையா அல்லது நிர்வாக திறமை  இல்லாத மாகானசபையா? பத்திரிகையாளர்கள் கேட்டபோது எனக்கு உரிய காலத்தில் திட்டங்களுக்கான வரைபு கிடைக்கவில்லை என்றாராம். அப்புறம் எப்படி 2014இல் 2015இக்குரிய பாதீட்டை (பட்ஜெட்) தயாரித்து இருப்பார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஜீவன் சிவா said:

மீள் குடியேற்றத்திற்கு ஒதுக்கப்பட்ட 15000,743,574 ரூபாயில் 3000,563,668 ரூபாய்கள் மட்டும் செலவழிக்கப்பட்ட மர்மம் என்ன தலைவா? அரசு காசை தந்திட்டு செலவழிக்க விடவில்லையா அல்லது நிர்வாக திறமை  இல்லாத மாகானசபையா? பத்திரிகையாளர்கள் கேட்டபோது எனக்கு உரிய காலத்தில் திட்டங்களுக்கான வரைபு கிடைக்கவில்லை என்றாராம். அப்புறம் எப்படி 2014இல் 2015இக்குரிய பாதீட்டை (பட்ஜெட்) தயாரித்து இருப்பார்கள்.

 

கம்ரூன் வந்தார்.. எல்லாம் செய்யுறம்.

மோடி வந்தார்... 50,000 கட்டி முடிக்கிறம்.

சுவாமிநாதன் வந்தார் 65,000 பொருத்தி முடிக்கிறம்.

மக்கள் - அதிருப்தி.

முதலமைச்சர் - அதிருப்தி

விஜயகலா வந்தார் - எல்லாம் நிற்பாட்டி இருக்குது.

முதலமைச்சர்  மாகாண சபை சும்மா பெயருக்கு. முன்னர் டக்கிளசும்... மகிந்தவும்.. இப்ப சுவாமிநாதனும்.. விஜயகலாவும் ரணிலும் மைத்திரியும் தான் எல்லாம் தீர்மானிக்கினம். 

முதலமைச்சர் வெறும் பொம்மையாக.

இந்த நிதிப்பயன்பாடு பற்றி ஐங்கரநேசன் விளக்கமளித்துள்ளார். இந்த நிதி மீளக்குடியேறிய மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் பெறுதியை பார்க்கிறோம்.. வடக்கு வெங்காய உற்பத்தியில் தன்னிறைவு.

ஆனால் மத்திய அரசு எடுத்த எந்தக் காரியமும் இன்னும் முடியல்ல. ஹிந்திய வாலுகளும் கூடச் சேர்ந்து.. எல்லாத்தையும் கெடுப்பது தான் நடக்குது. இதனை சர்வதேசம் தட்டிக்கேட்டு திருத்தினால் அன்றி... ஹிந்திய - சிங்கள கூட்டு.. தமிழரை உய்ய விடாது. :rolleyes:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஜீவன் சிவா said:

அதுசரி அதுவரை வெய்யிலிலும்  மழையிலும் இந்த அரசியல்வாதிகளா வேதனைப்பட போகின்றார்கள். 

தவளைகளுக்கு அடுத்த  நீர் நிலை கிடைக்கும்  வரை அவை இருந்தாலென்ன மடிந்தாலென்ன. எமக்கு தேவை எமது பிடிவாதங்களே. தவளைகள் இறந்தாலும் அழ யாருமில்லைதானே.

இந்தியா வாக்கு கொடுத்த 50,000 வீடுகளிற்கும், அரசு வீடுகட்ட கொடுத்த பணத்திற்கும் கடந்த 6 வருடங்களில்  நடந்தததை கொஞ்சம் பின்னோக்கி பாருங்கள் - எல்லாமே புரியும்.

படம்போட்டு காட்டுவதற்காக அவசரம் அவசரமாக கட்டி கொடுக்கிறார்கள். யாழ்ப்பாணத்து காலநிலைக்கு ஒவ்வாத வீடுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது புரியாமல் சிலர் தங்கள் அறியாமைகளை மக்களின் கஸ்டத்தின் பெயரால் மக்களிடம் புகுத்தப்பார்க்கிறார்கள். 

Link to comment
Share on other sites

12 minutes ago, குமாரசாமி said:

படம்போட்டு காட்டுவதற்காக அவசரம் அவசரமாக கட்டி கொடுக்கிறார்கள். யாழ்ப்பாணத்து காலநிலைக்கு ஒவ்வாத வீடுகள்.

இதில் சில பிரச்சனைகள் உண்டு அண்ணை. இல்லை என்று சொல்லவில்லை. 

1: எமது காலநிலைக்கு ஒரு விறாந்தை வேணும் - அது இல்லை.
2: விறகு வைத்து எரித்து சமைக்க ஒரு குசினி வேணும் - அதுவும் இல்லை.
3: காஸ் சிலிண்டெர் ஒன்று குடுக்கிறார்கள், விலை 1500. முடிந்தபின் அவர்களிடம் வசதி இருக்குமா அடுத்தது வாங்க ?
4: உள்ளூர் மூலப் பொருட்கள், தொழிலாளிகள், பாவிக்கப்படப் போவதில்லை.

ஆனால்
மின்சாரம் - சூரிய  ஒளியில் இருந்து
கட்டில், டிவி, கதிரைகள், என்று சகல உபகரணங்களுடனும் இந்த வீடு உள்ளது.

கடலில் தத்தளிப்பவனுக்கு துரும்பாவது கிடைக்கட்டுமே கரையேற  என்பது எனது நோக்கம். இல்லை துரும்பு  வேண்டாம் கப்பல் வரும்வரை தண்ணியில தத்தளித்துக்கொண்டிரு என்பவர்களைத்தான் நான் சாடினேன்.

Link to comment
Share on other sites

34 minutes ago, nedukkalapoovan said:

இந்த நிதிப்பயன்பாடு பற்றி ஐங்கரநேசன் விளக்கமளித்துள்ளார். இந்த நிதி மீளக்குடியேறிய மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் பெறுதியை பார்க்கிறோம்.. வடக்கு வெங்காய உற்பத்தியில் தன்னிறைவு.

விவசாயத்துறைக்கு 305 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 221.651 மில்லியன் ரூபாயில் 147.547 மில்லியன் ரூபாய்கள் மட்டும்தான் செலவு செய்யப்பட்டுள்ளதே. ஆனாலும் ஒரு விடயம் ஐங்கரநேசனின் அமைச்சு மட்டும்தான்  இவ்வளவாவது செய்ததது. அதுக்குதான் இப்போது புடுங்குப்பாடு - மற்றவர்களுடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாய் செயல்படுகின்றார் என்று.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.