Jump to content

காரமான மசாலா மீன் வறுவல்


Recommended Posts

காரமான மசாலா மீன் வறுவல் 

 

Spicy Masala Fish Fry

 

தேவையான பொருட்கள்:

மீன் - 250 கிராம் (முள் இல்லாதது)

தேங்காய் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

 

அரைப்பதற்கு...

சின்ன வெங்காயம் - 3

இஞ்சி - 2 இன்ச்

பூண்டு - 6 பற்கள்

கறிவேப்பிலை - சிறிது

மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் மீன் துண்டுகளை நீரில் நன்கு கழுவி, அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மீன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மசாலா மீன் வறுவல் ரெடி!!!

Read more at: http://tamil.boldsky.com/recipes/non-veg/spicy-masala-fish-fry-011383.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறைச்சி மீன் எல்லாம் வாழையிலையில... என்ன நடக்குது இங்க...! சுப்பராய்த்தான் இருக்கு. புதிதாகச் சமையல்  செய்பவர்களுக்கு  வசதியான குறிப்புகள்...! கீப் இட் அப்...!!

Link to comment
Share on other sites

5 hours ago, நவீனன் said:

காரமான மசாலா மீன் வறுவல் 

எனக்கு பிடித்த மீன் விளை மீன்தான், சுறா பிடிக்காது. இங்கு யாழில் வேறு என்ன மீன் முள்ளு இல்லாமல் இருக்குது என்றும் அறிய  தந்தால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஜீவன் சிவா said:

எனக்கு பிடித்த மீன் விளை மீன்தான், சுறா பிடிக்காது. இங்கு யாழில் வேறு என்ன மீன் முள்ளு இல்லாமல் இருக்குது என்றும் அறிய  தந்தால் நல்லது.

ஒட்டி, ஓரா, மணலை, கயல்,அறுகுளா எல்லாம் நடு முள்தவிர வேறு இருக்காது. திருக்கை தேங்காய்சொட்டு போன்ற முள், இறால், கணவாய் ஓடுமட்டும், முள் இல்லை, வின்மீனில் முள் இல்லை கல் உண்டு. எப்படி வசதி...!! tw_blush:

Link to comment
Share on other sites

2 minutes ago, suvy said:

ஒட்டி, ஓரா, மணலை, கயல்,அறுகுளா எல்லாம் நடு முள்தவிர வேறு இருக்காது. 

நன்றி சுவி 
நாளைக்கு ஒரு முயற்சி பண்ணினால் போச்சு.

3 minutes ago, suvy said:

வின்மீனில் முள் இல்லை கல் உண்டு. எப்படி வசதி...!! tw_blush:

அப்ப ஜாமீனில் என்ன இருக்கும். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஜீவன் சிவா said:

நன்றி சுவி 
நாளைக்கு ஒரு முயற்சி பண்ணினால் போச்சு.

அப்ப ஜாமீனில் என்ன இருக்கும். :grin:

சிம்பிள்...,களியுடன் ஜெயில்தான்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, suvy said:

ஒட்டி, ஓரா, மணலை, கயல்,அறுகுளா எல்லாம் நடு முள்தவிர வேறு இருக்காது. திருக்கை தேங்காய்சொட்டு போன்ற முள், இறால், கணவாய் ஓடுமட்டும், முள் இல்லை, வின்மீனில் முள் இல்லை கல் உண்டு. எப்படி வசதி...!! tw_blush:

greymullet.jpg

சுவி சொல்லுறார் என்று....  மணலை மீனை மட்டும், வாங்கிப் போடாதேங்கோ...  ஜீவன் சிவா.
அதில்... ஒரு ருசியும் இல்லை.  பச்சைத் தண்ணி மாதிரி இருக்கும். 
அல்லது எமக்கு அதனை சமைக்கும் முறை, தெரியாமலும் இருக்கலாம்.
40 வருசத்துக்கு முதல், பண்ணை சந்தையில் அதை வாங்கி வந்து, வீட்டில் பேச்சு வாங்கியது... இப்பவும் நல்ல ஞாபகம் இருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தில் தலபொத்து எனப்படும் மீனின் தமிழ் பெயர் தெரியுமானால் தாருங்களேன்...

Link to comment
Share on other sites

13 minutes ago, தமிழ் சிறி said:

greymullet.jpg

சுவி சொல்லுறார் என்று....  மணலை மீனை மட்டும், வாங்கிப் போடாதேங்கோ...  ஜீவன் சிவா.
அதில்... ஒரு ருசியும் இல்லை.  பச்சைத் தண்ணி மாதிரி இருக்கும். 
அல்லது எமக்கு அதனை சமைக்கும் முறை, தெரியாமலும் இருக்கலாம்.
40 வருசத்துக்கு முதல், பண்ணை சந்தையில் அதை வாங்கி வந்து, வீட்டில் பேச்சு வாங்கியது... இப்பவும் நல்ல ஞாபகம் இருக்குது.

நன்றி 

எனது வீட்டில் 5 ஆண்கள். ஒவ்வொருவரும் மேற் படிப்புக்காக வீட்டை விட்டு வெளியேறும் பொது அடுத்தவர்தான் சந்தையில்  கொள்வனவு செய்வார். கடைசியா பிறந்த எனக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்கு முன்னரே நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலமை. அதனால்தான் இன்றும் மீன் பார்த்து வாங்க தெரியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஜீவன் சிவா said:

நன்றி 

எனது வீட்டில் 5 ஆண்கள். ஒவ்வொருவரும் மேற் படிப்புக்காக வீட்டை விட்டு வெளியேறும் பொது அடுத்தவர்தான் சந்தையில்  கொள்வனவு செய்வார். கடைசியா பிறந்த எனக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்கு முன்னரே நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலமை. அதனால்தான் இன்றும் மீன் பார்த்து வாங்க தெரியாது. 

tumblr_n8oret5qGG1s1451lo4_500.jpg

நோர்வேயில்... ஓறெற் (Oret) என்ற மீனை,  உறவினர்கள் இங்கு வரும் போது பக்குவமாக பொரித்துக் கொண்டு வருவார்கள்.
அதன் சுவையே.... தனி. நீங்கள் நோர்வேயில் வாழும் போது.... அந்த மீனை, சாப்பிட்டு உள்ளீர்களா. 

15 minutes ago, Nathamuni said:

சிங்களத்தில் தலபொத்து எனப்படும் மீனின் தமிழ் பெயர் தெரியுமானால் தாருங்களேன்...

சிங்களத்துக்கு,  தமிழ் மொழிபெயர்க்க......
விசுகு, புங்கையூரன், சசிவர்ணம்,  வாலி, கொழும்பான்..... ஆகியோரை மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம். 41.gif

Link to comment
Share on other sites

11 minutes ago, தமிழ் சிறி said:

நோர்வேயில்... ஓறெற் (Oret) என்ற மீனை,  உறவினர்கள் இங்கு வரும் போது பக்குவமாக பொரித்துக் கொண்டு வருவார்கள்.
அதன் சுவையே.... தனி. நீங்கள் நோர்வேயில் வாழும் போது.... அந்த மீனை, சாப்பிட்டு உள்ளீர்களா. 

எனக்கு பிடித்தது மலை ஒரெத் எனும் சிறிய மீன்தான். லக்ஸ், தொர்ஷ்க்கும் பிடிக்கும். ஆனால் மிளகு போட்டு பதப்படுத்திய மக்கரல் ரொம்ப பிடிக்கும்.

ஒரு முறை உள்வொய்யா பாலத்தில்  மீன் பிடிக்க போனபோது 2 மணி நேரத்தில் 52 மக்கரல் மாட்டிச்சு. நண்பர்களுக்கும் பகிர்ந்து நாங்களும் தின்னோம். பிள்ளைகள் அடுத்த நாள் தாங்களும் வாறம் என்றார்கள் - 4 மணி நேரமா ஒரு கோதாரியும் மாட்டவில்லை. அன்று முழுக்க "நேற்று அப்பா கடையில வேண்டிக்கொண்டு வந்து சீன காட்டினார்" என்ற நக்கலுக்கு ஆளானது மறக்க முடியாததது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஜீவன் சிவா said:

எனக்கு பிடித்தது மலை ஒரெத் எனும் சிறிய மீன்தான். லக்ஸ், தொர்ஷ்க்கும் பிடிக்கும். ஆனால் மிளகு போட்டு பதப்படுத்திய மக்கரல் ரொம்ப பிடிக்கும்.

ஒரு முறை உள்வொய்யா பாலத்தில்  மீன் பிடிக்க போனபோது 2 மணி நேரத்தில் 52 மக்கரல் மாட்டிச்சு. நண்பர்களுக்கும் பகிர்ந்து நாங்களும் தின்னோம். பிள்ளைகள் அடுத்த நாள் தாங்களும் வாறம் என்றார்கள் - 4 மணி நேரமா ஒரு கோதாரியும் மாட்டவில்லை. அன்று முழுக்க "நேற்று அப்பா கடையில வேண்டிக்கொண்டு வந்து சீன காட்டினார்" என்ற நக்கலுக்கு ஆளானது மறக்க முடியாததது.

அடுத்த 24 மணி நேரத்தில்.... மீனின் புலாய்வுப் பிரிவு, தகவல்களை தெரிவித்தவுடன்.... 
மிச்ச மீன் எல்லாம், எஸ்கேப் ஆயிடுச்சு என்று நினைக்கின்றேன். 47.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Nathamuni said:

சிங்களத்தில் தலபொத்து எனப்படும் மீனின் தமிழ் பெயர் தெரியுமானால் தாருங்களேன்...

CLICK_TO_ENLARGE 10.jpgCLICK_TO_ENLARGE 10.jpg

sailfishtax.gif

 

sail fish - பாய்மர மீன்

http://www.fisheriesdept.gov.lk/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

greymullet.jpg

சுவி சொல்லுறார் என்று....  மணலை மீனை மட்டும், வாங்கிப் போடாதேங்கோ...  ஜீவன் சிவா.
அதில்... ஒரு ருசியும் இல்லை.  பச்சைத் தண்ணி மாதிரி இருக்கும். 
அல்லது எமக்கு அதனை சமைக்கும் முறை, தெரியாமலும் இருக்கலாம்.
40 வருசத்துக்கு முதல், பண்ணை சந்தையில் அதை வாங்கி வந்து, வீட்டில் பேச்சு வாங்கியது... இப்பவும் நல்ல ஞாபகம் இருக்குது.

சிறியர்; மணலை மீனில் விசேசம் அதன் பொக்குள்தான்.பண்ணைச் சந்தையில் நீங்கள் மீனைவாங்கி வெட்டித் தரச்சொல்லிக் குடுத்திட்டு  பிரா  க்குப் பார்த்துக் கொண்டு நின்றிருப்பீங்கள். அவர்கள் பொக்குளை உருவிப் போட்டுத் தந்திருப்பார்கள் . பொக்குள் இல்லாத மணலையைப் பார்த்திட்டு உங்களுக்கு  பிரால் அகப்பைக் காம்பால அடிக்காமல் விட்டதே பெரிய விடயம்...!

அந்தப் பொக்குளை தென்னம் ஈக்கிள் குத்தி அடுப்புத் தணலுக்குள் சுட்டுச் சாப்பிட வேணும். கீல வெடக் நே...!! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, suvy said:

சிறியர்; மணலை மீனில் விசேசம் அதன் பொக்குள்தான்.பண்ணைச் சந்தையில் நீங்கள் மீனைவாங்கி வெட்டித் தரச்சொல்லிக் குடுத்திட்டு  பிரா  க்குப் பார்த்துக் கொண்டு நின்றிருப்பீங்கள். அவர்கள் பொக்குளை உருவிப் போட்டுத் தந்திருப்பார்கள் . பொக்குள் இல்லாத மணலையைப் பார்த்திட்டு உங்களுக்கு  பிரால் அகப்பைக் காம்பால அடிக்காமல் விட்டதே பெரிய விடயம்...!

அந்தப் பொக்குளை தென்னம் ஈக்கிள் குத்தி அடுப்புத் தணலுக்குள் சுட்டுச் சாப்பிட வேணும். கீல வெடக் நே...!! tw_blush:

அட... நாம, 
சாவித்திரி, சரோசாதேவி, ஜெநோலியா போன்ற.... எல்லாரின், பொக்கிளையும்...... பார்த்த இனம் நாங்கள்.
எங்களுக்கு... றீல், விடாதிங்க, சுவி அண்ணே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் ஊர் இருந்த போது  நாங்க சின்னப் பையனாக இருந்த போதும்..  மீன் வாங்கச் சந்தைக்கு போக பயமின்றி பெற்றோர் அனுப்புவார்கள். அப்ப மீன்காரர்களும் நல்ல நேர்மை. அம்மா கயல் மீன் வாங்கி வரச் சொன்னால்.. நான் சில தடவை.. மணலையை வாங்கி விடுவேன். சில மீன்காரர்கள் நேர்மையாக அது கயல் இல்லை மணலை என்று சொல்வார்கள். கயல் மீன் நல்ல ருசி. மணலை ருசி இல்லை.

கயலும்.. மணலையும் தோற்றதில் ஒன்று. ஆனால் கயல் மீன் முதுகுப் புறம் கறுப்பாக இருக்கும்.. மணலை பச்சை கலந்த கறுப்படிக்கும். 

கயல்.. மணலை இரண்டுக்கும் பொக்கனி உள்ளது. பொக்கிளும் பொக்கனியும் ஒன்றல்ல. தமிழ்சிறீ அண்ணா குழம்பிட்டார். சுவிண்ணா குழப்பிவிட்டிட்டார் அவரை. அவர் ஜெனிலியா பொக்கிள் வரை போய்ட்டார்.tw_blush:

Link to comment
Share on other sites

4 hours ago, nedukkalapoovan said:

கயல்.. மணலை இரண்டுக்கும் பொக்கனி உள்ளது. பொக்கிளும் பொக்கனியும் ஒன்றல்ல. தமிழ்சிறீ அண்ணா குழம்பிட்டார். சுவிண்ணா குழப்பிவிட்டிட்டார் அவரை. அவர் ஜெனிலியா பொக்கிள் வரை போய்ட்டார்.tw_blush:

நானும் பொக்கணியும் பொக்கிளும் ஒன்றுதான் என்று இன்று வரைக்கும் நினைத்து இருந்தேன்....இரண்டுக்கும் இடையில் இருக்கும் 6 வித்தியாசங்கள்ளை பகரவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

நானும் பொக்கணியும் பொக்கிளும் ஒன்றுதான் என்று இன்று வரைக்கும் நினைத்து இருந்தேன்....இரண்டுக்கும் இடையில் இருக்கும் 6 வித்தியாசங்கள்ளை பகரவும்

பொக்கனி - உள்ள

பொக்கிள் - வெளிய

 

பொக்கனி - கழிவகற்றலில்

பொக்கிள் - பந்தத்தில்

 

பொக்கனி - மீனில்

பொக்கிள் - மனிதனில் + எக்ஸட்ரா

 

பொக்கனி - பம்பரம் விடேலா

பொக்கிள் - விடலாம்

 

பொக்கனி - கறி சமைக்கலாம்

பொக்கிள்- நோ வே

 

பொக்கனி - தசை நிறைந்தது

பொக்கிள் - தசை குறைந்தது.

 

tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மீனின் பொக்குளுக்குள் இவ்வளவா நெடுக்கு சும்மா பீலாதானே இது??

இதெல்லாம் ஆராய்ச்சி பண்ணி.... 

எனக்கு சூரைமீன் கிளவள் tuna பொரியல் தான் மிக விருப்பம்  

 ஆனால் தலபத்து மீனின் கொப்பூறா மீனின் குடலை அவித்து பிரட்டல் சிங்களவர்கள் செய்யவார்கள் ஆக என்ன ருசி?☺ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் சூடை,கீரி,சூரன் மீன் என்டால் அந்த மாதிரி இருப்பம்.ஆனால் இவை கிரந்தி மீன்...நெடுக்கர் சொல்வது மாதிரி மணலை மீன் வாயில் வைக்க முடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நான்காவது ஷரத்தினூடாக உங்களின் வாதத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன் நெடுக்ஸ்....!  

நான் ஏற்றுக் கொண்டதினால் நிழலியும் ஏற்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. அவர் விரும்பினால் வாதத்தைத் தொடரலாம்...!!

Link to comment
Share on other sites

On 2016-05-31 at 6:34 AM, nedukkalapoovan said:

பொக்கனி - உள்ள

பொக்கிள் - வெளிய

 

பொக்கனி - கழிவகற்றலில்

பொக்கிள் - பந்தத்தில்

 

பொக்கனி - மீனில்

பொக்கிள் - மனிதனில் + எக்ஸட்ரா

 

பொக்கனி - பம்பரம் விடேலா

பொக்கிள் - விடலாம்

 

பொக்கனி - கறி சமைக்கலாம்

பொக்கிள்- நோ வே

 

பொக்கனி - தசை நிறைந்தது

பொக்கிள் - தசை குறைந்தது.

 

tw_blush:

 

 

கலக்கிட்டீங்க நெடுக்ஸ்

இனி மீன் பொக்கணியை சாப்பிடும் போது நெடுக்ஸின் தொப்புள்  தான் நினைவில் வரும் tw_blush:

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக மீனை குழம்பு, வறுவல் என்று செய்வார்கள். ஆனால் மீனை வறுத்து, பின் மசாலா செய்வது சற்று வித்தியாசமான சுவையுடன் இருக்கும். இப்போது எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
 
 
 
ஸ்பைசி வறுத்த மீன் மசாலா
 
தேவையான பொருட்கள்: 

பொரிப்பதற்கு... 

வஞ்சிரம் மீன் - 300 கிராம்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் 
மிளகுத் தூள் - அரை டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
ஓமம் தூள் - அரை ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு

மசாலாவிற்கு... 

வெங்காயம் - 3 
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன் 
தக்காளி - 2
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
சோம்பு தூள் - 1 டீஸ்பூன் 
கிராம்புத் தூள் - /14 டீஸ்பூன் 
கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை  :

* கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* முதலில் மீனை நன்கு கழுவி சிறு நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 

* ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், ஓமம் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் செய்து அதில் கழுவி வைத்துள்ள மீனில் தடவி, 1 மணி நேரம் ஊற வைக்கவும். 

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் ஊற வைத்துள்ள மீனை போட்டு பொரித்து, தனியாக வைத்துக் கொள்ளவும். 

* மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, அதில் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியம் இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போன வதக்கிய பின்னர் தக்காளியை நன்றாக வதக்கவும். 

* பின்னர் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், கிராம்பு தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 

* மசாலா நன்கு வதங்கியதும், அதில் மசாலாவிற்கு ஏற்ற அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்கவிடவும். 

* பிறகு பொரித்து வைத்துள்ள மீனை இந்த மசாலாவில் சேர்த்து, ஒரு முறை பிரட்டி, தீயை மிதமாக வைத்து, 5 நிமிடம் அடுப்பில் வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். 

* அருமையான வறுத்த ஸ்பைசி மீன் மசாலா ரெடி!!! 

* இதன் மேல் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு, சாதத்துடன் சாப்பிட்டால், மிகவும் சுவையாக இருக்கும்.

 

http://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2016/07/09142319/1024541/spicy-fried-fish-masala.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் ஏரியாவுக்கு வந்து, ஒரு காலில் சீலையும், ஒரு காலில் ஓலையும் கட்டி விட்டு - ஓலைக்கால், சீலைக்கால் என பழக்கியதாக எங்கள் ஊரில் சொல்வார்கள். இரு இனங்களும் தம்மை தாமே நக்கல் அடிப்பதில் வல்லவர்கள் போலும்.
    • எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே. தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன். இப்போது அதுவல்ல பிரச்சனை. தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்... வெட்டுறம்... கொத்துறம்..... அடிக்கிறம்... வெட்டி தாக்கிறம்... புடுங்குறம்... பொங்கிறம்.. படைக்கிறம்... எங்கடை... உரிமைகளை.. வெண்டெடுக்கிறம்... அமெரிக்கவோட... கதைக்கிறம்... லண்டனோடை... கதைக்கிறம்... குயின்னோடை ... கதைக்கிறம்... ஐரோப்பாவோடை... கதைக்கிறம்.... என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள். வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.
    • ஆனால் இரெண்டே வருடத்தில் ஜொக்காவையும் உருவி விட்டு துரத்துவார்கள்🤣
    • நிச்சயமாக. குர்தீக்களை ஒன்றுக்கு ரெண்டு தரமும், ஆப்கானிஸ்தானில், வியட்நாமில் தம் சகபாடிகளை வச்சு செஞ்ச அமேரிக்காவும், ஆப்கான், வார்சோ, கிழக்கு ஜேர்மனி சகபாடிகளை வச்சு செஞ்ச ரஸ்யாவும், டிரம்ப் புட்டின் காலத்தில் இதை செய்ய நிறையவே சாத்திய கூறுகள் உள்ளது. #ஒரு வல்(லூறு)லரசின் மனது இன்னொரு வல்(லூறு)லரசிற்குத்தான் புரியுமாமே🤣. என்னை போன்ற நனைந்த பிஸ்கோத்துகள்தான், உக்ரேனிய இனவழி தேசிய சுயநிர்ணயம், பலஸ்தீனருக்கு நாடு, ஈரானில் பெண்ணுரிமை என அலம்பிகொண்டிருப்பது. அவர்களுக்கு இவை எல்லாமே just transactional. அதுவும் டிரம்ப் - நல்ல விலை படிந்தால் - ஜேர்மனி, நேட்டோ, அமெரிக்காவையே கூவி விற்று விடுவார்🤣🤣🤣. 
    • க‌னிமொழி போர‌ வார‌ இட‌ங்க‌ளில் எல்லாம் ம‌க்க‌ள் விர‌ட்டி அடிக்கின‌ம் ஆனால் அவா முன் நிலையில்................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.