Jump to content

கிழக்கு முதல்வரைக் கைவிடுகிறார் ஹக்கீம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சம்பூரில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் நடந்து கொண்ட விதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றின் பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சம்பூரில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் நடந்து கொண்ட விதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றின் பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

   

முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாண முதலமைச்சர், சம்பூர் கடற்படையின் கட்டளையிடும் அதிகாரி கப்டன் ரஞ்சித் பிரேமரத்னவை கடந்த 20ஆம் திகதி பகிரங்கமாக திட்டியுள்ளார். குறித்த சம்பவம் நடந்து சுமார் ஒரு வாரத்தின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முதன்முதலாக இதுபற்றி கருத்து வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து முதலமைச்சருக்கு எதிராக தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=158467&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானாவுக்கு நாக்கில அட்டமத்து சனி குடிகொண்டிருந்திருக்கு ....கிளப்பி விட்டுட்டார் 
இனி அவர் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டாலும் ..சனி விட்டுத்  தொலையாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவையானா இஸ்லாத்தையே கைவிட்டுவிடுவார்.

Link to comment
Share on other sites

Mano Ganesan
23 hrs

(27/05/16) < கிழக்கு மாகாண முதல்வர் நசீர் அஹமட் விவகாரம்> இந்த நொடியில் என் மனதில்……

கிழக்கு மாகாண முதல்வர் நசீர் அஹமட் விவகாரம் பற்றி கொஞ்சம் பார்ப்போம். அவரது வரலாறு ஒன்றும் நேர்கோட்டில் வந்த யோக்கிய வரலாறு இல்லை. (அப்படி பார்த்தால் இங்கே யார்…?) அவரது இந்த பதவியும், முஸ்லிம் காங்கிரசுக்குள் அவரது மறு(?) பிரவேசமும் அந்த கட்சியை பொறுத்தது. கடந்த காலங்களில் அவருக்கும் மாமனிதர் அஸ்ரப்புக்கும் இருந்த உறவும் அப்படித்தான். அதேபோல், இன்று அந்த கண்காணா காட்சியில் அவரது நடவடிக்கை சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது. அங்கே அவருக்கு அவமானம், வரிசை மரபு (Protocol) மீறல் நிகழ்ந்திருந்தால் (நிகழ்ந்துள்ளது!), அதை அவர் இன்னமும் நாகரீகமாக கையாண்டு இருக்க வேண்டும்.

அழையா விருந்தாளியாக போனாரா, அங்கே போன பிறகு மேடைக்கு (அவர் சொல்வதைப்போல்) ‘ஒரு பொடியன்’ அழைக்கப்படுவதைப்போல் கைசுட்டி அழைக்கப்பட்டாரா? என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். அவர் அந்த மாகாண முதலமைச்சர் என்பது முதல் தரவு (Fact). இந்த ஒரு தரவு முக்கியமானது. அடுத்தது, அந்த காட்சியில் கடற்படை அதிகாரி திரும்ப, திரும்ப சளைக்காமல் முதல்வரை ஏதோ சொல்லி தடுக்க முயன்று, அவரைப்பற்றி ஆளுனரிடம் புகாரிடுவது தெரிகிறது. இது இரண்டாம் தரவு,

இந்த தரவுகளை (Facts), நிறைய பேர் வேண்டுமென்றே கவனிக்காமல் உதாசீனப்படுத்துகிறார்களோ என்ற சந்தேகம் எனக்குள் இயல்பாக எழுகிறது. குறிப்பாக நிறைய அரசியல்வாதிகள், குறிப்பாக சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தொலைக்காட்சிகள் முன் தோன்றி, தங்கள் பகைமைகளை தீர்த்து கொள்ளவோ அல்லது பெரும்பான்மை நபர்களை திருப்திபடுத்தவோ முயல்வதாக தெரிகிறது. மட்டக்களப்பின் அந்த சர்ச்சைக்குரிய பெளத்த துறவி நேற்று முதல்வரை சந்தித்து பேசியவை வரம்பு மீறிய வார்த்தைகள். சிங்கள ஊடகர்கள், ஊடகங்கங்கள், அரசியல்வாதிகள், பெளத்த துறவிகள் போட்டு தாக்கும்போது நம்மவர்களும் இந்த நசீர் அஹமட்டை போட்டு தாக்குகிறார்கள். சிலர் அவரது இங்கிலிஷைகூட குறை சொல்கிறார்கள். அது என்ன ஆங்கிலம் பேசினால்தான் அறிவாளியா? அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? எனக்குள் இந்த கேள்விகள் எழுகின்றன. இன்னமும் சில கேள்விகள்.

இலங்கையில் ஒன்பது மாகாணங்கள் உள்ளன. ஒன்பது முதல்வர்கள் உள்ளார்கள். அதில் வடக்கில் உள்ளவர் தமிழராகவும், கிழக்கில் உள்ளவர் முஸ்லிமாகவும் உள்ளார்கள். இதில் முக்கியம் என்னவென்றால், இவர்கள் இருவரும் சிங்களவர்கள் இல்லை.

இதே மாதிரியான சம்பவம் வேறு ஒரு சிங்கள முதல்வர் இருக்கும் மாகாணத்தில் நடந்து இருந்தால், அதை எப்படி சிங்கள ஊடகர்கள், அரசியல்வாதிகள், பெளத்த துறவிகள் கையாண்டு இருப்பார்கள். உண்மையில் சொல்லப்போனால், முதல்வரை அழைக்காமல் விடுவது, அழைக்கப்படாமல் இவர் போனாலும் அவரை மேடையேற வேண்டாம் என்று சொல்வது, என்ற அளவுகளுக்கு இந்த பிரச்சினை போயிருக்குமா?

அங்கே இருந்த ஒஸ்டின் பெர்னாண்டோவும், அதுல் கேசாபும் என் நண்பர்கள். இவர்கள் இருவரிடமும், நான் வேலைப்பளு காரணமாக, இதுபற்றி இன்னமும் பேசவில்லை. ஆனால், பேசுவேன்.

ஒரு முதல்வர் அழைக்கப்படாமல் வந்துவிட்டால்கூட, அவரை மாலை போட்டு, வரவேற்று மேடை ஏற்றுவதில் என்னய்யா தயக்கம்? கூடவே மாகாண கல்வி அமைச்சரையும் முதல்வர் கூட்டி வந்தாரே? அவர் அந்த மாகாணத்தின் விவிஐபி (VVIP) இல்லையா? ஒருவேளை அந்த கடற்படை அதிகாரிக்கும், முதல்வருக்கும் முன்கூட்டிய விரோதம் இருக்கிறது என வைத்துக்கொண்டாலும்கூட, ஒரு பொது நிகழ்வில் முதல்வருக்கு உரிய பதவிநிலை மரியாதை வழங்கப்படக்கூடாதா? அந்த கடற்படை அதிகாரி பெரிய கெட்டிக்கார கில்லாடிதான். செய்யும் காரியம் எதுவாக இருந்தாலும், கடைசிவரை அவர் தனது முகத்தில் புன்னகையை தக்க வைத்துக்கொண்டே இருந்தார். ஆனால், இந்த முதல்வர் எள்ளும், கொள்ளும் வெடித்து, கையை காலை வீசி, பதட்டமடைந்து, முதிர்சியற்றவராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். ஒரு முதல்வருக்கு இது அழகல்ல. இதுதான் இங்கே நடந்தது.

மற்றபடி கூட்டி கழித்து பார்த்தால், இந்த விஷயத்தில் நான் நசீர் அஹமட் பக்கம்.

(நசீருடன் நான் இருக்கும் படம் இல்லை. ஆகவே இன்னொரு முதல்வருடன் கூடிய படத்தை இங்கே போடுகிறேன்)

 
Mano Ganesan's photo.
LikeShow more reactions
Comment
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:
Mano Ganesan
23 hrs · 
 

(27/05/16) < கிழக்கு மாகாண முதல்வர் நசீர் அஹமட் விவகாரம்> இந்த நொடியில் என் மனதில்……

கிழக்கு மாகாண முதல்வர் நசீர் அஹமட் விவகாரம் பற்றி கொஞ்சம் பார்ப்போம். அவரது வரலாறு ஒன்றும் நேர்கோட்டில் வந்த யோக்கிய வரலாறு இல்லை. (அப்படி பார்த்தால் இங்கே யார்…?) அவரது இந்த பதவியும், முஸ்லிம் காங்கிரசுக்குள் அவரது மறு(?) பிரவேசமும் அந்த கட்சியை பொறுத்தது. கடந்த காலங்களில் அவருக்கும் மாமனிதர் அஸ்ரப்புக்கும் இருந்த உறவும் அப்படித்தான். அதேபோல், இன்று அந்த கண்காணா காட்சியில் அவரது நடவடிக்கை சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது. அங்கே அவருக்கு அவமானம், வரிசை மரபு (Protocol) மீறல் நிகழ்ந்திருந்தால் (நிகழ்ந்துள்ளது!), அதை அவர் இன்னமும் நாகரீகமாக கையாண்டு இருக்க வேண்டும்.

அழையா விருந்தாளியாக போனாரா, அங்கே போன பிறகு மேடைக்கு (அவர் சொல்வதைப்போல்) ‘ஒரு பொடியன்’ அழைக்கப்படுவதைப்போல் கைசுட்டி அழைக்கப்பட்டாரா? என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். அவர் அந்த மாகாண முதலமைச்சர் என்பது முதல் தரவு (Fact). இந்த ஒரு தரவு முக்கியமானது. அடுத்தது, அந்த காட்சியில் கடற்படை அதிகாரி திரும்ப, திரும்ப சளைக்காமல் முதல்வரை ஏதோ சொல்லி தடுக்க முயன்று, அவரைப்பற்றி ஆளுனரிடம் புகாரிடுவது தெரிகிறது. இது இரண்டாம் தரவு,

இந்த தரவுகளை (Facts), நிறைய பேர் வேண்டுமென்றே கவனிக்காமல் உதாசீனப்படுத்துகிறார்களோ என்ற சந்தேகம் எனக்குள் இயல்பாக எழுகிறது. குறிப்பாக நிறைய அரசியல்வாதிகள், குறிப்பாக சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தொலைக்காட்சிகள் முன் தோன்றி, தங்கள் பகைமைகளை தீர்த்து கொள்ளவோ அல்லது பெரும்பான்மை நபர்களை திருப்திபடுத்தவோ முயல்வதாக தெரிகிறது. மட்டக்களப்பின் அந்த சர்ச்சைக்குரிய பெளத்த துறவி நேற்று முதல்வரை சந்தித்து பேசியவை வரம்பு மீறிய வார்த்தைகள். சிங்கள ஊடகர்கள், ஊடகங்கங்கள், அரசியல்வாதிகள், பெளத்த துறவிகள் போட்டு தாக்கும்போது நம்மவர்களும் இந்த நசீர் அஹமட்டை போட்டு தாக்குகிறார்கள். சிலர் அவரது இங்கிலிஷைகூட குறை சொல்கிறார்கள். அது என்ன ஆங்கிலம் பேசினால்தான் அறிவாளியா? அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? எனக்குள் இந்த கேள்விகள் எழுகின்றன. இன்னமும் சில கேள்விகள்.

இலங்கையில் ஒன்பது மாகாணங்கள் உள்ளன. ஒன்பது முதல்வர்கள் உள்ளார்கள். அதில் வடக்கில் உள்ளவர் தமிழராகவும், கிழக்கில் உள்ளவர் முஸ்லிமாகவும் உள்ளார்கள். இதில் முக்கியம் என்னவென்றால், இவர்கள் இருவரும் சிங்களவர்கள் இல்லை.

இதே மாதிரியான சம்பவம் வேறு ஒரு சிங்கள முதல்வர் இருக்கும் மாகாணத்தில் நடந்து இருந்தால், அதை எப்படி சிங்கள ஊடகர்கள், அரசியல்வாதிகள், பெளத்த துறவிகள் கையாண்டு இருப்பார்கள். உண்மையில் சொல்லப்போனால், முதல்வரை அழைக்காமல் விடுவது, அழைக்கப்படாமல் இவர் போனாலும் அவரை மேடையேற வேண்டாம் என்று சொல்வது, என்ற அளவுகளுக்கு இந்த பிரச்சினை போயிருக்குமா?

அங்கே இருந்த ஒஸ்டின் பெர்னாண்டோவும், அதுல் கேசாபும் என் நண்பர்கள். இவர்கள் இருவரிடமும், நான் வேலைப்பளு காரணமாக, இதுபற்றி இன்னமும் பேசவில்லை. ஆனால், பேசுவேன்.

ஒரு முதல்வர் அழைக்கப்படாமல் வந்துவிட்டால்கூட, அவரை மாலை போட்டு, வரவேற்று மேடை ஏற்றுவதில் என்னய்யா தயக்கம்? கூடவே மாகாண கல்வி அமைச்சரையும் முதல்வர் கூட்டி வந்தாரே? அவர் அந்த மாகாணத்தின் விவிஐபி (VVIP) இல்லையா? ஒருவேளை அந்த கடற்படை அதிகாரிக்கும், முதல்வருக்கும் முன்கூட்டிய விரோதம் இருக்கிறது என வைத்துக்கொண்டாலும்கூட, ஒரு பொது நிகழ்வில் முதல்வருக்கு உரிய பதவிநிலை மரியாதை வழங்கப்படக்கூடாதா? அந்த கடற்படை அதிகாரி பெரிய கெட்டிக்கார கில்லாடிதான். செய்யும் காரியம் எதுவாக இருந்தாலும், கடைசிவரை அவர் தனது முகத்தில் புன்னகையை தக்க வைத்துக்கொண்டே இருந்தார். ஆனால், இந்த முதல்வர் எள்ளும், கொள்ளும் வெடித்து, கையை காலை வீசி, பதட்டமடைந்து, முதிர்சியற்றவராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். ஒரு முதல்வருக்கு இது அழகல்ல. இதுதான் இங்கே நடந்தது.

மற்றபடி கூட்டி கழித்து பார்த்தால், இந்த விஷயத்தில் நான் நசீர் அஹமட் பக்கம்.

(நசீருடன் நான் இருக்கும் படம் இல்லை. ஆகவே இன்னொரு முதல்வருடன் கூடிய படத்தை இங்கே போடுகிறேன்)

 
Mano Ganesan's photo.
LikeShow more reactions
CommentShare

ஐயா ...மனோ அவர்களே 
நீங்கள் யார் பக்கம் என்பதல்ல மேட்டர் ....உங்களுக்கு இப்படியொன்று நடந்தால் நசீர் உங்கள் பக்கம் நிற்பாரா என்பது தான் மேட்டர்
பிழைக்க தெரியாத பிள்ளையாக இருக்காமல் ...இது அவரது பிரச்சினை அவரே பார்த்துக்கொள்ளட்டும்...இன்றைய காலகட்டத்தில் சிங்களவனை முடிந்தவரை பகைத்துகொள்லாமல் இருப்பது உத்தமம் அதிலும் ஒரு முஸ்லிமிட்காக பகைத்து கொள்ளாமல் இருப்பது அதி உத்தமம்    

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.