Jump to content

இது நம்ம ஆளு - திரை விமர்சனம்


Recommended Posts

இது நம்ம ஆளு - திரை விமர்சனம்

 
 
namma_aal8u_2873362f.jpg
 

கல்யாண ஏற்பாட்டுக்குக் குறுக்கே பழைய காதலும் புதிய சந்தேகங்களும் நுழைந்தால் என்ன ஆகும்? அதுதான் ‘இது நம்ம ஆளு.’

ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க் கிறார், சிவா (சிம்பு). ‘சகோ... சகோ’ என்று அவரை சதா வம்புக்கு இழுத்துக் கொண்டே உடன் இருக்கும் நண்பன் வாசு (சூரி). சென்னையில் ஒரு அறை எடுத்துக்கொண்டு வேலைக்குப் போவது, ஊர் சுற்றுவது என்று இருவரும் ஜாலி யாக வலம் வருகிறார்கள். மகன் சிம்புவுக்கு அப்பா ஜெயப்பிரகாஷ் திருவையாறில் வரன் பார்க்கிறார். அவர்தான் மைலா (நயன்தாரா).

அவரைப் பார்த்ததும் சிம்புவுக்குப் பிடித்து விடுகிறது. ஆனால் தன் பழைய காதலி பிரியா (ஆன்ட்ரியா) பற்றி நயன் கேட்டதால் சிம்பு நம்பிக்கை இழக்கிறார். எனினும் நிச்சயதார்த்தம் நடக்கிறது. இரு வரும் காதலர்களாக வலம் வரும்போது ஏற்படும் சில திருப்பங்கள் கல்யாணத் துக்கு முட்டுக்கட்டை போடுகின்றன. அவற்றை மீறி இருவரும் மணந்துகொண்டார்களா என்பதுதான் கதை.

ஐடி கலாச்சாரப் பின்னணியில் சுழலும் காதல் விஷயத்தைத் தொட்டிருக்கிறார், இயக்குநர் பாண்டிராஜ். இன்றைய காதலர்கள் எப்படிப் பேசுவார்கள்? எப்படி நடந்துகொள்வார்கள் என்பதையெல்லாம் நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார். ஆனால், படம் முழுவதும் அந்த ஒரே பாதையில் பயணம் செய்தால் கதைக்குள் எப்படி ஆர்வம் பிறக்கும்? ஒரு மான்டேஜ் பாடலில் வைக்க வேண்டிய காதல் உரையாடலை 30 நிமிடங்களுக்கு மேல் இழுக்க, ரசிகர்கள் நொந்துபோகிறார்கள்.

காதலர்களுக்குள் ஏற்படும் சின்னச் சின்ன ஈகோ சண்டைகள், அதை மீறிப் பெருகி ஓடும் அன்பு, புரிதல் இவற்றைப் படமாக்கிய விதமும், வசனங்களும், இந்த இடங்களில் சிம்பு நயன்தாரா நடிப்பும் நன்றாக உள்ளன. சிம்பு ஆண்ட்ரியா பிரிவுக்கான காரணம், சிம்பு நயன் இடையே ஏற்படும் மோதல் ஆகியவற்றுக்கான காரணங்கள் மிகவும் பலவீனமாக இருக்கின்றன. திருமணத்துக்கு ஏற்படும் தடையும் செயற்கையான திணிப்பாக இருக்கிறது. சுவாரஸ்யமான சம்பவங்களோ எதிர் பாராத திருப்பங்களோ இல்லை.

திகட்டத் திகட்டக் காதல் சொட்டும் வசனங்கள்தான் படத்தை நகர்த்திச் செல்கின்றன. வில்லனே இல்லாத இந்தப் படத்தில் ஒரே இடத்தில் நின்று நிதானமாகச் சுழலும் கதைப்போக்கு வில்லனாகச் செயல்படுகிறது. கிளைமாக்ஸில் மணிக் கட்டை அறுத்துக்கொள்ளும் காட்சியை இன்னும் எத்தனை படங்களில் பார்க்க வேண்டுமோ தெரியவில்லை.

சிம்பு ஆன்ட்ரியா பிரிவுக்கும் காரண மாக அப்பா சென்டிமென்ட்டை வைத்த விதமும் மகன் காதலிக்கிற விஷயம் அப்பா ஜெயப்பிரகாஷுக்குத் தெரிந்ததும், ‘இருப்பா ஒரு நிமிஷம்!’ என்று எதுவுமே பேசாமல் தன்னைத் தானே தேற்றிக்கொள்ளும் இடமும் பாண்டிராஜ் முத்திரைகள். தங்களுக்காக ஒருமுறை, தங்கள் பெற்றோர்களுக்காக இரண்டு முறை என்று ஒரே ஜோடி மூன்று முறை திருமணம் செய்துகொள்ளும் இடமும் காரணமும் கலகலப்பு.

சிம்பு நயன்தாரா தொடர்பான பர பரப்பைக் கூடியவரையிலும் பயன் படுத்திக்கொள்கிறார் இயக்குநர். அவர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களையும் வதந்தி களையும் ஆங்காங்கே தாராளமாகத் தூவுகிறார்.

சிம்பு அலட்டிக் கொள்ளாமல் நடித் திருக்கிறார். நயன்தாரா கோபப்படும் போதெல்லாம் சிம்பு வெளிப்படுத்தும் பாவனைகள் நன்றாக உள்ளன. ஆனால், படம் முழுவதும் இப்படி ஒரு சில பாவனைகளை வைத்துக்கொண்டு ஒப்பேற்றிவிடுகிறார்.

அழகாக வசனம் பேசி நுட்பமான முக பாவனைகளில் மிரட்டும் நயன் தாராவின் நடிப்பு ரசிக்கும்படி இருக் கிறது. உரையாடல்களின்போது மாறிக் கொண்டே இருக்கும் அவரது முகபாவங் கள் அருமை. ஆன்ட்ரியா கச்சிதமான நடிப்பு. நயன்தாரா, ஆன்ட்ரியா இருவரும் திரையில் முதல் முறையாகத் தோன்றும் போது ரசிகர்களின் ஆரவாரம் காதைக் கிழிக்கிறது. இருவரின் அழகும் நடிப்பும் படத்துக்கு வசீகரம் சேர்க்கின்றன.

சிறப்புத் தோற்றத்தில் சந்தானம் வரும் காட்சிகள் கலகலப்பாக உள்ளன.

பாலசுப்ரமணியெத்தின் ஒளிப்பதிவு படத்துக்கு அழகூட்டுகிறது. கே.எல்.பிரவீனின் எடிட்டிங் பரவாயில்லை. குறளரசனின் இசையில் ‘காத்தாக வந்த பொண்ணு’ பாடலும் அது பாட லாக்கப்பட்ட பின்னணியும் இளைஞர் களைக் கவர்கின்றன. பின்னணி இசை தேறுகிறது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சிம்பு நயன் ஜோடியை நீண்ட இடை வெளிக்குப் பிறகு திரையில் இணைத்திருக்கும் இயக்குநர், வெறும் வசனங்களால் மட்டுமே படத்தைக் கட்டி இழுத்துக்கொண்டு போக முயற்சி செய்திருக்கிறார். இது மட்டும் போதுமா?

http://tamil.thehindu.com/cinema/cinema-others/இது-நம்ம-ஆளு-திரை-விமர்சனம்/article8662861.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

YYHB9C_zpstkpvnncs.gif

படத்துக்கு ஒரே ஆறுதல் டார்லிங் நயன்தாரா அழகு ஏறிட்டே போகுது ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பு  நயனைவிட  செல்போன்தான் தான் ஒரு மணித்தியாலத்துக்கும் மேல் நடித்திருக்கு. போன் கம்பனிக்கும் ஒரு செக் தாராளமாக அனுப்பலாம்....! tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு  குறைய‌ இவ‌ர்க‌ளின் ஆட்ட‌ம் இன்னும் சிறிது கால‌ம் தான் கைபேசி மூல‌ம் வ‌ள‌ந்த‌ பிளைக‌ளிட‌ம் 1000 2000ரூபாய் எடுப‌டாது...................... நாட்டு ந‌ல‌ன் க‌ருதி யார் உண்மையா செய‌ல் ப‌டுகின‌மோ அவைக்கு தான் ஓட்டு..............................
    • அதுதான்…. இல்லை. அந்தச் சனத்துக்கு சாராயத்தை விற்று, அந்த மண்ணின் கனிம வளங்களை சுரண்டி… அரசியல்வாதிகள் தான்  முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.
    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................     இந்த‌ பெடிய‌னுக்கும் மேடையில் பேசிக்கு கொண்டு இருக்கும் போது திராவிட‌ குண்ட‌ர்க‌க் இந்த‌ பெடிய‌னுக்கு அடிக்க‌ மேடை ஏறின‌வை ஆனால் இந்த‌ பெடிய‌ன் நினைத்து இருந்தால் திராவிட‌ குண்ட‌ர்க‌ளை அடிச்சு வீழ்த்தி இருப்பார்..................வ‌ய‌தான‌ கிழ‌டுக‌ள் திமுக்காவில் அராஜ‌க‌ம் செய்துக‌ள்.................இப்ப‌டி ஒவ்வொரு த‌ரின் ஓட்டு உரிமைக்கு தேர்த‌ல் நேர‌ம் வேட்டு வைப்ப‌து ப‌ய‌த்தின் முத‌ல் கார‌ண‌ம்........................விடிய‌ல் ஆட்சி எப்ப‌ க‌வுழுதோ அப்ப‌ தான் த‌மிழ் நாட்டில் மீண்டும் அட‌க்குமுறை இல்லாம‌ ஊட‌க‌த்தில் இருந்து ஓட்டு உரிமையில் இருந்து எல்லாம் நேர்மையா ந‌ட‌க்கும்.......................................................................
    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.