Jump to content

பொலிஸ் காணி தொடர்பில் : புதிய கோணத்தில் பரிசீலிக்க தயார்.!


Recommended Posts

பொலிஸ் காணி தொடர்பில் : புதிய கோணத்தில் பரிசீலிக்க தயார்.!

 

url22.jpg

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதில் அரசியல்தீர்வை உள்ளடக்கவும் அவ்வாறு உள்ளடக்கப்படும் அரசியல் தீர்வில்   பொலிஸ் மற்றும் காணி  அதிகாரங்களைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் புதிய கோணத்தில் பரிசீலிப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.  

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக 6 உப குழுக்களும் ஒரு நிறைவேற்றுக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுக்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இடம்பெறுகின்றனர். இந்நிலையில்    அரசியல்தீர்வுத்திட்டத்தில் கூட்டமைப்பின் கருத்துக்களும் உள்வாங்கப்படும்.  தேவை ஏற்படின் கூட்டமைப்புடன் இருதரப்புப் பேச்சுக்களை நடத்தவும் அரசாங்கம் தயாராக இருக்கின்றது எனவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். 

புதிய அரசியலமைப்பு  மற்றும் அதில் உள்ளடக்கப்படும் அரசியல்தீர்வு திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில்  விபரிக்கையிலேயே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார். 

http://www.virakesari.lk/article/6937

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை புதிய கோணத்தில்(செய்தாலும்) சிந்தித்தாலும் தீர்வு பூச்சியம் தான்....

Link to comment
Share on other sites

1 hour ago, nunavilan said:

பெரியார்(நம்ம) வழியில் சிந்தித்தால் தீர்வு கிடைக்கலாம்.tw_yum:tw_yum:

 

தீர்வுதான் மாகாண சபை.  

அதை எப்போதோ இந்தியா எமக்குப் பெற்றுத் தந்து விட்டது.

என்ன செய்ய?  இருப்பதைக் கொண்டு சமாளிக்க வேண்டியதுதான்!

காணி, நிலம் வேண்டும், பராசக்தி காணி, நிலம் வேண்டும். 

அது ஓகே.

அதில் பத்துப் பன்னிரண்டு தென்னை மரமும் வேண்டுமென்றால்,  சிங்களவன் எங்கே போவான்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருந்ததை பறிச்சுப்போட்டு திருப்பித்தாறத்துக்கு எத்தினை கோணத்தில யோசிக்கினம் பாருங்கோ. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நவீனன் said:

பொலிஸ் மற்றும் காணி  அதிகாரங்களைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் புதிய கோணத்தில் பரிசீலிப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.  

சுப்பர்ரை கொல்லைக்கை  நிண்டு பரிசீலிச்சியளெண்டால் புது கோணம் மட்டுமில்லை தமிழர்ரை கோமணமும் தெரியும்.:cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.