Jump to content

வெர்டுன் போர் நூற்றாண்டு நினைவு நிகழ்வில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி தலைவர்கள்


Recommended Posts

வெர்டுன் போர் நூற்றாண்டு நினைவு நிகழ்வில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி தலைவர்கள்

 

ஜெர்மனி அரசத் தலைவி ஏங்கெலா மெர்கல் அம்மையார் பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஒலாந்துடன் வெர்டுன் போர் நூற்றாண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொள்வார்.

160221075824_verdun_640x360_reuters_nocr
 

முதல் உலகப்போரில் நீண்டகாலம் நடைபெற்ற தனியொரு மோதல்களில் வெர்டுன் போர் ஒன்றாகும்.

    160529071924_verdun_battle_640x360_getty

1916 ஆம் ஆண்டு பிரான்சின் வட கிழக்கு பகுதியில் ஒன்பது மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற போரில் ஏறக்குறைய மூன்று இலட்சம் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போர் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

160219120346_verdun_640x360_bbc_nocredit  

இந்த நூற்றாண்டு நினைவு நிகழ்வின்போது இருதரப்பு வீரர்களின் உடல்களும் புதைக்கப்பட்டுள்ள கல்லறைகளில் இரு நாட்டு தவைலர்களும் மலர்வளையங்கள் வைத்து மரியாதை செலுத்துவர்.

http://www.bbc.com/tamil/global/2016/05/160529_frangerm

Link to comment
Share on other sites

முதலாம் உலகப் போரின் மிக நீண்ட வெர்டுன் மோதல் நூற்றாண்டு நினைவு (படத் தொகுப்பு)

 

முதல் உலகப்போரில் நீண்டகாலம் நடைபெற்ற தனியொரு மோதலான வெர்டுன் போர் நடந்து 100 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் சடங்குகள் பிரான்சில் நடைபெற்றுள்ளதன் புகைப்பட தொகுப்பு

 

160529132800_verdun1_640x360_getty.jpg

 வெர்டுன் நகர அரங்கில் பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஒலாந்தும் ஜெர்மனி அரசத் தலைவி ஏங்கெலா மெர்கல் அம்மையாரும் ஒருவரையொருவர் வாழ்த்தி கொண்டனர்

160529132957_verdun2_640x360_getty.jpg

 

 இரு நாட்டு தலைவர்களும் நம்பிக்கை, நல்லிணக்கம், சகோதரத்துவம் பற்றி உரையாற்றினர்

160529133207_verdun3_640x360_getty.jpg  கடந்த காலத்தை பற்றி அறிந்திருப்போர் மட்டுமே சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும் - ஏங்கெலா மெர்கல்

160529133350_verdun4_640x360_getty.jpg

 இறந்த பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி படை வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி

 

160529133543_verdun5_640x360_getty.jpg

 மௌன அஞ்சலி

160529133836_verdun6_640x360_getty.jpg

 

 பிரான்ஸ் ஜெர்மனி உறவில் அமைதியான புதிய காலத்திற்கு இந்த நூற்றாண்டு நினைவு நிகழ்வு வழிவகுத்துள்ளது.

160529134021_verdun7_640x360_getty.jpg

உலகப்போரில் நீண்டகாலம் நடைபெற்ற தனியொரு மோதல் வெர்டுன் போர்

 

160529134217_verdun8_640x360_getty.jpg

 பிரான்ஸ் ஜெர்மனி கூட்டு படையினர்

 

160529134412_verdun9_640x360_getty.jpg

 முதல் உலகப் போரின் போதான ராணுவ உடையில் தோன்றியவர்

 

  160529134631_verdun_640x360_getty.jpg

 

வெர்டுன் நினைவு சடங்கில் குழந்தைகளோடு வெள்ளை பலூன் பறக்கவிடும் நிகழ்வில் இரு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்

http://www.bbc.com/tamil/global/2016/05/160529_verdun_photo

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் மைத்திரி அண்னையை கூட்டிக்கொண்டு போகவில்லை.....அவரும் உதைப் பார்த்திருக்கலாம் ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருமுறை அழிவுகள் வரக்கூடாது என்ற நிலையில் இருதரப்பினரும் நினைவு கூருகின்றார்கள். போர் அவலங்களை விவரணப்படங்களாக சிறுவர்களுக்கு காண்பிக்கின்றார்கள். அறிவுறுத்துகின்றார்கள்.
ஆனால் சிங்கள தேசத்தில் மாறாக ஒரு இன அழிப்பை / இன அடக்கு முறையை போர் வெற்றியாக கொண்டாடுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணா,

 

சகிப்புத் தன்மையை வளர்த்து வருவோரை வரவேற்கும் யேர்மனியையும், சத்தியாக்கிரகத்தின் மீதே வன்முறையை ஏவிவிட்டு, காவியுடையோடு மற்ற மதங்களை அழிப்போரை, மாற்றான் நிலத்திலே புத்தரை நட்டு ஆக்கிரமிப்போரை இந்த  கொலைகாரக் கும்பலை இவர்களோடு ஒப்பிட முடியுமா? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.