Jump to content

"சேமிப்பு" எமக்குத் தெரிந்த சேமிப்பு வழி முறைகள்


Recommended Posts

இங்கு புலம் பெயர் நாடுகளில் நாம் பல்வேறு நாட்டவர்களுடன் வாழ்கின்றோம். மற்றய நாட்டவர்களுடன் ஒப்பிடும் போது ஈழத்தமிழர்கள் நாம் சற்று செலவாளிகள் என்பது எனது அனுபவம். நாம் சற்றுத் திட்டமிட்டால் பல வகைகளில் பணத்தை மிச்சப் படுத்த முடியும் என்பது எனது கருத்து (அனுபவம்), 
எமக்கு சில சேமிப்பு வழிமுறைகள் தெரிந்திருக்கும் அவற்றில் சில நாம் வாழும் நாடுகளுக்கு மட்டுமே உரியவை, சில எல்லோருக்கும் பொதுவானவை

இவற்றை நாம் எம்மிடையே பகிர்ந்து கொள்வோம் . எமக்கு தெரிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது கூட ஒருவகை தானம் தானே.

இங்கு சுவிஸ் பத்திரிகைகளில் பல டிப்ஸ் கள் வருகின்றன அவை பெரும்பாலும் சக்தி சேமிப்பு தொடர்பாக இருக்கும். அவை  மிகவும் பயணுள்ளதாக இருக்கும் முடிந்தவரை நானும் அவற்றை இங்கு இணைக்க முயற்சிக்கிறேன்.

(இத்திரியை வாசிக்கும் யாழ் கள உறவுகள் ஒவ்வொருவரும் ஆகக்குறைந்தது ஒரு டிப்ஸ் ஆவது பதிய வேண்டும் என்பது கண்டிப்பாண உத்தரவு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று "மதர்ஸ் டே" யில் நல்ல விடயத்தைத் தொடங்கி இருக்கிறீங்கள் அதற்கு முதல் பாராட்டுக்கள்....!

--- இந்த எலக்ட்ரிக் , எலட்ரோனிக் பொருட்களை கண்டவுடன் வாங்கிற வேலையை நிறுத்த வேண்டும்.

--- மாதம் இருமுறை திட்டமிட்டு மளிகைப் பொருட்கள் பூரா வாங்கிவிட வேண்டும். ஒரு கிலோ பாண் வாங்க பத்து  கிலோமீட்டர் கார் எடுத்துக் கொண்டு ஓடக் கூடாது. அதைவிட அன்று பச்சைத் தண்ணியைக் குடிச்சுட்டு படுக்கலாம். (நல்ல சீவன் பத்துப் பண்ணிரண்டு நாளைக்கு கிடக்கும்).

--- ஒரு கலியாண வீட்டுக்கு உடுக்க புதுச் சேலை வாங்க முதல் ஒருமுறை அலுமாரியைத் திறந்து பார்த்திட்டு  முடிவெடுப்பது உசிதம். அப்படியும் வாங்கத்தான் வேண்டுமென்றால் முதலில் பிளவ்ஸ் துணியை எடுத்துப் போட்டு அதற்கு மாட்சாக சேலை எடுப்பது கால விரயத்தைப் போக்கும்.

இன்னும் ஏராளம் இருக்கு. மற்றவர்களும் கொஞ்சம் புலம்பி ஆறுதலடையட்டும் என மூக்கைச் சிந்தி கண்ணைத் துடைத்துக் கொண்டு ஒதுங்குகின்றேன்...!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களுக்கு:

யுனிக்கு காசு கட்டும் போது (அரசாங்கக் கடனில் படிப்பவர்களுக்குப் பொருந்தாது..) தவணை முறையில் கட்டுவதை தவிருங்கள். நிறைய பணம் மீதமாகும்.

அதேபோல் வாகன இன்ஸூரன்ஸ்.. கட்டும் போது மாத அடிப்படையில் கட்டுவது நட்டம். 

ஏன் வாகனம் வாங்கும் போது கடனடிப்படையில் வாங்குவது நட்டம். நம்ம வசதிக்கேற்ப தேவைக்கு ஏற்ப.. ஓரு வாகனத்தை.. முழுத்தொகையையும் கொடுத்து வாங்கினால் நிறையப் பணம் மீதமாகும்.

சும்மா பந்தாவுக்கு ரெஸ்டோரன்ஸ் போய் கண்டதையும் ஓடர் கொடுக்காமல்.. நமக்கு சாப்பிடப் பிரியாமனதில்.. மீடியம் அல்லது சிமால் ஓடர் கொடுத்து வாங்கிச் சாப்பிடுங்கள். உடம்புக்கும் நல்லது காசும் செலவு குறைவாக இருக்கும்.

வீட்டில் சமைச்சுச் சாப்பிடுவது நிறையக் காசை மீதப்படுத்தும். ஆசைக்கு மாதத்தில் 4 தரம் வெளில வாங்கிச் சாப்பிட்டாலும்.. மிச்சம் வீட்டில் சமைக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். மாதம் 20 தொடக்கம் 30 பவுனுக்குள் சீவியம் நடத்தலாம். 

சும்மா வெட்டிக்கு பெரிய ரூமை யுனில வாடகைக்கு எடுத்து தூசு படிய விடுற நேரம்.. நமக்கு அளவான சிறிய ரூமை கொஞ்ச விலைக்கு எடுத்து செளகரியமாக வாழ்வது சிறப்பு.

பப் கிளப் பார்ட்டிக்குப் போக.. வாரத்துக்கு ஒரு உடுப்பு வாங்குவதிலும்.. வாங்கின உடுப்பை வாரத்துக்கு ஒன்றாகப் பாவிக்கும் வகையில் தயார் பண்ணி வைத்துக் கொண்டால்.. பணமும் மீதமாகும்.. கெளரவமாகவும் இருக்கும். பழையதை களையனுன்னு தோன்றப்போ.. பழைய உடுப்புகளை கிலோவுக்கு வாங்குபவர்களிடம் பத்திரமாகக் கொடுத்துவிட்டு.. புதிசை வாங்கிக்குங்க. அடிக்கடி புதிசை வாங்குவது நல்லதல்ல. காரணம் அடிக்கடி ஸ்ரைல்.. அல்லது டிசைன் மாறாது. 

போன்.. ராப்லட்.. கம்பியூட்டர் வாங்கும் போது விலைக்கூடியதை வாங்கி.. இரண்டு வருடத்தின் பின் அது மேசையில் கிடந்த் இழுபட.. இன்னொரு புதிது வாங்க வேண்டி ஆசை தூண்டும். அதனால்.. ஒருபோதும்... ரெம்ப சீப்பான போனும் வாஙக் கூடாது. ரெம்ப விலையானதும் வாங்கக் கூடாது. வாங்கும் போது நடுத்தர விலையில் குறைந்தது.. 2 - 3 ஆண்டுகளுக்குப் பாவிக்கக் கூடிய வகையில் வாங்கனும். அதன் மூலம் செலவு செய்த பணத்தை மீதப்படுத்த முடியாதுன்னு பார்க்கனும்.

கிரடிட் கார்ட். கிரடிட் ஸ்கோர் உயரனுன்னு சொல்லிக்கிட்டு கூடிய வட்டி வீதத்தில் உள்ள காட்டுகளையும் வாங்கி வைச்சு பாவிக்கிறாய்ங்க. குறைந்த வட்டி வீதத்தில் உள்ளதை பாவிப்பதே நல்லது. மேலும் தவணை மறவாது கட்டுத்தொகை கட்டனுன்னா.. டிரக் டாபிட் செய்து விடுங்கள். அல்லது உங்கள் கிரடிட் கார்ட்டில் உங்களிடம் பணமுள்ள போது ஒரு 50 - 100 பவுன்சை மேலதிகமாகப் போட்டு வையுங்கள். அவசரத்திற்கு அவை உதவும். வட்டி கட்டி காசை இழக்கத் தேவையில்லை.

கொலிடே போக விருப்பம் என்றால்.. பக்கேஜ் மலிவாங்க உள்ள போது புக் செய்து விடுங்கள். ஒன்றுக்கு இரண்டு முறை தரப்படும் வசதிகள் ஹொட்டல் இடம்.. வசதிகளை சரி பார்த்துக் கொண்டு புக் செய்யுங்கள். விமான ரிக்கெட் பதியும் போது.. லக்கேஜ் கையாளப்படும் பணம்.. மற்றும் லக்கேஜ் அளவில் கண்ணும் கருத்துமாக இருங்கள். மேலும்.. சில மலிவு விலை விமானங்கள் சொன்ன நேரத்துக்கு 15.. 20 நிமிசம் முன் வரவில்லை என்றால்.. போடிங் கேட்டை மூடிவிடுவார்கள். இது அவர்களின் தந்திரம். பின் நீங்கள் பெருந்தொகை கட்டி விமானம் பிடிக்க வேண்டி வரும். அதனால்... மலிவு விமான ரிக்கெட் வாங்கும் போது.. லக்கேஜ் ரொப் நேரம்.. போடிங் கேட் மூடும் நேரம் எல்லாத்தையும் கவனத்தில் எடுத்து உங்கள் பயணத்தை பயண நேரத்தை திட்டமிடுங்கள். மேலும் சரியான விமான நிலையத்தையும் பிக் பண்ணுங்கள். சிலவேளை ரிக்கெட் மலிவாக இருக்கும் ஆனால் விமான நிலையத்தில் இருந்து போக வேண்டிய இடத்துக்கு போக ரக்ஸிக்கு.. அல்லது கோச்சுக்கு விமான ரிக்கெட்டை விட 4 அல்லது 5 மடங்கு அதிகம் பணம் செலுத்த வேண்டி வரலாம். இதெல்லாம் அவங்க ஆளுக்காள் பேசி செய்து கொள்லுற விடயம். நாங்க.. ஏமாந்திரக் கூடாது.

அடிக்கடி செல்லும் இடங்களுக்கு குறிப்பாக சுப்பர் மார்கெட்.. போன் பில்.. சந்தா அட்டையில் சேமிக்கும் பழக்கம் வைச்சுக் கொள்ளுங்கள். பொயின்ஸ் காட் ஆக இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்தால்.. நிறைய வரும். 

எப்பவும் லோயலாக இருங்கள். அடிக்கடி போன் கம்பனி.. பாங்.. இன்ஸூரன்ஸ் கம்பனி.. வாகனக் கம்பனி.. மாத்துவது நல்லதல்ல. லோயலாக இருந்தால்.. சில கழிவுகள் கிடைக்கும். தமிழ் போன் கம்பனிகளில்.. கடைகளில்.. வாடிக்கையாளர்களாக இருப்பது வேஸ்டு. 

(உ+ம்) ஒரே போன் கம்பனியில் தொடர்ந்து 10 வருடம் இருப்பதால்... மாதம் சுமார் 20 பவுன்ஸ் கழிவுடன் பக்கேஷ் தருகிறார்கள்.

வங்கியில் CASH ISA  வில் பணத்தை சேமிப்பிடுங்கள். மாதம் அல்லது ஆண்டுக்கு சிறிய வட்டியவாவது வந்து சேரும். 

இதில பலது நாங்க கடைப்பிடிக்கும் வழிமுறைகளும் ஆகும். மாணவர்களுக்கு நல்லது. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நந்தன் said:

எதுக்கு சேமிக்கணும்

மகளுக்கு சீதனத்துக்கு... மகனுக்கு வீடு வாங்கிக் கொடுக்க... அப்பா, அம்மா தல யாத்திரை போக செலவுக்கு.. அப்புறம் இவ்வளவு காசு பாங்கில இருக்கு என்று பீலா விட்டு, கடன் கேட்டு நண்பர் வர, அட வீடு ஒன்று வாங்கிறன்... உன்னிடம் தான் ஒரு இரண்டாயிரம் மாறுவம் எண்டு வெள்ளன தான் யோசித்தனான்.... என்று இறுக்க....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

மகளுக்கு சீதனத்துக்கு... மகனுக்கு வீடு வாங்கிக் கொடுக்க... அப்பா, அம்மா தல யாத்திரை போக செலவுக்கு.. அப்புறம் இவ்வளவு காசு பாங்கில இருக்கு என்று பீலா விட்டு, கடன் கேட்டு நண்பர் வர, அட வீடு ஒன்று வாங்கிறன்... உன்னிடம் தான் ஒரு இரண்டாயிரம் மாறுவம் எண்டு வெள்ளன தான் யோசித்தனான்.... என்று இறுக்க....

சுருக்கமா சொன்னா போலி வாழ்க்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, நந்தன் said:

எதுக்கு சேமிக்கணும்

இல்லாவிட்டால் வயதான காலத்தில் இன்னோருவரில் தங்கி வாழ வேண்டி எற்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடுப்புக்களை வாங்கும் போது... குளிர்காலம்   முடியும் நேரத்தில், நல்ல தரமான  குளிர்கால உடைகளை பாதி விலையில் வாங்கலாம்.... அடுத்த வின்ரருக்கு பயன்படும். அதே போல.... கோடைகால உடைகளை, அது முடியும் தருணம் வாங்கலாம்.

வாகனத்துக்கு எரிபொருள் நிரப்பும் போது... செவ்வாய் மாலை, புதன் கிழமை நாட்களில் எரிபொருள் விலை மற்றைய நாட்களை விட குறைந்திருக்கும். 

கடையில் உணவுப்  பொருட்கள்  வாங்கச் செல்லும் போது... வீட்டில் என்ன பொருட்கள்  இல்லை என்பதை அறிந்து, அதனை ஒரு துண்டில் எழுதிக் கொண்டு போய் அதன்படி வாங்குங்கள். சகட்டு மேனிக்கு... வாங்கப் போவதால், ஏற்கெனவே... வீட்டில் உள்ள உணவுப் பொருட்களையும் வாங்கி  வீணாக்காதீர்கள். இதற்கு அவ்வப் போது.... முடியும் பொருட்களை, ஒரு துண்டில் உடனேயே... எழுதி வைத்து விட்டால், மறந்து போக மாட்டீர்கள்.

வார விடு முறையில்.... வீட்டிற்கு வரும் விளம்பரங்களை வடிவாக பார்த்து, எந்தக் கடையில் என்ன பொருள் மலிவு என்பதை குறித்து வைத்துக் கொண்டு... அந்தக் கடையில், அந்தப் பொருட்களை வாங்குங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, colomban said:

இல்லாவிட்டால் வயதான காலத்தில் இன்னோருவரில் தங்கி வாழ வேண்டி எற்படும்.

நீங்கள் சேமித்து வைத்து விட்டால், உங்கள் பிள்ளைகள் தாங்கோ தாங்கெண்டு தாங்குவார்களா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நந்தன் said:

நீங்கள் சேமித்து வைத்து விட்டால், உங்கள் பிள்ளைகள் தாங்கோ தாங்கெண்டு தாங்குவார்களா

பிள்ளைகள் அந்தியேட்டி செய்வார்களோ தெரியாது.. அங்காளி, திவசம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

பிள்ளைகள் அந்தியேட்டி செய்வார்களோ தெரியாது..

அட எரிப்பாங்களோ , புதைப்பாங்களோ  ..அதுவே தெரியல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நந்தன் said:

அட எரிப்பாங்களோ , புதைப்பாங்களோ  ..அதுவே தெரியல

புதைக்கிறது செலவு கூட... ஆகவே எரிப்புதான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

புதைக்கிறது செலவு கூட... ஆகவே எரிப்புதான்...

ஆகவே எதுக்கு சேமிக்கணும், வாழ்க்கையை வாழுங்கள் சார்.கவுன்சிலிட்ட முற்கூட்டியே சொன்னால் எரிச்சிட்டு போறாங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நந்தன் said:

ஆகவே எதுக்கு சேமிக்கணும், வாழ்க்கையை வாழுங்கள் சார்.கவுன்சிலிட்ட முற்கூட்டியே சொன்னால் எரிச்சிட்டு போறாங்க

இல்லை, கவுன்சிலிட்டை, நீங்களே முதலே சொல்ல ஏலாது. பிள்ளைகள் தான் கவுன்சிலிட்டை சொல்ல வேண்டும்... உவர் அப்பர் நந்தன் ஒரு பொருக்கும் வைக்காமல் போட்டார். எங்களிட்ட காசில்லை. நீங்களா பார்த்து ஏதும் செய்யுங்க....

அந்திம செலவுக்கு, ஒரு இன்சூரன்ஸ் எடுத்து மாதம் மாதம் கட்டினால், குடும்பத்துக்கு செலவு இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொல்ல வருகின்றேன் என்றால், சேமிப்பு இருந்தால்தான் உழைக்கேலாத காலத்தில் வாழலாம் என.

சேமித்து வைப்பதால் பிள்ளைய்கள் கவனிப்பார்கள் என நான் நம்பவில்லை.

மேலும் இந்த  social benefit போன்றன மேலைத்தேய நாடுகளில் வாழ்பவர்களுக்கு சரி. இலங்கையில் இப்படி எதுவுல் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, colomban said:

என்ன சொல்ல வருகின்றேன் என்றால், சேமிப்பு இருந்தால்தான் உழைக்கேலாத காலத்தில் வாழலாம் என.

சேமித்து வைப்பதால் பிள்ளைய்கள் கவனிப்பார்கள் என நான் நம்பவில்லை.

மேலும் இந்த  social benefit போன்றன மேலைத்தேய நாடுகளில் வாழ்பவர்களுக்கு சரி. இலங்கையில் இப்படி எதுவுல் இல்லை.

அதத்தான் நந்தனுக்கு சொல்ல வந்தேன்.

சேமிப்பு என்பது வாயைக் கட்டி, வகித்தைக் கட்டி, கருமித்தனமாக செய்வதல்ல.

அதுவே உழைப்பின் முதல் செலவாக இருக்க வேண்டும்.

இலங்கையில், சமூக அமைப்பில் பிள்ளைகளில் தங்கி இருக்க முடியும் - வயோதிபத்தில்.

இங்கே அது முடியாது. ஆகவே சேமிப்பு முக்கியம். என்றாவது கை கொடுக்கும். அதே வேளை சேமிப்பு என்பது பணத்தினை வங்கியில் சேமிப்பது இல்லை. உங்கள் வீட்டு கடனை முன்னதாக கட்டி முடிப்பதும் சேமிப்பு தான். கிரெடிட் காட்டினை திட்டமிட்டு கட்டி முடிப்பது ஒரு சேமிப்பு தான்.

மேற்கே, பெற்றோர் பிள்ளைகளை நம்புவது இல்லை. அதனால், வாழும் காலத்தில் தாம் சேமித்ததை கொடுபதில்லை....

இறந்த பின்னர் கிடைக்கும் அதனையே குறிவைத்து inheritance tax அடிக்கிறார்கள்....

ஆகவே பெத்த கடமைக்கு பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியினையும் வழங்கவும், நம்பி இருக்கும் துணைக்காகவும், இரண்டு பேரது வயோதிபதுக்கும் சேமிப்போம்.

Link to comment
Share on other sites

உங்கள் அணைவரதும் கருத்துகளுக்கு மிக்க நன்றி, பயணுள்ள டிப்ஸ் களைத் தந்த சுவி, நெடுக்ஸ், தமிழ்சிறி ஆகியோருக்கு நன்றிகள் பல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஸ்டப்பட்டு உழைச்சு அனுபவிக்க விரும்பாதவர்கள் தான் சேமித்து வைக்கிறது. இங்கு வருத்தம் வந்தால் போய் ஆஸ்பத்திரியில் படுக்கிறது. செத்தால் எடுத்துப் போட கவுன்சில் இருக்கிறது. பிறகு யாருக்கு சேர்த்து வைக்கிறது. இருக்கும் போதே அனுபவித்துப் போட்டு சாக வேண்டியது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலர் இன்னமும் பழைய தமிழ் சிந்தனையில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
சேபிப்பு 
சேர்த்து வைப்பு 
இரண்டும் ஒரே அர்த்தம் உடையதனாலும் வேறு வேறு எண்ணம் கொண்டவை.

சேமிப்பு என்பதை  உழைப்பு என்று பொருள் கொள்ளலாம் 
என்று உழைத்ததை நீங்கள் சேமித்தால் நாளைக்கு உழைக்க தேவை இல்லை.

தவிர முதலீடு என்பது உங்கள் சேமிப்பை விருத்தி பண்ணுவது 
அதன் இன்னொரு பொருள் உங்கள் உழைப்பை உண்டுபண்ணுவது =வருமானம் 

தவிர உலகில் உழைப்பின்றி உடையின்றி உணவின்றி பலர் வாடுகிறார்கள்.
நாம் எல்லோரும் மூன்றாம் தர உலகில் இருந்து இங்கு வந்தவர்கள்.
மூன்றாம் உலகில் இன்னமும் பசி பஞ்சம் இருக்கத்தான் செய்கிறது 
எமக்கு கிடைத்த இந்த அரிய அதிர்ஸடத்தை வீணடிக்காது .
எமது உழைப்பின் ஒரு பகுதியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். 
இவை எல்லாம் சேமிப்பால் மட்டுமே சாத்தியம்.

மற்றது உதாரிதனம் என்பது ....
இது ஒரு மனிதனை பாழ்அடிக்கும் எண்ணம் கொண்டது 
அதில் இருந்து தப்பி கொள்ள எம்மை பாதுக்காக்க சேமிப்பு ஒன்றே ஒரே வழி.

உங்கள் உழைப்பில் 3இல் 1பகுதியை நீங்கள் முதலீடு செய்து வந்தால் 
உங்கள் வாழ்வின் 3இல் 1 பகுதி வாழ்நாளில் நீங்கள் இன்னொருவருக்கு 
தொழிலாளியாக இருக்க வேண்டிய தேவை இல்லை.
நீங்களே உங்களுக்கு முதலாளியாக வாழாலாம்! 

பிள்ளைகளுக்கு நீங்கள் கொடுக்க கூடிய அதிஉயர் செல்வம் 
"கல்வி"தான் அதை போதும் போதும் என்று நீங்கள் கொடுத்து விட்டால் 
ஒன்றுமில்லாது வந்த நாமே இப்படி இருக்கும்போது .....
அவர்கள் வாழ்வு எப்படி இருக்கும் ?
தவிர நல்ல கல்வி உடைய பிள்ளளைகள் உங்களிடம் இருந்து ஒரு பைசா கூட 
வாங்க மாட்டார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Maruthankerny said:

------

பிள்ளைகளுக்கு நீங்கள் கொடுக்க கூடிய அதிஉயர் செல்வம் 
"கல்வி"தான் அதை போதும் போதும் என்று நீங்கள் கொடுத்து விட்டால் 
ஒன்றுமில்லாது வந்த நாமே இப்படி இருக்கும்போது .....
அவர்கள் வாழ்வு எப்படி இருக்கும் ?
தவிர நல்ல கல்வி உடைய பிள்ளளைகள் உங்களிடம் இருந்து ஒரு பைசா கூட 
வாங்க மாட்டார்கள். 

மருதங்கேணி......  அண்ணே.......
பூவை..... 
மலர் என்றும்,
புட்பம் என்றும்,
புஸ்பம்  என்றும், 
புஷ்பம் என்றும்.......
அல்லது நீங்கள் சொல்வது மாதிரியும்... சொல்லலாம்.

அங்கை தான்.... "கலோரி"  சேமிப்பு இருக்குது.
"கலோரி .... கிலோ என்ன விலை விக்குது" என்ற நிலையில் தான்... நாம் வாழுகின்ற சமுதாயம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களைக் கேட்டால்.. யாரிடமும் கடனாளியாக வாழாமல்... நிம்மதியா வாழனுன்னா.. ஒவ்வொரு வருவாயிலும் குறிப்பிட்ட சதவீதத்தை சேமிக்கனுன்னு தான் சொல்லுவம். அது எங்களுக்கான சேமிப்பே அன்றி அடுத்தவைக்காக அல்ல. அப்பா அம்மா சகோதரங்களுக்கு நல்ல நண்பர்களுக்கு கொடுக்கலாம். மிகவும் அவதிப்படும் மக்களுக்கும் கொடுக்கலாம்.. அவ்வளவும் தான். tw_blush:

பொண்டாடி மாருக்கு கொடுத்துப் பழக்கவே கூடாது. சுயமா உழைக்க விடனும். அவைட தேவையை அவையே பூர்த்தி செய்யச் சொல்லனும். அதுவும் சேமிப்புக்கு மிக முக்கியம். (உப்படியான கடும் நிபந்தனைகள் தமிழ் பொம்பிளைகளுக்கு கண்ணிலும் காட்டக் கூடாது.. தமிழ் பொம்பிளையள் கூர்ப்படைய நிறையக் கிடக்குது.)  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளி நாடுகளில் 20 30 வருடங்கள் வாழும் நம்மவர்களில்  இன்றும் பதிவு  இல்லாமல் வேலை செய்துகொண்டு அகதிக் காசில் வாழ்பவர்கள் நிறைய இருக்கின்றனர்.
அவர்களிடம் அதிகமான அளவில் பணம் இருந்தும் அதைச் சட்ட பூர்வமாகச் சேமிக்க முடியாமல் அண்ணன் , தம்பி மாமன் மச்சானிடம் அவர்களை நம்பிக்  கொடுத்துவிட்டு மீளப் பெறமுடியாமல் அல்லல்ப்படுபவர்களும் உள்ளனர்.
பலர் சீட்டுக் கட்டி ஏமாற்றப்பட்டும் உள்ளனர்.
பிள்ளைகளின் கல்வியில் முதலிட்டு விட்டுப் பின்னர் அவர்கள் திருப்பித் தராவிட்டால் வழக்குப் போடும் நிலையும் வேண்டாம்.
எதுவும்   எங்கள் பிடியில் இருந்தால் தான் மற்றவர்கள் எங்களை ஏமாற்றுவதைத் தடுக்கலாம்.
காணி நிலம் வீடு போன்றவற்றில் முதலிட்டால் தேவைப்படும் போது அவற்றைக்  காசாக்கலாம். வாடகை கட்டிக் காசை வீணாக்குவதை விட அந்த வாடகையையே முதலாக்கலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, nedukkalapoovan said:

எங்களைக் கேட்டால்.. யாரிடமும் கடனாளியாக வாழாமல்... நிம்மதியா வாழனுன்னா.. ஒவ்வொரு வருவாயிலும் குறிப்பிட்ட சதவீதத்தை சேமிக்கனுன்னு தான் சொல்லுவம். அது எங்களுக்கான சேமிப்பே அன்றி அடுத்தவைக்காக அல்ல. அப்பா அம்மா சகோதரங்களுக்கு நல்ல நண்பர்களுக்கு கொடுக்கலாம். மிகவும் அவதிப்படும் மக்களுக்கும் கொடுக்கலாம்.. அவ்வளவும் தான். tw_blush:

பொண்டாடி மாருக்கு கொடுத்துப் பழக்கவே கூடாது. சுயமா உழைக்க விடனும். அவைட தேவையை அவையே பூர்த்தி செய்யச் சொல்லனும். அதுவும் சேமிப்புக்கு மிக முக்கியம். (உப்படியான கடும் நிபந்தனைகள் தமிழ் பொம்பிளைகளுக்கு கண்ணிலும் காட்டக் கூடாது.. தமிழ் பொம்பிளையள் கூர்ப்படைய நிறையக் கிடக்குது.)  tw_blush:

நெடுக்ஸ்......
பெண்டாட்டிமார்,  தீண்டத் தகாவதர்கள் அல்ல,
அவர்கள்... உங்கள்..... தாயாகவும்,  சகொதரியாவாகவும், மகளாகாவும் இருக்கலாம்.
அது... பார்க்கும், கண்களிலே தான் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

கஸ்டப்பட்டு உழைச்சு அனுபவிக்க விரும்பாதவர்கள் தான் சேமித்து வைக்கிறது. இங்கு வருத்தம் வந்தால் போய் ஆஸ்பத்திரியில் படுக்கிறது. செத்தால் எடுத்துப் போட கவுன்சில் இருக்கிறது. பிறகு யாருக்கு சேர்த்து வைக்கிறது. இருக்கும் போதே அனுபவித்துப் போட்டு சாக வேண்டியது தான்.

வருத்தம் வந்து கட்டிலோட ஒரு பத்து வரியம் கிடந்தால்.... யார் பார்க்கிறதாம்?

செத்தால் எடுத்துப் போட கவுன்சில் வருமா?

இதைத்தான் நந்தனும் சொன்னார்.

எனக்கு தெரிந்து கவுன்சில் அவ்வாறு செய்வது, தமது பராமரிப்பில் இருந்து இறந்து போன அனாதைப் பிணங்களைத் தான்.

கவுன்சில் (டவுன்) தூக்கும் என்று கூலா செத்துத் துளைத்து, பிள்ளைகளை, சொந்தக் காரர்களிடம் கையேந்த வைக்காதீர்கள்...

பொருள் இல்லாருக்கு இவ்வுலகு இல்லை.
அருள் இல்லாருக்கு அவ்வுலகு இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

பொருள் இல்லாருக்கு இவ்வுலகு இல்லை.
அருள் இல்லாருக்கு அவ்வுலகு இல்லை. 

செத்தால் எடுத்துப் போட கவுன்சில் வருமா?

இதைத்தான் நந்தனும் சொன்னார்.

எனக்கு தெரிந்து கவுன்சில் அவ்வாறு செய்வது, தமது பராமரிப்பில் இருந்து இறந்து போன அனாதைப் பிணங்களைத் தான்.

கவுன்சில் (டவுன்) தூக்கும் என்று கூலா செத்துத் துளைத்து, பிள்ளைகளை, சொந்தக் காரர்களிடம் கையேந்த வைக்காதீர்கள்...

கவுன்சில்..... கண்ணீர், விடாது.
எமது  அந்த, அந்திம  இறுதி யாத்திரையின் போது.... 
எம்  உறவுகளின், கண் கலங்கிளால்... ... 
வாழ்க்கையில், வெற்றி பெற்று விட்டேன்,என்பது.... அர்த்தம். 
இதற்காக நான் வள்ளுவன், விவேகானந்தன்  வாழ்க்கை வாழுபவனும் அல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
    • "பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது.  "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம்   [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்று கொள்ளலாம். ஆகவே பெற்றோர் என்ற சொல்லே பிள்ளை இல்லாமல் உருவாகாது.  பிள்ளை = குழந்தை, குட்டி , குஞ்சு  இதில் கவனியுங்கள் பெற்றோர் என்ற சொல் தொடர்பு படுத்தப் படவில்லை [2] மேலும் எப்படி பிள்ளைகளை ஒழுங்காக பெற்றோர்கள் உருவாக்கினார்களோ, அப்படியே, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின், கெட்டுப்போன / தீய வழியில் சென்ற பெற்றோர்களை , பிள்ளைகள் நல்லவராக உருவாக்கலாம். இதற்கு உதாரணமாக இரணியன், அவன் மகன் பிரகலாதன் கதையை கூறலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • "பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல... மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல." வேட்டி எப்பொழுதும் இடுப்பில் தான் கட்டலாம். வேண்டும் என்றால் உயர்த்தி கட்டலாம், மடித்து கட்டலாம் அல்லது கால் சட்டை போல் கட்டலாம் [கோவணம் /nஅரைக்கச்சை மாதிரி ]. எப்படியாயினும் அது இடுப்பின் கீழ் பகுதியை மறைத்து தான் கட்டப்படுகிறது. ஆகவே பொதுவாக மானம் காக்க என அதை கூறலாம். இடுப்பில் கட்டும் துணியான வேட்டியில் இருந்தது தான் "புடைவை, புடவை, அல்லது சேலை" வளர்ச்சி பெற்றது என சரித்திரம் கூறுகிறது . அதாவது பண்டைய காலத்தில் பெண்களும் இடுப்பை சுற்றி துண்டு ஒன்றை தான் கட்டினார்கள். தமது மானத்தை காக்க. உதாரணமாக நக்கீரர், புறநானுறு 189 இல்  "உண்பது நாழி, உடுப்பவையிரண்டே"  என கூறுகிறார். சால்வையை அல்லது மேல் துண்டை எடுத்து கொண்டால், அதை இடுப்பில் அணியும் வார் மாதிரி இடுப்பில் கட்டலாம், தோளில் போடலாம் அல்லது தலையில் தலைப்பாவாக [கிரீடம் மாதிரி] போடலாம். ஆகவே மேல் துண்டு பல விதமான பாவனையில் உள்ளது என்பது தெளிவாகிறது. இந்த பாவனை தான் பதவியைக்  காட்டுகிறது. ஒருவன் உயர்ந்த பதவியில் இருப்பவரிடம் போகும் போது அல்லது அப்படி பட்டவரை சந்திக்கும் போது மேல் துண்டை இடுப்பில் கட்டும் பழக்கம் இருந்துள்ளது. இப்பவும் இருக்கிறது. உதாரணமாக ஆலயத்திற்குள் போகும் போது நம்மவர்கள் இடுப்பில் சால்வை கட்டுவது அதன் தொடர்ச்சியே. அரசனை ஆண்டவனாய் கருதியவர்கள் நம் முன்னோர்கள். "நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;அதனால், யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. -புறநானுறு 186"  அரண்மனைக்குள் போகும் போது இடுப்பில் கட்டும் பழக்கம் அன்று தோன்றியது. அது உயர்ந்த பதவியில் இருப்பவரை,அரசனை மதிப்பதாக கருதப்பட்டது. குடும்ப விழாக்களில் எல்லோரும் தோளில் மேல் துண்டை போட்டபடி சாதாரணமாக பழகுவார்கள். காரணம் எல்லோரும் குடும்பத்திற்குள் சம பதவி என்பதே அதன் பொருள். என்றாலும் ஒரு வைபவத்தில் ஒருவர் தேங்காய் உடைத்து ஆரம்பிக்கும் போது, அந்த இடத்தில் அவர் ஒரு கௌரவ பதவி ஒன்றை பெறுவதால் , அந்த மேல் துண்டு தலையில் இடம் பிடிக்கிறது - ஒரு கிரீடம் போல். இதனால் தான் மேல் துண்டை பதவிக்கு உதாரணமாக கருதப்பட்டுகிறது போலும் - அதன் இடத்தை பொறுத்து பதவி அமைவதால். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • க‌ன‌டாவில் உணவு பொருட்க‌ளிலிருந்து எல்லாம் ச‌ரியான‌ விலை என்று கேள்வி ப‌ட்டேன் பொற்ரோல் விலையும் கூடினால்  ம‌க்க‌ளுக்கு இன்னும் சிர‌ம‌ம்.............................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.