Jump to content

புதிய கட்சியை ஆரம்பிப்பாராம் விக்னேஸ்வரன்! - இந்திய ஊடகத்தின் கணிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் ஆதரவுடன் ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளார் போல் தோன்றுகிறது என்றும், அந்தக் கட்சி கடும்போக்கு கொள்கைகளைப் பின்பற்றும் என்றும் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் ஆதரவுடன் ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளார் போல் தோன்றுகிறது என்றும், அந்தக் கட்சி கடும்போக்கு கொள்கைகளைப் பின்பற்றும் என்றும் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

   

இது தொடர்பில் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் கொழும்பிலுள்ள மத்திய அரசுடன் மோதும் விக்னேஸ்வரனின் கொள்கைகள் கொழும்பு அரசுடன் இணக்கப்பாட்டை பேணுவது என்ற தமிழ்த் தேசயக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு முரணானவை. வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ் மக்களின் அரசியல் வேண்டுகோள்களுக்கும் வடக்கு மாகாண சபைக்கு அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்பதற்கும் முக்கியத்துவம் வழங்கி வருகின்றார். நிர்வாகம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான முக்கிய விடயங்களை அவர் முற்றாகப் புறக்கணித்து வருகின்றார். இதன் காரணமாக மத்திய அரசால் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு என ஒதுக்கப்பட்ட 75 வீத நிதி திரும்பிவந்துள்ளது.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விக்னேஸ்வரன் சமநிலையான யதார்த்தபூர்வமான அணுகுமுறையை பின்பற்றவேண்டும் என விரும்புகின்றது. மைத்திரிபால சிறிசேன - ரணில் விக்கிரமசிங்க அரசுடனான பல மோதல்களுக்குப் பின்னர் விக்னேஸ்வரன் தற்போது வடக்கு மாகாண ஆளுநருடன் மோதத் தொடங்கியுள்ளார். கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் வெளிப்படையாக ஆளுநருடன் விக்னேஸ்வரன் மோதுகின்றார். வடக்கு மாகண ஆளுநர் சிங்கள தமிழர்கள் மத்தியிலான திருமணங்கள் தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதவும் எனத் தெரிவித்தவேளை, விக்னேஸ்வரன் அதற்கு முன்னர் அரசியல் அதிகாரங்கள் அவசியம் எனக் குறிப்பிட்டிருந்தார். மிகச் சமீபத்தில் வடக்கு மாகாண ஆளுநர் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்துக்களை விக்னேஸ்வரன் பகிரங்கமாகக் கண்டித்திருந்தார்.

ஆளுநர் இந்தக் குற்றச்சாட்டை வெளிப்படையாக மறுத்துள்ளதுடன் அந்த செய்தியாளர் மாநாட்டின் ஒலிப்பதிவை அனுப்பி வைத்துள்ளார். மேலும், சில நாடகளுக்கு முன்னர் யாழ்ப்பாண அபிவிருத்தி தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் அழைப்பு விடுத்திருந்த கூட்டத்தை முதலமைச்சர் விக்னேஸ்வரன் பகிரங்கமாகப் புறக்கணித்திருந்தார். தன்னுடன் ஆலோசிக்காமல் அவ்வாறான கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க முடியாது என அவர் தெரிவித்திருந்தார். மேலும், அவர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பகிரங்கமாகக் கண்டித்திருந்தார். தன்னுடன் ஆலோசிக்காமல் அவர்கள் கலந்துகொண்டதாக அவர் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

எனினும், அந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் வடக்கு மாகண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இதன்பின்னர் தான் இவ்வாறான கூட்டங்களை எதிர்காலத்தில் கூட்டப்போவதில்லை என ஆளுநர் அறிவித்துள்ளார். இதேவேளை, வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கும் இடையில் அதிகரித்து வரும் பிளவுகளை தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இருவரையும் பேச்சுகளில் ஈடுபடசெய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.

எனினும், இந்த முயற்சி வெற்றியடையவில்லை. இருவரும் இவ்வாறான சந்திப்பொன்று குறித்து தயக்கத்தை வெளியிட்டுள்ளனர். அரசியல் வட்டாரங்களில் கருத்து வேறுபாடுகள் மேலும் தீவிரமடையலாம். ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான பிளவை இது மேலும் அதிகரிக்கலாம். இதேபோன்று சம்பந்தனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான முறுகலும் தீவிரமடையலாம். இதனைத் தொடர்ந்து விக்னேஸ்வரன் பிரிந்து சென்று தனது தனிக்கட்சியை ஆரம்பிப்பார். தனது கடும்போக்கு கொள்கைள் மூலம் தமிழ் மக்களின் இதயங்களை வெல்லலாம் என்ற நம்பிக்கையில் அவர் இதனை செய்வார் என எதிர்வுகூறப்படுகின்றது என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=158411&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

போராளிகள்  பிரிந்து  போனால்  துரோகிகள் ....அரசியவாதி பிரிந்து  போய்  கட்சி  தொடங்கினால்  நல்ல  தலைவர்  பாவம்  தமிழர்  நாம் தான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல விடயம். ஆயிரம் பூக்கள் மலரட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் கட்சி கடும்போக்கு கொள்கைகளைப் பின்பற்றும் என்றும் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. 

க‌டும்போக்கு என்றால் இந்தியாவுக்கு கொஞ்சம் கஸ்டம் போல கிடக்கு.நல்ல மருந்தா கொடுத்த மென்போக்காகும் ,இந்தியாவுக்குக தெரியாததா என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு பத்திரிகைக்காறனின் யூகம். ஆனால் முதலமைச்சர் சிங்களவனின் அடிமையாய் இழுபட விரும்பவில்லை என நினைக்கிறார். கெஞ்சி, கூத்தாடி என்னத்தைக் கண்டவை?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.