Jump to content

போருக்குப் பின்னரே தமிழரின் கல்வி நிலை வீழ்ச்சி! - மாவை சேனாதிராஜா


Recommended Posts

போருக்குப் பின்னர் வடக்கு மாகாணக்கல்வி பாரி­ய­ளவில் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது 

 

வடக்கு மாகாண கல்வி வளர்ச்­சி­யா­னது போர்க் காலத்தில் வீழ்ச்­சி­ய­டை­யாது காணப்­பட்­டி­ருந்­தது. எனினும் போருக்கு பிந்­திய ஏழாண்­டு­களில் கல்வி வளர்ச்­சி­யா­னது பாரி­ய­ளவில் வீழ்ச்­சியை எதிர்­நோக்­கி­யுள்­ளது என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனாதிராஜா தெரி­வித்­துள்ளார்.mavai_965s.jpg

யாழ்ப்­பாணம் இரா­ம­நாதன் மகளிர் கல்­லூ­ரியில் நேற்­றைய தினம் இடம்­பெற்ற வலி­காம வலய ஆசி­ரிய மாநாட்டில் பிரதம விருந்­தி­ன­ராக கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தி­ருந்தார். அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­றி­ய­தா­வது,

எமது கல்வி வளர்ச்­சி­யா­னது போர்க் காலத்தில் கூட வீழ்ந்து விட­வில்லை. ஆனால் போருக்கு பிந்­திய ஏழாண்­டு­களில் பாரி­ய­ளவில் கல்வி மட்டம் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. எனவே இதற்­கான காரணம் என்­வென இனங்­கா­ணப்­பட்டு அவை நிவர்த்தி செய்­யப்­பட வேண்டும். ஏனெனில் யாழ்ப்­பா­ண­மா­னது கல்­வியில் உயர்ந்­தது என்ற பாரம்­ப­ரி­யமும் வர­லாறும் கொண்­டது. ஆகவே அதனை நாம் இழந்து விடக் கூடாது.

தற்­போது பல்­க­லை­க்க­ழகங்­க­ளுக்கு தெரிவு செய்­யப்­ப­டு­கின்­ற­வர்­களில் 60 வீத­மா­ன­வர்கள் கலைத்­து­றையை சார்ந்­த­வர்­க­ளா­கவே உள்­ளார்கள். இந்­நி­லைமை மாற்­றப்­பட வேண்டும். கூடிய மாண­வர்கள் விஞ்­ஞான துறை, வர்த்­தக துறை­களில் பயி­லு­கின்­ற­வர்­க­ளாக அல்­லது அவற்றை பயி­லக்­கூ­டி­ய­வர்­க­ளாக மாற்­றப்­பட வேண்டும். எனவே ஒரு மாணவன் எட்டாம் வகுப்­பிற்கு பின்­ன­ரான அடுத்து மூன்று வரு­டங்கள் அவர் பல்­க­லை­க்க­ழ­கத்தில் என்ன துறை கற்­கப்­போ­கிறார் என்­பதில் ஆயத்­தப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

இன்று அதி­க­ள­வான மாண­வர்கள் கலைத்­துறையைக் கற்று வெளி­யே­றி­யுள்ள நிலை­யிலும் அவர்கள் கற்­ற­தற்கு பொருத்­த­மான வேலைகள் வழங்­கப்­ப­ட­வில்லை. இதே­வேளை தாதியர் துறை­யிலே அதி­க­ள­வான விண்­ணப்­பங்கள் இருக்­கின்ற போதும் அதில் எமது மாண­வர்கள் உள்ளீர்க்­கப்படு­வது குறை­வா­கவே உள்­ளது.

இதே­வேளை நாங்கள் அர­சி­யலில் அடி­மைப்­பட்­ட­வர்­க­ளாக தற்­போது இருப்­ப­தில்லை.. ஆனால் போதை­வஸ்­துக்கும் மது­வுக்கும் அடி­மைப்­பட்­ட­வர்­க­ளாக மாறி­யி­ருக்­கிறோம். எனவே இந்­நி­லைமை மாற்­ற­ம­டைய வேண்டும். தற்­போது தான் சில கைதுகள் இடம்பெறுகின்றன. ஆனால் இன்னமும் அவற்றை வியாபாரம் செய்யும் வர்த்தக முதலாளிகள் கைது செய்யப்படவில்லை. மேலும்  போதைக்கு முற்றுமுழுதாக அடிமைப்பட்டுள்ள மாணவ சமூகத்தை முற்றாக மீட்டெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/6903

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
போருக்குப் பின்னரே தமிழரின் கல்வி நிலை வீழ்ச்சி! - மாவை சேனாதிராஜா
[Saturday 2016-05-28 16:00]
எமது கல்வி நிலை போர்க்காலத்தில் கூட வீழ்ச்சியடையவில்லை. ஆனால், போருக்கு பின்னர் வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே, இதற்கான காரணம் என்னவென இனங்காணப்பட்டு, அவை நிவர்த்தி செய்யப்பட வேண்டும். யாழ்ப்பாணம் கல்வியில் உயர்ந்தது என்ற பாரம்பரியமும் வரலாறும் கொண்டது. அதனை நாம் இழந்து விட கூடாது' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

எமது கல்வி நிலை போர்க்காலத்தில் கூட வீழ்ச்சியடையவில்லை. ஆனால், போருக்கு பின்னர் வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே, இதற்கான காரணம் என்னவென இனங்காணப்பட்டு, அவை நிவர்த்தி செய்யப்பட வேண்டும். யாழ்ப்பாணம் கல்வியில் உயர்ந்தது என்ற பாரம்பரியமும் வரலாறும் கொண்டது. அதனை நாம் இழந்து விட கூடாது' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

  

யாழ். இராமநாதன் மகளிர் கல்லூரியில், நேற்று இடம்பெற்ற, வலிகாமம் வலய ஆசிரிய மாநாட்டில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 'தற்போது பல்கலைகழங்களுக்கு தெரிவு செய்யப்படுகின்றவர்களில் 60 சதவீதமானவர்கள் கலைத்துறையை சார்ந்தவர்களாகவே உள்ளனர். இந்நிலைமை மாற்றப்பட வேண்டும். கூடிய மாணவர்கள் விஞ்ஞானம், வர்த்தக துறைகளில் பயிலுகின்றவர்களாக அல்லது அவற்றை பயிலக்கூடியவர்களாக மாற்றப்பட வேண்டும். எனவே, ஒரு மாணவன், எட்டாம் வகுப்புக்குப் பின்னரான அடுத்து மூன்று வருடங்களில், அவன் பல்கலைகழகத்தில் என்ன துறை கற்கப்போகிறான் என்பதை ஆயத்தப்படுத்தப்பட வேண்டும்.

இன்று அதிகளவான மாணவர்கள் கலைத்துறையில் கற்று வெளியேறியுள்ள நிலையிலும் அவர்களுக்கு பொருத்தமான வேலைகள் வழங்கப்படவில்லை. இதேவேளை, தாதியர் துறையிலே அதிகளவான விண்ணப்பங்கள் இருக்கின்ற போதும் அதில் எமது மாணவர்கள் உள்ளீர்க்கப்படுவது குறைவாகவே உள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பின் அதற்கான தகுதி எம் மாணவர்களுக்கு இல்லையென்கிறார்கள். அதாவது விஞ்ஞானதுறையில் கணிதத்துறையில் பயிலும் மாணவர்கள் அதில் சித்தியடையும் மாணவர்கள் குறைவாக இருப்பதே காரணமாகும்.

தற்போது எமது சமூகமானது போதைவஸ்து பாவனைக்குள் அடிமைப்பட்ட சமூகமாக மாறியுள்ளது. நாங்கள் அரசியலிலும் அடிமைப்பட்டவர்களாக இல்லை. ஆனால், தற்போது போதைவஸ்த்துக்கும் மதுவுக்கும் அடிமைப்பட்டவர்களாக மாறியிருக்கிறோம். எனவே இந்நிலைமை மாற்றமடைய வேண்டும். தற்போது தான் சில கைதுகள் இடம்பெறுகின்றன. ஆனால் இன்னமும் அவற்றை வியாபாரம் செய்யும் வர்த்தக முதலாளிகள் கைது செய்யப்படவில்லை. மேலும் போதைக்கு முற்றுமுழுதாக அடிமைப்பட்டுள்ள மாணவ சமூகத்தையும் சமூகத்தையும் முற்றாக மீட்டெடுக்க வேண்டும்' என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=158409&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வாத்தியார் said:

தற்போது எமது சமூகமானது போதைவஸ்து பாவனைக்குள் அடிமைப்பட்ட சமூகமாக மாறியுள்ளது. நாங்கள் அரசியலிலும் அடிமைப்பட்டவர்களாக இல்லை. ஆனால், தற்போது போதைவஸ்த்துக்கும் மதுவுக்கும் அடிமைப்பட்டவர்களாக மாறியிருக்கிறோம். எனவே இந்நிலைமை மாற்றமடைய வேண்டும். தற்போது தான் சில கைதுகள் இடம்பெறுகின்றன. ஆனால் இன்னமும் அவற்றை வியாபாரம் செய்யும் வர்த்தக முதலாளிகள் கைது செய்யப்படவில்லை. மேலும் போதைக்கு முற்றுமுழுதாக அடிமைப்பட்டுள்ள மாணவ சமூகத்தையும் சமூகத்தையும் முற்றாக மீட்டெடுக்க வேண்டும்' என்றார்.

ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டிய பிரச்சனை. இளம் தமிழ் சமுதாயத்தினரை மந்தைகளாக வைத்திருப்பதையே சுயநல அரசியல்வாதிகள் விரும்புவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை சொன்னாலும் யாழ்ப்பாணத்தானின் கல்வியில் எல்லோருக்கும் ஒரு இதுதான்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.