Jump to content

அமெரிக்கா அணுகுண்டு வீசிய நகருக்கு சென்று அஞ்சலி செலுத்திய ஒபாமா


Recommended Posts

அமெரிக்கா அணுகுண்டு வீசிய நகருக்கு சென்று அஞ்சலி செலுத்திய ஒபாமா

 

அமெரிக்கா அணுகுண்டு வீசிய ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

160527091243_obama_ap_512x288_ap_nocredi

 

இந்நிலையில் அணுகுண்டு வீசப்பட்ட ஹிரோஷிமாவுக்கு முதல்முறையாக செல்லும் அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா கருதப்படுகின்றார்.

160527071841_obama_japan_640x360_reuters

முகத்தில் கவலையுடன் குறித்த இடத்திற்கு வந்த ஒபாமா 1945 ஆம் ஆண்டு ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க தாக்குதலின் நினைவுச் சின்னத்திற்கு வெள்ளை மலர்களால் செய்யப்பட்ட மலர்வளையத்தை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

 

குறித்த நினைவிடத்திற்கு அமெரிக்க ஜனாதிபதியுடன் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் சென்றிருந்தார்.

160526194615_obama_abe_640x360_ap_nocred

இதன்போது கருத்துத் தெரிவித்த ஒபாமா, ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசியதன் மூலம் மனிதகுலம் தன்னையே அழித்துக்கொள்ளும் திறனை எடுத்துகாட்டியுள்ளது என தெரிவித்தார்.

 

இதேவேளை, இரண்டாம் உலகப்போரின் கடைசி நாட்களில் மேற்கொள்ளப்பட்ட அணுகுண்டுத் தாக்குதல் 1,40,000 பேர் இறந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/6890

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனி.. சொறீலங்கா சிங்களத் தலைவர்களும் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செய்யக் கூடும்.

அணு ஆயுதங்களை வைச்சிருப்போர்.. உருவாக்கி இருப்போர்.. அணு ஆயுதங்கள் அற்ற உலகை உருவாக்க முன் வர வேண்டுமே தவிர.. பேரழிவு ஆயுதங்களை வைச்சுக் கொண்டு நீலிக்கண்ணீர் வடிப்பது.. இழப்புக்களால் துன்பப்பட்டு நிற்கும் அப்பாவி மக்களுக்கு எந்த நீதியையும் வழங்காது. :rolleyes:tw_angry:

Link to comment
Share on other sites

43 minutes ago, nedukkalapoovan said:

எனி.. சொறீலங்கா சிங்களத் தலைவர்களும் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செய்யக் கூடும்.

அணு ஆயுதங்களை வைச்சிருப்போர்.. உருவாக்கி இருப்போர்.. அணு ஆயுதங்கள் அற்ற உலகை உருவாக்க முன் வர வேண்டுமே தவிர.. பேரழிவு ஆயுதங்களை வைச்சுக் கொண்டு நீலிக்கண்ணீர் வடிப்பது.. இழப்புக்களால் துன்பப்பட்டு நிற்கும் அப்பாவி மக்களுக்கு எந்த நீதியையும் வழங்காது. :rolleyes:tw_angry:

ஜப்பான் காரரும் வெளிநாட்டில குந்தியிருந்து வெட்டி நியாயம் பேசிக்கொண்டு இருக்காம தன்னை அழிச்ச அமெரிக்கனை வைத்தே இப்ப ஒரு வல்லரசா தன்னை உருவாக்கியுள்ளனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தெனாலி said:

ஜப்பான் காரரும் வெளிநாட்டில குந்தியிருந்து வெட்டி நியாயம் பேசிக்கொண்டு இருக்காம தன்னை அழிச்ச அமெரிக்கனை வைத்தே இப்ப ஒரு வல்லரசா தன்னை உருவாக்கியுள்ளனர். 

ஜப்பான்காரும் வெளிநாடுகளில குந்தி இருக்கினம்... இல்ல உலகின் 3ம் நிலை பொருண்மிய நாடாக இருக்க முடியாது.

மேலும் ஜப்பான்காரர்கள் பெரும் சுத்தம் என்றில்லை.. வன்னிக்கு ஓடியோடித் திரிந்த அக்காசி ஐயா கடைசியில் இணைத்தலைமை நாடுகளை எந்தப் பெட்டிக்குள் பூட்டி வைச்சிருக்கிறார் என்று இன்று வரைக்கும் தெரியாது.

ஜப்பானின் வளர்ச்சியில்.. அமெரிக்கனுக்குப் பங்கிருக்குது. ஆனால் தமிழனின் வளர்ச்சி சிங்களவனுக்கு கடுப்பாகுது. அதுதான் வித்தியாசம்... அங்கும் இங்கும். இது புரியாம.. மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும்.......................................... சம்பந்தம்... tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தெனாலி said:

ஜப்பான் காரரும் வெளிநாட்டில குந்தியிருந்து வெட்டி நியாயம் பேசிக்கொண்டு இருக்காம தன்னை அழிச்ச அமெரிக்கனை வைத்தே இப்ப ஒரு வல்லரசா தன்னை உருவாக்கியுள்ளனர். 

ஒன்றுபடுங்கள் என்று சொன்னால் கேட்டால் தானே ?

கடைசியாக சண்டை மட்டுமே மிச்சம் இப்ப வரைக்கும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.