Jump to content

உயர்நீதிமன்றம் எனக்கு விடுத்துள்ள அழைப்பாணை குறித்து சபாநாயகரே தீர்ப்பு வழங்கவேண்டும்.!


Recommended Posts

உயர்நீதிமன்றம் எனக்கு விடுத்துள்ள அழைப்பாணை குறித்து சபாநாயகரே தீர்ப்பு வழங்கவேண்டும்.!

 

ranil.jpg

தேசிய அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்­கான தீர்­மா­னத்தை கேள்­விக்­குட்­ப­டுத்தி தாக்கல் செய்யப்­பட்ட மனு­வொன்றின் கார­ண­மாக உயர் நீதி­மன்­றத்­தினால் தனக்கு அழைப்­பாணை விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று சபையில் தெரி­வித்தார். 

தேசிய அர­சாங்­கத்தை அமைப்­பது குறித்துசபா­நா­ய­க­ரினால் தீர்ப்­பொன்று வழங்­கப்­பட்­டுள்­ளது. அதற்கு அமை­வான தீர்­மா­ன­மொன்றும் பாரா­ளு­மன்­றத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வா­றான நிலையில் அந்த தீர்­மா­னத்தை நீதி­மன்­றத்தின் கேள்­விக்கு உட்­ப­டுத்­து­வது சிறப்­பு­ரிமை மீற­லா கும். ஆகவே சபா­நா­யகர் இம்­மனு தொடர்­பாக தீர்ப்­பொன்றை உயர் நீதி­மன்­றத்­திற்கு அறி­விக்க வேண்டும் எனவும் பிர­தமர் ரணில் விக்­க­ிர­ம­சிங்க கோரிக்கை விடுத்தார்.

பாரா­ளு­மன்றம் நேற்று புதன்­கி­ழமை இயற்கை அனர்த்தம் தொடர்­பான விசேட விவா­தத்­திற்­காக சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மையில் கூடி­யது.

இதன்­போது சிறப்­பு­ரிமை பிரச்­சி­னையை முன்­வைத்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சபா­நா­யகர் உட்­பட முழு சபையின் கவ­னத்­திற்கும் இந்த விடயத்தை கொண்டு வந்­தி­ருந்தார்.

அவர் குறித்த மனு தொடர்பில் விளக்­க­வுரை ஆற்­று­கையில், "

ரியர் அட்­மிரல் சரத் வீர­சே­கர மற்றும் பேரா­சி­ரியர் விம­ல­தர்ம அபே­விக்­ரம ஆகி­யோரால் எனக்கு எதி­ராக உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்ட மனு­வொன்­றுக்கு அமை­வாக அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணான வகையில் எனக்கு அழைப்­பா­ணையும் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

தேசிய அர­சாங்கம் தொடர்­பான தீர்­மானம் மற்றும் அந்த தீர்­மா­னத்­துக்கு எந்தெந்த அர­சியல் கட்­சிகள் அவ­சியம் என்­பது குறித்து சபா­நா­ய­கரால் 2015 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் 3 ஆம் திகதி தீர்ப்­பொன்று வழங்­கப்­பட்­டது. அதன் பிர­காரம் தான் தீர்­மானம் சபை­யினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது. தற்­போது அந்த விடயம் அனைத்தும் நிறை­வுக்கு வந்­து­விட்­டன. சபா­நா­ய­கரின் தீர்ப்பை இனி கேள்­விக்கு உட்­ப­டுத்த முடி­யாது. இது இந்த சபையின் அதி­கா­ரங்­களின் அங்­க­மாகும்.

சபா­நா­ய­க­ரினால் வழங்­கப்­பட்ட தீர்ப்பின் பிர­காரம் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம் தொடர்­பாக பதி­ல­ளிப்­ப­தற்­காக என்­னையோ அல்­லது எனது சார்­பான சட்­டத்­த­ர­ணி­யையோ நீதி­மன்­றத்தின் முன்­னி­லையில் ஆஜ­ரா­கு­மாறு அழைப்­பாணை விடுக்­கப்­பட்­டுள்­ளது. 19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்­திற்கு எதி­ராக வாக்­க­ளித்த ஒரே­யொரு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் என்றும் மனு­தாரர் தன்மை மனுவில் குறிப்­பிட்­டுள்ளார்.

தேசிய அர­சாங்­க­மொன்று எவ்­வாறு அமைக்­கப்­பட வேண்டும் என்ற ஒட்­டு­மொத்­த­மான தீர்­மா­னத்­தையும் அவர் கேள்­விக்­குட்­ப­டுத்­தி­யுள்ளார். எனினும் குறித்த தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டதை அவர் இங்கு குறிப்­பி­ட­வில்லை. பாரா­ளு­மன்­றத்­தினால் மேற்­படி செயல்­நோக்கு கொண்ட தீர்­மா­ன­மா­னது சட்­டத்தின் பிர­காரம் அமுலில் கிடை­யாது எனவும் மனுவில் மனு­தாரர் சுட்டிக் காட்­டி­யுள்ளார். இது­போன்ற பல்­வேறு விட­யங்கள் இம்­ம­னுவில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. அவை அனைத்தும் அர­சியல் அமைப்­பினால் எமக்கு அளிக்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்­களின் பிர­காரம் சபா­நா­ய­க­ரினால் வழங்­கப்­பட்ட தீர்ப்­பையும் பாரா­ளு­மன்­றத்­தினால் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­தையும் கேள்­விக்­குட்­ப­டுத்­து­வ­தற்கு ஒப்­பா­ன­தா­க­வுள்­ளன. இந்த சபை­யினால் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்தை கேள்­விக்­குட்­ப­டுத்­து­வ­தா­னது சிறப்­பு­ரி­மையை மீறும் செய­லாகும். அத்­துடன் இது திட்­ட­மி­டப்­பட்டு செய்­யப்­பட்ட செய­லாகும். காரணம் சபா­நா­ய­க­ரினால் வழங்­கப்­பட்ட தீர்ப்பு மனுவில் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

மனு­தாரர் இந்த சபையில் உறுப்­பி­ன­ராக இருந்­தவர் என்ற வகையில் அது தொடர்பில் அவர் நன்கு அறிந்­தி­ருக்க வேண்டும். அதை விடுத்து தமக்கு தெரி­யாது என கூற­மு­டி­யாது. மேலும் சபைக்கு அளிக்­கப்­பட்­டுள்ள நீதி­மன்ற அதி­கா­ரங்கள் உள்­ளிட்ட பாரா­ளு­மன்­றத்தின் அதி­கா­ரங்கள் குறித்த மனுவில் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. எனவே மனு­தா­ரர்கள் இரு­வரும் வேண்­டு­மென்றே சிறப்­பு­ரி­மை­மீறல் விட­யத்தை கவ­னத்தில் எடுத்து அது தொடர்பில் தீர்ப்பொன்றை வழங்க வேண்டும். அந்த தீர்ப்பை உயர் நீதிமன்றத்திற்கும் அறிவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

இதேவேளை குறித்த வேண்டுதலை தாமும் முன்வைப்பதாக ஆளும் கட்சி பிரதம கொரடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க மற்றும் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ ஆகியோர் இணைந்து தெரிவித்தனர். இது இவ்வாறு இருக்க குறித்த விடயம் தொடர்பில் அதன் போது ஆராய்ந்து பார்க்க சிறு கால அவகாசமொன்றை தருமாறு சபாநாயகர் கருஜயசூரிய உறுதிப்படத் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/6819

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.