Jump to content

மருதடியில் மலசலகூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன


Recommended Posts

article_1464088430-toilets.jpg

புலம்பெயர்ந்து வாழும் ஒருவரின் 1 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலயத்தில் 10 மலசலகூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் மருதடி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவ காலத்தில் பல இடங்களிலிருந்தும், பக்தர்கள் வருகை தருவார்கள். அத்துடன், ஆலய வளாகத்தில் தங்கியிருந்து வியாபார நடவடிக்கையிலும் சிலர் ஈடுபடுகின்றனர்.

இவர்களுக்காக திருவிழாக்காலங்களில் தற்காலிக மலசலகூடங்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் நிரந்தர மலசலகூடம் அமைப்பதற்கு தீர்மானித்த ஆலய தர்மகத்தா சபையினர் கனடா வாழ் புலம்பெயர் தமிழர் ஒருவரிடம் இருந்து நிதியைப் பெற்றனர்.

அந்நிதியைக் கொண்டு ஆலயத்தின் தெற்குப் பக்கமாகவுள்ள குளத்துக்கு அருகாமையில் இருபாலாருக்குமான நவீன முறையில் 10 மலசலகூடங்கள் அமைக்கப்பட்டன. 


http://www.tamilmirror.lk/172983#sthash.P0uwxBBq.dpuf

Link to comment
Share on other sites

24 minutes ago, Athavan CH said:

புலம்பெயர்ந்து வாழும் ஒருவரின் 1 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலயத்தில் 10 மலசலகூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நல்ல விடயம்.

அதைவிட முக்கியமானது மலசலகூட பராமரிப்பு. கட்டி முடித்துவிட்டோம் என்று சும்மா இருந்தால் போகமுடியாமல் நாறும். அப்புறம் இது இருப்பதே ஒரு தலைவலியாக மாறும். துப்பரவாக வைத்திருக்க முடிந்தவரை ஏதாவது செய்வார்கள் என்று நம்புகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திறந்த.... மலசல கூடங்ககள் எமது இனத்துக்கு மட்டுமல்ல  வெள்ளைக்காரனுக்கும்  சரிவராது.
ஒண்டுக்கு இருக்கப் போறவன் 10 ரூபாயும்,
இரண்டுக்கு இருக்கப் போறவன் இருபது ரூபாயும் கொடுத்து.....
போய் வாறவன்... உள்ளே போய்,  அசிங்கம் செய்யிறானா என்று.... கண்காணிக்க வேண்டும்.

மீறி....அசிங்கம், செய்தால்.... ******
அதுக்குப் பிறகு.... தான், மனுசன்  ஒழுங்காக.....  ஒண்டுக்கு,   இருப்பான். 

இரண்டுக்கு வந்தால்....  முதலில் *** வரும்  அந்த வாசத்கதை  வைத்தே....
நாம்... கண்டு பிடித்துவிடுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Athavan CH said:

குளத்துக்கு அருகாமையில் இருபாலாருக்குமான நவீன முறையில் 10 மலசலகூடங்கள் அமைக்கப்பட்டன.

????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமி தீர்த்தம் ஆட வேண்டாமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விடயம்

புலம் பெயர் மக்கள் இதைத்தான் செய்யணும்

ஒவ்வொரு இடமாக  புணருத்தாரணம் செய்துவர

நல்ல நிலைக்கு கொண்டு வரலாம்

அதெநேரம் சிறி எழுதியது போல்

அங்குள்ளவர்களுக்கு இது சார்ந்து கல்வியையும்

அதை பராமரிக்கும் வழிகளையும் சொல்லித்தருவதுடன் நின்றுவிடாது

தாயக மக்களுக்கும் இத சார்ந்து அக்கறையும் பொறுப்பும் வேண்டும்

சில வருடங்களுக்கு முன் இதே போல் எமது ஊர் பாடசாலை ஒன்றுக்கு மலசலகூடம் கட்டிக்கொடுத்தோம்

பின்னர் அது எப்படி இயங்குகிறது என எம்மவர் பார்வையிட சென்றபோது

ஆசிரியர்கள் தூர நின்றபடி போய்ப்பாருங்கள் என அனுப்பி வைத்தனர்

உள்ளே எல்லாம் நிரப்பி காய்ந்து

அதன் பின்னர் கனகாலமாக வெளியில் தான் எல்லாம் நடந்திருந்தது.

எவரும் உள்ளே போக விரும்பாதபோதும் இங்கிருந்து போன எம்மவர் உள்ளே சென்று பார்வையிட்டு வந்திருந்தார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருகண்டி பிள்ளையார் கோவிலடி மலசல கூடத்தை எப்படி பாராமரிக்கின்றார்கள் என்று அடிக்கடி தாயகம் சென்று வருபவர்கள் எழுதலாம்.....அது வேற கட்டண கழிப்பிடம்.....tw_tounge_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடையம்.பாவிக்கும் வழி முறைகளையும் மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும்.எதுக்கெடுத்தாலும் நக்கலும் நளினமும் கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, சுவைப்பிரியன் said:

நல்ல விடையம்.பாவிக்கும் வழி முறைகளையும் மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும்.எதுக்கெடுத்தாலும் நக்கலும் நளினமும் கூடாது.

இதைதான் நானும் சொல்ல நினைத்து இருந்தது நன்றி பாஸ் 

உன்மையில் சிலருக்கு மல சல கூடத்தை சரியான முறையில் பயன்படுத்துவதென்பது தெரியாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவசரத்துக்கு உள்ளே ஓடுகிறவன் தான் போட்டதைத் தானே பார்க்காமல் அதைவிட வேகமாய் வெளியே ஓடிடுவான். உதெல்லாம் சரிவராது...!

ஒரு பணியாளரை நியமித்து காலை மாலை இருதடவை அதைச் சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு அவருக்கு பணம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் சரியாய் இருக்கும்....! அதில் ஒரு உண்டியல்கூட வைக்கலாம். அதையும் அவரிடமே விட்டு விட்டால் அவரும் ஒழுங்காக வந்து போவார். சாதா நாட்களைவிட திருவிழா நாட்களில் கணிசமான பணம் வரும்....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, suvy said:

ஒரு பணியாளரை நியமித்து காலை மாலை இருதடவை அதைச் சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு அவருக்கு பணம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் சரியாய் இருக்கும்....! அதில் ஒரு உண்டியல்கூட வைக்கலாம். அதையும் அவரிடமே விட்டு விட்டால் அவரும் ஒழுங்காக வந்து போவார். சாதா நாட்களைவிட திருவிழா நாட்களில் கணிசமான பணம் வரும்....! tw_blush:

ஐயோ சுவியண்ணா

எங்க இருக்கின்றீர்கள்???

கூலித்தொழிலுக்கே ஆட்கள் வாறார்களில்லை

இதுக்கு வந்து...

முன்னுக்கு இருந்து??

காசு வாங்கி.....???

ம்ம்ம்

ரொம்ப தூரம் போயாச்சு யாழ்ப்பாணம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

ஐயோ சுவியண்ணா

எங்க இருக்கின்றீர்கள்???

கூலித்தொழிலுக்கே ஆட்கள் வாறார்களில்லை

இதுக்கு வந்து...

முன்னுக்கு இருந்து??

காசு வாங்கி.....???

ம்ம்ம்

ரொம்ப தூரம் போயாச்சு யாழ்ப்பாணம்..

நான் யாழ்ப்பாணத்தை விட்டுக் கிளம்பி 25 வருடங்களுக்கு மேலாகி விட்டது விசுகு. அதனால்தான் ஊர் நிலவரம் புரியவில்லை...!

அப்படியெனில் தானியங்கி சுத்திகரிப்பு யந்திரங்கள் பூட்ட வேண்டும்....!! :unsure:

 

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

ஐயோ சுவியண்ணா

எங்க இருக்கின்றீர்கள்???

கூலித்தொழிலுக்கே ஆட்கள் வாறார்களில்லை

இதுக்கு வந்து...

முன்னுக்கு இருந்து??

காசு வாங்கி.....???

ம்ம்ம்

ரொம்ப தூரம் போயாச்சு யாழ்ப்பாணம்..

கூலி வேலைக்கு சிங்கள ஆட்கள் வருகிறார்கள்.  வெளிநாடுகளில் இருந்து பணம் இலவசமாக வருவதால் பெருமளவு தமிழர்கள் வேலைக்கு போக வேண்டிய தேவை இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

ஐயோ சுவியண்ணா

எங்க இருக்கின்றீர்கள்???

கூலித்தொழிலுக்கே ஆட்கள் வாறார்களில்லை

இதுக்கு வந்து...

முன்னுக்கு இருந்து??

காசு வாங்கி.....???

ம்ம்ம்

ரொம்ப தூரம் போயாச்சு யாழ்ப்பாணம்..

கூலித் தொழிலிற்கே  ஆட்கள் வருவதில்லை என்று நீங்கள் சாதாரணமாக

எழுதியிருக்கின்றீங்கள் விசுகு அண்ணா.
இப்படியான வேலை செய்பவர்களைச்   சாதி என்ற போர்வையில்

ஒதுக்கி வைத்திருந்த மேலாண்மைவாதிகளுக்கு இது பலத்த அடியாகத் தான் இருக்கும்.
வெளி நாடுகளில் மல சல கூடம் துப்பரவு செய்யும் இந்த மேலாண்மைவாதிகள்

ஊர் சென்றதும் காட்டும் பந்தாவை விட ஊரிலிருக்கும் ஒதுக்கப்பட்டவர்கள்
இப்படியான வேலைகளைப் புறக்கணிப்பதை வரவேற்க வேண்டும்.
அப்போது தான் காலப்போக்கிலாவது இன்றும் ஊரில் ஓங்கியிருக்கும்

சாதி என்ற ஒடுக்குமுறை அழிந்து போகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

கூலி வேலைக்கு சிங்கள ஆட்கள் வருகிறார்கள்.  வெளிநாடுகளில் இருந்து பணம் இலவசமாக வருவதால் பெருமளவு தமிழர்கள் வேலைக்கு போக வேண்டிய தேவை இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

வேலையே  இல்லாமல் பிசியாக இருக்கிறார்கள் அது தான் புரியமாட்டேன் என்கிறது

அண்மையில் எனது நண்பர்கள் இருவர் ஊருக்கு போயிருந்தனர்

யாழிலிருந்து புங்குடுதீவுக்கு போக (60 ரூபாய்) யாழ் BUS தரிப்பிடத்தில் காத்திருந்தனர்

ஒரு ஆட்டோ வந்து பக்கத்தில் நிற்க அதிலிருந்து ஒருத்தர் இவர்களை அழைக்கிறார்

வாங்கோ நான் ஊருக்குத்தான் போறன் என்று.

இவர்கள் இல்லை நாங்கள் BUS இல் வருகின்றோம் எனச்சொல்ல

நான் ஆட்டோவில் போகின்றேன் என போய் விட்டாராம்.

ஆட்டோவில் ஊருக்குப்போக 1500ரூபாக்கள்.

இத்தனைக்கும் அவர் வாழ்நாளில் வேலைக்கே போனதில்லை என்பதுடன்

இதில் BUS க்கு நின்ற ஒருவர் பிரான்சிலிருந்து போனவுடன் அவருக்கு 25 ஆயிரம்  ரூபாக்களை அன்பளிப்பாக கொடுத்திருந்தாராம்...

இது தான் நிலை.....

 

 

3 hours ago, வாத்தியார் said:

கூலித் தொழிலிற்கே  ஆட்கள் வருவதில்லை என்று நீங்கள் சாதாரணமாக

எழுதியிருக்கின்றீங்கள் விசுகு அண்ணா.
இப்படியான வேலை செய்பவர்களைச்   சாதி என்ற போர்வையில்

அது தான் குறிப்பிட்டேன் 

கூலித்தொழிலுக்கே வரமாட்டார்கள்

இதுக்கு எப்படி வருவார்கள் என்று....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, விசுகு said:

வேலையே  இல்லாமல் பிசியாக இருக்கிறார்கள் அது தான் புரியமாட்டேன் என்கிறது

அண்மையில் எனது நண்பர்கள் இருவர் ஊருக்கு போயிருந்தனர்

யாழிலிருந்து புங்குடுதீவுக்கு போக (60 ரூபாய்) யாழ் BUS தரிப்பிடத்தில் காத்திருந்தனர்

ஒரு ஆட்டோ வந்து பக்கத்தில் நிற்க அதிலிருந்து ஒருத்தர் இவர்களை அழைக்கிறார்

வாங்கோ நான் ஊருக்குத்தான் போறன் என்று.

இவர்கள் இல்லை நாங்கள் BUS இல் வருகின்றோம் எனச்சொல்ல

நான் ஆட்டோவில் போகின்றேன் என போய் விட்டாராம்.

ஆட்டோவில் ஊருக்குப்போக 1500ரூபாக்கள்.

இத்தனைக்கும் அவர் வாழ்நாளில் வேலைக்கே போனதில்லை என்பதுடன்

இதில் BUS க்கு நின்ற ஒருவர் பிரான்சிலிருந்து போனவுடன் அவருக்கு 25 ஆயிரம்  ரூபாக்களை அன்பளிப்பாக கொடுத்திருந்தாராம்...

இது தான் நிலை.....

 

 

அது தான் குறிப்பிட்டேன் 

கூலித்தொழிலுக்கே வரமாட்டார்கள்

இதுக்கு எப்படி வருவார்கள் என்று....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூலித் தொழிலுக்கு ஆட்கள் வர மாட்டார்கள் என்ற நிலை என்றுமே இல்லை.

கூலித் தொழிலார்கள் கேட்கும் பணத்தினை தரக் கூடிய நிலையில் சாதாரண மக்கள் இல்லை என்பதே உண்மை.

இங்கிருந்து போய் வீடுகள் திருத்தும் வெளிநாட்டுக் காரர்கள், பல் தேசிய நிறுவனங்கள், கொழும்பில் இருந்து வரும் நிறுவனங்கள் பல, உயர் கூலியில், இருக்கும் வேலை செய்பவர்களை வளைத்துக் கொள்வதால், குறைந்த கூலியினைக் கொடுக்கக் கூடிய சாதாரண மக்களுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. 

ஆகவே இது போன்ற கடை நிலை வேலைகள செய்ய ஆட்கள் இல்லை என்பதிலும் பார்க்க, அவர்கள் கேட்கும் கூலி கொடுக்கும் நிலையில் அங்குள்ள சாதாரண மக்கள் இல்லை. என்பதே உண்மை.

simply demand and supply... 

ஓய்வூதியம் பெறுவோர், ஆட்டோ, டாக்ஸி ஓடுவதும் அங்கு உண்டு. வயதானோர், இளம் பெண்களை மணமுடிக்கும், ஆண்கள் குறைந்த நிலைமையும் உண்டு. இதுவும் ஒரு demand and supply செயல் பாடு தான்.

இது புரியாம, நீட்டி முழக்குவதை தவிர்ப்போம்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அமைக்கப்படும் மலசல கூடங்களை சுத்தமாக பாராமரிப்பது பாவிக்கும் பொதுமக்களிலும், அவற்றை நிர்வகிப்பவர்களிலும் தங்கியுள்ளது.

இந்த இருதரப்பினரும் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

On 26/5/2016 at 5:58 PM, putthan said:

முருகண்டி பிள்ளையார் கோவிலடி மலசல கூடத்தை எப்படி பாராமரிக்கின்றார்கள் என்று அடிக்கடி தாயகம் சென்று வருபவர்கள் எழுதலாம்.....அது வேற கட்டண கழிப்பிடம்

முறிகண்டிப் பிள்ளையார் கோவிலில் இரண்டு பக்கமும் இருக்கும் மலசல கூடங்களில்  ரூ 10/- கட்டணம் வசூலிப்பவர் அவ்வப்போது ப்ளீச்சிங் பவுடரை விசிறிவிடுவார். அவ்வளவு தான்.

அவற்றின் வடிவமைப்பு முறையானது அல்ல. அதனால் பராமரிப்பதுவும் இலகுவானதல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, போல் said:

அமைக்கப்படும் மலசல கூடங்களை சுத்தமாக பாராமரிப்பது பாவிக்கும் பொதுமக்களிலும், அவற்றை நிர்வகிப்பவர்களிலும் தங்கியுள்ளது.

இந்த இருதரப்பினரும் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

முறிகண்டிப் பிள்ளையார் கோவிலில் இரண்டு பக்கமும் இருக்கும் மலசல கூடங்களில்  ரூ 10/- கட்டணம் வசூலிப்பவர் அவ்வப்போது ப்ளீச்சிங் பவுடரை விசிறிவிடுவார். அவ்வளவு தான்.

அவற்றின் வடிவமைப்பு முறையானது அல்ல. அதனால் பராமரிப்பதுவும் இலகுவானதல்ல.

மின்குமிழ் (பல்ப்) சுட்டுப்போயிருந்தது ,புதுசு வாங்கி போடுங்கோ என்று சொல்ல சிரிச்சுப்போட்டு கையை நீட்டினார்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.